search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா"

    • தலைநகர் டெல்லியில், அடுத்த 2-3 நாட்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • பீகாரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும்.

    புதுடெல்லி:

    கோடை காலம் உக்கிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.

    மதிய நேரங்களில் அனல் காற்றும் வீசுவதால் குழந்தைகள், முதியோர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து இந்திய வானிலை மைய மூத்த விஞ்ஞானி நரேஷ் குமார் கூறியதாவது:-

    தலைநகர் டெல்லியில், அடுத்த 2-3 நாட்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1-2 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும். மேலும், நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது, கிழக்கு இந்தியா பகுதிகளில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. அடுத்த 4-5 நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.

    வெயில் அதிகரித்து வருவதால் மேற்கு வங்கத்தில் சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டது. ஒடிசாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 44.6 டிகிரி செல்சியசாக பதிவானது, மாநிலத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை அடுத்த 4 நாட்களுக்கு தொடரும். இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மாநிலங்களில் வெப்பநிலை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பீகாரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெப்ப அலைக்கான சாத்தியம் உள்ளது. நாட்டின் தென் மாநிலங்களில் தற்போது வெப்ப அலைக்கான சூழல் இல்லை. மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடாமல் வீட்டில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாடு முழுவதும் அனல் காற்றுடன் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் தெரிவித்தது.
    • வெப்ப நிலை அதிகரித்து வருவதால் ஒடிசாவில் வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன.

    புவனேஸ்வர்:

    தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் அனல் காற்றுடன் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தில் வெப்பம் தொடர்பான நோய்களால் 8 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஒடிசாவின் பொது சுகாதார இயக்குநர் டாக்டர் நிரஞ்சன் மிஸ்ரா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஒடிசாவில் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இந்த வெப்பம் தொடர்பாக வெப்பச் சோர்வு, உஷ்ணப் பிடிப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.

    இதுகுறித்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளோம்.

    அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவர்களுக்கான பயிற்சியை சமீபத்தில் நடத்தியுள்ளோம் என தெரிவித்தார்.

    • ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தலைமையில் நவீன் பட்நாயக் முதல் மந்திரியாக பதவி வகித்துவருகிறார்.
    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அங்கு தனித்துப் போட்டியிடுகிறது.

    புவனேஸ்வரம்:

    ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. நவீன் பட்நாயக் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    இதற்கிடையே, மத்தியில் மீண்டும் பா.ஜ.க. அரசு அமையும். பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பார். பிஜு ஜனதா தள கட்சியின் ஆதரவு இல்லாமலேயே பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைக்கும் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகள் மற்றும் சட்டசபை தேர்தலில் 147 தொகுதிகளிலும் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் மன்மோகன் சமல் தெரிவித்துள்ளார்.

    • 2009-ம் ஆண்டுக்குப் பிறகு நவீன் பட்நாயக் பா.ஜனதா உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார்.
    • 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல் வெளியானது.

    ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. 21 தொகுதிகளை கொண்ட மக்களவைக்கும், 147 இடங்களை கொண்ட சட்டமன்றத்திற்கும் ஒன்றாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

    2009-க்கு பிறகு நவீன் பட்நாயக் பா.ஜனதாவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

    இரு கட்சி தலைவர்களும் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். டெல்லியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் கூட்டணி முடிவாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையில் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது. இதனால் பா.ஜனதா தனித்து போட்டியிட தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    147 சட்டமன்ற இடங்களில் 100 இடங்களுக்கு மேல் பிஜு ஜனதா தளம் போட்டியிட விரும்புகிறது. ஆனால் பா.ஜனதா அதிக இடம் கேட்கிறது.

    அதேவேளையில் 21 மக்களவை இடங்களில் 14-ல் பா.ஜனதா போட்டியிட விரும்புகிறது. பா.ஜனதாவின் இந்த கோரிக்கையை ஏற்க பிஜு ஜனதா தளம் மறுத்துவிட்டது.

    மூன்று நாட்கள் பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுடன் ஒடிசா மாநில பா.ஜனதா தலைவர் சமால் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதன்பின் அவர் கூறுகையில் "கூட்டணி குறித்து பேசவில்லை. ஒடிசா தேர்தலில் பா.ஜனதா தனித்து களம் இறங்க போகிறது. டெல்லியில் வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றம் தேர்தலுக்கான எங்களுடைய தயார் நிலை குறித்து ஆலோசனை நடத்தினோம். தொகுதி பங்கீடு குறித்து ஏதும் பேசவில்லை. எங்களுடைய பலத்துடன் தனியாக நிற்போம்" என்றார்.

    கடந்த மக்களவை தேர்தலில் பிஜு ஜனதா தளம் 12 இடங்களிலும், பா.ஜனதா 8 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

    • புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
    • பிரதமர் மோடி அசாம் செல்கிறார்.

