என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Laptop"

    • இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன் தமிழகம் முழுவதும் இருக்கும் கல்லூரி மாணவர்கள் அரசின் லேப்டாப்பை பெறுவார்கள்.
    • உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளிவர வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், தமிழக அரசால் புதிய திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்த முடியாது. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிதாக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை விரைவில் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி உள்ளார். தற்போதைய நிலையில் அடுத்த மாதம் (டிசம்பர்) மாதம் 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    அதில் முதலாவது கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம். கடந்த பட்ஜெட்டில், 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினினின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டப்பணிகள் நடப்பதால் அதிகாரிகள் பம்பரமாக சுழன்று செய்து வருகின்றனர். தற்போது இந்த திட்டம் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. முதல்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்கள் ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார். இந்த லேப்டாப்களை தயாரிக்கும் பணி ஏசர், டெல், எச்.பி. ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் இந்த லேப்டாப்களை தயார் செய்து வைத்திருக்கின்றனர். ஒரு லேப்டாப் ரூ.21 ஆயிரத்து 650 என்ற விலையில் வாங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன் தமிழகம் முழுவதும் இருக்கும் கல்லூரி மாணவர்கள் அரசின் லேப்டாப்பை பெறுவார்கள்.

    இரண்டாவது மகளிர் உரிமை தொகை திட்ட விரிவாக்கம். தமிழகத்தில் தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இவர்களது வங்கி கணக்கிற்கு மாதம்தோறும் 15-ந் தேதி தலா ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. எனவே இந்த திட்டத்தின்கீழ் விடுப்பட்ட மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 28 லட்சம் பெண்கள், இந்த திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர்.

    இந்த மனுக்கள் பரிசீலனை தற்போது இறுதிகட்டத்தை எட்டி பட்டியல் தயாராகி வருகிறது. ஏற்கனவே அரசின் அறிவிப்புப்படி, இந்த திட்டத்தின்கீழ் உள்ள தகுதி வரையறை அடிப்படையில் தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி இவர்களுக்கு டிசம்பர் மாதம் 15-ந் தேதி முதல் வங்கிக்கணக்கில் பணம் போடப்படும். ஆனால் எத்தனை பெண்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அறிவிக்கப்படவில்லை.

    மூன்றாவது பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம். இந்த திட்டம், ஜனவரி மாதம் செயல்படுத்தப்படும் என்றாலும், இந்த திட்டப்பணிக்கான முடிவுகள் டிசம்பரிலேயே எடுக்கப்பட்டுவிடும். 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் தொகுப்புடன், ரொக்க தொகையும் வழங்கப்படும் என்ற பேச்சு பரவலாக எழுந்து உள்ளது. அதற்கு காரணம், ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதுதான். ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும், தேர்தல் காரணமாக நிச்சயம் அரசு சார்பில் ரொக்கத்தொகை கொடுப்பார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. தமிழக அரசுக்கு நிதி சுமை இருந்தாலும், இந்த பொங்கலுக்கு ரொக்கத்தொகை நிச்சயம் வழங்கப்படும் என்று சிலர் உறுதியாக கூறுகின்றனர்.

    தமிழகத்தில் மொத்தம் 2.27 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஒரு குடும்பத்திற்கு ரூ.3 ஆயிரம் வழங்கினால் அரசுக்கு மொத்த செலவு ரூ.6 ஆயிரத்து 800 கோடி ஆகும் என்றும், ரூ.6 ஆயிரம் வழங்கினால் ரூ.13 ஆயிரத்து 620 கோடி தான் ஆகும். எனவே இது தமிழக அரசுக்கு மிகப்பெரிய சுமை கிடையாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இறுதி முடிவு எடுப்பார் என்று அதிகாரிகள் சொல்கின்றனர்.

    எனவே டிசம்பர் மாதத்தில் லேப்டாப் வழங்கும் திட்டம், மகளிர் உரிமைத்தொகை விரிவாக்க திட்டம் மற்றும் பொங்கல் தொகுப்பு ரொக்கத்தொகை திட்டம் ஆகிய 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    • 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டரை தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் கோரியது.
    • 2025 - 26 நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு வழங்க, மடிக்கணினிகளை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்கிறது.

    தமிழகத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்காகவும், கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

    கல்வியையும் டிஜிட்டல் பின்னணியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக 2011 செப்டம்பர் 15 அன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விலையில்லா மடிக்கணினி திட்டம் என்ற உன்னத திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

    2019 ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த இந்த திட்டம் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை.

