என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fire"

    • தாய்லாந்தின் ஃபூகெட்டுக்கு அவர்கள் சென்றனர்.
    • ஆனால் நீதிமன்றம் அவர்களின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது.

    கோவாவின் அர்போரா பகுதியில் இயங்கி வந்த, 'பிர்ச் பை ரோமியோ லேன்' இரவு விடுதியில், கடந்த 6ம் தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் விடுதி ஊழியர்கள் 20 பேர், வாடிக்கையாளர்கள் ஐந்து பேர் என மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர்.

    கிளப்பின் சட்டவிரோத கட்டுமானம் குறித்து ரவி ஹர்மல்கர் என்ற சமூக சேவகர் புகார் அளித்த பிறகு, அதை இடிக்க உத்தரவிடப்பட்டபோதும் கிளப் தொடர்ந்து செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

    முன்னதாக கோவா காவல்துறை நடத்திய விசாரணையில், விபத்து நடந்ததும் தீயணைப்புப் படையினரும் பிற மீட்புப் படையினரும் கிளப்பில் தீயை அணைக்க முயன்று கொண்டிருக்கும்போது, மறுபுறம் லூத்ரா சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டனர்.

    விபத்து நடந்த சில மணி நேரங்களில் அதிகாலை 1:17 மணிக்கு, இருவரும் மேக் மை டிரிப் தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இருவரும் அதிகாலை 5:30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் ஏறி நாட்டை விட்டு வெளியேறினர். தாய்லாந்தின் ஃபூகெட்டுக்கு அவர்கள் சென்றனர்.

    இந்தச் சகோதரர்களைப் பிடிக்க சிபிஐ கோரிக்கையின் பேரில் இன்டர்போல் புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

    மேலும் தாய்லாந்து போலீசாரை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டு சகோதரர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் நீதிமன்றம் அவர்களின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது.

    இதற்கிடையே சவுரப் லூத்ரா, கவுரவ் லூத்ரா ஆகியோர் டிசம்பர் 11 அன்று தாய்லாந்து போலீசாரால் கைது செய்து செய்யப்பட்டு புக்கெட்டில் உள்ள தடுப்பு மையதில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் இந்தியாவுக்கு நாடுதாடப்பட்டனர்.

    டெல்லி விமான நிலையத்தில் காவலில் உள்ள இருவரும் காட்டும் புகைப்படத்தை கோவா காவல்துறை வெளியிட்டுள்ளது.

    கோவா போலீஸ் குழு அவர்களை விமான நிலையத்தில் முறையாகக் கைது செய்தது. இருவரும் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

    • மீட்புப் படையினர் கிளப்பில் தீயை அணைக்க முயன்று கொண்டிருக்கும்போது, மறுபுறம் லூத்ரா சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டனர்.
    • கிளப்பின் சட்டவிரோத கட்டுமானம் குறித்து ரவி ஹர்மல்கர் என்ற சமூக சேவகர் புகார் அளித்த பிறகு, அதை இடிக்க உத்தரவிடப்பட்டபோதும் கிளப் தொடர்ந்து செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

    கோவாவின் அர்போரா பகுதியில் இயங்கி வந்த, 'பிர்ச் பை ரோமியோ லேன்' இரவு விடுதியில், கடந்த 6ம் தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் விடுதி ஊழியர்கள் 20 பேர், வாடிக்கையாளர்கள் ஐந்து பேர் என மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் இந்த விடுதியின் உரிமையாளர்களான லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களை நாடு கடத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    கிளப்பின் சட்டவிரோத கட்டுமானம் குறித்து ரவி ஹர்மல்கர் என்ற சமூக சேவகர் புகார் அளித்த பிறகு, அதை இடிக்க உத்தரவிடப்பட்டபோதும் கிளப் தொடர்ந்து செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

    முன்னதாக கோவா காவல்துறை நடத்திய விசாரணையில், விபத்து நடந்ததும் தீயணைப்புப் படையினரும் பிற மீட்புப் படையினரும் கிளப்பில் தீயை அணைக்க முயன்று கொண்டிருக்கும்போது, மறுபுறம் லூத்ரா சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டனர். 

    விபத்து நடந்த சில மணி நேரங்களில் அதிகாலை 1:17 மணிக்கு, இருவரும் மேக் மை டிரிப் தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இருவரும் அதிகாலை 5:30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் ஏறி நாட்டை விட்டு வெளியேறினர். தாய்லாந்தின் ஃபூகெட்டுக்கு அவர்கள் சென்றுள்ளனர்.

