என் மலர்
நீங்கள் தேடியது "மாநாடு"
- திருச்சி மாநில மாநாடு தான் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மெயின் பிக்சர் ஆக அமைய உள்ளது.
- திருச்சியில் திரள்வோம் கழகத் தலைவர் அவர்களை மீண்டும் முதலமைச்சராக்க சூளுரைப்போம்.
தி.மு.க. முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி மார்ச் 9-ல் திருச்சியில் 10 லட்சம் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் மாபெரும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து மிகப் பிரம்மாண்டமாக நடத்திட தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
திருச்சியின் மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை விட திக்கெட்டும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடும் மாநாடாக நடத்திட வேண்டும். திருச்சியில் திரளும் கூட்டம் 2026 சட்டப்பேரைவைத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாய் அமைந்திட வேண்டும்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு , என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவாடி , வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரைகள், கழக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு, வாக்குச்சாவடி நிலை முகவர்கள்-உறுப்பினர்கள் பயிற்சிக் கூட்டம், வெல்லும் தமிழ்ப்பெண்கள் மகளிரணி மாநாடுகள், வீடு வீடாகப் பரப்புரை என அசுர வேகத்தில் நம் கழகம் களப்பணியாற்றி வந்தாலும் கழகத்தலைவர் கூறியது போல திருச்சி மாநில மாநாடு தான் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மெயின் பிக்சர் ஆக அமைய உள்ளது.
இந்த மாபெரும் மாநில மாநாட்டில் அனைத்து தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட மாநகர நகர-ஒன்றிய-பகுதி-பேரூர் வார்டு-கிளைக் கழக செய லாளர்கள்-நிர்வாகிகள் என கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன்.
சார்பு அணிகளின் மாநிலச் செயலாளர்கள், அமைப்பாளர்களும் தங்கள் அணி சார்பில் அனைவரும் முழுமையாக கலந்து கொள்வதை உறுதி செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
10 லட்சம் பேர் கலந்து கொள்ளும் இம்மாபெரும் மாநாட்டிற்கான முன் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திடும் வகையில் அனைத்து கழக மாவட்ட செயலாளர்களும் அந்தந்த மாவட்ட ஒன்றிய நகர-பேரூர் அளவில் நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி திருச்சி மாநில மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை, வாகன வசதிகள், செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்திட வேண்டும் எனவும், வாகன நிறுத்தும் வசதி, போக்கு வரத்து வழித்தட ஏற்பாடுகளை முன் கூட்டியே திட்டமிட வசதியாக அந்தந்த மாவட்டங்களில் இருந்து கிளம்பும் வாகன விவரங்களை மார்ச் 1-ந் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதேபோல ஒரு கழக நிர்வாகியும் விடுபடாமல் மாநாட்டில் கலந்து கொள்வதையும், மாண்புமிகு கழகத்தலைவர் உரையை முடிக்கும் வரையில் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கும் வழிகாட்டி, மாநாட்டு திடலுக்கு உரிய நேரத்திற்கு வந்துவிடுவதை யும் அந்தந்த மாவட்ட செய லாளர்கள் உறுதி செய்திட வேண்டும். மாவட்டத்தின் கடைசி வாகனம் மாநாடு நோக்கி கிளம்பிய பிறகு தான் மாவட்ட செயலாளர்கள் மாநாட்டிற்கு கிளம்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கரை புரண்டு ஓடும் காவிரியாய் தடைபோட முடியாத கடல் அலையாய் திருச்சியில் திரள்வோம் கழகத் தலைவர் அவர்களை மீண்டும் முதலமைச்சராக்க சூளுரைப்போம். மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம். ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் காங்கிரஸ் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது.
- போராட்டத்தைக் கண்டித்து உண்மையை ஆதரித்து நின்றதற்காக இந்தியா கூட்டணி காட்சிகளுக்கு நன்றி.
டெல்லியில் கடந்த 16 முதல் 20 ஆம் தேதி வரை பாரத் மண்டபத்தில் வைத்து ஏஐ தாக்க உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் உலக அரசியல் மற்றும் தொழில்நுட்ப தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
கடந்த 20 ஆம் தேதி மாநாட்டு அரங்கிற்குள் இளைஞர் காங்கிரசார் சிலர் புகுந்து தங்கள் மேலாடைகளை கழற்றி அமெரிக்க - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த ஹாலுக்குள் புகுந்த நான்கு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், திடீரென தங்கள் சட்டைகளைக் கழற்றி எறிந்துவிட்டு, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை காட்டி கோஷமிட்டனர்.
பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, அவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் இது நாட்டின் இளைஞர்களின் அதிருப்தியின் வெளிப்பாடு என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நமோ பாரத் ரயில் மற்றும் மீரட் மெட்ரோ ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி உரையாற்றியபோது இந்த சம்பவத்தை கண்டித்தார்.
அவர் கூறியதாவது, "டெல்லியில் நடந்த சர்வதேச ஏஐ மாநாட்டை காங்கிரஸ் தனது தரம் தாழ்ந்த மற்றும் நிர்வாண அரசியலுக்கு ஒரு களமாகப் பயன்படுத்தியுள்ளது.
வெளிநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் சட்டையை கழற்றிப் போராட்டம் நடத்தியதன் மூலம் காங்கிரஸ் கொள்கை ரீதியான திவாலானது உறுதி ஆகி உள்ளது.
வளர்ந்த நாடாக மாறுவதற்கு இந்தியா கடுமையாக உழைத்து வரும் வேளையில், இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் காங்கிரஸ் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது.
இது தனிப்பட்ட முறையில் எனக்கு எதிரான போராட்டம் அல்ல, மாறாக நாட்டின் கௌரவத்திற்கு எதிரானது
காங்கிரஸ் தலைவர்களே, உங்கள் நிர்வாணத்தை நாடு ஏற்கனவே நன்கு அறியும். இப்போது மீண்டும் சட்டையைக் கழற்றி அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன?" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸின் இத்தகைய அநாகரீகமான போராட்டத்தைக் கண்டித்து உண்மையை ஆதரித்து நின்றதற்காக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், திமுக, மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்டவற்றுக்கு நன்றி என்றும் மோடி குறிப்பிட்டார்.
- மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ரோபோவின் வீடியோவை பகிர்ந்திருந்தார்.
- பின்னர் சர்ச்சை வெடித்ததும் அந்தப் பதிவு நீக்கப்பட்டது.
டெல்லியின் பாரத் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது.
5 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 20ம் தேதி முடிவடைகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் உத்தரப் பிரதேசத்தின் கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் ஓரியன் என்ற பெயரிடப்பட்ட ஒரு ரோபோ நாயைக் காட்சிப்படுத்தியது.
இது அந்தப் பல்கலைக்கழகத்தின் சொந்தக் கண்டுபிடிப்பு என்று கூறப்பட்டது. ஆனால், அது உண்மையில் சீனாவின் 'Unitree Go2' என்ற நிறுவனத்தின் தயாரிப்பு என்றும், அதன் மீது பல்கலைக்கழகத்தின் முத்திரை மட்டுமே ஒட்டப்பட்டிருப்பதாகவும் பின்னர் தெரியவந்தது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ரோபோவின் வீடியோவை ஆரம்பத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பின்னர் சர்ச்சை வெடித்ததும் அந்தப் பதிவு நீக்கப்பட்டது. கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், மோடி அரசாங்கம், செயற்கை நுண்ணறிவு (AI) விஷயத்தில் உலகளவில் இந்தியாவை கேலி செய்யும் ஒரு விஷயமாக மாற்றியுள்ளது.
நடந்து கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில், சீன ரோபோக்கள் நம்முடையது போலக் காட்டப்படுகின்றன. சீன ஊடகங்கள் நம்மை கேலி செய்துள்ளன. இது இந்தியாவிற்கு உண்மையிலேயே சங்கடமான ஒன்று.
மோடியின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய உச்சிமாநாட்டில் சீனாவின் ரோபோக்களை விளம்பரப்படுத்தி, அதே பொய்யை ஆதரிப்பது இன்னும் வெட்கக்கேடானது.
மோடி அரசாங்கம் நாட்டின் பிம்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் செயற்கை நுண்ணறிவை ஒரு நகைச்சுவையாக மாற்றியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.
இதை குறிப்பிட்டு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதவில், இந்தியாவின் திறமை மற்றும் தரவுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, AI உச்சிமாநாடு ஒரு ஒழுங்கற்ற விளம்பர (PR) நிகழ்வாக மாறியுள்ளது. இந்திய தரவு விற்பனைக்கு, சீன தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
- உலமாக்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- கோவையில் புதிய வக்ஃபு தீர்ப்பாயம் அமைக்கப்படும்.
கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாட்டில் முதல்வர் உரையாற்றுகிறார்.
சிறுபான்மை உரிமையை காப்போம் எனும் தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி,
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு பெற்றுள்ள உலமாக்களுக்கான ஓய்வூதியம் ரூ.5,000-ஆக உயர்வு.
