search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநாடு"

    • ஆளுநர் ரவியின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாட்டில் கண்டனம்.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நிறைவேற்றப்பட்டால் அதை எதிர்த்து வழக்கு தொடர தீர்மானம்.

    சென்னை ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க. சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது.

    சென்னை ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க. சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு நடைபெற்றது.

    இந்நிலையில், இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட வடிவை மத்திய பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் என திமுக சட்டத்துறை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நிறைவேற்றப்பட்டால் அதை எதிர்த்து வழக்கு தொடர தீர்மானம்.

    ஆளுநரின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்தும், ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தஇயும் தீர்மானம்.

    சட்டமன்ற நடவடிக்கைகளை புறக்கணிக்கும் ஆளுநர் ரவி, தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தீர்மானம்.

    பொறுப்பற்ற வகையில் வதந்திகளை பரப்பி வருவதாக எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம்.

    பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் சட்ட திருத்தத்திற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

    மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

    இறுதியில், தேர்தல் நிதியாக ரூ.25 லட்சத்திற்கான காசோலையை திமுக சட்டத்துறை நிர்வாகிகள் முதலமைச்சரிடம் வழங்கினர்.

    • மாநாட்டை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார்.
    • திராவிடவியல் கருத்தரங்கிற்கு இரா.விடுதலை முன்னிலை வகிக்கிறார்.

    சென்னை:

    தி.மு.க. சட்டத்துறை 3-வது மாநில மாநாடு வருகிற 18-ந் தேதி ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ளே செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. காலை 7மணி முதல் மாலை 7 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

    காலை 8.45 மணிக்கு அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியேற்றுகிறார். அதனை தொடர்ந்து மாநாடு தொடக்க விழா நடக்கிறது.

    மாநாட்டை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார். இரா.கிரி ராஜன் எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

    காலை 10 மணிக்கு ஒரு நாடு ஒரு தேர்தல் கலந்துரையாடல் நடைபெறுகிறது. மூத்த வக்கீல் கபில் சிபல் எம்.பி., முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் எஸ்.ஒய்.குரேஷி, இந்து என்.ராம் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். என்.ஆர்.இளங்கோ இ.பரந்தாமன் எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்துகிறார்கள்.

    அதனை தொடர்ந்து திராவிடவியல் கருத்தரங்கு நடக்கிறது. ஆ.ராசா எம்.பி., முனைவர் ஜெயரஞ்சன், பேராசிரியர் கருணானந்தன், மதிவதனி, மில்ட்டன், கவி கணேசன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    திராவிடவியல் கருத்தரங்கிற்கு இரா.விடுதலை முன்னிலை வகிக்கிறார். சட்டத்துறை இணை செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்கிறார். துணை செயலாளர் கே.சந்துரு தொகுத்து வழங்குகிறார்.

    'இந்திய மக்களாகிய நாம்' என்ற தலைப்பில் திருச்சி சிவா எம்.பி.யும் மற்றும் அருள்மொழி, சூர்யா சேவியர், தமிழ் காமராசன், இந்திரகுமார் தேரடி, மருது கணேஷ் ஆகியோர் உரையாற்றுகிறார்கள். மாலை 4.30 மணிக்கு நடைபெறும். மாநாட்டு நிறைவு விழாவிற்கு சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமை தாங்குகிறார். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னிலை வகிக்கிறார். மூத்த வக்கீல் இரா.விடுதலை வரவேற்கிறார்.

    மாநாட்டில் அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்.பி. அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.ரகுபதி, துணை பொதுச் செயலாளர்கள் அந்தியூர் செல்வராஜ், கனிமொழி எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். முடிவில் சட்டத் துறை இணை செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறுகிறார்.

    முன்னதாக அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் படங்களை இரா.விடுதலை, என்.ஆர்.இளங்கோ, கே.எம். தண்டபாணி, பி.ஆர். அருள்மொழி, என்.மணிராஜ் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.

    இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட செயலாளர் சிற்றரசு தயாநிதிமாறன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.மோகன், எஸ்.சுதர்சனம், ஆர்.டி.சேகர், மயிலை த.வேலு, பச்சையப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    • மாநாட்டில் 7 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
    • அனைத்து கிராமங்களிலும் பிரசாரம் நடந்து வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் அடுத்த கேசரி பள்ளியில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் பிரமாண்ட மாநில மாநாடு வருகிற ஜனவரி 5-ந் தேதி நடைபெறுகிறது.

    முன்பு எப்போதும் இல்லாத வகையில் மாநாட்டில் 7 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக ஆந்திராவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பிரச்சாரம் நடந்து வருகிறது.

    மாநிலம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் மாநாடு நடைபெறும் இடம் அருகே உள்ள உப்பலூர் ரெயில் நிலையத்திற்கு 15 சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    7 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளதால் மாநாட்டு மேடை மற்றும் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

    பணிகளை விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் துர்கா பிரசாத், அதோனி எம்.எல்.ஏ பார்த்தசாரதி, பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் திலீப் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

    • மாமுனிவர் பெயரில் விழா எடுப்பது காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு பெருமையாக உள்ளது.
    • நமது இந்திய அறிவு மரபின் தோற்றம் அகத்தியரிடம் இருந்தே தொடங்குகின்றது.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையும், புதுடில்லி பாரதீய மொழிகள் குழுமமும் இணைந்து அகத்திய மாமுனிவர் ஜெயந்தி விழா மற்றும் தேசிய மாநாட்டுக் கருத்தரங்கை நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை தாங்கி பேசுகையில், மாமுனிவர் பெயரில் விழா எடுப்பது காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு பெருமையாக உள்ளது. அகத்திய மாமுனிவர் மறைந்துவிடவில்லை இன்றும் அவர் நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார். நமது அன்னை பூமியான பாரதநாடு உள்ளவரை அகத்திய மாமுனிவரும் வாழ்ந்து கொண்டிருப்பார் என பேசினார். நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலா மாநாட்டைத் தொடங்கி வைத்துக் கருத்தரங்கு மலரை வெளியிட்டுப் பேசினார். கர்நாடக மாநிலம் மைசூரின் மூத்த வக்கீலும் அகத்திய மரபின் ஆய்வாளருமாகிய ஷாமா பட் மாநாட்டின் மைய உரை ஆற்றினார்.

    அவர் பேசுகையில், நமது இந்திய அறிவு மரபின் தோற்றம் அகத்தியரிடம் இருந்தே தொடங்குகின்றது. அவர் பாரத தேசம் முழுமைக்கும் உரியவராகத் திகழ்கின்றார். அகத்தியரின் படைப்புகள், பங்களிப்புகள், மருத்துவ மரபுகள் இந்திய மொழிகளின் தோற்றத்திற்கும் தொன்மைக்கும் சிறப்புகளுக்கும் அடிப்படைக் காரணமாக விளங்குகின்றன. வடமொழிக்கும் தமிழுக்குமான இணைப்புப் பாலமாக அகத்தியர் திகழ்ந்து வருகின்றார். இந்த இரு மொழிகளும் உலகின் பழமையான மற்றும் சிறப்பான மொழிக்குடும்பங்களாக, செம்மொழிகளாகத் திகழ்கின்றன.

    பாரத தேசத்திற்கு அகத்தியர் மாமுனிவர்தான் முதுகெழும்பாகத் திகழ்கின்றார். இந்திய மூலிகை மருத்துவ அறிவின் தோற்றமாகவும் அவரது மருத்துவ மூலிகைகளின் நூல்கள் விளங்குகின்றன.

    மருத்துவத்துறையில் அவரின் பங்களிப்புகள் மிகவும் ஆச்சரியமூட்டுகின்றன. அகத்தியர் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். அவரைப் பற்றிய முழுத்தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். துளு என்னுடைய தாய்மொழி. தமிழில் நீங்கள் கூறும் மருந்து என்னும் சொல் துளு மொழியிலும் மருந்து என்றே வழங்கப்படுகின்றது என்றார்.