    இந்தச் சகோதரர்களைப் பிடிக்க சிபிஐ கோரிக்கையின் பேரில் இன்டர்போல் புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

    மேலும் தாய்லாந்து போலீசாரை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டு சகோதரர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் சவுரப் லூத்ரா, கவுரவ் லூத்ரா ஆகியோரை இன்று அதி காலை தாய்லாந்து போலீ சார் கைது செய்து உள்ளனர். அவர்கள் இருவரும் புக்கெட்டில் உள்ள தடுப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடைமுறை தொடங்கப்பட்டு உள்ளன.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, கோவா கிளப்பின் உரிமையாளர்களான லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் குடிவரவு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு அவை முடிந்ததும் இன்று மாலை அல்லது நாளைக்குள் இருவரும் விமானம் மூலம் இந்தியாவுக்குத் திரும்ப அழைத்து வரப்படுவார்கள் என்றனர்.

    லூத்ரா சகோதரர்கள் பாஸ்போர்ட்களை ரத்து செய்வது குறித்து வெளியுறவு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

    மேலும் திங்களன்று, இதேபோன்ற முறையில் இயங்கி வந்த ரோமியோ கிளப்புக்குச் சொந்தமான இரண்டு இரவு விடுதிகளை அதிகாரிகள் மூடினர்.

    மேலும் இரவு விடுதியின் இணை உரிமையாளரான அஜய் குப்தா டெல்லியில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே லூத்ரா சகோதரர்கள் சார்பில் முன்ஜாமீன் கோரி டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட வணிகப் பயணத்திற்காக தாய்லாந்து சென்றதாக அவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த மனு குறித்து நாளை விசாரணை நடைபெறுகிறது. ஆனால் இருவருக்கும் ஜாமீன் வழங்குவதை கோவா காவல்துறை கடுமையாக எதிர்த்துள்ளது. 

    • சீனாவின் குவாங்டங் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

    பீஜிங்:

    சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்தில் சாவோனன் மாவட்டம் அமைந்துள்ளது. அங்குள்ள சாந்தவ் நகரின் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    தீ மளமளவென பரவி 150 சதுர மீட்டர் பரப்பளவுள்ள பகுதிகளுக்கு தீ பரவியது.

    இந்த தீ விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் சுமார் 40 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தீ விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன் சீனாவுக்கு உட்பட்ட ஹாங்காங் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 140-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது நினைவிருக்கலாம்.

    • ஜகார்த்தாவில் 7 மாடி கொண்ட அலுவலக கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • இதில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தாவில் 7 மாடி கொண்ட அலுவலக கட்டிடம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இன்று அந்த அலுவலக கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    7 மாடி கட்டிடத்தில் தீ மளமளவென பரவியதால் வானத்தில் அடர்ந்த கரும்புகை எழுந்தது. இந்த கரும்புகை எழும்பியதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலுவலகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த எரிபொருள் டேங்கரில் இருந்து கசிந்த எரிபொருளை மக்கள் எடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
    • மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் அங்கு குழுமியிருந்தவர்களில் குறைந்தது 231 பேர் உயிரிழந்தனர்.

    2025 இல் உலகில் பல அழிவுகரமான விபத்துகள் அரங்கேறி உள்ளன. அவற்றில் நூற்றுக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அவற்றை கால வரிசைப்படி இங்கு பார்ப்போம்.

    98 பேர் உடல் கருகி உயிரிழந்த நைஜீரிய எரிபொருள் டேங்கர் விபத்து

    2025 தொடக்கத்தில் ஜனவரி 18 அன்று நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தின் சுலேஜா அருகே நிகழ்ந்த கோரமான விபத்தில் 98 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாலையில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த எரிபொருள் டேங்கரில் இருந்து கசிந்த எரிபொருளை மக்கள் எடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    78 பேர் பலியான துருக்கி ஹோட்டல் விபத்து

    ஜனவரி 21 அன்று துருக்கியில் புகழ்பெற்ற Ski Resort அமைந்துள்ள கார்தால்காயாவில் ஒரு சொகுசு ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 78 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். ஜனவரி மாத நடுப்பகுதியில், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்திருந்த நேரத்தில் இந்த விபத்து நடந்தது.

    இரவு நேரத்தில் தீப்பிடித்ததால், பலர் தங்கள் அறைகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டாலும், ஹோட்டலின் மரக்கட்டமைப்பு மற்றும் குளிர்சாதன அமைப்புகளால் தீ வேகமாக பரவியதில் விபத்தின் சேதம் பன்மடங்கு அதிகரித்தது.

    55 பேர் மரணித்த குவாத்தமாலா பேருந்து விபத்து

    மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு குவாத்தமாலா குடியரசு. இதன் தலைநகரான குவாத்தமாலா சிட்டியில் உள்ள லாஸ் வேகாஸ் ஆற்றின் மீதுள்ள பாலம் ஒன்றில் கடந்த பிப்ரவரி 10 அன்று அதிகாலையில் லாஸ் வேகாஸ் ஆற்றின் மீதுள்ள பாலம் ஒன்றில் இருந்து, பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் குறைந்தது 55 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். பேருந்தில் இருந்தவர்களில் பலர் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளர்கள்.

