என் மலர்
நீங்கள் தேடியது "Naam thamizhar katchi"
- நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு கூடுதல் உற்சாகத்தை தருகிறது.
- என்னுடைய திரைப்பட துறையில் இருந்து ஒருவர் வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு கூடுதல் உற்சாகத்தை தருகிறது. என்னுடைய திரைப்பட துறையில் இருந்து ஒருவர் வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதனால் இதை நான் வரவேற்கிறேன். நாட்டில் சிறந்த பிரதமர் என்றால் அது விபிசிங் தான். அவர் 2 ஆண்டுகள் ஆண்டாலும் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் சிறந்த ஆட்சியை தந்தார்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் சேருவீர்களா என்ற கேள்விக்கு பா.ஜ.க., காங்கிரசை ஒரே கட்சியாத்தான் பார்க்கிறேன். நான் தனித்து தான் போட்டியிடுகிறேன். காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் உருவ படங்கள் கர்நாடாகவில் எரிக்கப்பட்டது. அதை கூட்டணி கட்சிகள் கண்டிக்கவில்லை. ஆதனால் நான் அதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னைக்கு வாங்க என்று அழைத்து என்னை அவமானப்படுத்தும் வேலையை ஆரம்பித்தால் சரியாக இருக்காது.
- ஏதாவது வாலாட்டும் வேலையை செய்தால் கர்நாடகத்துக்கு சீமானை வரவழைத்து திணறடித்து விடுவேன்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு அளித்த புகார் தொடர்பான வழக்கு வளசரவாக்கம் போலீசில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் அந்த வழக்கை மீண்டும் தூசு தட்டும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமான் மீது விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்திருந்தார்.
பின்னர் அந்த புகாரை வாபஸ் வாங்கிவிட்டு விஜயலட்சுமி பெங்களூருக்கு சென்றார்.
இந்த நிலையில் விஜயலட்சுமி, பெங்களூரில் இருந்தபடியே சீமானுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
சீமான் என்னிடம் ரூ.1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு போட்டதில் இருந்து நான் கதறிக்கொண்டிருப்பதாக அவரது ஆதரவு யூடியூப் சேனலில் போட்டுள்ளனர். சீமானுக்கும் நன்றி கிடையாது. சீமான் சார்ந்த யூடியூப் சேனலுக்கும் நன்றி கிடையாது. கடந்த 2008-ல் எனது அக்கா கணவர் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றதால் அந்த பிரச்சனையை முடித்து கொடுப்பதற்காகவே சீமானை போய் சந்தித்தேன். எனது அக்காவுக்கு அவர் நன்மை செய்யவில்லை. அக்கா மீதும் கருணை இல்லை. என் மீதும் கருணை கிடையாது. எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக சீமான் செய்து விட்டார்.
என்னை தூக்கி பெங்களூரில் போட்டாச்சி. பெங்களூரில் எனது அக்காவை பார்த்துக் கொண்டு எனக்கு ஒரு வாழ்க்கை என்பதை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எந்த சீமானும் வரப்போவது இல்லை. நாம் தமிழர் கட்சியினரும் வரப்போவது இல்லை. நான் எல்லாவற்றையும் பெருந்தன்மையாக முடித்து கொடுத்துவிட்டு உங்க முகத்தை கூட இனி பார்க்கக் கூடாது என்கிற எண்ணத்தில் தான் அடுத்தகட்ட வேலைக்கு போயாச்சி. இத்தோடு நீங்கள் எல்லாம் விட்டு விட்டீர்கள் என்றால் ஓ.கே. திரும்பவும் எதையாவது புதிதாக செய்ய வேண்டாம்.