    மாநாட்டில் பேராசிரியர் அரங்க. ராமலிங்கம், பழனி ஐவர்மலை அனாதி நிறுவனத்தின் நிறுவனர் ஆதி நாராயண சுவாமிகள், தமிழ்த்துறைத் தலைவர் ஆனந்தகுமார், பேராசிரியர்கள் முத்தையா, சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பாரம்பரிய மருத்துவர்கள் அகத்தியர் மருத்துவ குறிப்பு சம்பந்தமான கட்டுரைகள் சமர்ப்பித்தனர். மாநாட்டில் பல்கலைக்கழக வேளாண்மை துறை சார்பில் சித்த மருத்துவ மூலிகைகள், காணிக்காரப் பழங்குடிகளின் மருந்துப் பொருட்கள், மருத்துவத் தாவரங்கள் குறித்த கண்காட்சி இடம்பெற்றிருந்தது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சித்த மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுமார் 700-க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

    மாணவர்களுக்கு அகத்தியர் பற்றிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குக் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.
    • விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லட்சக்கணக்கான மக்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லட்சக்கணக்கான மக்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

    இதனையடுத்து மாநாட்டில் விஜய் பேசி கொண்டிருந்த போது, மேடை அருகில் இருந்த ரசிகர்கள் திடீரென "கடவுளே - அஜித்தே" என கோஷமிட ஆரமித்தனர். இதை சற்றும் எதிர்பாராத விஜய் உடனே பேச்சை நிறுத்தி விட்டு அமைதி அமைதி என்பது போல கையை அசைத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சமீப காலங்களில் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே - அஜித்தே" என்று கூறி வருகின்றனர். 

    • நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ள நிலையில் விஜய் தற்போது மாநாட்டுத் திடலுக்கு வந்துள்ளார்.
    • மேடையில் ஏறி விஜய்க்கு சல்யூட் அடித்த சம்பவமும் நிகழ்ந்தது.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து  தொண்டர்கள் வருகை தந்துள்ளனர்.

    நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ள நிலையில் விஜய் தற்போது மாநாட்டுத் திடலுக்கு வந்துள்ளார். நடந்துவரும் பாதையின் இருபுறமும் தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தவெக கட்சிக் கொடி வடிவிலான துண்டுகளை மேடை மீது அவர்கள் வீசினர். அதை அன்போடு எடுத்து தனது தோளில் அணிந்துகொண்டார்.

    அவ்வாறு வீசப்பட்ட கொடிகள் பலவற்றை எடுத்து தனது தோளில் அவர் போட்டுக்கொண்டது தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. பாதுகாவலர் ஒருவரும் உற்சாக மிகுதியில் நடைபாதை மேடையில் ஏறி விஜய்க்கு சல்யூட் அடித்த சம்பவமும் நிகழ்ந்தது.

    நடைபாதையிலிருந்து நிகழ்ச்சி மேடையில் ஏறிய விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த மாமன்னர்கள், மொழிப்போர் தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    • சுமார் 650 வணிகத் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்
    • முழு உலகமும் பாதுகாப்பு அச்சுறுத்தலைச் சந்திக்கும்.

    டெல்லியில் நடைபெறும் 18 ஆவது ஆசிய ஆசிய-பசிபிக் வணிக மாநாட்டில் கலந்துகொள்ள ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்திறங்கிய அதிபர் ஓலாஃப் பிரதமர் மோடியை சந்தித்து உரையாற்றினார்.

     

    ஜெர்மானிய வணிகத்திற்கான இந்த ஆசிய பசிபிக் மாநாட்டில் ஜெர்மனி, இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த சுமார் 650 வணிகத் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டைப் பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஓலாஃப் இணைந்து தொடங்கி வைத்து உரையாற்றினர்.

    மாநாட்டில் பேசிய மோடி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, பசுமை ஆகிய துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரித்து உள்ளது. ஜெர்மன் தொழில்நுட்பம் இந்திய திறமையுடன் இணையும் போது, உலகத்திற்குச் சிறந்த எதிர்காலத்தை அளிக்கும்.

