என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநாடு"

    • சுமார் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
    • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் COP30 காலநிலை உச்சிமாநாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் காயமடைந்தனர்.

    சுமார் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு நிதி உதவி வழங்குதல் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர்.

    கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த மாநாடு நிறைவடைவதற்கு 24 மணி நேரத்திற்குள் நேற்று இரவு மாநாட்டு அரங்கில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த இடத்தில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் உள்பட 50,000 க்கும் மேற்பட்டோர் தீப்பிடித்து புகை பரவியதை கண்டு அதிர்ந்து அங்கிருந்து அவசரமாக வெளியேறினர்.

    அரங்கின் நுழைவுவாயிலுக்கு அருகில் உள்ள ப்ளூஸோன் என்றழைக்கப்படும் இடத்தில் மின் சாதனங்களில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

     ஆறு நிமிடங்களுக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பிரேசில் சுற்றுலா அமைச்சர் செல்சோ சபினோ தெரிவித்தார். 

    • வரும் நவம்பர் 5ம் தேதி மற்றும் 6ம் தேதிகளில் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடக்கிறது.
    • நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளன.

    2 நாட்கள் ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் நவம்பர் 5ம் தேதி மற்றும் 6ம் தேதிகளில் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு கூடுகிறது.

    இதில், நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • தலைநகர் டெல்லியில் உலக தலைவர்கள் மாநாடு நடைபெற்றது.
    • நமது நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் உலக தலைவர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

    சீர்திருத்தங்களின் தொடர்ச்சி மழைக்கால கூட்டத்தொடரில் தெளிவாகத் தெரிந்தது. எதிர்க்கட்சிகளின் பல குறுக்கீடுகள் இருந்தபோதிலும், நாங்கள் சீர்திருத்தங்களை விடாமுயற்சியுடன் கொண்டு வர முடிந்தது.

    இந்த மழைக்கால கூட்டத்தொடரில் ஜன் விஸ்வாஸ் மசோதா 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. இது நம்பிக்கை அடிப்படையிலான மற்றும் மக்கள் சார்பு நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய சீர்திருத்தமாகும்.

    இன்று நமது நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கோவிட் நோயின் இவ்வளவு பெரிய நெருக்கடியை நாம் எதிர்கொண்டிருக்கும் போது, நிறுவனங்கள் மூலதனச் சந்தைகளில் இருந்து சாதனை நிதியை திரட்டுகின்றன.

    நமது வங்கிகள் எப்போதும் இல்லாத அளவுக்கு வலுவானதாக உள்ளன. பணவீக்கம் குறைவாகவே உள்ளது, வட்டி விகிதங்கள் சாதகமாக உள்ளன. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    அந்நிய செலாவணி இருப்பும் மிகவும் வலுவாக உள்ளது. இது மட்டுமல்லாமல், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான கோடிகளை சந்தைக்கு பங்களித்து வருகின்றனர். உள்நாட்டில் தயாரிக்கப்படும் செமிகண்டக்டர் சிப் இந்தாண்டு இறுதிக்குள் சந்தைக்கு வரும் என தெரிவித்தார்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை மறுநாள் நடக்க உள்ளது.
    • பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டு பணிகள் நடந்து வருகிறது.

    மதுரை:

    விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை மறுநாள் நடக்க உள்ளது. இதற்காக மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான ஏற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

    சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு உள்ளது.

    பார்க்கிங், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

    தன்னார்வலர்கள் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மாநாட்டு மேடை 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமர 200 இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.

    மேடையில் இருந்து விஜய், தொண்டர்களை நடந்துசென்று சந்திக்க 300 மீட்டர் நீளத்தில் ரேம்ப் வாக் அமைக்கப்பட்டுள்ளது.

    தூய்மை பணி, மகளிர் பாதுகாப்பு, ஊடக ஒருங்கிணைப்பு, போக்குவரத்து ஒருங்கிணைப்பு என 13 குழுக்கள் நியமனம்.