1 கோடிக்கு மான நஷ்ட வழக்கு போட்டிருக்கோம். சென்னைக்கு வாங்க என்று அழைத்து என்னை அவமானப்படுத்தும் வேலையை ஆரம்பித்தால் சரியாக இருக்காது. ஜகேஷ் என்கிற நடிகருடன் விஜயலட்சுமிக்கு திருமணமாகிவிட்டது என்று சீமான் கூறியுள்ளார். நான் சீமான் மீது ரூ.20 கோடிக்கு பெங்களூரில் மானநஷ்ட வழக்கு போடுவேன். கர்நாடககாரர்கள் இப்படி பேசினால் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். என் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்று இப்படி சீமான் பேசியுள்ளார். இதோடு வாயை மூடிட்டு போய் விடுங்கள். என்னிடம் வம்பிழுக்க வேண்டாம். இது தொடர்ந்தால் நான் மட்டுமல்ல ஜகேஷ் சாரையும் மானநஷ்டஈடு வழக்கு போட வைப்பேன். உங்களை தூங்க விடாமல் செய்து விடுவேன்.
இதற்கு மேல் ஏதாவது வாலாட்டும் வேலையை செய்தால் கர்நாடகத்துக்கு சீமானை வரவழைத்து திணறடித்து விடுவேன். எனவே எல்லாவற்றையும் நிறுத்திக் கொள்ளுங்கள்.
இவ்வாறு விஜயலட்சுமி கூறியுள்ளார்.
- விஜயலட்சுமியின் புகார்கள், வாபஸ் பெற்ற விவரங்களை போலீசார் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
- வழக்கு தொடர்பான ஆவணங்களை போலீசுக்கு வழங்கவேண்டும் என்று சீமான் தரப்புக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் 2011-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது இந்த வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும். விஜயலட்சுமியின் புகார்கள், வாபஸ் பெற்ற விவரங்களை போலீசார் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை போலீசுக்கு வழங்கவேண்டும் என்று சீமான் தரப்புக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். பின்னர் இந்த வழக்கை வருகிற 26-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
- சென்னை பெருநகர காவல் துறையை தொடர்புப்படுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும்.
- தவறான தகவல் பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னை :
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட மேலும் சிலரின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டன. இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
டுவிட்டர் கணக்கை முடக்குமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் சென்னை பெருநகர காவல் துறையை தொடர்புப்படுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும்.
தவறான தகவல் பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
- கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.
- டுவிட்டர் முடக்கத்தை விலக்கி சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
சென்னை :
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட மேலும் சிலரின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டன.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது டுவிட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.
டுவிட்டர் முடக்கத்தை விலக்கி சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வெயில் தொடர்ந்து கடுமையாக நீடிப்பதால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீடிக்க வேண்டும்.
- தூத்துக்குடியில் நேர்மையான கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கும் 10 லட்சம். விஷ சாராயத்திற்கும் 10 லட்சம் என்பது என்ன நியாயம்?
புதுச்சேரி:
முத்தரையர் நினைவு நாளை முன்னிட்டு புதுவை-கடலூர் சாலை 100 அடி சாலை சந்திப்பில் அவரது உருவப்பட மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்தது.
இதில் பங்கேற்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்திற்கு மரியாதை செலுத்தி கட்சி கொடியை ஏற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விஷ சாராய விவகாரத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, செஞ்சி மஸ்தான் பதவி விலகி இருக்க வேண்டும். விஷ சாராயத்திற்கு அனைவரும் பதவி விலகி இருக்க வேண்டும். கொடநாடு கொலைக்கு எடப்பாடி பதவி விலகி இருக்க வேண்டும்.
ஆனால் யாருக்கும் தார்மீக பொறுப்பு என்பது இல்லை. எடப்பாடி ஆட்சியில் கள்ளச்சாராயம் இருந்தது. ஆனால் மக்கள் சாகவில்லை. இப்போது சாராயத்துக்கு பலர் இறந்துள்ளனர். ஆட்சியாளர்களை தேர்வு செய்தது மக்கள். அவர்கள்தான் இனி முடிவு செய்வார்கள்.
கவர்னரிடம் அ.தி.மு.க.வினர் கடிதம் கொடுக்கின்றனர். அப்படியென்றால் கொடநாடு கொலை விசாரணைக்கும் கடிதம் தரலாமா? தமிழக முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு ஏற்கனவே பலமுறை சென்றுள்ளார். அவர் சென்றதால் என்ன முதலீடு பெற்றார்?
