search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "apartment"

    • தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
    • அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னையில் 9 இடங்களில் 3,238 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.

    அதன்படி நாவலர் நெடுஞ்செழியன் நகர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை திட்டப்பகுதியில் ரூ75.95 கோடி மதிப்பீட்டில் 450 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பெரியார் நகர் திட்டப்பகுதியில் ரூ.81.64 கோடி மதிப்பீட்டில் 448 புதிய குடியிருப்புகள், காந்தி நகர் திட்டப்பகுதியில் ரூ.83.50 கோடி மதிப்பீட்டில் 500 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், வேம்புலியம்மன் திட்டப்பகுதியில் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் 188 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பத்ரிக்கரை திட்டப்பகுதியில் ரூ.32.30 கோடி மதிப்பீட்டில் 168 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், கங்கைகரைபுரம் திட்டப்பகுதியில் ரூ.29.85 கோடி மதிப்பீட்டில் 170 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், ஆண்டி மான்யம் தோட்டம் திட்டப் பகுதியில் ரூ118.53 கோடி மதிப்பீட்டில் 702 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், நாட்டான் தோட்டம் திட்டப்பகுதியில் ரூ.41.08 கோடி மதிப்பீட்டில் 252 புதிய அடுக்குமாடி குடியி ருப்புகள் மற்றும் பருவா நகர் திட்டப்பகுதியில் ரூ.61.13 கோடி மதிப்பீட்டில் 360 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என ரூ.556.60 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 3,238 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் குறு சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர் அபூர்வா, வாரிய மேலாண்மை இயக்குனர் பொ. சங்கர், மாநகராட்சி பணிகள் குழு தலைவர் நே.சிற்றரசு, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தொடர்ந்து இப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
    • கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நீலகிரி

    அரவேணுவில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலை கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தை இணைக்கிறது. இதில் தவிட்டு மேடு பெரியார் நகர் பகுதி அமைந்துள்ளது. இங்கு 500-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவும் வனத்தை விட்டு வெளியேறிய கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வெகுநேரமாக சுற்றி திரிந்தது. இது ஒருவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமராவில் பதிவாகி உள்ளது. தொடர் கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இங்கு சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியன் சார்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 4,644 குடியிருப்பு களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
    • 461 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு பணி ஆணைகளையும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

    நாமக்கல்:

    அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் அடிப்படையில் ரூ.405 கோடி செலவில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியன் சார்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 4,644 குடியிருப்பு களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

    இதை அடுத்து 4500 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 105 தொகுதிகளில் வசிக்கும் 11,300 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்டுவதற்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.237.3 கோடி மதிப்பிலான பணி ஆணைகளும் வழங்கப்பட்டன.

    இதை ஒட்டி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 461 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு பணி ஆணைகளையும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். இதில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, மாவட்ட வருவாய் அதிகாரி மணிமேகலை, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அவிநாசி சோலை நகரில் 448 வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
    • குடிநீர் வினியோகிக்க பேரூராட்சிக்கு வாரியம் சார்பில் 40 லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்தப்பட்டுள்ளது.

    அவிநாசி : 

    நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் அவிநாசி சோலை நகரில் 448 வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 173 வீடுகள் பூட்டியிருப்பதாகவும், பலரும் வாடகைக்கு விட்டு வெளியில் தங்கியிருப்பதாகவும் புகார்கள் வந்தன.

    இதையடுத்து வாழ்வாதார மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சரவணபிரபு, குடியிருப்புவாசிகளுக்கு அறிவுரை, ஆலோசனை வழங்கி கூறியதாவது:- நம் குடியிருப்பு, நம் பொறுப்பு என்ற திட்டத்தில், குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஏற்படுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். குடியிருப்புகளை சுத்தம், சுகாதாரமாக பராமரிப்பது, குடிநீர் திறந்து விடும் பணி மேற்கொள்வதற்கு பணியாட்களை நியமிப்பது, அவர்களுக்கு சம்பளம் வழங்குவது, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்துவது, சுற்றுச்சுவர் எழுப்புவது, 'சிசிடிவி' கேமரா பொருத்துவது உள்ளிட்ட பணிகளை, குடியிருப்போர் நலச்சங்கங்கள் மூலமே மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஒவ்வொரு குடியிருப்புவாசிகளிடம் இருந்தும் மாதம் 250 ரூபாய் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம்.

    இந்த வீடுகள் யார் பெயரிலும் பதிவு செய்யப் படவில்லை. மாறாக 10 ஆண்டுகள் அதில் குடியிருந்த பிறகு வீடுகளை விற்றுக் கொள்ள விற்பனை சான்றிதழ் வழங்கப்படும். குடியிருப்போர் நலச்சங்கத்துக்கு சந்தா வழங்காமல் சங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது வீடுகளை வாடகை, போக்கியத்துக்கு விட்டு வெளியில் வசிப்பது, டம்மி பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டு, பிறருக்கு வீடுகளை விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்படும்.