    59 பேர் பலி மரணித்த நைட் கிளப் விபத்து:

    பால்கன் நாடுகளில் ஒன்றான வடக்கு மாசிடோனியாவில் கோச்சானி நகரில் ஒரு பரபரப்பான இரவு விடுதியில் கடந்த மார்ச் 16 ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உடல் கருகி இறந்தனர். இந்த விபத்தில் 155 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    தீ விபத்து ஏற்பட்டபோது விடுதிக்குள் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவசரகால வெளியேறும் வழிகள் போதுமானதாக இல்லாததும், நெரிசலும் உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

    231 பேர் பலி உயிரிழந்த டொமினிகன் நைட் கிளப் விபத்து

    கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் சான்டோ டொமிங்கோ நகரில் பிரபல பாடகர் ரூபி பெரெஸ் பங்கேற்ற இசை நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 8 அன்று இரவு விடுதி ஒன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் அங்கு குழுமியிருந்தவர்களில் குறைந்தது 231 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்தச் சம்பவத்தில் பாடகர் ரூபி பெரெஸும் உயிரிழந்தார். நிகழ்ச்சியின் போது கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதும், கட்டிடத்தின் தரமற்ற கட்டுமானமும் இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    148 பேர் பலி உயிரிழந்த காங்கோ படகு விபத்து

    ஏப்ரல் 15 அன்று ஆபிரிக்க நாடான காங்கோவின் மண்டாகா நகருக்கு அருகில் உள்ள காங்கோ ஆற்றில் மரப் படகு தீப்பிடித்துக் கவிழ்ந்ததில் குறைந்தது 148 பேர் உயிரிழந்தனர்.

    மோட்டார் மூலம் ஆற்றில் படகு அதிவேகமாக இயக்கப்பட்டதும் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக இல்லாததும் இந்த விபத்துக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. படகில் இருந்த பலர் நீச்சல் தெரியாததாலும், தீக்காயங்களாலும் உயிரிழந்தனர்.

    70 பேர் பலியான ஈரான் துறைமுக விபத்து

    ஈரானின் முக்கிய வர்த்தக மையமான பந்தர் அப்பாஸில் உள்ள ஷாஹித் துறைமுகத்தில் ஏப்ரல் 26 பெரும் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் குறைந்தது 70 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    துறைமுகத்தில் சேமிக்கப்பட்டிருந்த எரிபொருள் அல்லது இரசாயனப் பொருட்கள் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் ஈரானின் ஏற்றுமதி இறக்குமதி செயல்பாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    79 பேர் பலியான ஆப்கானிஸ்தான் பேருந்து விபத்து

    ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து, ஆப்கானிஸ்தான் ஹெராத் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு லாரி மீது மோதிய விபத்தில் 79 பேர் பலியாகினர்.

    159 பேர் பலியான ஹாங்காங் அடுக்குமாடி தீ விபத்து

    நவம்பர் 23 அன்று ஹாங்காங்கில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நெருக்கமாக அமைந்திருந்த கட்டடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 159 பேர் கொல்லப்பட்டதுடன், 150-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். அந்த கட்டடங்களில் மூங்கில் உள்ளிட்ட தீப்பற்றக்கூடிய பொருட்கள் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று பின்னர் தெரிய வந்தது. 

    • இதனால் பக்தர்கள் பீதியில் அங்கிருந்து ஓடத் தொடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது.
    • தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.

    பக்தர்கள் வருகையை ஒட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் உள்ள மரங்களில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை 8.20 மணிக்கு அவ்வாறு அலங்காரம் செய்யப்பட்ட ஆலமரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பீதியில் அங்கிருந்து சிதறி ஓடத் தொடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது.

    தகவலறிந்து  தீயணைப்பு வீரர்கள் மற்றும் சன்னிதான தீயணைப்பு படை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை பரவ விடாமல் துரிதமாக செயல்பட்டு அணைத்தனர். இந்த சம்பவத்தால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    • அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சுமார் 700 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • தீ விபத்தில் கட்டடங்கள் பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியானது

    ஹாங்காங் - தை போ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ விபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹாங்காங் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

    இந்த தீவிபத்தினால் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சுமார் 700 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தீ விபத்தில் கட்டடங்கள் பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    • யாத்ரீகர் ஒருவரின் அலட்சியத்தால் கோயில் முழுவதும் எரிந்து நாசமாகி உள்ளது.
    • ஜியாங்சு மாகாணத்தில் வென்சாங் பெவிலியன் என்ற பிரபல கோவில் மலையின் மீது அமைந்துள்ளது.

    சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வென்சாங் பெவிலியன் என்ற பிரபல கோவில் மலையின் மீது அமைந்துள்ளது. உள்ளூரில் இருந்தும், வெளியூரிலிருந்து யாத்திரை மேற்கொண்டும் இங்கு வழிபட பலர் வருவர்.