தொழில் வளர்ச்சி என்பது பசப்பு வார்த்தை. புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை தொடங்குகின்றனர். இதில் நமது பாட்டனார் பற்றிய வரலாறு வருமா? தமிழ் இருக்கு என சொல்கிறார்கள். எங்கே இருக்கிறது? 12 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வரவில்லை. தமிழ், தமிழ் என கூறுகிறீர்கள். இரு தலைமுறை தாய்மொழியே இல்லாமல் வளர்ந்து விட்டது.
தமிழ் எங்கு வாழ்கிறது? இதுதான் திராவிட மாடலா? நீண்ட காலமாக சூழ்ச்சி செய்து தமிழனை ஏமாற்றி விட்டார்கள். தமிழ் வாழ்க என மாநகராட்சியில் எழுதினால் போதுமா? கோப்பில் தமிழ் வேண்டாமா? கொஞ்ச நாளைக்கு இந்த கொடுமை போகும். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழைத்தேடி பயணம் செல்கிறார்.
காலம் கடந்து விட்டது. ஒரு கடைத்தெருவில்கூட தமிழில் பெயர் பலகை இல்லை. ஒரு வானூர்தியில் ஓட்டுநர் தமிழில் அறிவிப்பு வெளியிட்டார் என அனைவரும் கைதட்டினார்கள். தமிழ் உணர்வு அனைவருக்கும் இருக்கு. டாக்டர் ராமதாஸ் 80 வயதிலும் தமிழை தேடி செல்கிறார், அவரை பாராட்டுகிறேன். அடுத்து வருபவர்கள் இதை தொடர வேண்டும்.
வெயில் தொடர்ந்து கடுமையாக நீடிப்பதால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீடிக்க வேண்டும். மரணமடைந்த விவசாயிகள், இலங்கை தமிழர்கள் கொலை, பல கொடிய சம்பவங்களுக்கு தமிழக அரசு தொகை கொடுத்ததா?
தூத்துக்குடியில் நேர்மையான கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கும் 10 லட்சம். விஷ சாராயத்திற்கும் 10 லட்சம் என்பது என்ன நியாயம்? காய்ச்சுவதே அவர்கள் என்பதால் பணம் கொடுத்து மறைக்க பார்க்கிறார்கள். இனி மனமுடைந்தால் விஷம் குடிக்க தேவையில்லை. கள்ளசாராயம் குடித்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும்.
ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்ப பெறுவது பைத்தியக்காரத்தனம். வேலையில்லா தையல்காரன் யானைக்கு டவுசர் தைத்த கதைதான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தல் வரும்போது காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்கள் வந்தன.
- கர்நாடக தேர்தலின் போது ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளிப்படுத்தி இருக்கிறது.
சென்னை:
கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்ட படம் 'தி கேரளா ஸ்டோரி.'
இந்த படம் சென்னை உள்பட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் நேற்று வெளியானது. இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. இருப்பினும் நேற்று தென்மாநில எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதையடுத்து 342 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
இந்த நிலையில் 2-வது நாளான இன்று இந்த படத்தை தடை செய்ய கோரியும், படத்தில் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படுவதாக வரும் காட்சிகளை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அமைந்தகரையில் உள்ள ஸ்கைவாக் தியேட்டர் முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். இதையடுத்து தியேட்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
போராட்டம் நடத்துவதற்காக அண்ணா வளைவு முன்பு சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் திரண்டனர்.