    புவனேஸ்வர்:

    பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று ஒடிசா சென்றார். அங்கு அவர் ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெறும் விழாவில் ரூ.68,400 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அதன் பின்னர் பிரதமர் மோடி அசாம் செல்கிறார்.


    • சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புதிய திட்டத்தை ஒடிசா அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
    • டிரைவர்களிடையே தூக்கம், சோர்வு அதிகரிக்கும்போது டீ இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    புவனேஷ்வர்:

    ஒடிசாவில் இரவு நேரங்களில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

    இதற்கிடையே, சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புதிய திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் நெடுஞ்சாலை விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக இரவு நேர டிரைவர்களுக்கு இலவச டீ வழங்கும் திட்டத்தை அம்மாநில போக்குவரத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

    இன்று முதல் அமலுக்கு வரும் இத்திட்டம் ஜனவரி 7-ம் தேதி வரை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் டிரைவர்களுக்கு இலவச டீ வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் டிரைவர்களிடையே தூக்கம் அல்லது சோர்வு அதிகரிக்கையில் இலவசமாக டீ வழங்கப்பட உள்ளது.

    • பாரம்பரிய உடையணிந்து, மண் விளக்குகளில் தீபம் ஏற்றி சிறப்பு நடனம் ஆடுவர்.
    • நகரத்தை அலங்கரிக்கும் பிரகாசமான விளக்குகள் இடம்பெறும்.

    மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற கிழக்கு மாநிலங்களில், 'துர்க்கா பூஜை' என்ற பெயரில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. எருமைத் தலை கொண்ட மகிஷாசுரனை, துர்க்கா தேவி வதம் செய்து வெற்றி கொண்ட தினமான விஜயதசமி, மேற்குவங்காள மக்களின் முக்கியமான திருவிழாவாகும்.

    விநாயகர் சதுர்த்தியைப் போன்று. இந்த விழாவின் போது, மேற்கு வங்காளத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு, அதன்கீழ், துர்க்கை அம்மனின் சிலைகள் நிறுவப்படும். நவராத்திரி விழாக்களின் போது மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு மாநில மக்கள். பாரம்பரிய உடையணிந்து, மாலை நேரத்தில் மண் விளக்குகளில் தீபம் ஏற்றி சிறப்பு நடனம் ஆடுவார்கள்.

    இந்த நவராத்திரி நாட்களில் வண்ணமயமான கலாசார நிகழ்வுகள் நகரத்தை அலங்கரிக்கும் பிரகாசமான விளக்குகள் இடம்பெறும். பத்தாம் நாளில், நவராத்திரி கொலு வைக்கப்பட்ட துர்க்கை சிலைகள் அனைத்தும் பல்வேறு பகுதிகளிலும் ஊர்வலமாகக் கொண்டு சென்று, பின்னர் அதனை கடலில் கரைப்பார்கள்.

    • 13-ஆம் நூற்றாண்டில் ஒன்றாம் நரசிம்மதேவ அரசரால் இந்த சக்கரம் உருவாக்கப்பட்டது
    • இந்தியாவின் மூவர்ணக்கொடியின் மத்தியிலும் இச்சக்கரம் இடம்பெற்றுள்ளது

    உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுடன் இந்தியா உட்பட 19 உலக நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உருவாக்கிய ஒரு பன்னாட்டு நாடுகளின் கூட்டமைப்பு ஜி20.

    இக்கூட்டமைப்பின் தலைமை இம்முறை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதால், இதன் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இம்மாநாடு நாளை வரை நடைபெற இருக்கிறது.

    இதில் பங்கேற்க இக்கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகளை சேர்ந்த பெரும்பாலான உலக தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தந்துள்ளனர். அவர்களை வரவேற்கும் விதமாக அம்மையத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய முறைப்படி கைகளை கூப்பி வரவேற்றார்.

    பிரதமர் மோடி நின்று வரவேற்ற இடத்திற்கு பின்னால் ஒடிசா மாநில பூரி நகரில் உள்ள புகழ்பெற்ற சூரிய பகவான் கோவிலிலிருக்கும் கொனார்க் சக்கரத்தின் பிரதி அமைக்கப்பட்டிருந்தது.

    இந்தியாவில் 13-ஆம் நூற்றாண்டில் ஒன்றாம் நரசிம்மதேவன் மன்னரால் இந்த சக்கரம் உருவாக்கப்பட்டது.

    ஒடிசாவின் சூரியபகவான் கோவிலில் உள்ள இச்சக்கரம், பண்டைய இந்தியர்களின் அறிவாற்றலையும், முன்னேறிய நாகரிக வளர்ச்சியையும், கட்டிட மற்றும் சிற்பக் கலைகளில் அவர்களுக்கிருந்த நுண்ணறிவையும் பறைசாற்றும் விதமாக இருப்பதாக உலகம் முழுவதும் புகழ் பெற்றது.