உலமாக்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
கோவையில் புதிய வக்ஃபு தீர்ப்பாயம் அமைக்கப்படும்.
இஸ்லாமியர்களுக்கான அடக்கஸ்தலம் அமைக்க மாநகராட்சி பகுதிகளில் இடங்கள் அடையாளம் காணப்படும்.
இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
- வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான ‘மாநாடு’ படம் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'பராசக்தி'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 10-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த புதிய படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.
இந்த நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'மாநாடு' படத்தை போல ஒரு வித்தியாசமான கான்செப்டில் உருவாக இருப்பதாகவும் அப்படத்தை விட 10 மடங்கு அதிக திகில் மற்றும் த்ரில்லுடன் இப்படம் இருக்கும் என்று படக்குழுவில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான 'மாநாடு' படம் ரசிகர்களின் கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- திமுக முகவர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிப்ரவரி முழுவதும் அடுத்தடுத்த மாநாடுகளை திமுக நடத்துகிறது.
விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 8ம் தேதி திமுக முகவர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞரணி மாநாடு, மகளிரணி மாநாடு, வாக்குச்சாவடி மாநாடு என பிப்ரவரி முழுவதும் அடுத்தடுத்த மாநாடுகளை திமுக நடத்துகிறது.
- சீமான் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார்.
- மாற்றத்தை விரும்புபவர்களுக்கான ஒரு மாநாட்டையும் திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
சினிமாத்துறையில் இருந்து ஈழத் தமிழ், தமிழ் தேசியம் போன்ற முழக்கங்களோடு அரசியலில் நுழைந்தவர் சீமான். நாம் தமிழர் இயக்கமாக செயல்பட்டு வந்ததை, கடந்த 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றி, தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் சீமான் செயல்பட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சி தொடங்கியதில் இருந்து நடைபெற்ற தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டு வருகிறது. இதனிடையே அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்து வந்தது.
இதனை தொடர்ந்து கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத வாக்குகளை பெற்றும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால், அக்கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் பறிபோனது. அதனை தொடர்ந்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.22 சதவீத வாக்குகளை பெற்றதால், மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்தது.
இதையடுத்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி சீமான் பணியாற்றி வருகிறார். மற்ற அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், சீமான் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார். இந்த தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
சீமான் மீது பல்வேறு வழக்குகள், அவதூறு வழக்குகள் மற்றும் விமர்சனங்கள் உள்ள நிலையில், தனது அரசியலை நோக்கி பயணித்து வருகிறார். அவர் அறிவிக்கும் போராட்டங்கள் விமர்சனங்களை பெற்றாலும் பல்வேறு கருப்பொருள் சார்ந்த மாநாடுகளை நடத்தினார்.
அந்தவகையில், ஆகஸ்ட் மாதம் திருத்தணியில் மரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக 'மரங்களின் மாநாடு' மற்றும் மீனவர் நலன் மற்றும் கடல் சார்ந்த பிரச்சனைகளுக்காக கடந்த மாதம் "கடலம்மா மாநாடு", ஆடு-மாடு, மற்றும் மலைகளின் மாநாடு போன்றவற்றை நடத்தினார். இந்த மாநாடுகள் இயற்கை சார்ந்த பாதுகாப்பை கோரிக்கையாக முன்வைத்து நடத்தப்பட்டது. மேலும் மாற்றத்தை விரும்புபவர்களுக்கான ஒரு மாநாட்டையும் திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
ஆடு-மாடு, மற்றும் மலைகளின் மாநாடு:
ஜூலை மாதம் மதுரையில் 'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!' என்ற முழக்கத்துடன் நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகளை திரட்டி மாநாட்டினை சீமான் நடத்தினார். இந்த மாநாட்டில் நூற்றுக்கணக்கான ஆடு,மாடுகள் முன்பு சீமான் உரையாற்றியது இணையத்தில் பேசுபொருளானது. மேலும் ஆகஸ்ட் மாதம் மாடு மேய்ப்பதற்கான தடையை நீக்கக் கோரி மலை ஏறி மாடு மேய்க்கும் போராட்டமாக மலைகளின் மாநாடு நடத்தப்பட்டது.

மரங்களின் மாநாடு:
மனிதர்கள் இல்லாது மரங்கள் வாழும், ஆனால் மரங்கள் இல்லாது மனிதர்கள் உட்பட எந்த உயிரினமும் வாழ முடியாது என்ற கருத்தை வலியுறுத்தி, மரங்களை வளர்ப்பதன் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்துப் பேசுவதாகும். இம்மாநாட்டில் சீமான் கலந்துகொண்டு, அப்துல்கலாம், நம்மாழ்வார், நடிகர் விவேக் போன்றோரின் பெயரில் மரக்கன்றுகள் நட்டு, மரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார்.