    ஆம்புலன்ஸ்கள் வந்து செல்வதற்கான தனி பாதைகள்.

    பெண்களுக்கு என பிங்க் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அவசர தேவைக்காக டிரோன்கள் மூலம் மருத்துவ பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கவும் திட்டம்.

    மாநாட்டு திடலைச் சுற்றியும் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

    50க்கும் மேற்பட்ட மருத்துவ குழுக்களும் மருத்துவ சேவையில் ஈடுபட உள்ளன.

    100 அடி கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை விஜய் ஏற்றுகிறார்.

    மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். கட் அவுட்களுடன் விஜய் கட் அவுட்டும் நிறுவப்பட்டுள்ளது.

    • போலி செய்திகளை பரப்பினாலும் நாம் ஒற்றுமையாய் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
    • போலி செய்திகளை பரப்பினாலும் நாம் ஒற்றுமையாய் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எழுச்சித்தமிழர் திருமாவை விட நீங்கள் பெரிய தியாகம் செய்துவிட்டிர்களா இபிஎஸ்?.

    சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) 'தமிழ்நாடு 26வது மாநில மாநாடு' நடந்து வருகிறது. "வெல்க ஜனநாயகம்" என தலைப்பிடப்பட்ட இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதில் சிபிஐ முன்னாள் மாநில தலைவர் முத்தரசன், இந்தநாள் தலைவர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், கருப்பும் சிவப்பும் சேர்ந்ததுதான் திராவிடர் கழகம். எங்களில் பாதி நீங்கள். கொள்கை முரண்கள் எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது.

    சமூகத்திற்கு தேவையான நமது கொள்கை வலுவாக இருப்பதால் தான் நமது நட்பும் வலுவாக இருக்கிறது. சேலத்தில் தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும். அதன் பணிகள் நாளையே தொடங்கப்படும். முத்தரசன் வைத்த கோரிக்கையை தட்டிக்கழிக்க முடியுமா!..  

    நாடு கடுமையான சூழலை எதிர்கொண்டு வரும் தருணத்தில் நாம் கொள்கை உறவோடு சேர்ந்திருக்கிறோம். சதி செய்தாலும் போலி செய்திகளை பரப்பினாலும் நாம் ஒற்றுமையாய் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கம்யூனிஸ்டுகள் மீது திடீர் பாசம் வந்துள்ளது.

    கம்யூனிஸ்டுகளை விட நீங்கள் பெரிய தியாகம் செய்து விட்டீர்களா, எழுச்சித்தமிழர் திருமாவை விட நீங்கள் பெரிய தியாகம் செய்துவிட்டீர்களா இபிஎஸ்?.

    அடிமைத்தனத்தை பற்றி எடப்பாடி பேசலாமா? அவருக்கு பேச என்ன உரிமை உள்ளது. திராவிட, கம்யூனிஸ்ட் கொள்கைகளை பற்றி தெரியாத இபிஎஸ் வாய்க்கு வந்தததை பேசி வருகிறார். ரெய்டு மூலம் நம்மை மிரட்ட நினைத்தவர்கள் தற்போது மிரண்டு போயிருக்கின்றனர்.

    எப்படியாவது கூட்டணியை கலைத்துவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் நமது லட்சியம் பெரிது. அதற்காகத்தான் நாம் அனைவரும் ஒன்றாகி இருக்கிறோம். கூட்டணியில் இருந்தாலும் விமர்சனங்களை முன்வைக்க கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் தவறியதில்லை" என்று தெரிவித்தார். 

    • சமூக வலைதளங்களை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.
    • புதுக்கோட்டை மாவட்டம் அகழ் ஆய்வில் தற்போது இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பூம்புகாரில் நடந்தது மாநாடு அல்ல பெருவிழா. இதில் 1 லட்சம் மகளிர் பங்கேற்றனர். மழை மட்டும் இல்லாமல் இருந்தால் மிகப்பெரிய மாநாடாக அமைந்திருக்கும். இப்படி ஒரு மாநாட்டை யாராலும் நடத்த முடியாது. எத்தனை பிரமாண்டத்திற்குள்ளையும் அடக்க முடியாத மாநாடாக அமைந்தது. மாநாட்டை சிறப்பாக நடத்திய மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    அதேபோல் வருகின்ற 17-ந் தேதி மிக சிறப்பான பொதுக்குழு நடைபெற உள்ளது. அதுவும் வரலாற்று சிறப்பு பொதுக்குழுவாக அமையும்.

