என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pongal Gift"
- அதிகபட்சமாக தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 1,723 பேரும் பொங்கல் பரிசை வாங்கவில்லை.
- அரசு கருவூலத்திற்கு ரூ. 43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பியதாக தமிழ்நாடு உணவுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவரும் அரசின் பொங்கல் பரிசு ரூ.1000 தொகையை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதில் அதிகபட்சமாக தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 1,723 பேரும் பொங்கல் பரிசை வாங்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதன்மூலம், அரசு கருவூலத்திற்கு ரூ. 43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பியதாக தமிழ்நாடு உணவுத்துறை தெரிவித்துள்ளது.
- வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கணக்கெடுப்பு
- அரசு கருவூலத்தில் பணத்தை அதிகாரிகள் செலுத்தினர்
வேலூர்:
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.
சென்னையை எடுத்துக் கொண்டால் வட சென்னையில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 728 குடும்ப அட்டைகளுக்கும், தென் சென்னையில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 552 குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000 பணம் வழங்க ரேசன் கடைகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டிருந் தது.
ஆனால் வடசென்னையில் 9 லட்சத்து 83 ஆயிரத்து 5 பேரும், தென் சென்னை யில் 9 லட்சத்து 90 ஆயிரத்து 14 பேர் மட்டுமே பொங்கல் பரிசு பணம் ரூ.1000 வாங்கி சென்றுள்ளனர்.
வடசென்னையில் 35 ஆயிரத்து 723 குடும்ப அட்டைதாரர்களும் தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 குடும்ப அட்டைதாரர் களும் ரூபாய் வாங்கவில்லை.
இதேபோல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8026 கார்டு தாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,263 கார்டு தாரர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8,874 கார்டு தாரர்களும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லை.
வேலூர் மாவட்டத்தில் 7,171 ரேசன் கார்டு தாரர்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,897 திருவண்ணாமலை மாவட்டத்தில் 13,385, திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,723 ரேசன் அட்டைதாரர்கள் ரூ. 1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லை.
வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மொத்தம் 25176 ரேசன் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்கவில்லை.
தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பி வந்துவிட்டது.
இந்த தொகையை அரசு கருவூலத்தில் அதிகாரிகள் செலுத்தி விட்டனர்.
- கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 476 அரிசி குடும்ப அட்டைகள் உள்ளன.
- அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பி வந்துவிட்டது.
கோவை
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 476 அரிசி குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 150 பேர் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுள்ளனர். இது 97.06 சதவீதம் ஆகும். 32 ஆயிரத்து 326 பேர் பரிசுத்தொகுப்பை பெறவில்லை. இதனால் இவர்களது பணம் அரசுக்கு திரும்பிச் சென்று விட்டது.
தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பி வந்துவிட்டது. இந்த தொகையை அரசு கருவூலத் தில் அதிகாரிகள் செலுத்தி விட்டனர்.
சென்னையை எடுத்துக் கொண்டால் வட சென்னை யில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 728 குடும்ப அட்டைகளுக்கும், தென் சென்னையில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 552 குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000 பணம் வழங்க ரேசன் கடைகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டிருந் தது.
ஆனால் வடசென்னை யில் 9 லட்சத்து 83 ஆயிரத்து 5 பேரும், தென் சென்னை யில் 9 லட்சத்து 90 ஆயிரத்து 14 பேர் மட்டுமே பொங்கல் பரிசு பணம் ரூ.1000 வாங்கி சென்றுள்ளனர்.
வடசென்னையில் 35 ஆயிரத்து 723 குடும்ப அட்டைதாரர்களும் தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 குடும்ப அட்டைதாரர் களும் ரூபாய் வாங்கவில்லை.
இதேபோல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8026 கார்டு தாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,263 கார்டு தாரர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8,874 கார்டு தாரர்களும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லை.
- மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பொங்கல் பரிசு 1000 ரூபாயை 39 ஆயிரம் பேர் வாங்கவில்லை.
- இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.
மதுரை
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.
மதுரை-விருதுநகர்
மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்து 28 ஆயிரத்து 422 குடும்ப அட்டைகளுக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சத்து 98 ஆயிரத்து 956 குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1000 பணம் வழங்க ரேஷன் கடைகளுக்கு பணம் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்து 8 ஆயிரத்து 983 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சத்து 90 ஆயிரத்து 29 பேர் மட்டுமே ரூ.1000 வாங்கியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 439 குடும்ப அட்டை தாரர்களும், விருதுநகர் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 927 குடும்ப அட்டை தாரர்களும் 1000 ரூபாய் வாங்கவில்லை.