    அடுத்த மாதம் வாரியத்தின் எஸ்டேட் அலுவலர், வீடு தோறும் ஆய்வு மேற்கொண்டு உறுதிபடுத்திய பின் இந்நடவடிக்கை எடுக்கப்படும். 10 ஆண்டுகளுக்கு பின், வீடுகளை விற்க விற்பனை சான்றிதழ் பெற வேண்டுமானால் குடியிருப்போர் நலச்சங்கத்தின் தடையில்லா சான்று கட்டாயம் பெற வேண்டும்.

    குடிநீர் வினியோகிக்க பேரூராட்சிக்கு வாரியம் சார்பில் 40 லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தடையின்றி கிடைப்பதால், பலர் தண்ணீரை விரயமாக்குகின்றனர்.அனாவசியமாக செலவழிக்கின்றனர். எனவே காலை, மாலையில் தலா ஒரு மணி நேரம் மட்டும் குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போர்வெல் தண்ணீர் தடையின்றி வினியோகிக்கப்படும் என்றார்.

    சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் கசிந்த் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #apartmentbuildinggasleak
    பெய்ஜிங்:

    சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்வான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இன்று அதிகாலை இந்த குடியிருப்பின் நான்காவது மாடியில் சமையல் எரிவாயு கசிந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும், 3 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து குறித்து முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது.
    #apartmentbuildinggasleak
    மவுலிவாக்கம் சம்பவம் நடந்த பின்னரும், அடையாறு ஆற்றங்கரையோரம் அடுக்குமாடி குடியிருப்பை கட்ட அனுமதி வழங்குவதா? என்று அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை, அனகாபுத்தூரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியதை எதிர்த்து ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் வி.டி.பாலாஜி ஆஜராகி வாதிட்டார். விசாரணையின்போது, சைதாப்பேட்டை, அடையாறு ஆற்றங்கரை அருகில் தனியார் கட்டுமான நிறுவனம் 11 அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தை கட்டி வருவதாக நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கில் அந்த தனியார் நிறுவனத்தை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்தனர். பின்னர், இந்த நிறுவனம் கட்டி வரும் அடுக்குமாடி கட்டிடத்துக்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்று சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.,) பொதுப்பணித்துறை, வருவாய்துறை அதிகாரிகள் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் கட்டுமான நிறுவனமும் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.எம்.டி.ஏ. சார்பில் ஆஜரான வக்கீல் திருவேங்கடம், ‘அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் நிலம் பட்டா நிலம். அந்த நிறுவனத்திடம் 1903-ம் ஆண்டு இந்த நிலத்துக்குரிய ஆவணங்கள் எல்லாம் உள்ளன. எல்லா துறைகளிடமும் முறையான அனுமதியை பெற்ற பின்னரே, சி.எம்.டி.ஏ. கட்டிட திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில் எந்த விதிமீறலும் இல்லை’ என்று கூறினார்.

    பொதுப்பணித்துறை சார்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளடர் உதயகுமாரும், இதேபோல வாதிட்டார்.

    அப்போது அதிகாரிகள் சார்பில், அந்த அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படும் இடம், அந்த கட்டிடம் குறித்த புகைப்படங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த புகைப்படத்தை பார்த்த நீதிபதிகள், ‘அடையாறு ஆற்றங்கரைக்கு மிக அருகில், இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை கட்ட எப்படி அனுமதி வழங்கப்பட்டது? அந்த ஆற்றின் அகலம் எவ்வளவு?. மவுலிவாக்கம் சம்பவம் நடந்த பின்னரும், இதுபோன்ற அனுமதி எப்படி வழங்கப்பட்டது?’ என்று சரமாரியாக அரசு வக்கீல்களிடம் கேள்வி எழுப்பினர்.

    மேலும், இந்த புகைப்படத்தை நிபுணர்கள் பார்க்க வேண்டாம். சாதாரண மனிதர்களிடம் காட்டுங்கள். அவர் கள் இதில் விதிமீறல் இல்லை என்று கூறட்டும் என்று கூறி, அந்த புகைப்படத்தை கோர்ட்டில் இருந்தவர்கள் எல்லாரும் பார்க்கட்டும் என்று கூறி வழங்கினார்கள்.

    இதன்பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:-

    முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்காதீர்கள். தமிழ்நாட்டில் தான் அரசு புறம்போக்கு நிலம், நீர்நிலைகளை எல்லாம் விருப்பம் போல ஆக்கிரமிக்க முடியும். பணம் இருந்தால் போதும் எதுவேண்டுமானாலும் இங்கு செய்யலாம் எனற நிலை உள்ளது.