    இந்நிலையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் சிறிய மாற்றங்களுடன் இலவச லேப்டாப் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டரை தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் கோரியது.

    2025-2026-ம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் வகையில் 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டர் கோரியது எல்காட் நிறுவனம். 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி.எஸ்.எஸ்.டி. கொண்ட ஹார்ட் டிஸ்க், 14 அல்லது 15.6 இஞ்ச் திரை ஆகிய செயல் திறன் கொண்ட வகையில் இந்த மடிக் கணினி இருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • சியோமி நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி நோட் 12 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • மூன்று ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ரெட்மி பிராண்டிங்கில் மேலும் சில சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

    ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சியோமி நிறுவனம் சியோமி புக் ஏர் 13 மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சியோமி லேப்டாப், ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி புதிய ரெட்மி டிவி, ரெட்மி ப்ரோஜெக்டர், எலெக்ட்ரிக் ஹீட்டர் போன்ற சாதனங்களையும் சியோமி அறிமுகம் செய்தது.

    புதிய சியோமி புக் ஏர் 13 மாடல் சியோமி இதுவரை அறிமுகம் செய்ததில் மிகவும் மெல்லியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. சியோமி புக் ஏர் 13 மாடலில் 13.3 இன்ச் 2880x1800 பிக்சல் E4 OLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன், VESA டிஸ்ப்ளே HDR500 சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் 2-இன்-1 டிசைன் மற்றும் 360 டிகிரி ஹின்ஜ், டச் சப்போர்ட் உள்ளது.

    இதனால் புதிய சியோமி புக் ஏர் 13 மாடலை பல்வேறு விதங்களில் பயன்படுத்த முடியும். இந்த லேப்டாப்பில் 6-சீரிஸ் அலுமினியம் அலாய், CNC கார்விங் வழிமுறை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை மற்றும் அளவு முறையே 1.2 கிலோ மற்றும் 12mm ஆகும்.

    இந்த லேப்டாப்பில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி, டூயல் யூனிட் மைக்ரோபோன்கள், பேக்லிட் கீபோர்டு, கிளாஸ் டச்பேட், பவர் பட்டனில் கைரேகை சென்சார், 8MP கேமரா, 12th Gen இண்டெல் கோர் ஐ7 பிராசஸர், இண்டெல் ஐரிஸ் Xe GPU, அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி SSD ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் இதில் 58.3 வாட் ஹவர் பேட்டரி மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. புதிய சியோமி புக் ஏர் 13 மாடல் விண்டோஸ் 11 ஒஎஸ், வைபை 6E, ப்ளூடூத் 5.2, இரண்டு தண்டர்போல்ட் 4 போர்ட்கள், ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    சீன சந்தையில் சியோமி புக் ஏர் 13 மாடலின் விலை RMB 4999, இந்திய மதிப்பில் ரூ. 56 ஆயிரத்து 925 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த லேப்டாப் வைட் நிறத்தில் கிடைக்கிறது.

    • அசுஸ் நிறுவனத்தின் புதிய லேப்டாப் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய லேப்டாப்கள் பயனர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும், சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையிலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    அசுஸ் இந்தியா நிறுவனம் ஆறு புதிய லேப்டாப் மாடல்களை பிரீமியம் எக்ஸ்பர்ட்புக் சீரிசில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லேப்டாப்கள் B5, B7, B2, B3 மற்றும் 12th Gen B9 மற்றும் B1 என அழைக்கப்படுகின்றன. ஹைப்ரிட் வொர்க் முறையை கருத்தில் கொண்டு வொர்க்ஸ்டேஷன் மற்றும் கன்வெர்டிபில் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புது லேப்டாப்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த லேப்டாப்கள் நீடித்த ப்ரோடக்டிவிட்டி மற்றும் பயனர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கின்றன. இவற்றில் பில்ட்-இன் கைரேகை சென்சார், face recognition வசதிக்காக IR கேமரா, வெப்கேமரா, டேட்டா செக்யுரிட்டிக்காக டிரஸ்டட் பிளாட்ஃபார்ம் மாட்யுல் (TPM) 2.0 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    எக்ஸ்பர்ட்புக் B5 சீரிஸ் மாடல்களில் இண்டெல் 12th Gen CoreTM i7-P சீரிஸ் 28W பிராசஸர், தண்டர்போல்ட் 4, ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ், அதிகபட்சம் 40 ஜிபி குயிக் DDR ரேம், வைபை 6 சப்போர்ட் உள்ளிட்டவை எக்ஸ்பர்ட் B5 மற்றும் B5 ஃப்ளிப் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. எக்ஸ்பர்ட்புக் B5 மற்றும் B5 ஃப்ளிப் மாடல்களில் 14 இன்ச் FHD+ ஸ்கரீன், ஆண்டி-கிலேர் கோட்டிங் உள்ளது. B5 ஃப்ளிப் மாடலில் டச் சப்போர்ட் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்டெப்லெஸ் கன்வெர்டிபில் ஹின்ஜ் உள்ளது.