ஒருங்கிணைப்பாளர் கதிர் ராஜேந்திரன், தமிழர் நல பேரவை தலைவர் களஞ்சியம், மருது மக்கள் இயக்க தலைவர் முத்துப்பாண்டி, தலைமை நிலையச் செய்தி தொடர்பாளர் பாக்கிய ராசன், தலைமை நிலையச் செயலாளர் ஹர்திப் குமார், வக்கீல் பாசறை செயலாளர் சங்கர், மண்டல செயலாளர் கோபு, இளைஞர் பாசறை செயலாளர் இடும்பவனம் கார்த்தி, மாவட்ட செயலாளர்கள் அய்யனார், சோழன் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திரைப்படத்தை தடை செய்ய கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று தான் நாம் எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கிறோம். தற்போது மதமே ஆட்சி செய்யும் போக்கை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
இந்தியாவில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளில் கொடும் போக்கு நிலவுகிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தல் வரும்போது காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்கள் வந்தன. கர்நாடக தேர்தலின் போது 'தி கேரளா ஸ்டோரி' படம் வெளிப்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசும்போது தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை கேட்பவர்கள் நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் ஆவார்கள் என்று பேசுகிறார். இது போன்ற கொடுமை எங்காவது உண்டா?
2024 பாராளுமன்ற தேர்தலுக்கும் ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. 8 ஆயிரம் இந்துக் கோவிலை இடித்தவர், 27 தேவாலயங்களை இடித்தவர், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களை கொன்றவர், 2 ஆயிரம் பிராமணர்களை கொன்றவர் 'திப்பு' என்று ஒரு படம் தயாரிக்கப்பட்டு முன்னோட்டம் வந்துள்ளது. அந்த படம் பாராளுமன்ற தேர்தலையொட்டி வெளிவரும். அதற்கும் நாங்கள் போராட்டம் நடத்துவோம்.
தி கேரளா ஸ்டோரி படம் உங்கள் மகள்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்ற கருத்தை மையப்படுத்துகிறது. நீங்களும் உங்கள் மகள்களை இந்த படத்தை பார்க்கவிடாமல் தடுத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கான்கிரீட் தளம் அமைப்பது ஒப்பந்ததாரர்களுக்கு உதவுமே தவிர, விவசாயிகளுக்குச் சிறிதளவும் உதவாது என்றுகூறி கீழ்பவானி ஆற்றுப் பாசன கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மீண்டும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
- அனைத்து கிராமசபைக் கூட்டங்களிலும் கான்கிரீட் தளத்திற்கு எதிராகத் தீர்மானங்களையும் நிறைவேற்றி உள்ளனர்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடைமடைப் பகுதிகளுக்குப் பாசன நீரினைக் கொண்டு சேர்ப்பதாகக் கூறி காவிரி ஆற்றின் கல்லணைக் கால்வாய், பவானிசாகர் அணையின் கீழ்பவானி வாய்க்கால் உள்ளிட்ட ஆறுகளிலிருந்து பாசன வசதி தரும் நீர்வழித் தடங்களை கான்கிரீட் தடங்களாக மாற்றும் தமிழ்நாடு அரசின் செயல் சூழலியல் அறிவியலுக்குப் புறம்பானதாகும். நீர்வழித் தடங்களை கான்கிரீட் தளங்களாக மாற்றுவதினால் இடைப்பட்ட பாசன கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் முற்றுமுழுதாக அற்றுப்போய் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதோடு நிலத்தடிநீர் பாசனமும் வற்றிப்போகும் பேராபத்து ஏற்படும்.
ஏற்கனவே, பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்காலில் கசிவுநீர் மூலம் இழப்பு ஏற்படுவதாகக் கூறி, நீர்வழித்தடம் கான்கிரீட் தளமாக மாற்றப்பட்டதினால் பாசனநீர் வேகமாக வெளியேறி, பெருமளவு நீர் இழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கடைமடைக்குக் கிடைத்து வந்த நீரும் அதன் பின் கிடைக்கப்பெறாமல் போய்விட்டது. அதனை உணர்ந்தே, கடந்த 2013-ம் ஆண்டு கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். அதனையடுத்து, அன்றைய முதல்வர் ஜெயலலிதா கீழ்பவானி கான்கிரீட் திட்டத்தைக் கைவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், தி.மு.க. அரசு அதனை மீண்டும் நிறைவேற்ற முயன்றபோது, கான்கிரீட் தளம் அமைப்பது ஒப்பந்ததாரர்களுக்கு உதவுமே தவிர, விவசாயிகளுக்குச் சிறிதளவும் உதவாது என்றுகூறி கீழ்பவானி ஆற்றுப் பாசன கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மீண்டும் போராட்டங்களை முன்னெடுத்தனர். மேலும், அனைத்து கிராமசபைக் கூட்டங்களிலும் கான்கிரீட் தளத்திற்கு எதிராகத் தீர்மானங்களையும் நிறைவேற்றி உள்ளனர்.
அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலை நாசமாக்கும் இக்கொடும் திட்டத்தை எதிர்த்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் முன்னெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஆதரவாகத் துணைநின்றது. அதன் பிறகு இத்திட்டத்தை தற்காலிமாக கிடப்பில் போட்டிருந்த தி.மு.க. அரசு, தற்போது மீண்டும் அதனைச் செயல்படுத்த தீவிரம் காட்டிவருவது விவசாயிகளுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
கடைமடைகளுக்கு நீர் சென்று சேர்ப்பதில் தி.மு.க. அரசிற்கு உண்மையான அக்கறை இருக்குமாயின், பல ஆண்டுகளாகத் தூர்வாராமல் உள்ள வாய்க்கால்களையும், கால் வாய்களையும், ஓடைகளையும் முறையாகத் தூர்வாருவதும், கரைகளை வலுவாகப் பலப்படுத்துவதுமே சரியான நடவடிக்கையாக இருக்கும். அதனை விடுத்து, விவசாயிகளின் எதிர்ப்பினையும் மீறி மீண்டும் கான்கிரீட் தளம் அமைக்க தி.மு.க. அரசு முயன்றால், இக்கொடுந்திட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெறும்வரை நாம் தமிழர் கட்சி தொடர்ப் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 5-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மீனவர்களை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
- மீனவபெண்களிடம் பேசி அவர்களது கோரிக்கைகளை கேட்டு அறிந்த சீமான், மீனவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார்.
சென்னை:
கடந்த 12- ந்தேதி சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் 'லூப்' சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள். இதை கண்டித்து மீனவர்கள், மீனவப் பெண்கள் நடுரோட்டில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
இன்று 5-வது நாளாக மீனவர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான 2 கிலோ மீட்டர் தூர லூப் சாலையில் மீன்பிடி படகுகளை நிறுத்தி வைத்து மீனவர்கள், மீனவ பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 5-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. சாலையில் கருப்பு கொடிகளை ஏற்றினார்கள். லூப் சாலையில் நடுரோட்டில் பந்தல்கள் அமைத்து அதில் அமர்ந்து மீனவர்கள் கூட்டம் கூட்டமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
5-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மீனவர்களை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மீனவபெண்களிடம் பேசி அவர்களது கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். மீனவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார்.
நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரை சாலையில் மீனவர்கள் கடைகள் அகற்றப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சி கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக மீனவர்கள் இங்கு மீன்களை விற்பனை செய்து வருகிறார்கள்.
திடீரென மாநகராட்சி அதிகாரிகள் இந்த கடைகளை அகற்றியது கண்டனத்துக்குரியதாகும். மீனவர்கள் வாழ்வாதாரம் இதன் மூலம் பாதிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து சாலையில் போராடிவரும் மீனவர்களின் குறைகளை தீர்க்க அரசு செவி சாய்க்க வேண்டும். மீனவர்களுக்கு என்றும் நாம் தமிழர் கட்சி துணை நிற்கும். மீனவர்கள் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் அனைத்தும் திருப்தியாக உள்ளது.
- மக்கள் ஆர்வமாக வாக்களிப்பதை பார்க்கும்போது நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேனகா இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
* ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் அனைத்தும் திருப்தியாக உள்ளது.
* மக்கள் ஆர்வமாக வாக்களிப்பதை பார்க்கும்போது நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.