என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "POCSO"
- இந்நிலையில் சம்பவத்தன்று மாணவியின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டனர்.
- இதுகுறித்து மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி தியாகதுருகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மாணவியின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டனர். இதனை அறிந்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் ஆனந்தபாபு (29) மாணவியின் வீட்டிற்குள் சென்று மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி ஆனந்தபாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அருகே உள்ள வாக்கூர் பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியர் கருணாகரனை விழுப்புரம் மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கவுசர், ஆசிரியர் கருணாகரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.அப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு நேற்று சென்றனர். ஆசிரியர் கருணாகரன் மிகவும் நல்லவர். ஆசிரியர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டினால் அவர் மீது பொய்ப்புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவர் மீதான வழக்கை நீக்க வேண்டும். அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். அவரை மீண்டும் இதே பள்ளியில் ஆசிரியராக நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இதனை செய்யவில்லை என்றால், எங்கள் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை கொடுங்கள். நாங்கள் வேறு பள்ளியில் அவர்களை சேர்த்துக் கொள்கிறோம் என வலியுறுத்தினர்.இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு சென்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கவுசர், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததின் பேரில் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்நிலையில் வாக்கூர் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். அவர்களுடன் அதே பள்ளியில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகளும் வந்திருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.அங்கு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து 10 பெற்றோர், 5 மாணவிகளை கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். மற்றவர்களை வெளியில் இருக்கும்படி போலீசார் கூறினர்.அதன்படி 10 பெற்றோர், 5 மாணவிகளையும் உள்ளே அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வழக்கத்தை விட கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கூர் பள்ளியில் பயிலும் 157 மாணவர்களில் 6 பேர் மட்டுமே இன்று பள்ளிக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- ஒரு சிறுமி குறுத்து அவதூறாக வீடியோ தயாரித்து வாட்ஸப் , பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.
- இதை தொடர்ந்து நவநீதகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உத்திரகுடி கிராமம் காலனி தெருவை சேர்ந்த தர்மலிங்கம் மகன் நவநீத கிருஷ்ணன்(வயது 20). இவர் ஒரு சிறுமி குறுத்து அவதூறாக வீடியோ தயாரித்து வாட்ஸப் , பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி சிறுமியின் குடும்பத்தார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை செய்ததில் நவநீத கிருஷ்ணன் சிறுமிக்கு பல்வேறு வகையில் இடையூறு செய்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து நவநீதகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
- சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர்.
கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் பீகார் மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்த தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது 5 வயது பெண் குழந்தை கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி காணாமால் போனார். இது தொடர்பாக அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் போலீசார் சிறுமியைத் தேடிவந்த நிலையில், அடுத்த நாள் (ஜூலை 28-ந்தேதி) ஆலுவாவில் உள்ள உள்ளூர் மார்கெட் அருகே சதுப்பு நிலப் பகுதியில் ஒரு சாக்குப்பையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்படி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அசாஃபக் அலாம் (29) என்பவரைக் கைது செய்த கேரள போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் அசாஃபக் அலாம்.
இதனைத்தொடர்ந்து போக்சோ நீதிமன்றம் விசாரணை நடத்தி, கடந்த 4-ந்தேதி அசாஃபக் அலாம் குற்றவாளி என அறிவித்தது. தண்டனை வருகிற 14-ந்தேதி (இன்று) அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தது. அதன்படி இன்று மரண தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
இன்று குழந்தைகள் தினம். அதேபோல் போக்சா சட்டம் அறிமுகம் ஆகிய 11-வது ஆண்டாகும். இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய தினத்தில் சிறுமியை கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- காட்வின் மைக்கேல் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
- தலைமறைவாக உள்ள டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை:
கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு பாலாஜி கார்டனை சேர்ந்த டிரைவர் காட்வின் மைக்கேல் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர். ஆனால் காட்வின் மைக்கேல் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்று மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
கடந்த 1-ந் தேதி மாணவியின் வீட்டிற்கு சென்ற அவர் மாணவியை கட்டாயப்படுத்தி ஊட்டிக்கு அழைத்து சென்றார். காட்வின் மைக்கேலும், மாணவியும் சேர்ந்து சென்றபோது மாணவியின் உறவினர் ஒருவர் பார்த்துவிட்டார். அவர் 2 பேரையும் கண்டித்து போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தி விடுவதாக கூறி எச்சரித்தார்.
இதனால் பயந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து காட்வின் மைக்கேல் அங்கு இருந்து தப்பிச் சென்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை உறவினர்கள் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து பெரிய நாயக்கன் பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் பிளஸ்-1 மாணவியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய டிரைவர் காட்வின் மைக்கேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 12 வயது மகள் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
- இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென வயிறு பெரிதானது. பெற்றோர் அவரிடம் கேட்டபோது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 12 வயது மகள் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் என்ற முதியவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் உன் பெற்றோரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென வயிறு பெரிதானது. பெற்றோர் அவரிடம் கேட்டபோது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, அருகில் வசிக்கும் முருகேசன் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும், இதை வெளியே சொன்னால் உன் அப்பா, அம்மாவை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து முருகேசனை (52) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜ மாணிக்கத்தை கைது செய்தனர்.
காடையாம்பட்டி:
திருச்சி மாவட்டம் மணப்பாறை பொன்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (50).
இவர் தீவட்டிப்பட்டி அடுத்த நடுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் காடையாம்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் டியூஷன் நடத்தி வருகிறார்.
இவரிடம் காடையாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவிகள் டியூஷன் பயின்று வருகின்றனர். இதில் 2 மாணவிகளை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசிரியர் ராஜமாணிக்கம் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜ மாணிக்கத்தை கைது செய்தனர்.
- படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- கைதான கோபால் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரி:
பழவேற்காடு அடுத்த அரங்கம் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (38). இவர்அதே பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் 3 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தார்.
இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோபாலை சுற்றிவளைத்து பிடித்து கயிற்றால் கட்டினர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கோபாலை மீட்டு கைது செய்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைதான கோபால் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுக்கோட்டை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்
- கைது செய்யப்பட்ட தொழிலாளி மீது பட்டுக்கோட்டை அருகே நடந்த கொலை சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 34 வயது தொழிலாளிக்கு 14 வயதில் மகள் உள்ளார். இவர் அரசு பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்தநிலையில் அந்த தொழிலாளி தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் இதனை வேறு யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.இதனால் வேதனை அடைந்த சிறுமி நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த தொழிலாளியை கைது செய்தார்.பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட தொழிலாளி மீது பட்டுக்கோட்டை அருகே நடந்த கொலை சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.