    எக்ஸ்பர்ட்புக் B7 ஃப்ளிப் மாடலில் 5ஜி கனெக்டிவிட்டி உள்ளது. இத்துடன் அதிநவீன 12th Gen இண்டெல் கோர் i7 28-வாட் P சீரிஸ் பிராசஸர், வைபை 6, ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 14 இன்ச் QHD+ 2560x1600 பிக்சல் ஆண்டி கிலேர் டச் ஸ்கிரீன், அசுஸ் பென், 360-டிகிரி ஹின்ஜ் உள்ளது.

    எக்ஸ்பர்ட்புக் B2 மாடல் கிளாம்ஷெல் டிசைன் அல்லது ஃப்ளிப் வடிவில் வழங்கப்படுகிறது. இவற்றில் முறையே 15.6 இன்ச் அல்லது 14 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இத்துடன் 12th Gen இண்டெல் கோர் vப்ரோ பிராசஸர்கள் உள்ளன. இத்துடன் பேக்லிட் கீபோர்டு, IR HD வெப்கேமரா, ஸ்மார்ட் கார்டு ரீடர், ஹார்டுவேர் TMP 2.0 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    எக்ஸ்பர்ட்புக் B3 ஃப்ளிப் 14 இன்ச் ஸ்கிரீன், TUV ரெயின்லாந்து சான்று, 12th Gen இண்டெல் கோர் i7 பிராசஸர், 360 டிகிரி டேப்லெட் மோட், ரி-இன்ஃபோர்ஸ் செய்யப்பட்ட கீபோர்டு, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. எக்ஸ்பர்ட்புக் B9 மாடலில் 12th Gen இண்டெல் கோர் i7 பிராசஸர் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ், 32 ஜிபி LPDDR5 5200 ரேம், அதிகபட்சம் ட்வின் 2TB எஸ்எஸ்டி, இண்டெல் வைபை 6 வழங்கப்பட்டுள்ளது.

    • சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புது லேப்டாப் மாடலில் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் டச் ஸ்கிரீன் வசதி உள்ளது.
    • இதனை லேப்டாப் மட்டுமின்றி இதனை டேப்லெட் போன்று பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் தனது புது லேப்டாப் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக இந்த லேப்டாப் தென் கொரிய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    புதிய சாம்சங் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடலில் உள்ள 360 டிகிரி ஹின்ஜ் இதனை லேப்டாப் அல்லது டேப்லெட் போன்று பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடல் குவால்காம் நிறுவன பாகங்கள் மற்றும் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள கிராஃபிக்ஸ், பிராசஸர், வைபை கனெக்‌ஷன் தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளை குவால்காம் நிறுவனம் வழங்கி இருக்கிறது.

    இந்த லேப்டாப்பில் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 33.7செமீ டச் ஸ்கிரீன், 11.5mm தடிமனாக உள்ளது. இதன் ஒட்டுமொத்த எடை 1.04 கிலோ ஆகும். சாம்சங் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடலில் ஸ்னாப்டிராகன் 8cx ஜென் 3 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய பிராசஸரை விட 57 சதவீதம் வரை அதிக செயல்திறன் மற்றும் 85 சதவீதம் சிறப்பான மல்டி-டாஸ்கிங் அனுபவத்தை வழங்குகிறது.

