என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SUICIDE CASE"

    • அம்னீத் குமார், அரியானா முதலமைச்சர் ஜப்பான் பயண குழுவில் இடம்பெற்று அங்கு சென்றிருந்தார்.
    • அம்னீத் குமார் அளித்துள்ள புகார் காரணமாக அரியானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அரியானா மாநிலத்தில் போலீஸ் ஐ.ஜியாக பணியாற்றி வந்தவர் ஒய். புரன் குமார். ரோதக் சரக ஐ.ஜியாக பணியாற்றிய அவர் சமீபத்தில் போலீஸ் மையத்தின் ஐ.ஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    இதற்கிடையே புரன் குமார் சண்டிகரில் உள்ள வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில் சில உயர் அதிகாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். புரன் குமாரின் மனைவி அம்னீத்குமாரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். அவர் அரியானா அரசில் வெளியுறவு ஒத்துழைப்புத் துறை ஆணையாளர் மற்றும் செயலாளராக உள்ளார்.

    அம்னீத் குமார், அரியானா முதலமைச்சர் ஜப்பான் பயண குழுவில் இடம்பெற்று அங்கு சென்றிருந்தார். கணவர் தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்து அவர் நாடு திரும்பினார்.

    இந்தநிலையில் கணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அரியானா மாநில போலீஸ் டி.ஜி.பி சத்ருஜீத் கபூர் மற்றும் ரோதக் போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர பிஜர்னியா ஆகியோர் மீது அம்னீத்குமார் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

    போலீசில் அம்னீத்குமார் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

    டி.ஜி.பி சத்ருஜீத் கபூர், ரோதக் போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர பிஜர்னியா ஆகியோர் ஜோடிக்கப்பட்ட ஆதாரங்கள் மூலம் எனது கணவரை பொய்யான புகாரில் சிக்க வைக்க சதித்திட்டத்தில் ஈடுபட்ட னர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இது சாதாரண தற்கொலை வழக்கு அல்ல.

    ஒரு பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த நேர்மையான அதிகாரியை சக்திவாய்ந்த மேலதிகாரிகளால் திட்டமிட்டு துன்புறுத்தியதன் நேரடி விளைவு ஆகும். அதிகாரம் மிக்கவர்களின் கொடுமையால் உடைந்து போன எங்களைப் போன்ற குடும்பங்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

    மேலும் அம்னீத்குமார் கூறும்போது, பல ஆண்டு களாக எனது கணவர் அவமானம், துன்புறுத்தலை எதிர்கொண்டார். டி.ஜி.பி கபூரின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு அற்பமான புகாரில் தன்னை பொய்யாக சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டப் படுவதாக எனது கணவர் என்னிடம் தெரிவித்து இருந்தார் என்றார். அம்னீத் குமார் அளித்துள்ள புகார் காரணமாக அரியானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ரிதன்யா மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு சமூக நல அமைப்புகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.
    • ரிதன்யாவின் பெற்றோர் சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அவரது மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு சமூக நல அமைப்புகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.

    அவரது மரணம் தொடர்பாக நாள்தோறும் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனு மீதான விசாரணை கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதில், கவின்குமார் தரப்பில் கால அவகாசம் கேட்டதால் ஜாமின் மீதான விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு நீதிபதி குண சேகரன் ஒத்திவைத்தார்.

    இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    அப்போது, ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • குடும்பத்தலைவிகள் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
    • தற்கொலை சம்பவங்களை தடுக்க உரிய வழிகாட்டுதல்களை வழங்க ஆய்வுக்குழு நியமிக்கப்பட வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சமீப காலமாக தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக குழந்தைகளை கொன்று விட்டு பெற்றோர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

    இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த தகவலின் படி கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் 36 ஆயிரத்து 213 பேர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதில் 21 ஆயிரத்து 476 பேர் ஆண்கள். 5 ஆயிரத்து 585 பேர் பெண்கள். 600 பேர் குழந்தைகள். குடும்ப பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்தவர்களே அதிகம் என்றும், இதில் 60 சதவீதம் பேர் குடும்பத்தலைவிகள் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    தற்கொலை சம்பவங்களை தடுக்க உரிய வழிகாட்டுதல்களை வழங்க ஆய்வுக்குழு நியமிக்கப்பட வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • கடந்த 2012-ம் ஆண்டு டிச.7-ந்தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.

    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து (வயது 22). இவர் கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோவில் பூசாரியாக இருந்து வந்தார்.

    கோவிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக இவருக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 7-ந் தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக கோவில் அறங்காவலராகவும், பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவராகவும் இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுப்படி கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்றபோதே பாண்டி என்பவர் இறந்து விட்டார். மற்ற 6 பேர் மீதான வழக்கு விசாரணை தற்போது திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.ராஜா, மணிமாறன், சிவக்குமார், ஞானம், லோகு, சரவணன் ஆகியோர் நிபந்தனையற்ற ஜாமீன் பெற்று இருப்பதால் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.

    இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டு 196 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 4 தடயங்கள், சாட்சியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அரசு தரப்பின் இறுதி கட்ட வாதத்திற்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஓ.ராஜா உள்பட 6 பேரும் காலையிலேயே கோர்ட்டில் ஆஜராகினர். பழங்குடியின மற்றும் பட்டியலின சிறப்பு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். சாட்சிகள் அளித்த தகவல்கள் ஒருமனதாக இல்லை என்றும், தற்கொலைக்கு தூண்டியதற்கான அடிப்படை முகாந்திரம் இல்லாததால் விடுதலை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

    இந்த வழக்கில் தற்கொலை செய்து கொண்ட நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் மனுதாரராக இருந்த நிலையில் அரசு தரப்பு வக்கீலாக பாப்பு மோகன் வாதாடினார். தீர்ப்புக்கு பின்பு அவர் தெரிவிக்கையில்,

    இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து நாகமுத்துவின் இறப்பிற்கு நீதி கிடைக்க போராடுவோம் என்றார்.

    தீர்ப்பு குறித்து ஓ.ராஜா தெரிவிக்கையில்,

    இந்த வழக்கில் என்மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நீதிமன்றம் மூலம் நான் குற்றமற்றவன் என நிருபிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்தாலும் நான் குற்றம் செய்யவில்லை என நிரூபிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனது மனைவியால் அபினவ் சிங் மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
    • பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் ஒடிசாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

    ஒடியா பாடகர் அபினவ் சிங் (32) பெங்களூரில் அவர் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    அபினவ் சிங் மீது அவரது மனைவி பொய்யான குற்றசாட்டுகளை கூறியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் ஒடிசாவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • அமெரிக்காவில் வசிக்கும் தனது சகோதரர் பரத்துக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு சேத்தன் போன் செய்தார்.
    • சேத்தன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பும் வேலை செய்துவந்தார்.

    கர்நாடக மாநிலம் மைசூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று (திங்கள்கிழமை) காலை மைசூருவில் விஸ்வேஸ்வரய்யா நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

    போலீசாரின் கூற்றுப்படி, இறந்தவர்கள் சேத்தன் (45), அவரது மனைவி ரூபாலி (43), அவர்களது 15 வயது மகன் மற்றும் சேதனின் தாயார் பிரியம்வதா (62) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    சேத்தன் முதலில் மூவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு, பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறுகின்றனர்.

    சேத்தனின் தாயார் பிரியம்வதா குடியிருப்பின் ஒரு வீட்டில் இறந்து கிடந்தனர். அதில் அவர் தனியாக வசித்து வந்தார். மற்ற மூவரும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் வசித்து வந்த மற்றொரு வீட்டில் இறந்து கிடந்தனர்.

    அமெரிக்காவில் வசிக்கும் தனது சகோதரர் பரத்துக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு சேத்தன் போன் செய்து, தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்யபோவதாக கூறியுள்ளார். பரத் உடனடியாக ரூபாலியின் பெற்றோரை அழைத்து சேத்தனின் வீட்க்கு சென்று பார்க்க சொல்லியுள்ளார்.

    ஆனால் ரூபாலியின் பெற்றோர் அங்கு சென்றபோது ஏற்கனவே அவர்கள் உயிரிழந்து கிடந்தனர். காலை 6 மணி அளவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வித்யாரண்யபுரம் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    சேத்தன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பும் வேலை செய்துவந்ததாகவும் நிதி நெருக்கடி காரணமாக அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

    சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட கடித்தத்தில் சேதன் எழுதியதாவது, எனது மரணத்திற்காக எனது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை காவல்துறை துன்புறுத்தக்கூடாது. இதற்கு நானே பொறுப்பு. 

    • இது உங்கள் நாட்டு ஜிடிபியை விட அதிகம் என்று கூறி மாணவர்களை மிரட்டியுள்ளனர்.
    • பல்கலை நிர்வாகம் நேபாள மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.

    ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் செயல்பட்டு வரும் கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT) பல்கலைக்கழகத்தில் நேபாள் நாட்டை சேர்ந்த மாணவர்கள் பலர் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி பிரகிருதி லம்சால் என்ற 20 வயது நேபாளை சேர்ந்த மாணவி பல்கலை. விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கலிங்கா பல்கலையில் அவர் மூன்றாம் ஆண்டு பி.டெக் பயின்று வந்தார்.

    அதே பல்கலையில் பயின்று வந்த லக்னோவை சேர்ந்த ஆத்விக் ஸ்ரீவஸ்தவா(21 வயது) என்பவரால் பிரகிருதி தொடர்ந்து மன ரீதியாக துன்புறுத்தப்பட்டு வந்துள்ளார். இவர் பிரகிருதியின் முன்னாள் காதலர் என்று கூறப்படுகிறது. ஆத்விக்கின் தொடர் தொந்தரவால் மன அழுத்தத்துக்கு ஆளான பிரகிருதி கடந்த மாதமே பல்கலை. மாணவர் மனநல ஆலோசகரிடம் தனது பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார். ஆனால் அதை அவர்கள் அலட்சியம் செய்துள்ளனர்.

    இந்நிலையில் அதீத மன அழுத்தம் காரணமாக பிரகிருதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்ட அதே நாளில் ஆத்விக் ஸ்ரீவஸ்தவா வெளியூருக்குத் தப்பியோட விமான டிக்கெட் எடுத்துள்ளதும் அம்பலமானது.

    இதற்கிடையே பல்கலையில் பயின்று வந்த நேபாள் நாட்டை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகம் இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

    கடந்த ஒரு மாதமாக, வளாகத்தில் ஒழுக்கமின்மை குறித்து புகார் அளித்து வந்தபோதும் யாரும் பதிலளிக்கவில்லை என்று அம்மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போராடும் நேபாள் மாணவர்களை நிர்வாக அதிகாரிகள் தாக்குவதும், அவர்களை மிரட்டும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.

    அதில் பெண் ஆசிரியைகள் நேபாள் மாணவர்களை பார்த்து, "உங்களுக்கு ஆண்டு முழுக்க உணவுகளை இலவசமாகப் போடுகிறோம். அதன் விலை மட்டும் ரூ.40 ஆயிரம். இது உங்கள் நாட்டு ஜிடிபியை விட அதிகம்" என்று கூறி அனைவரையும் உடனடியாக பல்கலையை விட்டு வெளியேறும்படி மிரட்டியுள்ளனர். மேலும் பல்கலையில் நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.

    நிர்வாகம் தங்களை வலுக்கட்டாயமாக வெளிற்றியுள்ளது என்றும் பயணச்சீட்டுகள் இன்றியும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ரெயில் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே உயிரிழந்த மாணவியின் சகோதரர் அழித்த புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் ஆத்விக் ஸ்ரீவஸ்தவாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் நேபாள் பிரதமர் சர்மா ஒலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், பல்கலை நிர்வாகம் நேபாள மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகக் குற்றம் சாட்டி, இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் டெல்லியில் உள்ள நேபாள தூதரகம் இரண்டு அதிகாரிகளை அனுப்பியது என்றும் தெரிவித்துள்ளார்.

    இதனை அடுத்து ஒடிசா பாஜக அரசு தலையிட்டு, மாணவர்களை வெளியே அனுப்பிய KIIT-ஐ அதன் முடிவை மாற்றுமாறு உத்தரவிட்டது. தொடர்ந்து KIIT பல்கலைக்கழகம் நேபாள மாணவர்கள் திரும்பி வருமாறு வலியுறுத்தி ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.    

    • புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகே இரண்டு மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட வழக்கு ஆலங்குடி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது
    • கருப்பையா மீது தற்கொலைக்கு தூண்டுதல் போக்சோ, மோசடி ஆகிய 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாஞ்சன்விடுதி யைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மாரிக்கண்ணு (வயது 40). கூலித்தொழிலாளர்களான இவர்களுக்கு 3 மகன்கள் இருந்தனர்.

    அதில் ஒருவர் அரிமளத்தில் உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். தாயுடன் வசித்து வந்த இருவரும் அரசுப் பள்ளிகளில் முறையே பிளஸ்-2 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    இந்நிலையில், சித்தன்னவாசல் அருகே உள்ள கல்குவாரி பள்ளத்தில் குதித்து மாரிக்கண்ணு மற்றும் அவரது மகள்கள் இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேரும் ஜூலை 3-ந்தேதி தற்கொலை செய்து கொண்டனர்.

    இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில் மாரிக்கண்ணுடன் மாஞ்சன் விடுதியை சேர்ந்த கருப்பையா (36) கூடா நட்பு வைத்திருந்ததோடு அவரிடம் இருந்து 10 பவுன் நகைகள் வாங்கிக்கொண்டு கொடுக்க மறுத்து வந்ததுடன் அவரது மகளுக்கும் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதையடுத்து கருப்பையா மீது தற்கொலைக்கு தூண்டுதல் போக்சோ, மோசடி ஆகிய 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இந்த வழக்கு ஆலங்குடி காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ராமாபுரத்தில் மனைவி-குழந்தைகள் தற்கொலை வழக்கில் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    ராமாபுரம் ராயலா நகர் 1-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தாமரை வயது44 அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார் இவரது மனைவி அபிதா (28).

    இவர்களுக்கு லட்சுமி நாராயணன் (10) ஸ்ரீமகா லட்சுமி (6) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

    கடந்த மாதம் 23-ந்தேதி அபிதா நான் எந்த விதத்திலும் உங்களுக்கு துரோகம் செய்யவில்லை என்று கணவர் செந்தாமரைக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது குழந்தைகள் இருவரையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த தற்கொலை சம்பவத்தில் தீடீர் திருப்பமாக அபிதாவின் தாய் சாந்தா தியாகராய நகர் துணை கமி‌ஷனர் அசோக்குமாரிடம் நேற்று புகார் மனு அளித்தார் அதில் எனது மகள் அபிதா மற்றும் குழந்தைகள் சாவிற்கு கணவர் செந்தாமரை தான் காரணம். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதன்பேரில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்த ராயலா நகர் இன்ஸ்பெக்டர் கவுதமன், செந்தாமரையை கைது செய்தார்.

    கோவை கோர்ட்டில் நடைபெற்று வந்த டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சிபிஐக்கு கால அவகாசம் வழங்கி விசாரணையை வரும் 15-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். #DSPVishnupriya #CBI
    கோவை:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி.யாக பணியாற்றியவர் விஷ்ணுபிரியா. இவர் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி முகாம் அலுவலகத்தில் தூக்கு போட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

    உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் செய்யப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பல கட்ட விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும், இந்த வழக்கை கைவிடுவதாகவும் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கடந்த ஏப்ரல் 16-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்தது.



    சி.பி.ஐ. அறிக்கைக்கு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி எதிர்ப்பு தெரிவித்தார். மீண்டும் வழக்கை விசாரிக்க வலியுறுத்தினார்.

    இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி நடராஜன் வழக்கை விசாரித்தார். அப்போது சி.பி.ஐ. தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. நீதிபதி கால அவகாசம் வழங்கி விசாரணையை வரும் 15-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    மேலும் இந்த வழக்கில் மேலும் அவகாசம் வழங்க முடியாது என்றும் உத்தரவிட்டார். #DSPVishnupriya #CBI

    பொன்னேரி அருகே குடும்பத்தகராறில் காதல் திருமணம் செய்த கணவன் மற்றும் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #suicidecase

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த கேசவபுரத்தை சேர்ந்தவர் ஜெய் வெங்கடேஷ் (வயது 24). லிப்ட் மெக்கானிக். இவரும் வாணியம்பாடியைச் சேர்ந்த தனலட்சுமியும் (20) கடந்த 3 மாதத்துக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பு மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

    நள்ளிரவில் ஜெய் வெங்கடே‌ஷன் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி தனலட்சுமி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று இறந்தார்.

    இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்பட வில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது ஜெய் வெங்கடேசனும், தனலட்சுமியும் தற்கொலை செய்து கிடப்பது தெரிந்தது.

    இது குறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடலையும் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தனலட்சுமி உடல் முழுவதும் மண்ணெணையாக இருந்தது. முதலில் அவர் மண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவு செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. பின்னர் அதனை செய்ய முடியாமல் மாத்திரைகளை தின்று தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது.

    ஜெய் வெங்கடேசனுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இதற்காக அவர்கள் வீட்டில் கேக் வாங்கி வைத்திருந்தனர். காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளம் ஜோடி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #suicidecase

    ×