ராமநாதபுரம்-சிவகங்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 95 ஆயிரத்து 742 குடும்ப அட்டைகளுக்கும், சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 316 குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1000 பணம் வழங்க ரேஷன் கடைகளுக்கு பணம் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 349 பேரும், சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 984 பேர் மட்டுமே ரூ.1000 வாங்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 393 குடும்ப அட்டை தாரர்களும், சிவகங்கை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 332 குடும்ப அட்டை தாரர்களும் 1000 ரூபாய் வாங்கவில்லை.
மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களிலும் 39 ஆயிரத்து 91 பேர் பொங்கல் பரிசு 1000 ரூபாய் வாங்கவில்லை.
- சேலம் மாவட்டத்தில், 11 ஆயிரத்து 612 நுகர்வோர் பொங்கல் பரிசு வாங்கவில்லை.
- பொங்கல் பரிசு வாங்காததால் தமிழக அரசுக்கு, ஒரு கோடியே 16 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மீதமானது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 1,606 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வினியோகம் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. தகுதியுள்ள 10 லட்சத்து 71 ஆயிரத்து 724 நுகர்வோர் பொங்கல் பரிசு பெற டோக்கன் வழங்கப்பட்டது.
அதன்படி ரேஷன் கடைக்கு வருகை தந்த நுகர்வோர், பரிசு தொகுப்பு வாங்கினர். ஒரு கார்டுக்கு தலா, ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பும் வழங்கப்பட்டன. முதற்கட்டமாக போகி பண்டிகை வரை பொங்கல் பரிசு வினியோகம் செய்யப்பட்டது.
இதையடுத்து, 2-ம் கட்டமாக 17-ந் தேதி முதல், 20-ந் தேதி வரை நுகர்வோர், பொங்கல் பரிசை பெற்றுச்சென்றனர். மொத்த கார்டுகளில் 10 லட்சத்து 60 ஆயிரத்து 112 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இது, 98.1 சதவீதம். மீதமுள்ள சேலம் மாவட்டத்தில், 11 ஆயிரத்து 612 நுகர்வோர் பொங்கல் பரிசு வாங்கவில்லை.
இதன்மூலம் தமிழக அரசுக்கு, ஒரு கோடியே 16 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மீதமானது. இத்தொகை அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டு உள்ளது என பொது விநியோக திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பொங்கல் தொகுப்பு 5 நாட்கள் தொடர்ந்து வழங்கப்பட்ட நிலையில் ரேசன் கடைகள் நேற்று வரை மூடப்பட்டன. இன்று மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன.
- பொங்கலுக்கு வெளியூர் சென்றவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியதால் இன்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
சென்னை:
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ரூ.1000 ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன. 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 9-ந் தேதி முதல் 13-ந் தேதி முதல் வரை வழங்கப்பட்டன. 92 சதவீதம் பேருக்கு பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்பட்டது.
பொங்கல் தொகுப்பு 5 நாட்கள் தொடர்ந்து வழங்கப்பட்ட நிலையில் ரேசன் கடைகள் நேற்று வரை மூடப்பட்டன. இன்று மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. பொங்கலுக்கு வெளியூர் சென்றவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியதால் இன்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறுகையில், பொங்கல் தொகுப்பு பெரும்பாலானவர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டன. இதுவரையில் வாங்காமல் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம். ரூ.1000 ரொக்கம் கொடுப்பது நிறுத்துவது குறித்து அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அதனால் தொடர்ந்து வினியோகித்து கொண்டு இருக்கிறோம் என்றார்.
- வேட்டி, சட்டைகள், புடவைகள் பச்சரிசி, வெல்லம், பொங்கல் பொருட்களுடன்மஞ்சள் பை வழங்கப்பட்டது.
- மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.
அனுப்பர்பாளையம் :
பொங்கல் பண்டிகையையொட்டி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 10-வது ஆண்டாக போயம்பாளையத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆலோசனைப்படி, தொ.மு.ச பேரவை மாநில துணைச் செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், வடக்கு மாநகர செயலாளரும் மாநகர மேயருமான தினேஷ்குமார் வழிகாட்டுதல் படியும், ஈ.பி.அ.சரவணன் ஏற்பாட்டில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தொ.மு.ச. பேரவை கவுன்சில் துணை தலைவர் ஆர்.ரெங்கசாமி தலைமை தாங்கினார். தொ.மு.ச. மாநில தலைவர் மின்வாரிய பொறியாளர் பண்டிதத்துரை முன்னிலை வகித்தார்.