    கூடுதலாக குவால்காம் அட்ரினோ GPU வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு குவால்காம் நிறுவனத்தின் ஃபாஸ்ட்கனெக்ட் 6900 சிஸ்டம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அதிவேக மற்றும் சீரான வைபை 6E கனெக்‌ஷன் வழங்கப்படுகிறது. பேட்டரியை பொருத்தவரை இந்த சாதனத்தை முழு சார்ஜ் செய்தால் 35 மணி நேரம் வரை தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். இந்த சாதனத்தில் சாம்சங் நிறுவனத்தின் S பென் ஸ்டைலஸ் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சாம்சங் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடல் கிராஃபைட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 1.89 மில்லியன் வொன் இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 23 ஆயிரத்து 585 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தென் கொரிய சந்தையில் இதன் விற்பனை ஜனவரி 16 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    • சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன் மற்றும் மின்சாதனங்கள் மட்டுமின்றி லேப்டாப் பிரிவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
    • அடுத்த ஆண்டு துவக்கத்தில் சாம்சங் நிறுவனம் அடுத்த தலைமுறை கேலக்ஸி லேப்டாப்களை அறிமுகம் செய்யும் என தெரிகிறது.

    கடந்த சில ஆண்டுகளாகவே சாம்சங் நிறுவனம் லேப்டாப் பிரிவிலும் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. 2023 வாக்கில் சாம்சங் புதிய தலைமுறை கேலக்ஸி லேப்டாப்களை அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய கேலக்ஸி லேப்டாப்களில் மேம்பட்ட ஹார்டுவேர், சிறப்பான சாஃப்ட்வேர் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை லேப்டாப்களை கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி அன்பேக்டு 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. அறிமுக நிகழ்வு பிப்ரவரி 2023 மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் என தெரிகிறது. பல்வேறு ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களை அறிமுகம் செய்வதால் இந்த நிகழ்வு வழக்கத்தை விட நீண்ட நேரம் நடைபெறலாம்.

    புதிய ஹை-எண்ட் லேப்டாப் மாடல்களில் மேம்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்படலாம். புதிய கேலக்ஸி புக் லேப்டாப்களில் இண்டெல் நிறுவனத்தின் 13th Gen பிராசஸர்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேக்கள், பில்ட்-இன் S பென் ஸ்டைலஸ், பிரத்யேக GPU உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம்.

    கேலக்ஸி ஸ்மார்ட்போன் மற்றும் வயர்லெஸ் இயர்பட் உள்ளிட்டவைகளுடன் பயன்படுத்தும் போது கூடுதல் அம்சங்களை மென்பொருள் பிரிவில் வழங்க சாம்சங் முடிவு செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய லேப்டாப்களில் அதிக ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் புது மேக்புக் ஏர் வெளியீடு பற்றி இணையத்தில் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • இதுதவிர புதிய ஏர்பாட்ஸ் மாடல் உருவாகி வருவதாகவும், இதன் விலை சற்று குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ஏர் மாடல்களை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவற்றில் அளவில் சிறிய 12 இன்ச் மாடல் மற்றும் பெரிய 15 இன்ச் மாடலும் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் 12 இன்ச் மாடல் இந்த ஆண்டு அறிமுகமாகாது என்றும் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறார்.

    புதிய 15 இன்ச் மேக்புக் ஏர் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், டிஸ்ப்ளே பிரிவு வல்லுனரான ராஸ் யங், ஆப்பிள் நிறுவனம் 15.5 இன்ச் டிஸ்ப்ளே பேனல்களை உருவாக்கும் பணிகளை இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் துவங்கி விடும் என ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதற்கான தேதியில் மாற்றம் செய்யப்படவில்லை எனில், புது மேக்புக் ஏர் மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும்.

    சமீபத்தில் தான் மேக்புக் ஏர் மாடல் பெருமளவு அப்டேட் செய்யப்பட்டது என்ற காரணத்தால் ஆப்பிள் இம்முறை புது மேக்புக் ஏர் டிசைனை பெருமளவுக்கு மாற்றாது என்றே தெரிகிறது. அதன்படி புது மேக்புக் ஏர் டிசைன் அதன் தற்போதைய மாடல்களை போன்றே காட்சியளிக்கும். மற்ற அம்சங்களை பொருத்தவரை இதில் M2 சிப் அல்லது M2 ப்ரோ பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த இரு பிராசஸர்களையும் ஆப்பிள் இதுவரை அறிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    விரைவில் புதிய M2 சிப்செட் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதோடு புதிய மேக் சாதனங்களில் இந்த சிப்செட் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஆண்டு அல்லது 2024 வாக்கில் ஆப்பிள் அறிமுகம் செய்யும் என கூறப்பட்ட 12 இன்ச் மேக்புக் ஏர் மாடல் தற்போதைக்கு விரைந்து அறிமுகம் செய்யப்படாது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

    • லெனோவோ நிறுவனத்தின் புது லேப்டாப் மாடல் நான்கு விதங்களில் பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது.
    • இதில் 14 இன்ச் OLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 4K ரெசல்யூஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    லெனோவோ இந்தியா நிறுவனம் யோகா 9i, 2-இன்-1 லேப்டாப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. யோகா சிரிசில் அறிமுகமாகி இருக்கும் புது 2-இன்-1 லேப்டாப் 13th Gen இண்டெல் கோர் பிராசஸர் மற்றும் இண்டெல் இவோ சான்று பெற்று இருக்கிறது.