கடலம்மா மாநாடு:
"ஆதி நீயே, ஆழித்தாயே" (கடலே நீயே, கடலன்னையே நீயே) என்ற முழக்கத்துடன் கடலையும் கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாத்தல், கடல்சார்ந்த வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தலை வலியுறுத்தி கடலுக்குள் சென்று மாநாடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆறுகளுக்கும் மாநாடுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடுகள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்ற பல்வேறு தரப்பினரின் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வரவும், மாற்றத்தை விரும்பும் மக்களை ஒன்றிணைக்கவும் உதவுகின்றன.
சீமான் அறிவித்த மாநாடுகள் விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் அனைவராலும் சிந்திக்கப்பட வேண்டிய விஷயமாகும். மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப மரம், செடிகளை அழித்து சாலைகள் விரிவாக்கம் மற்றும் வீடு கட்டுவது என பெரும்பாலும் நடைபெற்று வருகிறது. இதனால் பாதிக்கப்படப்போவது என்னமோ நாம் தான் என்பதை உணர வேண்டும்.
கடல், மலைகள் என பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு விட்டு செல்ல வேண்டியது நம் கடமை. ஆனால் நாம் எல்லாவற்றையும் சுயநலத்திற்காக அழித்து வருகிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும். மேலும், இந்த விஷயத்தில் அனைவரும் ஒற்றுமையோடு சிந்தித்து செயல்பட்டால் நாடு நலம் பெறும்.
- சுமார் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
- மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் COP30 காலநிலை உச்சிமாநாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் காயமடைந்தனர்.
சுமார் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு நிதி உதவி வழங்குதல் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர்.
கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த மாநாடு நிறைவடைவதற்கு 24 மணி நேரத்திற்குள் நேற்று இரவு மாநாட்டு அரங்கில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த இடத்தில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் உள்பட 50,000 க்கும் மேற்பட்டோர் தீப்பிடித்து புகை பரவியதை கண்டு அதிர்ந்து அங்கிருந்து அவசரமாக வெளியேறினர்.
அரங்கின் நுழைவுவாயிலுக்கு அருகில் உள்ள ப்ளூஸோன் என்றழைக்கப்படும் இடத்தில் மின் சாதனங்களில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆறு நிமிடங்களுக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பிரேசில் சுற்றுலா அமைச்சர் செல்சோ சபினோ தெரிவித்தார்.
- வரும் நவம்பர் 5ம் தேதி மற்றும் 6ம் தேதிகளில் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடக்கிறது.
- நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளன.
2 நாட்கள் ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் நவம்பர் 5ம் தேதி மற்றும் 6ம் தேதிகளில் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு கூடுகிறது.
இதில், நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- தலைநகர் டெல்லியில் உலக தலைவர்கள் மாநாடு நடைபெற்றது.
- நமது நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் உலக தலைவர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
சீர்திருத்தங்களின் தொடர்ச்சி மழைக்கால கூட்டத்தொடரில் தெளிவாகத் தெரிந்தது. எதிர்க்கட்சிகளின் பல குறுக்கீடுகள் இருந்தபோதிலும், நாங்கள் சீர்திருத்தங்களை விடாமுயற்சியுடன் கொண்டு வர முடிந்தது.
இந்த மழைக்கால கூட்டத்தொடரில் ஜன் விஸ்வாஸ் மசோதா 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. இது நம்பிக்கை அடிப்படையிலான மற்றும் மக்கள் சார்பு நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய சீர்திருத்தமாகும்.
இன்று நமது நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கோவிட் நோயின் இவ்வளவு பெரிய நெருக்கடியை நாம் எதிர்கொண்டிருக்கும் போது, நிறுவனங்கள் மூலதனச் சந்தைகளில் இருந்து சாதனை நிதியை திரட்டுகின்றன.
நமது வங்கிகள் எப்போதும் இல்லாத அளவுக்கு வலுவானதாக உள்ளன. பணவீக்கம் குறைவாகவே உள்ளது, வட்டி விகிதங்கள் சாதகமாக உள்ளன. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கட்டுப்பாட்டில் உள்ளது.