    சென்னை திருமங்கலம் அண்ணாநகர் பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அறிந்து துடித்து போனேன். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை காவல் துறை எடுக்க வேண்டும். சிறுமியின் சமூக வலைதளங்களை காவல் துறை ஆய்வு செய்து வருகிறது.

    சமூக வலைதளங்களை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதைவிட்டு விட்டு வேறு எதையோ பார்த்து வருகிறார்கள். இதனை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

    தமிழக மீனவர்களை பாதுகாக்க கச்சத்தீவை மீண்டும் மீட்க வேண்டும் ஏதோ ஒரு காரணத்திற்காக அதை தாரைவார்த்தோம். கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறதோ அதேபோல் ஆற்று மணல் திருடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க நிறுத்த அரசு தயாராக இல்லை.

    இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 49 மீனவர்களை உடனடியாக இலங்கை அரசு விடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளிலும் சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை அரசு நடை முறைப்படுத்த உள்ளதாக தெரிகிறது. அப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    அகழ் ஆய்வில் தமிழ்நாடு எப்போதும் முன் மாதிரி மாநிலம் தான். புதுக்கோட்டை மாவட்டம் அகழ் ஆய்வில் தற்போது இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்தது.
    • பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

    இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்தது.

    இதில் இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்க மந்திரி மார்கோ ரூபியோ, ஜப்பான் மந்திரி தகேஷி இவாயா, ஆஸ்தி ரேலிய மந்திரி பென்னி வோங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

    அதில், "பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இந்தக் கண்டிக்கத்தக்க செயலுக்குக் காரணமானவர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிதியுதவி செய்தவர்கள் மீது எந்த தாமதமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் கீழ் தங்கள் கடமைகளுக்கு இணங்க, இந்த விஷயத்தில் அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுடனும் தீவிர மாக ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாநாடு'.
    • இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாநாடு'. தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த சிம்புவிற்கு இந்த திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

    டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது.

    இந்நிலையில், மாநாடு திரைப்படத்தின் பாகம் 2 உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு கோட் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து படத்தை இயக்க இருக்கிறார். சிம்புவும் அவர் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடித்து முடித்துவிட்டு இப்படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • சித்திரை முழுநிலவு மாநாடு இதுவரை நடந்தவற்றைவிட 100 மடங்கு சிறப்பாக நடத்தப்பட வேண்டும்.
    • மாநாட்டுக்காக நாம் மேற்கொள்ளும் பயணம் அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இன்றியும் அமைய வேண்டும்.

    சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கான பணிகளை மேற்கொளள அன்புமணி நியமனம் செய்யப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், " 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2025ம் ஆண்டில் சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறுகிறது.

    சித்திரை முழுநிலவு மாநாட்டுக்குழு தலைவராக அன்புமணியை நியமித்திருக்கிறேன். சித்திரை முழுநிலவு மாநாடு இதுவரை நடந்தவற்றைவிட 100 மடங்கு சிறப்பாக நடத்தப்பட வேண்டும்.

    மாநாட்டுக்காக நாம் மேற்கொள்ளும் பயணம் அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இன்றியும் அமைய வேண்டும்.

    சித்திரை முழுநிலவு மாநாட்டின் நோக்கங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

    சமூக நீதியை வென்றெடுப்பதற்கான மாநாடு என தெரிவிக்க வேண்டும்./ அனைத்து சமூகங்களையும் மாநாட்டுக்கு அழைத்து வரவேண்டும்.