    புதிய லெனோவோ யோகா 9i மாடலை- லேப்டாப், ஸ்டாண்ட், டெண்ட் அல்லது டேப்லெட் என நான்கு விதமாக பயன்படுத்த முடியும். இதில் 14-இன்ச் OLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 4K ரெசல்யூஷன் வசதி, டால்பி விஷன் சான்று வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் லெனோவோ பிரெசிஷன் பென் 2 வழங்கப்படுகிறது. இதில் உள்ள 13th Gen இண்டெல் கோர் i7-1360P பிராசஸர், 16 ஜிபி LPDDR5 5 ரேம், 1 டிபி M.2 எஸ்எஸ்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் 2MP ஹைப்ரிட் FHD/ இன்ஃப்ராரெட் கேமரா, ஸ்மார்ட் ஃபேஷியல் ரெகோக்னிஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 75 வாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் பத்து மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    லெனோவோ யோகா 9i அம்சங்கள்:

    14 இன்ச் 4K 3840x2400 பிக்சல் / 2.8K 2880x1080 பிக்சல் OLED 60Hz டச் ஸ்கிரீன்

    13th Gen இண்டெல் கோர் i7 1360P பிராசஸர்

    இண்டெல் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ்

    அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5 ரேம்

    2x யுஎஸ்பி சி தண்டர்போல்ட் 4

    1x யுஎஸ்பி ஏ ஜென் 3.2

    1x யுஎஸ்பி சி ஜென் 2

    ஹெட்போன் ஜாக்

    கிளாஸ் டச்பேட்

    2MP FHD+ IR ஹைப்ரிட் கேமரா

    4x போவர்ஸ் & வில்கின்ஸ் ஸ்பீக்கர்

    டால்பி அட்மோஸ் வசதி

    லெனோவோ பிரெசிஷன் 2

    வைபை 6E, ப்ளூடூத் 5.2

    75 வாட் ஹவர் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    லெனோவோ யோகா 9i 2-இன்-1 லேப்டாப்கள் ஸ்டாம் கிரே மற்றும் ஓட்மீல் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 74 ஆயித்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை லெனோவோ, க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. ஜனவரி 29 ஆம் தேதி முதல் அமேசான் தளத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • ஆப்பிள் நிறுவனம் தனது M2 ப்ரோ மற்றும் M2 மேக்ஸ் சிப்செட்கள் அடங்கிய மேக்புக் ப்ரோ மாடல்கள் அறிமுகம்.
    • புதிய மேம்பட்ட மேக்புக் ப்ரோ மாடல்கள் 14.2 இன்ச் மற்றும் 16.2 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ப்ரோ மாடல்களை புதிய M2 ப்ரோ மற்றும் M2 மேக்ஸ் சிப்செட்களை கொண்டு அப்டேட் செய்து இருக்கிறது. புதிய M2 ப்ரோ பிராசஸரில் 10- அல்லது 12 கோர் சிபியு, 200 ஜிபி யுனிஃபைடு மெமரி பேண்ட்வித், அதிகபட்சம் 19 கோர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நியூரல் என்ஜின் 40 சதவீதம் அதிவேகமானது ஆகும்.

    M2 மேக்ஸ் கொண்ட மேக்புக் ப்ரோ மாடலில் 38 கோர் ஜிபியு, 400 ஜிபி யுனிஃபைடு மெமரி பேண்ட்வித் உள்ளது. M2 மேக்ஸ் சிப்செட்டில் அடுத்த தலைமுறை 12-கோர் சிபியு, அதிகபட்சம் எட்டு அதீத செயல்திறன் கொண்ட கோர்கள் உள்ளன. இது M1 மேக்ஸ்-ஐ விட 20 சதவீதம் அதிக செயல்திறன் கொண்டிருக்கிறது.

