என் மலர்
நீங்கள் தேடியது "சிறுமி பாலியல் வன்கொடுமை"
- செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
- வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாஷிவந்தை விடுவித்தனர்.
போரூர் அருகே கடந்த 2017-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன் உடலை எரித்த வழக்கில் தஷ்வந்தை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் தன் தாயை அதே ஆண்டு கொலை செய்து தப்பித்ததாக குற்றம்சாட்டிய போலீசார் மும்பையில் வைத்து தஷ்வந்த்தை கைது செய்தனர்.
இதையடுத்து சிறுமி கொலை வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
தொடர்ந்து கடந்த மாதம், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தஷ்வந்த் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறிய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டது.
வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிறுமி வன்கொடுமை வழக்கில் இருந்து தஷ்வந்த் விடுதலை செய்த தீர்ப்பை று ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்து வரை விடுவித்த தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரிய மனுவை, தீர்ப்பு வழங்கிய நீதிபதி விக்ரம்நாத் நாளை மறுநாள் விசாரிக்க உள்ளார்.
- சாலையோரத்தில் பாட்டியுடன் சிறுமி உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.
- கால்வாயில் சிறுமி ஆடைகளின்றி நிர்வாண நிலையில் ரத்தக் காயங்களுடன் கிடந்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று அதிகாலை,மேற்கு வங்கத்தின் தாராகேஷ்வரர் ரெயில் நிலையத்தின் அருகே சாலையோரத்தில் கொசு வலைக்குள் பாட்டியுடன் சிறுமி உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் வலையை அறுத்து சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து அருகில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியைக் காணவில்லை என அருகிலிருந்தவர்கள் தேடியுள்ளனர். அப்போது அருகேயிருந்த வாய்க்காலில் இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டுள்ளது.
அங்கு சென்று பார்த்தபோது சிறுமி ஆடைகளின்றி நிர்வாண நிலையில் ரத்தக் காயங்களுடன் கிடந்துள்ளார். சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்தது.
சிறுமியின் கன்னத்தில் கடித்த காயங்கள் காணப்பட்டது. ரத்தப் போக்கு தொடர்ந்த நிலையில் சிறுமி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போக்ஸோ வழக்குப்பதிந்த போலீசார் குற்றவாளியை தேடி வந்த நிலையில் சிறுமியின் தாத்தாவை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் வலிமையான ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்திருக்க வேண்டும்.
- குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள்.
சென்னை:
போரூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கில் இருந்து விடுதலை செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு அன்புமணி கண்டம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் என்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மனித மிருகங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் நாம் எந்த அளவுக்கு வலிமையற்று இருக்கிறோம் என்பதற்கு இந்த வழக்கு வேதனையான எடுத்துக்காட்டு ஆகும்.
வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன், தடயங்களை அழிக்கும் நோக்குடன் சிறுமியின் உடலையும் எரித்ததாக அதேபகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற மென்பொருள் பொறியாளர் கைது செய்யப்பட்டார். அடுத்த சில மாதங்களில் இந்த வழக்கில் பிணையில் வந்த தஷ்வந்த் தமது தாயையும் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் மும்பையில் கைது செய்யப்பட்ட அவருக்கு குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனையும், மொத்தமாக 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் செங்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட காணொலி மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் போதுமானவை அல்ல, டி.என்.ஏ சோதனை முடிவுகள் ஒத்துப்போகவில்லை என்று கூறி அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. தமிழ்நாட்டின் குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள்!
தாயை கொலை செய்த வழக்கிலும் பிறழ்சாட்சியத்தை பயன்படுத்தி கடந்த மாதம் தஷ்வந்த் விடுதலையான நிலையில், இப்போது இந்த வழக்கிலிருந்தும் விடுதலையாகியுள்ளார். இந்த வழக்கில் தஷ்வந்த் தவறு செய்யவில்லை என்றால் ஹாசினியை கொலை செய்தது யார்? என்ற வினா எழுகிறது. இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே விசாரணை சரியாக நடைபெறவில்லை. 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் தஷ்வந்துக்கு பிணை கிடைத்தது. அப்போதிலிருந்தே இந்த வழக்கு தடம் மாறத் தொடங்கி விட்டது.
தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் வலிமையான ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்திருக்க வேண்டும். டி.என்.ஏ ஆய்வு முடிவுகள் கூட ஒத்துப்போகும் வகையில் இல்லாததால் தான் தண்டிக்கப்பட்ட குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள். அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மனித மிருகத்துக்குக் கூட தண்டனை பெற்றுத்தர முடியவில்லை என்றால் நமது சட்ட செயலாக்க அமைப்பும், வழக்கு நடத்துவதற்கான கட்டமைப்பும் எந்த அளவுக்கு பலவீனமாக உள்ளன என்பதை புரிந்து கொள்ளலாம். இதற்காக அரசும், காவல்துறையும் தலைகுனிய வேண்டும்.