அந்நிய செலாவணி இருப்பும் மிகவும் வலுவாக உள்ளது. இது மட்டுமல்லாமல், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான கோடிகளை சந்தைக்கு பங்களித்து வருகின்றனர். உள்நாட்டில் தயாரிக்கப்படும் செமிகண்டக்டர் சிப் இந்தாண்டு இறுதிக்குள் சந்தைக்கு வரும் என தெரிவித்தார்.
- தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை மறுநாள் நடக்க உள்ளது.
- பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டு பணிகள் நடந்து வருகிறது.
மதுரை:
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை மறுநாள் நடக்க உள்ளது. இதற்காக மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான ஏற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு உள்ளது.
பார்க்கிங், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மாநாட்டு மேடை 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமர 200 இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.
மேடையில் இருந்து விஜய், தொண்டர்களை நடந்துசென்று சந்திக்க 300 மீட்டர் நீளத்தில் ரேம்ப் வாக் அமைக்கப்பட்டுள்ளது.
தூய்மை பணி, மகளிர் பாதுகாப்பு, ஊடக ஒருங்கிணைப்பு, போக்குவரத்து ஒருங்கிணைப்பு என 13 குழுக்கள் நியமனம்.
ஆம்புலன்ஸ்கள் வந்து செல்வதற்கான தனி பாதைகள்.
பெண்களுக்கு என பிங்க் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அவசர தேவைக்காக டிரோன்கள் மூலம் மருத்துவ பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கவும் திட்டம்.
மாநாட்டு திடலைச் சுற்றியும் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.
50க்கும் மேற்பட்ட மருத்துவ குழுக்களும் மருத்துவ சேவையில் ஈடுபட உள்ளன.
100 அடி கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை விஜய் ஏற்றுகிறார்.
மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். கட் அவுட்களுடன் விஜய் கட் அவுட்டும் நிறுவப்பட்டுள்ளது.
- போலி செய்திகளை பரப்பினாலும் நாம் ஒற்றுமையாய் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
- போலி செய்திகளை பரப்பினாலும் நாம் ஒற்றுமையாய் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எழுச்சித்தமிழர் திருமாவை விட நீங்கள் பெரிய தியாகம் செய்துவிட்டிர்களா இபிஎஸ்?.
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) 'தமிழ்நாடு 26வது மாநில மாநாடு' நடந்து வருகிறது. "வெல்க ஜனநாயகம்" என தலைப்பிடப்பட்ட இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதில் சிபிஐ முன்னாள் மாநில தலைவர் முத்தரசன், இந்தநாள் தலைவர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், கருப்பும் சிவப்பும் சேர்ந்ததுதான் திராவிடர் கழகம். எங்களில் பாதி நீங்கள். கொள்கை முரண்கள் எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது.
சமூகத்திற்கு தேவையான நமது கொள்கை வலுவாக இருப்பதால் தான் நமது நட்பும் வலுவாக இருக்கிறது. சேலத்தில் தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும். அதன் பணிகள் நாளையே தொடங்கப்படும். முத்தரசன் வைத்த கோரிக்கையை தட்டிக்கழிக்க முடியுமா!..
நாடு கடுமையான சூழலை எதிர்கொண்டு வரும் தருணத்தில் நாம் கொள்கை உறவோடு சேர்ந்திருக்கிறோம். சதி செய்தாலும் போலி செய்திகளை பரப்பினாலும் நாம் ஒற்றுமையாய் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கம்யூனிஸ்டுகள் மீது திடீர் பாசம் வந்துள்ளது.
கம்யூனிஸ்டுகளை விட நீங்கள் பெரிய தியாகம் செய்து விட்டீர்களா, எழுச்சித்தமிழர் திருமாவை விட நீங்கள் பெரிய தியாகம் செய்துவிட்டீர்களா இபிஎஸ்?.
அடிமைத்தனத்தை பற்றி எடப்பாடி பேசலாமா? அவருக்கு பேச என்ன உரிமை உள்ளது. திராவிட, கம்யூனிஸ்ட் கொள்கைகளை பற்றி தெரியாத இபிஎஸ் வாய்க்கு வந்தததை பேசி வருகிறார். ரெய்டு மூலம் நம்மை மிரட்ட நினைத்தவர்கள் தற்போது மிரண்டு போயிருக்கின்றனர்.
எப்படியாவது கூட்டணியை கலைத்துவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் நமது லட்சியம் பெரிது. அதற்காகத்தான் நாம் அனைவரும் ஒன்றாகி இருக்கிறோம். கூட்டணியில் இருந்தாலும் விமர்சனங்களை முன்வைக்க கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் தவறியதில்லை" என்று தெரிவித்தார்.