    புது சிப் வைபை 6இ, ப்ளூடூத் 5.3, மேம்பட்ட பேட்டரி லைஃப், HDMI மூலம் 8K எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளே சப்போர்ட், அதிகபட்சம் 96 ஜிபி யுனிஃபைடு மெமரி உள்ளது. இந்த லேப்டாப்கள் 14.2 இன்ச் மற்றும் 16.2 இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன. இத்துடன் லிக்விட் ரெட்டினா XDR மினி எல்இடி டிஸ்ப்ளே, ப்ரோமோஷன் தொழில்நுட்பம், அதிகபட்சம் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், அலுமினியம் பாடி, மேஜிக் கீபோர்டு வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் மேக்புக் ப்ரோ (2023) 14 இன்ச் மற்றும் 16 இன்ச் அம்சங்கள்:

    14.2 இன்ச் 3024x1964 பிக்சல் / 16.2 இன்ச் 3456x2234 பிக்சல் லிக்விட் ரெட்டினா XDR டிஸ்ப்ளே

    ஆப்பிள் M2 ப்ரோ சிப் - 10-கோர் சிபியு, 19- கோர் ஜிபியு

    ஆப்பிள் M2 மேக்ஸ் சிப் - 12-கோர் சிபியு, 38-கோர் ஜிபியு

    அதிகபட்சம் 32 ஜிபி யுனிஃபைடு மெமரி (M2 மேக்ஸ் சிப்)

    96 ஜிபி (M2 மேக்ஸ் மற்றும் 38 கோர் ஜிபியு)

    512 ஜிபி / 1 டிபி எஸ்எஸ்டி

    மேக் ஒஎஸ் வெண்டுரா

    பேக்லிட் மேஜிக் கீபோர்டு, டச் ஐடி, ஆம்பியண்ட் லைட் சென்சார்

    ஃபோர்ஸ் டச் டிராக்பேட்

    வைபை 6இ, ப்ளூடூத் 5.3

    1080 பிக்சல் ஃபேஸ்டைம் ஹெச்டி கேமரா

    ஸ்டூடியோ தரத்தில் 3-மைக்

    3.5mm ஹெட்போன் ஜாக்

    ஸ்பேஷியல் ஆடியோ

    3x தண்டர்போல்ட் 4 யுஎஸ்பி டைப் சி

    டிஸ்ப்ளே போர்ட், தண்டர்போல்ட் 4, யுஎஸ்பி 4

    எஸ்டிஎக்ஸ்சி கார்டு ஸ்லாட், HDMI 2.1

    மேக்சேஃப் 3 போர்ட்

    14 இன்ச் - 70 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி

    100 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    - மேக்புக் ப்ரோ 14 இன்ச் M2 ப்ரோ 10-கோர் சிபியு, 16-கோர் ஜிபியு, 16 ஜிபி யுனிஃபைடு மெமரி, 512 ஜிபி எஸ்எஸ்டி ரூ. 1 லட்சத்து 99 ஆயிரத்து 900

    - மேக்புக் ப்ரோ 14 இன்ச் M2 ப்ரோ 12-கோர் சிபியு, 19-கோர் ஜிபியு, 16 ஜிபி யுனிஃபைடு மெமரி, 1 டிபி எஸ்எஸ்டி ரூ. 2 லட்சத்து 49 ஆயிரத்து 900

    - மேக்புக் ப்ரோ 14 இன்ச் M2 மேக்ஸ் 12-கோர் சிபியு, 30-கோர் ஜிபியு, 32 ஜிபி யுனிஃபைடு மெமரி, 1 டிபி எஸ்எஸ்டி ரூ. 3 லட்சத்து 09 ஆயிரத்து 900

    - மேக்புக் ப்ரோ 16 இன்ச் M2 ப்ரோ 12-கோர் சிபியு, 19-கோர் ஜிபியு, 16 ஜிபி யுனிஃபைடு மெமரி, 512 ஜிபி எஸ்எஸ்டி ரூ. 2 லட்சத்து 49 ஆயிரத்து 900

    - மேக்புக் ப்ரோ 16 இன்ச் M2 ப்ரோ 12-கோர் சிபியு, 19-கோர் ஜிபியு, 16 ஜிபி யுனிஃபைடு மெமரி, 1 டிபி எஸ்எஸ்டி ரூ. 2 லட்சத்து 69 ஆயிரத்து 900

    - மேக்புக் ப்ரோ 16 இன்ச் M2 மேக்ஸ் 12-கோர் சிபியு, 38-கோர் ஜிபியு, 32 ஜிபி யுனிஃபைடு மெமரி, 1 டிபி எஸ்எஸ்டி ரூ. 3 லட்சத்து 49 ஆயிரத்து 900