இனிவரும் காலங்களிலாவது இது போன்ற கொடிய வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மறுஆய்வு மனுவை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
- மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
- வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
போரூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கில் இருந்தும் விடுதலை செய்தும் உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன் உடலை எரித்த வழக்கில் தஷ்வந்தை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் தன் தாயை அதே ஆண்டு கொலை செய்து தப்பித்ததாக குற்றம்சாட்டிய போலீசார் மும்பையில் வைத்து தஷ்வந்த்தை கைது செய்தனர்.
இதையடுத்து சிறுமி கொலை வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தஷ்வந்த் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறிய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டுள்ளது. வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்த அவரது தந்தை, இறுதியாகச் சிறுமி நடந்தவற்றை சொன்னபோது அதிர்ச்சியில் உரைந்தார்.
- வெளியே சொன்னால் தேர்வில் தோல்வியடையச் செய்வேன், உன் குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பேன்
உத்தரப் பிரதேசத்தில் 8 ஆம் வகுப்பு மாணவியை பள்ளி மேலாளர் தொடர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தியோரியா மாவட்டத்தில் சதார் கோட்வாலி பகுதியை சேர்ந்த அந்த சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியொன்றில் பயின்று வந்தார்.
அண்மை காலமாக சிறுமி பள்ளியிலும் வீட்டிலும் விநோதமாக நடந்துகொண்டிருக்கிறார். என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்த அவரது தந்தை, இறுதியாகச் சிறுமி நடந்தவற்றை சொன்னபோது அதிர்ச்சியில் உரைந்தார்.
பள்ளி மேலாளர் தேவேந்திர குஷ்வாஹா தன்னை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்து, கதவைப் பூட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், வெளியே சொன்னால் தேர்வில் தோல்வியடையச் செய்வேன், உன் குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பேன் என்று மிரட்டியதாகவும் சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். மேலும் பல மாதங்களாக இந்த துன்புறுத்தல் தொடர்ந்தது என்று சிறுமி நடுக்கத்துடன் கூறியுள்ளார்.
சிறுமியின் தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறை பள்ளி மேலாளர் தேவேந்திர குஷ்வாஹாவை கைது செய்து விசாரித்து வருகிறது. அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- அவர் சிவபெருமான் வேடமணிந்ததிருந்தபோது பிடிபட்டார்.
- தன்னை பாபாவாகவும் சிவ பாக்தராகவும் காட்டிக்கொண்டு பெண்கள் மற்றும் சிறுமிகளை தன்வசம் ஈர்த்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் தீபக் சைனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சிவபெருமான் வேடமணிந்ததிருந்தபோது பிடிபட்டார்.
தீபக் சைனி தன்னை பாபாவாகவும் சிவ பாக்தராகவும் காட்டிக்கொண்டு பெண்கள் மற்றும் சிறுமிகளை தன்வசம் ஈர்த்துள்ளார்.
அவ்வாறு, ஒரு சிறுமியின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக உறுதியளித்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- மதியம் வீட்டிலிருந்து சிறுமி காணாமல் போனாள்.
- அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பந்திகுய் பகுதியில், 7 வயது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டிலிருந்து காணாமல் போன அந்த சிறுமி, மாலை நேரத்தில் வீட்டிற்கு சற்று தள்ளி தனியாக அமர்ந்திருந்த சிறுமியை பெற்றோர் கண்டுபிடித்தனர்.
வீட்டிற்கு அழைத்து வந்தபோது, வலி தாங்க முடியாமல் நடுங்கிக்கொண்டிருந்ததைக் கண்டு, சிறுமியை உடனடியாக பந்திகுய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர்.
இதன் பின் தனது மகள் பாலியல் அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர்.செய்யப்பட்டதாக சிறுமியின் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமிக்கு பேசவோ கேட்கவோ முடியாது என்பதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குற்றவாளியைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- குற்றவாளியிடம் 18 மணி நேரத்திற்கு மேலாக கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
- கைதான வாலிபர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச்சேர்ந்த 8 வயது பள்ளி சிறுமி, கடநத 12-ஆம் தேதி வடமாநில வாலிபர் ஒருவரால் பாலியியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ஆரம்பாக்கம் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து 20-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். அந்த வடமாநில வாலிபர் குறித்து கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி மற்றும் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டு தேடிவந்தனர். அந்த நபர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அசாம் மாநிலத்தை சேர்ந்த கமல் பகதூர் பிஸ்வாகர்மா என்கிற ராஜீ பிஸ்வாகர்மா (வயது35) என்ற வாலிபரை கடந்த 25-ந்தேதி ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடைபெற்று 14 நாட்களுக்கு பிறகு பிடிபட்ட குற்றவாளியிடம் 18 மணி நேரத்திற்கு மேலாக கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் 26-ந்தேதி- திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதி முன்னிலையில் போலீசார் ராஜீ பிஸ்வாகர்மாவை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி உமாமகேஸ்வரி, 15-நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாநில வாலிபர் ராஜீ பிஸ்வாகர்மாவை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த ஆரம்பாக்கம் போலீசார் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி உமாமகேஸ்வரியிடம் மனு தாக்கல் செய்த நிலையில், ஆகஸ்ட் 2-ந்தேதி வரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
இந்நிலையில் போலீஸ் காவலில் உள்ள ராஜீ பிஸ்வாகர்மாவை சம்பவ இடமான மாந்தோப்பிற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
- மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
- நீதிமன்ற காவலில் அடைக்க பூவிருந்தவல்லி போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில வாலிபர் ராஜு விஸ்வகர்மா என்ற நபரை 15 தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் வடமாநில வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதைதொடர்ந்து, ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று பொதுமக்கள் குவிந்ததால் கைதான வாலிபரை போலீசார் நேற்று கவரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு விடிய விடிய அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அவனிடம் விசாரணை நடத்தி முடித்த நிலையில் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு அந்த வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ராஜு விஸ்வகர்மாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க பூவிருந்தவல்லி போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஓடும் காரில் மர்ம நபர்கள் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்தனர்.