    அந்த வகையில் இந்த மாதம் 12 ஆம் தேதி கோவிலுக்கு சென்ற யாத்ரீகர் ஒருவரின் அலட்சியத்தால் கோயில் முழுவதும் எரிந்து நாசமாகி உள்ளது.

    பிரார்த்தனைக்காக ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி கவனிக்கப்படாமல் விடப்பட்டதால் இந்த தீவிபத்து ஏற்பட்டது.

    அவர் மெழுகுவர்த்தியை ஏற்றி, அதை அதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்காமல் தள்ளி வைத்ததாக தெரியவந்துள்ளது.

    இதன் விளைவாக, மெழுகுவர்த்தி உருகி தீப்பிடித்தது. தீ மொத்தம் உள்ள மூன்று தளங்களுக்கும் பரவி கோவிலை முழுமையாக ஆட்கொண்டது. பின்னர் தீ அணைக்கப்பட்ட நிலையில் கோவில் அதிக சேதங்களுக்கு உள்ளாகி உள்ளது. இதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து முடிந்த பின் கோயில் புனரமைப்புப் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.   

    • சுமார் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
    • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் COP30 காலநிலை உச்சிமாநாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் காயமடைந்தனர்.

    சுமார் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு நிதி உதவி வழங்குதல் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர்.

    கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த மாநாடு நிறைவடைவதற்கு 24 மணி நேரத்திற்குள் நேற்று இரவு மாநாட்டு அரங்கில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த இடத்தில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் உள்பட 50,000 க்கும் மேற்பட்டோர் தீப்பிடித்து புகை பரவியதை கண்டு அதிர்ந்து அங்கிருந்து அவசரமாக வெளியேறினர்.

    அரங்கின் நுழைவுவாயிலுக்கு அருகில் உள்ள ப்ளூஸோன் என்றழைக்கப்படும் இடத்தில் மின் சாதனங்களில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

     ஆறு நிமிடங்களுக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பிரேசில் சுற்றுலா அமைச்சர் செல்சோ சபினோ தெரிவித்தார். 

    • இந்த துறைமுகத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
    • மளமளவென பற்றி எரிந்த தீ, மற்ற கட்டிடங்களுக்கும் வேகமாகப் பரவியது.

    டோக்கியோ:

    ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் சகனோஸ்கி நகரம் உள்ளது. கடற்கரை நகரமான இங்கிருந்து பிடிக்கப்படும் சாளை வகை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதற்காக துறைமுகம் அமைத்தும், மீன்களை உறைய வைக்க, பதப்படுத்த கிடங்குகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் இந்த துறைமுகத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றி எரிந்த தீ, மற்ற கட்டிடங்களுக்கும் வேகமாகப் பரவி அருகே உள்ள மீனவர்களின் வீடுகளுக்கும் பரவியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் வந்து தீயை அணைக்க போராடினர். நீண்ட நேரத்திற்கு பிறகு துறைமுகத்தில் பரவிய தீ அணைக்கப்பட்டது.

    இந்த தீவிபத்தில் 170 கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

    • ஆம்புலன்ஸின் பின்புறத்தில் தீப்பிடிப்பதைக் கவனித்த ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார்.
    • ஆனால் பின்புறத்தில் இருந்த நான்கு பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

    குஜராத்தில் அர்வல்லி மாவட்டத்தில் மோடசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்த பிறகு நோய்வாய்ப்பட்ட ஒரு நாள் குழந்தை அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்தது.

    மோடசா-தன்சுரா சாலையில் ஆம்புலன்சில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆம்புலன்ஸின் பின்புறத்தில் தீப்பிடிப்பதைக் கவனித்த ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார். முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஓட்டுநர் மற்றும் குழந்தையின் பெற்றோரின் உறவினர்கள் காயங்களுடன் தப்பினர். ஆனால் பின்புறத்தில் இருந்த நான்கு பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

    குழந்தையுடன், குழந்தையின் தந்தை ஜிக்னேஷ் மோச்சி (38), டாக்டர் சாந்திலால் ரெண்டியா (30), மற்றும் செவிலியர் பூரிபென் மனாட் (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

    தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறியும் பணியில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • முதியோர் இல்லத்தின் 7-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
    • வயதானவர்கள், உடல்நலம் பாதித்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

    சரஜெவோ:

    தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா ஹெர்சகோவினாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    போஸ்னியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள துஸ்லா நகரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தின் 7-வது தளத்தில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிக் கொண்ட வயதானவர்கள், உடல்நலம் பாதித்தவர்கள் தாங்களாக வெளியேற முடியாமல் தவித்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் தீ வேகமாகப் பரவியதால், உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப்பணியில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    மின்கசிவால் தீ விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீவிபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    ×