    புதிய மேக்புக் ப்ரோ மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. விற்பனை ஜனவரி 24 ஆம் தேதி துவங்குகிறது. ஆப்பிள் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம், ஆப்பிள் ஸ்டோர் ஆப் உள்ளிட்டவைகளில் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட உலகம் முழுக்க 27 நாடுகளில் புது மேக் மினி மாடல்கள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    • ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் M1 மாடல் எல்இடி பேக்லிட் IPS டிஸ்ப்ளே, 30 வாட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
    • 2020 மேக்புக் ஏர் மாடலுக்கு க்ரோமா வலைதளத்தில் சிறப்பு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடல் க்ரோமா வலைதளத்தில் ரூ. 73 ஆயிரத்து 900 விலையில் கிடைக்கிறது. ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளம், முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்களில் மேக்புக் ஏர் விலை தொடர்ந்து ரூ. 99 ஆயிரத்து 900 என்றே பட்டியலிடப்பட்டு இருக்கிறது. சக்திவாய்ந்த லேப்டாப் வாங்க நினைப்போரின் தேர்வாக ஆப்பிள் மேக்புக் மாடல்கள் விளங்குகின்றன.

    க்ரோமா வலைதளத்தில் மேக்புக் ஏர் M1 மாடலின் விலை ரூ. 83 ஆயிரத்து 900 என பட்டியலிடப்பட்டு இருக்கிறது. எனினும், ஹெச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பட்சத்தில் ரூ. 10 ஆயிரம் உடனடி தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் மேக்புக் ஏர் M1 2020 மாடலின் விலை ரூ. 73 ஆயிரத்து 900 என குறைந்து விடும்.

    தற்போது க்ரோமா தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கும் விலை ஆப்பிள் தளத்தில் இருப்பதை விட ரூ. 16 ஆயிரம் குறைவு ஆகும். அந்த வகையில், கூடுதலாக ரூ. 10 ஆயிரம் சேர்க்கும் பட்சத்தில் மேக்புக் ஏர் 2020 மாடலுக்கு ரூ. 26 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அம்சங்கள்:

    ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலில் 13.3 இன்ச் எல்இடி பேக்லிட் IPS டிஸ்ப்ளே, 2560x1600 பிக்சல் ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பிரைட்னஸ், M1 சிப்செட், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 2 டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ், மேக் ஒஎஸ் வெண்டுரா, 720 பிக்சல் ஃபேஸ்டைம் ஹெச்டி கேமரா, டச் ஐடி சென்சார், 49.9 வாட் ஹவர் பேட்டரி, 30 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் வைபை, ப்ளூடூத் 5.0, 2x யுஎஸ்பி டைப் சி போர்ட்கள், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், பிளேபேக், 3-மைக் அரே, வைடு ஸ்டீரியோ சவுண்ட் கொண்டுள்ளது.

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி புக்3 சீரிஸ் மாடல்களும் அறிமுகம்.
    • ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து புதிய கேலக்ஸி புக்3 சீரிஸ் இந்திய விலையை சாம்சங் அறிவித்து இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி புக்3 சீரிஸ்- கேலக்ஸி புக்3 அல்ட்ரா, கேலக்ஸி புக்3 ப்ரோ மற்றும் கேலக்ஸி புக்3 ப்ரோ 360 மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கேலக்ஸி புக்3 சீரிஸ் மாடல்களில் இண்டெல் கோர் 13th Gen பிராசஸர்களை கொண்டிருக்கின்றன. புதிய லேப்டாப்களின் மூலம் சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி சீரிசை விரிவுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

    கேலக்ஸி புக்3 லேப்டாப்கள் சீம்லெஸ் மல்டி-டிவைஸ் கனெக்டிவிட்டி, டாப் எண்ட் ஹார்டுவேரை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காலத்து மல்டி-டிவைஸ் உலகத்துக்கு ஏற்ப கேலக்ஸி புக்3 சீரிஸ் மாடல்கள் சந்தையின் முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவை தலைசிறந்த மல்டி-டிவைஸ் கனெக்டிவிட்டியை பலதரப்பட்ட சாதனங்கள் மற்றும் இயங்குதளங்கள் இடையே வழங்குகிறது.

