என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fire"

    • அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சுமார் 700 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • தீ விபத்தில் கட்டடங்கள் பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியானது

    ஹாங்காங் - தை போ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ விபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹாங்காங் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

    இந்த தீவிபத்தினால் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சுமார் 700 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தீ விபத்தில் கட்டடங்கள் பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    • யாத்ரீகர் ஒருவரின் அலட்சியத்தால் கோயில் முழுவதும் எரிந்து நாசமாகி உள்ளது.
    • ஜியாங்சு மாகாணத்தில் வென்சாங் பெவிலியன் என்ற பிரபல கோவில் மலையின் மீது அமைந்துள்ளது.

    சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வென்சாங் பெவிலியன் என்ற பிரபல கோவில் மலையின் மீது அமைந்துள்ளது. உள்ளூரில் இருந்தும், வெளியூரிலிருந்து யாத்திரை மேற்கொண்டும் இங்கு வழிபட பலர் வருவர்.

    அந்த வகையில் இந்த மாதம் 12 ஆம் தேதி கோவிலுக்கு சென்ற யாத்ரீகர் ஒருவரின் அலட்சியத்தால் கோயில் முழுவதும் எரிந்து நாசமாகி உள்ளது.

    பிரார்த்தனைக்காக ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி கவனிக்கப்படாமல் விடப்பட்டதால் இந்த தீவிபத்து ஏற்பட்டது.

    அவர் மெழுகுவர்த்தியை ஏற்றி, அதை அதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்காமல் தள்ளி வைத்ததாக தெரியவந்துள்ளது.

    இதன் விளைவாக, மெழுகுவர்த்தி உருகி தீப்பிடித்தது. தீ மொத்தம் உள்ள மூன்று தளங்களுக்கும் பரவி கோவிலை முழுமையாக ஆட்கொண்டது. பின்னர் தீ அணைக்கப்பட்ட நிலையில் கோவில் அதிக சேதங்களுக்கு உள்ளாகி உள்ளது. இதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து முடிந்த பின் கோயில் புனரமைப்புப் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.   

    • சுமார் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
    • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் COP30 காலநிலை உச்சிமாநாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் காயமடைந்தனர்.

    சுமார் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு நிதி உதவி வழங்குதல் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர்.

    கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த மாநாடு நிறைவடைவதற்கு 24 மணி நேரத்திற்குள் நேற்று இரவு மாநாட்டு அரங்கில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த இடத்தில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் உள்பட 50,000 க்கும் மேற்பட்டோர் தீப்பிடித்து புகை பரவியதை கண்டு அதிர்ந்து அங்கிருந்து அவசரமாக வெளியேறினர்.

    அரங்கின் நுழைவுவாயிலுக்கு அருகில் உள்ள ப்ளூஸோன் என்றழைக்கப்படும் இடத்தில் மின் சாதனங்களில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

     ஆறு நிமிடங்களுக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பிரேசில் சுற்றுலா அமைச்சர் செல்சோ சபினோ தெரிவித்தார். 

    • இந்த துறைமுகத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
    • மளமளவென பற்றி எரிந்த தீ, மற்ற கட்டிடங்களுக்கும் வேகமாகப் பரவியது.

    டோக்கியோ:

    ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் சகனோஸ்கி நகரம் உள்ளது. கடற்கரை நகரமான இங்கிருந்து பிடிக்கப்படும் சாளை வகை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதற்காக துறைமுகம் அமைத்தும், மீன்களை உறைய வைக்க, பதப்படுத்த கிடங்குகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் இந்த துறைமுகத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றி எரிந்த தீ, மற்ற கட்டிடங்களுக்கும் வேகமாகப் பரவி அருகே உள்ள மீனவர்களின் வீடுகளுக்கும் பரவியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் வந்து தீயை அணைக்க போராடினர். நீண்ட நேரத்திற்கு பிறகு துறைமுகத்தில் பரவிய தீ அணைக்கப்பட்டது.

    இந்த தீவிபத்தில் 170 கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

    • ஆம்புலன்ஸின் பின்புறத்தில் தீப்பிடிப்பதைக் கவனித்த ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார்.
    • ஆனால் பின்புறத்தில் இருந்த நான்கு பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

    குஜராத்தில் அர்வல்லி மாவட்டத்தில் மோடசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்த பிறகு நோய்வாய்ப்பட்ட ஒரு நாள் குழந்தை அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்தது.

    மோடசா-தன்சுரா சாலையில் ஆம்புலன்சில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆம்புலன்ஸின் பின்புறத்தில் தீப்பிடிப்பதைக் கவனித்த ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார். முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஓட்டுநர் மற்றும் குழந்தையின் பெற்றோரின் உறவினர்கள் காயங்களுடன் தப்பினர். ஆனால் பின்புறத்தில் இருந்த நான்கு பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

    குழந்தையுடன், குழந்தையின் தந்தை ஜிக்னேஷ் மோச்சி (38), டாக்டர் சாந்திலால் ரெண்டியா (30), மற்றும் செவிலியர் பூரிபென் மனாட் (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

    தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறியும் பணியில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • முதியோர் இல்லத்தின் 7-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
    • வயதானவர்கள், உடல்நலம் பாதித்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

    சரஜெவோ:

    தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா ஹெர்சகோவினாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    போஸ்னியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள துஸ்லா நகரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தின் 7-வது தளத்தில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிக் கொண்ட வயதானவர்கள், உடல்நலம் பாதித்தவர்கள் தாங்களாக வெளியேற முடியாமல் தவித்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் தீ வேகமாகப் பரவியதால், உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப்பணியில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    மின்கசிவால் தீ விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீவிபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    • தீப்பிடித்த பேருந்து விமானத்தில் இருந்து சில அங்குல தொலைவில் நின்று கொண்டிருந்தது.
    • தீயணைப்பு வீர்ர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

    புதுடெல்லி:

    டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது..