    மாநாட்டுக்கு வரும் வழியில் எந்த ஒரு சலசலப்புக்கும் இடம் கொடுத்துவிடாமல் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.

    • 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
    • இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாநாடு'. தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த சிம்புவிற்கு இந்த திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

    டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது.

    இந்நிலையில், மாநாடு திரைப்படம் விரைவில் ஜப்பானில் வெளியாகவுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "நல்ல படம் என்பது ஒரு அழகிய பறவை போல. கண்டம் கடந்தும் நேசிக்கப்படும். மாநாடு தற்போது ஜப்பானில் மே மாதம் வெளியாக உள்ளது. இந்த லூப் ஹோல் திரைக்கதை ஜப்பானியர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். 

    • அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தொடங்கி வைத்தார்.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை:

    மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு நேற்று 2-ந் தேதி தொடங்கி வருகிற 6-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள கலையரங்கில் நடைபெறும் இந்த மாநாடு தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    முதல் நாள் தொடக்க நிகழ்ச்சியாக வெண்மணி தியாகிகள் நினைவு செங்கொடியை மத்திய குழு உறுப்பினர் வாசுகியிடமிருந்து கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஏ.கே.பத்ம நாபன் பெற்றுக் கொண்டார்.

    இதன் பின்னர் மாநாட்டு கொடியை மேற்கு வங்காள மூத்த தலைவர் பிமன்வாசு ஏற்றி வைத்தார். இதையடுத்து மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. இந்த மாநாட்டுக்கு திரிபுரா முன்னாள் முதல்-அமைச்சர் மாணிக் சர்கார் தலைமை தாங்கினார்.

    அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தொடங்கி வைத்தார். கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தாகாரத், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, விடுதலை அமைப்பின் பொது செயலாளர் தீபங்கர் பட்டச்சாரியா, புரட்சிக்கர சோசியலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவராஜன், மார்க்சிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஜி.ராம கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.

    முன்னதாக கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மாநாட்டின் வரவேற்பு குழு உறுப்பினரான பால கிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாநில செயலாளர் சண்முகம், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோரும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

    நேற்று மாலை பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, சினிமா டைரக்டர்கள் ராஜூ முருகன், நடிகர் சசிகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    மாநாட்டில் வரலாற்று புகைப்படங்களின் கண்காட்சி, புத்தக கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள், இடதுசாரி தலைவர்கள் குறித்த கருத்தரங்கம், தியாகிகள் சுடர் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இன்று 3-வது நாள் மாநாடு மாலை 5 மணியளவில் கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கமாக நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கம் மதுரை தமுக்கம் மைதானத்தில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் மதுரையில் பெய்து வரும் மழை காரணமாக இந்த நிகழ்ச்சியை ராஜா முத்தையா மன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கருத்தரங்கில் மத்திய குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன் வரவேற்று பேசுகிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் நோக்க உரையாற்றுகிறார்.

    மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா ஆகியோர் சிறப்புரை யாற்றுகிறார்கள். முடிவில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறுகிறார்.

    இந்த கருத்தரங்கில் நெய்யாற்றிங்கரை பெண்கள் குழுவினரின் சிங்காரி மேளம் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கருத்தரங்கில் பங்கேற்ப தற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் 2.25 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார்.

    மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து காரில் மதுரைக்கு வரும் மு..க.ஸ்டாலின் அழகர் கோவில் ரோட்டில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் அங்கிருந்து அவர் ராஜா முத்தையா மன்றம் சென்று கருத்த ரங்கில் பங்கேற்க ஏற்பா டுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கும் மாநாடு காரணமாக தல்லா குளம், கோரிப்பாளையம் பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாளை (4-ந்தேதி) 3-ம் நாள் மாநாடு மாலை 5 மணிக்கு கேரள மாப்ளா முஸ்லீம் பெண்கள் குழுவினரின் ஆடல், பாடல் நிகழ்ச்சியுடன் தொடங்கு கிறது. இதனை தொடர்ந்து சென்னை கலை குழுவினரின் நாடகம் கானா விமலா பாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    சினிமா நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, இயக்குநர் வெற்றி மாறன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் திட்டமிட்டபடி தமுக்கம் கலையரங்கில் நடைபெறு கிறது.

    • ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
    • 2-ந்தேதி தொடங்கி, 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு, மதுரையில், நாளை 2-ந்தேதி தொடங்கி, 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில் காஷ் மீர் முதல் கன்னியாகுமரி வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

    அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கேரளா முதல்வர் பினராயி விஜ யன், பிருந்தா காரத், திரி புரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    நாளை காலை 10.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்-திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி மாணிக் சர்க்கார் தலைமையில் நடைபெறும் பொது மாநாட்டை அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தொடங்கி வைக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் து. ராஜா. சி.பி.ஐ. (எம்.எல்) விடுதலை பொதுச் செயலாளர் தீபங் கர் பட்டாச்சார்யா, புரட்சி கர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் ஜி. தேவராஜன் உள்ளிட் டோர் பங்கேற்று வாழ்த்திப் பேச உள்ளனர்.

    கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவரு மான கே. பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்ற, வெங்கடேசன் எம்.பி. மற்றும் மாநிலத்தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    மாநாடு நடைபெறும் 5 நாட்களும் மாலை நேரங்களில் ஜானகியம்மாள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி மேடையில் கலைநிகழ்ச்சிகள்-கருத்தரங்குகள் நடை பெறுகின்றன.

    இதில், 3 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் அமைச்சர்கள், அறிஞர்கள் எழுத்தாளர்கள், கலை ஞர்கள், திரைப்பட இயக்கு நர்கள் உள்ளிட்ட ஆளுமை கள் பங்கேற்கின்றனர்.


    இதன்படி நாளை மாலை 5 மணிக்கு பாப்பம்பாடி ஜமா பெரிய மேளம், திண்டுக்கல் சக்தி போர்ப் பறை குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும், தமிழறிஞர் சாலமன் பாப்பையா, திரைப்பட இயக்குநர்கள் ராஜூ முருகன், சசிகுமார் ஆகியோரின் உரை வீச்சும் அரங்கேறுகின்றன.

    3 ந்தேதி மாலை 5 மணிக்கு, கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை'என்றதலைப்பில் மாநில உரிமைகள் பாது காப்புக் கருத்தரங்கம்' நடைபெறுகிறது. இதில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக மாநில உயர்கல்வித்துறை மந்திரி சுதாகர். சி.பி.எம். அகில இந்திய ஒருங்கி ணைப்பாளர் பிரகாஷ் காரத் ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.

    4-ந்தேதி மாலை 5 மணிக்கு கேரள மாப்ளா முஸ்லிம் பெண்கள் குழுவின் ஆடல், பாடல், சென்னைக் கலைக்குழுவின் நாடகம், கானா விமலாவின் பாடல்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. திரைக் கலைஞர் விஜய்சேதுபதி, இயக்குநர்கள் சமுத்திரக் கனி, வெற்றிமாறன் ஆகி யோர் உரையாற்றுகின்றனர்.

    6-ந்தேதி மாலை நடக்கும் நிகழ்ச்சிகளில் பிரகாஷ் ராஜ், திரைப்பட இயக்கு நர்கள் மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல் ஆகியோர் பேசுகிறார்கள்.

    வரலாற்றுக் கண்காட்சி யை மூத்த ஊடகவியலாளர் என்.ராம் திறந்து வைக்கி றார். புத்தகக் கண்காட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வே. பரமேஸ்வரன் திறந்து வைக்கிறார்.

    6-ந்தேதி பிற்பகல் 3 மணியளவில், 25 ஆயிரம் செந்தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் என். சங்கரய்யா நினைவுத்திடலில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உழைப்பாளி மக்கள் பங்கேற்கும் பிரம் மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக் கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய ஒருங்கி ணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி. சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

    ×