- சண்டிகரில் உள்ள ஒரு ஒதுக்குபுறமான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் மொகாலி ஜிராஜ்பூரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் 16 வயது சிறுமி வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் வேலை முடிந்து சண்டிகர்- அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மால் அருகே ஆட்டோவுக்காக காத்து இருந்தார்.
அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக காருக்குள் ஏற்றி கடத்தி சென்றனர். பின்னர் ஓடும் காரில் மர்ம நபர்கள் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்தனர்.
பின்னர், சண்டிகரில் உள்ள ஒரு ஒதுக்குபுறமான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் கடத்தப்பட்ட இடத்திலேயே அந்த சிறுமியை விட்டு சென்றனர்.
இது குறித்து சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- வாலிபர் ஓட்டலில் வேலை பார்த்தபோது சனிக்கிழமை தோறும் விடுமுறை எடுத்து வந்துள்ளான்.
- கைதான வாலிபரிடம் இன்று 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில வாலிபரை 15 தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் வடமாநில வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அந்த வாலிபரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர் சூலூர்பேட்டையில் உள்ள ஒரு தாபா ஓட்டலில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.
அந்த வாலிபர் ஓட்டலில் வேலை பார்த்தபோது சனிக்கிழமை தோறும் விடுமுறை எடுத்து வந்துள்ளான். கடந்த 12-ந்தேதி சனிக்கிழமையும் விடுமுறை எடுத்துவிட்டு சூலூர்பேட்டையில் இருந்து மின்சார ரெயிலில் ஏறி ஆரம்பாக்கம் வந்துள்ளான். அப்போது அவர் கஞ்சா போதையில் இருந்துள்ளான்.
அந்த நேரத்தில் தான் அவன் சிறுமியை பின்தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளான். மேலும் அவன், கஞ்சா போதையில் ஆரம்பாக்கம், அக்கம்மா பேட்டை, தடா பகுதிகளில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று பொதுமக்கள் குவிந்ததால் கைதான வாலிபரை போலீசார் நேற்று கவரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு விடிய விடிய அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். கும்மிடிப்பூண்டி போலீஸ் டி.எஸ்.பி. ஜெயஸ்ரீ, ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. சாந்தி, திருவள்ளூர் டி.எஸ்.பி. தமிழரசி, திருத்தணி டி.எஸ்.பி. கந்தசாமி ஆகியோர் இன்று காலை கவரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அவர்கள் கைதான வாலிபரிடம் இன்று 2-வது நாளாக விசாரணை நடத்தினார்கள்.
அவனிடம் விசாரணை நடத்தி முடித்த நிலையில் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்தனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு அந்த வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து அவனை வேனில் ஏற்றி மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.
மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லும்போது அந்த வாலிபரை பார்ப்பதற்காக கவரப்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் வாலிபரை தாக்கலாம் என்று கருதி பொதுமக்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அதன் பிறகே வட மாநில வாலிபரை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாபா ஓட்டல் உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவருடைய புகைப்படத்தையோ, பெயர் உள்ளிட்ட விவரங்களையோ போலீசார் வெளியிடவில்லை. வழக்கு விசாரணை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பெயர் மற்றும் விவரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அந்த வாலிபரின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்கள் மூலம் பரவி வருகிறது. அது அந்த வாலிபர்தானா என்பதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் இன்று ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் வந்து போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் அங்கு இன்று காலையிலேயே 150-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தாரா ஷிவ் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக லந்தூர் மாவட்டத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் விடுதி ஊழியர் ஒருவர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். இதனைத் தொடர்ந்து விடுதி உரிமையாளர் மற்றும் கண்காணிப்பாளர், ஊழியர் ஒருவரும் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்தனர்.
இதுகுறித்து சிறுமி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். சிறுமி எழுதிய கடிதங்களை விடுதி நிர்வாகிகள் கிழித்து எறிந்தனர்.
சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுமியை சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆஸ்பத்திரியில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர்.
சிறுமி தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி உரிமையாளர் ரவி பாபட்லா, கண்காணிப்பாளர் ரச்சனா பாபட்லா, ஊழியர்கள் அமித் மகாமுனி மற்றும் பூஜா வாக்மாரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.