    கேலக்ஸி புக்3 மாடல்களில் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் நோக்கில் முற்றிலும் புதிய சிபியு, ஜிபியு மற்றும் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி புக்3 அல்ட்ரா மாடலில் அதிநவீன 13th Gen இண்டெல் கோர் i9 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. NVIDIA RTX GeForce 4070 GPU கொண்டிருக்கும் கேலக்ஸி புக்3 அல்ட்ரா அதிரடி கிராஃபிக்ஸ் மற்றும் சிறப்பான கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.

    இதில் உள்ள டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே மற்றும் 3K ரெசல்யூஷன், 120Hz அட்ப்டிவ் ரிப்ரெஷ் ரேட் சிறப்பான வியூவிங் அனுபவத்தை வழங்கும். இத்துடன் மல்டி கண்ட்ரோல் அம்சம் கொண்டு கணினி, கேலக்ஸி டேப் மற்றும் ஸ்மார்ட்போன் உள்ளிட்டவைகளை கேலக்ஸி புக்3 சீரிஸ் கீபோர்டு மற்றும் டிராக்பேட் மூலம இயக்க முடியும். Expert RAW அம்சம் மூலம் கேலக்ஸி ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை புக்3 சீரிசுக்கு டிரான்ஸ்ஃபர் செய்து எடிட் செய்ய முடியும்.

    விலை விவரங்கள்:

    இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி புக்3 360 சீரிஸ் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 990 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் கேலக்ஸி புக்3 அல்ட்ரா மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 81 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அறிமுக சலுகையாக கேலக்ஸி புக்3 அல்ட்ரா வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரமும், கேலக்ஸி புக்3 ப்ரோ சீரிஸ் வாங்குவோருக்கு ரூ. 8 ஆயிரமும் கேஷ்பேக் ஆக வழங்கப்படுகிறது. இத்துடன் அதிகபட்சம் 24 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. முன்பதிவு சலுகைகளின் கீழ் கேலக்ஸி புக்3 அல்ட்ரா வாங்குவோர் ரூ. 50 ஆயிரத்து 990 மதிப்புள்ள M8 ஸ்மார்ட் மாணிட்டரை ரூ. 1,999 விலையில் வாங்கிட முடியும்.

    கேலக்ஸி புக்3 ப்ரோ 360 மற்றும் கேலக்ஸி புக்3 ப்ரோ மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. கேலக்ஸி புக்3 அல்ட்ரா மாடலுக்கான முன்பதிவு பிப்ரவரி 14 ஆம் தேதி துவங்குகிறது. முன்பதிவு சாம்சங் வலைதளம், முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

    • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி புக் 3 அல்ட்ரா இந்திய விலை ரூ. 2 லட்சத்து 81 ஆயிரத்து 990 ஆகும்.
    • இந்திய சந்தையில் கேலக்ஸி புக் 3 அல்ட்ரா விற்பனை மார்ச் மாத வாக்கில் துவங்குகிறது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி புக் 3 அல்ட்ரா மாடலுக்கான முன்பதிவு துவங்கியது. முன்பதிவை தொடர்ந்து கேலக்ஸி புக் 3 அல்ட்ரா விற்பனை மார்ச் 15 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் கேலக்ஸி புக் 3 அல்ட்ரா விலை ரூ. 2 லட்சத்து 81 ஆயிரத்து 990 ஆகும். புதிய கேலக்ஸி புக் 3 அல்ட்ரா வாங்குவோருக்கு வங்கி கேஷ்பேக் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

     

    இத்துடன் அதிகபட்சம் 24 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது. முன்பதிவு சலுகைகளின் கீழ் கேலக்ஸி புக் 3 அல்ட்ரா வாங்குவோர் ரூ. 50 ஆயிரத்து 099 மதிப்புள்ள M8 ஸ்மார்ட் மாணிட்டரை ரூ. 1,999 விலையில் வாங்கிட முடியும்.

    கேலக்ஸி புக் 3 அல்ட்ரா மாடலில் அதிநவீன இண்டெல் கோர் i9 பிராசஸர், NVIDIA GeForce RTX 4070 GPU, 3K 2880x1800 பிக்சல் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே, அடாப்டிவ் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. 1.79 கிலோ எடை கொண்டிருக்கும் கேலக்ஸி புக் 3 அல்ட்ரா, 16.5 மில்லிமீட்டர் அளவு தடிமனாக இருக்கிறது. இத்துடன் மெல்லிய, அலுமினியம் ஃபிரேம் உள்ளது.

    ×