    அடையாறு ஆற்றின் அகலம் என்ன? இந்த விவரம் கூட இல்லாமல், அரசு அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகி உள்ளனர்.

    எங்களை பொறுத்தவரை யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. இன்னொரு மவுலிவாக்கம் சம்பவம் நடக்கக்கூடாது என்பதுதான் எங்களது நோக்கம்.

    2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இந்த அதிகாரிகளுக்கு பாடத்தை தரவில்லையா?, ஆற்றங்கரையோரம் எப்படி அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்குகிறீர்கள்?

    இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    இந்த அடுக்கு மாடி கட்டிடம் கட்டும் இடத்தில், மண் பரிசோதனை செய்யப்பட்டதா?, அவ்வாறு பரிசோதனை செய்திருந்தால், அந்த அறிக்கையை எங்கே?’ என்று நீதிபதிகள் கேட்டனர். இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பதில் சொல்ல வில்லை.

    இதையடுத்து, ‘இந்த வழக்கில் கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் மற்றும் சென்னை நதிகள் மீட்பு அறக்கட்டளையின் அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். அவர்கள் அனைத்து ஆவணங்களுடன் நாளை (வெள்ளிக்கிழமை) ஆஜராக வேண்டும்’ என்று கூறி விசாரணையை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #tamilnews
    சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுமியை 16 பேர் கற்பழித்து தொடர்பாக காவலாளிகள் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுமியை 16 பேர் கற்பழித்து உள்ளனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதில் முதல்கட்டமாக காவலாளிகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 பேரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை அயனாவரத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 350 வீடுகள் உள்ளன. அந்த குடியிருப்பில் வசிக்கும் 11 வயதான சிறுமி சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படிக்கிறார்.

    காது கேட்கும் திறன் குறைபாடு உள்ள அந்த மாணவி, தினந்தோறும் பஸ்சில் ஏறி பள்ளிக்கு சென்று வருவார். அந்த மாடியில் உள்ள தனது வீட்டுக்கும், பள்ளிக்கும் செல்லும்போது குடியிருப்பில் உள்ள லிப்டை பயன்படுத்துவார். ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்களோடு அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அனைவரிடமும் வெகுளித்தனமாக அந்த சிறுமி பேசுவாராம்.

    இதை பயன்படுத்தி ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ‘விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னை தீர்த்துக்கட்டிவிடுவோம்’, என்று கத்தியை காட்டி மிரட்டியதால் அந்த சிறுமியும் விஷயத்தை வெளியே சொல்ல பயந்து அமைதியாக இருந்துவிட்டதாக கூறப்படுகிறது.

    முதலில் 4 காம கொடூரன்களின் இச்சைக்கு பலியான அந்த சிறுமி, அடுத்தடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் காவல் பணிக்கு வரும் மேலும் 5 காவலாளிகளின் காமப்பசிக்கு இரையாக்கப்பட்டு இருக்கிறாள். அக்குடியிருப்பின் மொட்டை மாடி பகுதியிலும், ‘லிப்ட்’டுக்குள் வைத்தும் இந்த காம கொடூரர்கள் அந்த சிறுமியை தங்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். அத்தோடு விடாமல் அக்குடியிருப்புக்கு பல்வேறு வேலைகளுக்காக வந்த பிளம்பர்கள், எலெக்ட்ரீசியன்கள் என்று மொத்தம் 16 பேர் கடந்த 6 மாதங்களாக ஒவ்வொருவராக தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

    இந்த விஷயம் அரசல்புரசலாக அச்சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. சிறுமியிடம் அவர்கள் விசாரித்தபோது அழுதுகொண்டே தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் குறித்து தெரிவித்தார். அந்த சிறுமி கூறிய முதல் தகவலில், ஒரு காவலாளியின் பெயரையும், ‘லிப்ட்’ இயக்கும் ஊழியர்கள் இருவரின் பெயரையும் மட்டுமே தெரிவித்தார். அவர்கள் மீது அந்த சிறுமியின் தந்தை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    உடனடியாக அந்த 3 காம கொடூரன்களையும் அயனாவரம் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களை விசாரித்தபோது தான், மொத்தம் 16 பேர் அந்த சிறுமியை சீரழித்த திடுக்கிடும் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து 13 பேரையும் அயனாவரம் போலீசார் அதிரடியாக பிடித்தனர்.

    பிடிபட்ட 16 பேரில் நேற்று இரவு முதல் கட்டமாக 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    கைதானவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    1. சுரேஷ் (32) பிளம்பர், 2. அபிஷேக் (23) காவலாளி, 3. சுகுமாரன்(60) காவலாளி, 4. ரவிக்குமார்(64) லிப்ட் ஊழியர், 5. இரால் பிரகாஷ்(40) காவலாளி, 6. ராஜசேகர்(40) வீட்டு வேலைக்காரர்.