இதில் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேட்டி, சட்டைகள், புடவைகள் பச்சரிசி, வெல்லம், பொங்கல் பொருட்களுடன்மஞ்சள் பை வழங்கப்பட்டது. பின்னர் பொங்கல் வைத்து சமத்தவப்பொங்கல் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. அமைப்பு செயலாளர் வரதராஜன், சமூக ஆர்வ–லர் ஆண்டிபாளையம் ரவி, பாண்டியன் நகர் தி.மு.க. அவைத்–தலைவர் தயானந்தம், 7-வது வட்ட தி.மு.க.செயலாளர் செல்வராஜ், மாவட்ட ஓட்டல் தொ.மு.ச. பொது செயலாளர் மகேஷ்குமார், அமைப்புசாரா தொ.மு.ச. செயலாளர்கள் பழனிச்சாமி, சானைராஜா, மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. துணை தலைவர் பெருமாநல்லூர் செந்தில் என்கிற பழனிச்சாமி, ஜோதிபாசு, வெள்ளையப்பன், தொ.மு.ச. நிா்வாகிகள் உள்ளிட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை செயலாளர் ஈ.பி.அ.சரவணன் செய்திருந்தார்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை கலெக்டர் வழங்கினார்
- குடும்ப அட்டைதாரர்களுக்கு தினமும் 250 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் 282 ரேஷன் கடைகள் மூலம் 1 லட்சத்து 90 ஆயிரத்து 267 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஆலம்பாடி சமத்துவபுரத்தில் உள்ள அமராவதி அங்காடியில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக வழங்கப்பட்ட டோக்கன் முறையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தினமும் 250 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இது வரும் 13-ந் தேதி வரை வழங்கப்பட உள்ளது
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை) பாண்டியன், பெரம்பலூர் நகரமன்றத்தலைவர் அம்பிகா, நகர மன்ற உறுப்பினர்கள் சிவக்குமார் துரை காமராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பொங்கல் தொகுப்பு பெற முடியாமல் வெளியூர் சென்றவர்கள், விடுபட்டவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வழங்கப்படுகிறது.
- நாளை மாலை வரை ரேஷன் கடைகளில் அவர்கள் வாங்கி செல்ல அனுமதிக்கப்படுகிறது.
சென்னை:
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப்பணம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் கடந்த 9-ந்தேதி தொடங்கி வைத்ததையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் வினியோகம் செய்தார்கள்.
மக்கள் நெரிசல் இல்லாமல் வாங்கிச்செல்ல ஏதுவாக டோக்கன் வழங்கப்பட்டு ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தினமும் 200 முதல் 300 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
பொங்கல் தொகுப்பு 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 4 நாட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் பெரும்பாலானவர்கள் வாங்கிச்சென்று விட்டனர். முதல் நாளில் 25 சதவீதம் பேருக்கு வினியோகம் செய்யப்பட்டது.
2 கோடி குடும்ப அட்டைதாரர்களில் நேற்று வரை 82 சதவீதம் பேருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்பட்டதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதாவது ஒரு கோடியே 70 லட்சம் பேர் நேற்று மாலை வரை தொகுப்பை பெற்றுள்ளனர். பொங்கல் தொகுப்பு வழங்குவது இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
சென்னை உள்ளிட்ட நகரப்பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பொங்கல் தொகுப்பினை பெற்றுக் கொண்டு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யத் தொடங்கி விட்டனர்.
பொங்கல் தொகுப்பு பெற முடியாமல் வெளியூர் சென்றவர்கள், விடுபட்டவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வழங்கப்படுகிறது. நாளை மாலை வரை ரேஷன் கடைகளில் அவர்கள் வாங்கி செல்ல அனுமதிக்கப்படுகிறது.
பொங்கலுக்கு பிறகு வழங்கப்படுமா? நாளையுடன் நிறைவடையுமா? என்பது பற்றி அரசு அறிவிப்பு வெளியிடவும் வாய்ப்பு உள்ளது.
பொங்கல் தொகுப்பு எவ்வித குளறுபடியும் இல்லாமல் இந்த முறை ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொகுப்பில் இடம்பெற்ற பச்சரிசி தரம் வாய்ந்தவையாகவும், வழங்கப்பட்ட முழு நீள கரும்பு நன்றாக இருந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
- சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை சேர்மன் சரண்யா செந்தில்நாதன் வழங்கினார்.
- கிளை செயலாளர்கள் ராமன், ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடியில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000, பொருட்களை வழங்கினார்.
சாக்கோட்டை அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன், முன்னாள் யூனியன் சேர்மன் முத்துராமலிங்கம், முன்னாள் ஊராட்சி தலைவர் அன்பரசன், துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, கவுன்சிலர் பாண்டிகன், கிளை செயலாளர்கள் ராமன், ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.