    உலகில் பதற்றம், குழப்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. இதுபோன்ற தீவிர பிரச்சனைகளுக்கு மத்தியிலும் நமது பொருளாதார ஒத்துழைப்பு மேம்பட வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் சர்வதேச தொழிலதிபர்கள் பங்கேற்க வேண்டும் என்று பேசினார்.

     

    ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் பேசுகையில், உக்ரைனுக்கு எதிரான மிருத மிருகத்தனமான ரஷியா வெற்றி பெற கூடாது. அவ்வாறு ரஷியா வென்றால் ஐரோப்பாவின் எல்லைத் தாண்டியும் அதன் விளைவுகள் இருக்கும். முழு உலகமும் பாதுகாப்பு அச்சுறுத்தலைச் சந்திக்கும். ஏற்கனவே மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு நம்மால் ஒருங்கிணைந்து இதுவரை ஒரு தீர்வை ஏற்படுத்த முடியவில்லை என்பது நமது இயலாமையின் வெளிப்படுத்துகிறது என்று பேசினார்.  

    • 16 வது பிரிக்ஸ் [BRICS] உச்சி மாநாடு நடைபெற உள்ளது
    • BRICS கூட்டமைப்பு என்பது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய ஒரு அமைப்பாகும்.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து கடந்த ஜூலை 9 ஆம் தேதி நடந்த 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி கடைசியாக ரஷியா சென்றிருந்தார். இதில் உக்ரைன் போர் குறித்து அதிபர் புதினுடன் விரிவாக உரையாடல் நடத்தினார்.

    இந்த நிகழ்வின்போது மோடிக்கு ரஷியாவின் உயரிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் 22-23 ஆகிய தேதிகளில் ரஷியாவின் காசான் [Kazan] இல் வைத்து நடக்க உள்ள 16 வது பிரிக்ஸ் [BRICS] உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    BRICS கூட்டமைப்பு என்பது 2009 ஆம் ஆண்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய ஒரு அமைப்பாகும். இதில் 2010 இல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது. இந்த 5 நாடுகளில் பெயரில் உள்ள முதல் எழுத்தின் சுருக்கமே BRICS.கடந்த ஜனவரி 2024 இல் எகிப்து, எத்தியோப்பியா, இரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.

    இந்நிலையில் தற்போது நடக்க உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள ரஷியா பயணிக்கும் மோடி, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது. மேலும் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேசுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    • மாநாடு வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.
    • கிணறுகளுக்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி நடக்கிறது.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக கட்சியின் மாநாடு பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெறுகிறது.

    நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து உள்ளார்.இதற்கான கொடி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. நடிகர் விஜய் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.

    நேற்று முன்தினம் மாநாட்டிற்கு பந்தக்கால் நடும் விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    அதை தொடர்ந்து மாநாடு நடைபெறும் இடத்தினை சமன்படுத்தி அப்பகுதியில் உள்ள 6 கிணறுகளுக்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணியும், மேடை அமைக்க அடித்தள பைப்புகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

    மாநாடு பந்தல் அமைக்க இரும்பு பைப்புகள் ஏற்றிவந்த லாரி ,மாநாடு திடலில் சேற்றி சிக்கி நின்றது.பின்னர் லாரியை கிரேன் கொண்டு அப்புறப்படுத்தினர்.

    மாநாட்டிற்கு வருகின்ற தொண்டர்களுக்கு உணவு,குடிநீர் தடையின்றி கிடைக்கும் வகையில் தனியார் கம்பெனியிடம் ஒப்படைக்க பட்டுள்ளது .ஆண்கள் பெண்களுக்கு 250 கழிவறை வசதி,வாகனங்கள் நிறுத்த சாலையின் இரு புறங்களிலும்45 ஏக்கர் அளவில் இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மாநாடு மேடை அமைக்கும் பணி பிரத்யேகமாக சினிமா கலை அரங்க இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாரத்தில் மேடை அமைக்கும் பணியை கலைஞர்கள் ஆய்வு செய்துள்ளனர் . மாநாடு பணிகள் தீவிரம் அடைந்துள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் உள்ள கிணறுகளுக்கு இரும்பு தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

    • முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது.
    • 17 நிபந்தனைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை நடத்துவதற்காக கட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்ட காவல்துறை விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்காக அனுமதியை வழங்கியுள்ளது.