    மீதம் உள்ள 10 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து பிடிபட்ட 16 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய சந்திரிகா விசாரித்தார். ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சிறுமியிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணையும் நேற்று மாலை நடந்தது. சிறுமி கூறிய தகவல்களை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார். இந்த மாபாதக செயலில் ஈடுபட்ட 16 பேரிடமும் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடக்கிறது. மாஜிஸ்திரேட்டு அறிக்கை சமர்ப்பித்த பிறகு, அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கற்பழிக்கப்பட்ட சிறுமியின் மூத்த சகோதரி வெளிமாநிலத்தில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவரிடம் தான் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தகவல் சொல்லி அழுது இருக்கிறார்.

    அதன் பிறகு தான் சிறுமியின் பெற்றோருக்கு இந்த சம்பவம் தெரியவர அவர்கள் போலீசில் புகார் கூறி உள்ளனர். 
    நல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவு காரணமாக நிகழ்ந்த தீ விபத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
    நல்லூர்:

    திருப்பூர்-காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பகுதியில் ஜெய்நகர் 4-வது வீதியில் உள்ள கணபதி அவென்யூ அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் வசித்து வருபவர் கந்தசாமி (வயது 40). இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் நாச்சிபாளையத்தில் நடைபெறும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் இவரது வீட்டின் சமையல் அறையில் தீவிபத்து ஏற்பட்டு புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இது பற்றி கந்தசாமிக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர் வீட்டிற்கு விரைந்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். பின்னர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இது குறித்து திருப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்தனர். அதற்குள் அங்கு வந்த கந்தசாமி வீட்டை திறந்து உள்ளே சென்றுபார்த்த போது மிக்சியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு அங்கு இருந்த பொருட்கள் தீப்பிடித்தது தெரியவந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தார். இதில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. 
    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை போலீசார் சுட்டுக் கொன்றனர். #Shooting
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு துப்பாக்கி லைசென்சுகள்  வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை போலீசார் சுட்டுக் கொன்றனர்

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், புளோரிடா மாகாணத்தின் பனாமா சிட்டியில் அமைந்துள்ளது அடுக்குமாடி குடியிருப்பு. இந்த குடியிருப்பில் நேற்று காலை கெவின் ஹல்ரய்டு (49), என்ற ஆசாமி தனது கையில் இருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சரமாரியாக சுடத் தொடங்கினான்.

    இதையடுத்து, அப்பகுதியில் சென்றவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். சிலர் எங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடம் வந்த நாங்கள், கெவினை மடக்கிப் பிடிக்க முயன்றோம். அவன் துப்பாக்கி சூட்டை நிறுத்தாததால் சுட்டுக் கொன்றோம். அதற்கு பின்னரே அந்த பகுதியில் சகஜ நிலை திரும்பியது என தெரிவித்துள்ளனர். #Shooting #Tamilnews
    மதுரவாயலில் தனியாருக்கு சொந்தமான 16-வது மாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பூந்தமல்லி:

    மதுரவாயலில் தாம்பரம்-புழல் பைபாஸ் சாலையை ஒட்டி தனியாருக்கு சொந்தமான 16 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்குள்ள 6-வது மாடியில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மகன் சிபிசக்ரவர்த்தி (வயது 18). பிளஸ்-2 முடித்துள்ள இவர், ‘நீட்’ தேர்வு எழுதி உள்ளார்.

    இந்தநிலையில் நேற்று இரவு தனது நண்பர் ஒருவருடன் சிபிசக்ரவர்த்தி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 16-வது மாடிக்கு சென்றார். அப்போது திடீரென கால் தவறி சிபிசக்ரவர்த்தி மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    இதனைக்கண்டதும் அந்த குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த மதுரவாயல் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

    சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிலர் மொட்டை மாடிக்கு சென்று சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனவே மொட்டை மாடிக்கு செல்லும் வழியை குடியிருப்புவாசிகள் பூட்டி வைத்துள்ளனர்.

    ஆனால் உயிரிழந்த சிபிசக்ரவர்த்தி மற்றும் அவரது நண்பர் மொட்டை மாடிக்கு ஜன்னல் வழியாக செல்ல முயன்றுள்ளனர். அப்போது கால் தவறி கீழே விழுந்து சிபிசக்ரவர்த்தி இறந்து போய் இருப்பது தெரியவந்துள்ளது.

    இருவரும் எதற்காக மொட்டை மாடிக்கு சென்றார்கள்? என்பது குறித்து அவரது நண்பரிடம் விசாரித்து வருகிறோம்.

    இவ்வாறு போலீசார் கூறினர். #tamilnews
    ×