    வளர்ச்சியயும் முன்னேற்றத்தையும் குறிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட இச்சக்கரத்தில் உள்ள 24 ஆரக்கால்கள் (spokes) ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தை குறிக்கும்.

    ஜனநாயகத்தின் அடிப்படை சித்தாந்தங்களையும், சமூக முன்னேறத்திற்கான உறுதியான நோக்கத்தையும் இந்த சக்கரம் பிரதிபலிக்கிறது என்பதும் இந்திய தேசிய கொடியாகிய மூவர்ணக்கொடியின் மத்தியிலும் இச்சக்கரத்தின் பிரதி இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒடிசாவின் 6 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.
    • அடுத்த நான்கு நாட்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு.

    ஒடிசாவின் இரட்டை நகரங்களான புவனேஸ்வர் மற்றும் கட்டாக் உட்பட ஒடிசாவின் கடலோரப் பகுதியில் மின்னல் தாக்குதலுடன் கனமழை பெய்துள்ளது. மதியம் 90 நிமிட இடைவெளியில் முறையே 126 மிமீ மற்றும் 95.8 மிமீ மழை பதிவாகியுள்ளது.

    இந்நிலையில், ஒடிசாவின் 6 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்ததில் மின்னல் தாக்கியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதில், குர்தா மாவட்டத்தில் 4 பேரும், போலங்கிரில் 2 பேரும், அங்குல், பௌத், ஜகத்சிங்பூர் மற்றும் தேன்கனல் ஆகிய இடங்களில் தலா ஒருவர் உயிரிழந்ததாக சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதைத்தவிர, குர்தாவில் 3 பேர் மின்னல் தாக்கியதில் காயமடைந்தனர்.

    அடுத்த நான்கு நாட்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    • இறந்த மதுஸ்மிதாவின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் மோகன் மற்றும் நரேந்திரனை பிடித்து சரமாரியாக தாக்கினர்.
    • இறந்த இளம்பெண் மதுஸ்மிதாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப்பதிவு.

    ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள படாசாஹி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஜாமுன் பந்தாசாஹி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகன மேடையில் பாதி எரிந்து முடிந்த உடலை தின்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மயூர்பஞ்ச் மாவட்டம் தந்துனி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் மோகன் சிங் (58) மற்றும் நரேந்திர சிங் (25) ஆகியோர் குடிபோதையில் சுடுகாட்டிற்கு சென்று அங்கு தகன மேடையில் பாதி எரிந்த நிலையில் கிடந்த உடலின் சதையை சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த செவ்வாய்கிழமை காலை பிஆர்எம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இறந்த 25 வயதான மதுஸ்மிதா சிங் என்ற இளம்பெண்ணின் உடல் பந்தாசாஹி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. சடலம் எரியூட்டப்பட்ட சில நிமிடங்களில் நரேந்திர சிங் மற்றும் மோகன் சிங் சடலத்தை பீய்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

    இவர்களின் செயலால் அதிர்ச்சியடைந்த இறந்த மதுஸ்மிதாவின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் மோகன் மற்றும் நரேந்திரனை பிடித்து சரமாரியாக தாக்கினர். இருவரையும் மின்கம்பத்தில் கட்டி வைத்துவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த படாசாஹி போலீசார், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர், இறந்த இளம்பெண் மதுஸ்மிதாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் பின்னர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இருவரிடமும் போலீசார் விசாரித்ததில், திருமணமாகாத பெண்ணின் இறைச்சியை உட்கொள்வது தங்களுக்கு சக்தியைத் தரும் என்றும் அதனால் சடலத்தை சாப்பிட்டதாகவும் மோகன் சிங் மற்றும் நரேந்திர சிங் கூறினர். போதையில் இருவரும் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    • பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி 3 ரெயில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 289 பேர் பலியாகினர்.
    • பிரகாஷ் ராம் என்ற சிறுவன் ரெயில் விபத்தில் படுகாயம் அடைந்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    பாலசோர்:

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி 3 ரெயில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 289 பேர் பலியாகினர். இந்த விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    பீகாரை சேர்ந்த பிரகாஷ் ராம் என்ற 17 வயது சிறுவன் இந்த ரெயில் விபத்தில் படுகாயம் அடைந்து, பாலசோர் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து பலி 290 ஆக உயர்ந்தது.

    • நாட்டையே உலுக்கிய கோர விபத்தில் 288 பேர் பலியாகினர்.
    • ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாவட்டம் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந் தேதி 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து நேரிட்டது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 288 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்த ரெயில் விபத்தில் பலத்த காயமடைந்து, பகனகா பஜார் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பீகாரை சேர்ந்த பிஜய் பஸ்வான் என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 289 ஆக அதிகரித்துள்ளது.

    ×