    தீப்பிடித்து எரிந்த பேருந்து ஒரு விமானத்திலிருந்து சில அங்குலங்கள் தொலைவில் நின்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பேருந்தில் பயணிகள் யாரும் விமானத்தில் இல்லை.

    அங்கிருந்த தீயணைப்பு வீர்ர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

    இந்த திடீர் தீவிபத்தால் அருகிலுள்ள விமானங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலைய அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகன நிறுத்துமிடத்தில் இருந்த குப்பைகளில் தீ விபத்து ஏற்பட்டு மேலுள்ள தளங்களுக்கும் பரவியது.
    • அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள தீயை அணைக்கும் உபகரணங்கள் எதுவும் செயல்படவில்லை

    டெல்லியில் மாநிலங்களவை எம்.பி.களுக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் இன்று மதியம் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

    பிஷம்பர் தாஸ் மார்க்கில் உள்ள மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த குப்பைகளில் தீ விபத்து ஏற்பட்டு  மேலுள்ள தளங்களுக்கும் பரவியது. உடனே உள்ளிருந்த மக்கள் வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவரிக்கப்பட்டது.

    மதியம் 1:20 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது. ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தன.

    காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, தீயணைப்பு வாகனங்கள் சுமார் அரை மணி நேரம் தாமதமாக வந்தன. அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள தீயை அணைக்கும் உபகரணங்கள் எதுவும் செயல்படவில்லை என்று தெரிவித்தனர்.

    இதுவரை மூன்று பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் மூன்று பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • கப்பலில் ஏராளமான பணியாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • அப்போது கப்பலின் கியாஸ் டேங்கில் திடீரென தீப்பிடித்து, பயங்கர வெடிவிபத்தும் ஏற்பட்டது.

    படாம்:

    இந்தோனேசியாவின் படாம் தீவில் உள்ள தன்ஜங்குன்காங் துறைமுகத்தில் பாமாயில் எண்ணெய் கப்பல் ஒன்று பழுது பார்க்கும் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.

    இந்தக் கப்பலில் நேற்று ஏராளமான பணியாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கப்பலின் கியாஸ் டேங்கில் திடீரென தீப்பிடித்தது. அத்துடன் பயங்கர வெடிவிபத்தும் ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 10 பணியாளர்கள் தீயில் கருகி பலியானார்கள். மேலும் 21 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    • தையத் கிராமம் அருகே வந்தவுடன் திடீரென பின்புறத்தில் தீப்பிடித்தது.
    • பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ராஜஸ்தானில் தனியார் பேருந்து திடீரெனத் தீப்பிடித்த கோர விபத்தில்10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    நேற்று மாலை, ஜெய்சால்மரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட தனியார் பேருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தையத் கிராமம் அருகே வந்தவுடன் திடீரென பின்புறத்தில் தீப்பிடித்தது.

    சில நிமிடங்களில், பேருந்து முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பலர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதவில், "ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் நான் மிகவும் துயரமடைந்துள்ளேன். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதம மந்திரி பேரிடர் நிவாரண நிதி (PMNRF) இலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தையத் கிராமம் அருகே வந்தவுடன் திடீரென பின்புறத்தில் தீப்பிடித்தது.
    • 14 க்கும் அதிகமானோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ராஜஸ்தானில் தனியார் பேருந்து திடீரெனத் தீப்பிடித்த கோர விபத்தில்10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இன்று மாலை, ஜெய்சால்மரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட தனியார் பேருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தையத் கிராமம் அருகே வந்தவுடன் திடீரென பின்புறத்தில் தீப்பிடித்தது.

    சில நிமிடங்களில், பேருந்து முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் 14 க்கும் அதிகமானோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    விபத்து குறித்துக் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு, விபத்து நடந்த இடத்திற்கு நேரில் விரைந்தார்.

    பேருந்து தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று மாலை மும்பையில் இருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்தது.
    • விபத்து காரணமாக பிற ரெயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

    மகாராஷ்டிராவில் மும்பை சென்ட்ரல்-வல்சாத் பயணிகள் ரெயில் இன்ஜினில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று மாலை மும்பையில் இருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்த ரெயில்  7.56 மணியளவில் பால்கர் மாவட்டத்தில் உள்ள கெல்வே ரோடு ரெயில் நிலையத்தை அடைந்த போது மின்சார என்ஜினில் தீவிபத்து ஏற்பட்டு புகை கிளம்பியது.

    உடனடியாக ரெயிலில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.

    பாதுகாப்பு நடவடிக்கையாக எஞ்சினுக்கு மின்சார விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த விபத்து காரணமாக பிற ரெயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

    ×