    ஏற்கனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. மேலும் 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    முன்னதாக மாநாட்டிற்கு மது அருந்தி வரக்கூடாது உள்ளிட்ட நெறிமுறைகளைத் தொண்டர்களுக்கு விஜய் அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • குடிக்கிறவர்களின் எண்ணிகையை தமிழ்நாட்டில் அதிகப்படுத்தி ஒரு வரலாறு படைத்ததுதான் தி.மு.க. ஆட்சியின் சாதனை.
    • அ.தி.மு.க. என்பது தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் மக்கள் இயக்கம்.

    மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்திருப்பது பற்றி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருப்பதாவது:-

    மது என்பது சமுதாயத்துக்கு மிகப்பெரிய கேடு. குறிப்பாக தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் பூரண மது விலக்கு கொண்டு வருவோம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

    அ.தி.மு.க. ஆட்சியின் போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கையில் பதாகையுடன் பூரண மது விலக்கு வேண்டும் என்று வீட்டு முன்பு கோஷமிட்டு போராடினார். இதை அனைவரும் அறிவார்கள்.

    அதன் பிறகு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாபாரம் ஆகாத 500 மதுக்கடையை மூடிவிட்டு அதற்கு பதிலாக எப்.எல்.2 லைசென்சு,1,500 கடைகளுக்கும், 3 ஆயிரம் மனமகிழ் மன்றங்களுக்கும் லைசென்சு கொடுத்து விட்டு அதற்கு பிறகு ரூ.35 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.42 ஆயிரம் கோடியாக மதுக்கடை வருமானத்தை உயர்த்தி விட்டு, குடிக்கிறவர்களின் எண்ணிகையை தமிழ்நாட்டில் அதிகப்படுத்தி ஒரு வரலாறு படைத்ததுதான் தி.மு.க. ஆட்சியின் சாதனை.

    அது தோழமையில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு இப்போது பிடிக்கவில்லை. அதன் அடிப்படையில்தான் முதலில் திருமாவளவன் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்.

    குரல் கொடுத்தது மட்டுமின்றி ஒரு நல்ல விசயத்துக்காக அவர் மாநாடு நடத்துகிறார். இந்த மாநாடு நல்ல நோக்கத்துக்காக நடைபெறும் மாநாடு என்ற அடிப்படையில் அ.தி.மு.க.வுக்கு ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.

    அ.தி.மு.க. என்பது தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். மக்களின் பேராதரவு பெற்றுள்ள இயக்கம் அ.தி.மு.க. என்பதால் அந்த அடிப்படையில் இன்று அழைப்பு கொடுத்துள்ளார்.

    இதில் கலந்து கொள்வதா? இல்லையா? என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்.

    இவ்வாறு ஜெயக்குமார் கூறி உள்ளார்.

    • விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.
    • விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர்.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கி தமிழ்நாட்டு அரசியலில் புதிய புயலாக வந்துள்ளார்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நடிகர் விஜய்யின் குறிக்கோளாக உள்ளது.

    சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். அதோடு கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தமிழகம் முழுவதும் பூத் வாரியாக விரைவுப்படுத்த அறிவுறுத்தி உள்ளார். ஒரு கோடி முதல் 1.50 கோடி உறுப்பினர்களை முதல் கட்டமாக சேர்க்க அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.

    இதன் காரணமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் கட்சியின் தொடக்கத்தை எழுச்சி ஏற்படுத்தும் வகையில் பிரமாண்டமான முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.

    திருச்சி, சேலம், மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சென்னை உள்பட பல இடங்களில் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். திருச்சியில் நடத்துவதற்கு முடிவு செய்த நிலையில் அங்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 23-ந்தேதி முதல் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். மாநாடு நடத்துவதற்கு சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'சாலை' என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மாநாட்டுக்காக பிரமாண்ட மேடை, உணவுக்கூடம், ஆம்புலன்ஸ் வசதி, கழிப்பிடம், குடிநீர் வசதிகள், 40 ஏக்கரில் ஒரு வாகன நிறுத்தமும் 27 ஏக்கரில் இன்னொரு வாகன நிறுத்தமும் என 2 வாகன நிறுத்தம் உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் மாநாட்டுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கிறது.

    மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வசதி கேட்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 28-ந்தேதி தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்தார்.

    இதையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாநாட்டுக்கான அனுமதி போலீசாரால் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர்.

    போலீஸ் அதிகாரிகளின் கடிதம் விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் மூலமாக புஸ்சி ஆனந்திடம் வழங்கப்பட்டது. மாநாட்டு பந்தலின் நீளம், அகலம், பங்கேற்போரின் எண்ணிக்கை, மேடையில் அமர்பவர்கள் யார் யார்? முக்கிய பிரமுகர்கள் வரும் நேரம், வழி, அவர்கள் வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு செய்யப்பட்ட வசதிகள் என்னென்ன? எந்தெந்த பகுதியில் வாகன பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    எத்தனை வாகனங்கள் நிறுத்தலாம்? குடிநீர் வசதி, உணவுக்கூடம், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, அவசர ஆம்புலன்ஸ் வசதிகள், நிலத்தின் உரிமையாளரிடம் பெறப்பட்ட அனுமதி கடித விபரம், மாநாட்டு இருக்கைகள் வசதி என்பது உள்பட 21 கேள்விகளை போலீசார் கேட்டு இருந்தனர்.

    இந்த 21 கேள்விகளுக்கும் 5 நாட்களுக்குள் நடிகர் விஜய் கட்சி தரப்பில் பதில் தர வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.

    போலீசாரின் 21 கேள்விகள் குறித்து நடிகர் விஜய் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். விக்கிரவாண்டி அருகே மாநாடு நடத்துவதில் ஏதேனும் சட்ட சிக்கல் உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசாரின் 21 கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    மாநாடு முன்னேற்பாடுகள் தொடர்பான போலீசாரின் 21 கேள்விகளுக்கு பதில் அளித்து விளக்க கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்த கடிதத்தில் விக்கிரவாண்டி அருகே உள்ள இட வசதி பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், மாநாடு நடக்கும் இடத்தில் மேடை அரங்கு எத்தனை சதுர அடி நீளம் அகலத்தில் அமைகிறது என்ற விவரம் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேடை அமைக்கப்படும் பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் வந்து செல்லும் வசதிகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தவிர தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் தொண்டர்களுக்கு எந்தெந்த இடங்களில் எப்படி உணவு வழங்கப்படும் என்பதும் கூறப்பட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு தொகுதி தொண்டர்கள் வரும் வாகனங்கள் நெரிசல் இல்லாமல் நிறுத்துவதற்கும், புறப்பட்டு செல்வதற்கும் உள்ள ஏற்பாடுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

    மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1 லட்சம் பேர் வருவார்கள் என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்று போலீஸ் தரப்பில் கேட்கப்பட்ட 21 கேள்விகளுக்கும் விஜய் விளக்கமான பதில்களை அளித்துள்ளார்.

    இந்த பதில்கள் அடங்கிய கடிதத்துடன் இன்று (வெள்ளிக்கிழமை) கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் சென்னையில் இருந்து விழுப்புரம் புறப்பட்டு சென்றார். இன்று மாலை அவர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து 21 விளக்கங்கள் அடங்கிய பதில் கடிதத்தை கொடுத்தார்.

    விஜய் தரப்பில் அளிக்கப்பட்ட கடிதத்தை பெற்றுக்கொண்ட போலீசார் ஆவன செய்வதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் விக்கிரவாண்டி அருகே மாநாடு நடக்கும் இடத்துக்கு மீண்டும் சென்று ஆய்வு செய்வார்கள் என்று தெரிகிறது.

    அதன் பிறகு முறைப்படி விஜய் மாநாட்டுக்கு அனுமதி வழங்கி அதிகாரப்பூர்வ கடிதம் போலீஸ் தரப்பில் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மாநாட்டுக்கான அனுமதி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக விஜய் கட்சி நிர்வாகிகள் ஆர்வமுடனும், உற்சாகத்துட னும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    ×