என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "POCSO"

    • தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
    • விசாரணை நடவடிக்கைகள் தொடங்கவிருந்த நிலையில் எடியூரப்பா உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

    கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நவம்பர் 13 அன்று கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடியூரப்பா தனது வீட்டில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக சதாசிவ நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பின்னர் அதை சிஐடியிடம் ஒப்படைத்தனர்.

    சிஐடி போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, விசாரணை நடவடிக்கைகள் தொடங்கவிருந்த நிலையில் எடியூரப்பா உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

    இருப்பினும், உயர் நீதிமன்றம் நடவடிக்கைகளை ரத்து செய்ய மறுத்ததால், அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இந்த சூழலில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்து எடியூரப்பாவுக்கு சத்தமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

    • காவல்துறை இந்த புகாரை விசாரித்து முடித்து வைத்தது.
    • மாநில மகளிர் உரிமை ஆணையம் காவல் கண்காணிப்பாளரிடம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை கோரியுள்ளது.

    இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண், தன்னை சிறுவயதில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாஜக எம்எல்ஏ ஹன்ஸ் ராஜ் மீது புகார் அளித்த நிலையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக உள்ள ஹன்ஸ்ராஜ் இமாச்சலப் பிரதேச சட்டசபையின் முன்னாள் துணை சபாநாயகரும் ஆவார்.

    ஹன்ஸ்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த ஆண்டு தன்னை சிறு வயதில் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகார் அளித்தார். காவல்துறை இந்த புகாரை விசாரித்து முடித்து வைத்தது.

    இந்நிலையில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட அப்பெண், எம்எல்ஏ தனது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுப்பதாகவும் மீண்டும் புகார் அளிக்காமல் இருக்கும்படியும் அழுத்தம் கொடுப்பதாக குற்றம் சாட்டினார்.

    இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் எம்எல்ஏவின் தனிப்பட்ட உதவியாளர் மற்றும் நெருங்கிய கூட்டாளி மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் எம்எல்ஏ ஹன்ஸ் ராஜ் மீதே போக்ஸோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    எம்எல்ஏ ஹன்ஸ் ராஜ் இந்த குற்றச்சாட்டுகளை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த பெண் அப்பகுதியில் மத நல்லிணக்கத்தைக் கெடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    மாநில மகளிர் உரிமை ஆணையம் காவல் கண்காணிப்பாளரிடம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை கோரியுள்ளது.  

    • சாலையோரத்தில் பாட்டியுடன் சிறுமி உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.
    • கால்வாயில் சிறுமி ஆடைகளின்றி நிர்வாண நிலையில் ரத்தக் காயங்களுடன் கிடந்துள்ளார்.

    மேற்கு வங்கத்தில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று அதிகாலை,மேற்கு வங்கத்தின் தாராகேஷ்வரர் ரெயில் நிலையத்தின் அருகே சாலையோரத்தில் கொசு வலைக்குள் பாட்டியுடன் சிறுமி உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் வலையை அறுத்து சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.

    சிறிது நேரம் கழித்து அருகில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியைக் காணவில்லை என அருகிலிருந்தவர்கள் தேடியுள்ளனர். அப்போது அருகேயிருந்த வாய்க்காலில் இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டுள்ளது.

    அங்கு சென்று பார்த்தபோது சிறுமி ஆடைகளின்றி நிர்வாண நிலையில் ரத்தக் காயங்களுடன் கிடந்துள்ளார். சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்தது.

    சிறுமியின் கன்னத்தில் கடித்த காயங்கள் காணப்பட்டது. ரத்தப் போக்கு தொடர்ந்த நிலையில் சிறுமி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    போக்ஸோ வழக்குப்பதிந்த போலீசார் குற்றவாளியை தேடி வந்த நிலையில் சிறுமியின் தாத்தாவை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

    • உலக பணக்காரர்களில் முதல் இடத்தில உள்ளவர் எலான் மஸ்க்.
    • எலான் மஸ்க்கிற்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இடையே வார்த்தை மோதல் நடைபெற்றது.

    உலக பணக்காரர்களில் முதல் இடத்தில உள்ளவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களையும் மற்றும் எக்ஸ் வலைத்தளத்தையும் நடத்தி வருகிறார்.

    அண்மையில் எலான் மஸ்க்கிற்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இடையே நடந்த வார்த்தை மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இந்நிலையில், எலான் மஸ்க்கின் தந்தை எரால் மஸ்க் (79) மீது ஐந்து குழந்தைகள் மற்றும் வளர்ப்பு குழந்தைகள் சிலருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், அவை முட்டாள்தனமானவை, ஆதாரமற்றமவை,போலி என்று எரால் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    • 15 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியிலான சில்மிஷத்தில் சசிகுமார் ஈடுபட்டுள்ளார்.
    • மாணவி படிக்கும் பள்ளியில் தவறான தொடுதல் தொடர்பான வகுப்பு சமீபத்தில் நடைபெற்றது.

    கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 45). இவர் கடந்த 2002-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.

    தற்போது பாளையங்கோட்டை ஆயுதப்படையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ள நிலையில் குடும்பத்துடன் பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாக குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் சசிகுமார் பாளையங்கோட்டையில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவர்களது குடும்பத்தினருடன் அவர் நெருங்கி பழகி வந்த நிலையில் உறவினரின் மகளான 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியிலான சில்மிஷத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவரது உறவினர் குடும்பத்தினருக்கு தகவல் எதுவும் தெரியாமல் இருந்துள்ளது.

    இந்நிலையில் அந்த மாணவி படிக்கும் பள்ளியில் தவறான தொடுதல் தொடர்பான வகுப்பு சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அப்போதுதான் அந்த மாணவிக்கு சசிகுமார் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்த விபரம் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவி தனது தாயாரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். ஆனாலும் அவரது தாய் போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனிடையே அவர் படிக்கும் பள்ளியில் சக மாணவிகளிடம் தனக்கு சோர்வாக இருப்பதாக தெரிவித்த அந்த மாணவி அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். உடனடியாக சக மாணவிகளின் அறிவுறுத்தலின் பேரில் 'ஒன் ஸ்டாப்' சென்டரை தொடர்பு கொண்ட அந்த மாணவி நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தைகள் நலன் சார்ந்த அதிகாரிகள் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து ள்ளனர்.

    இதையடுத்து சிறுமியிடம் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு ஏட்டு சசி குமாரை கைது செய்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மாணவியின் தாயாருக்கும், தலைமை காவலர் சசி குமாருக்கும் நெருக்கமான பழக்கம் இருப்பதாகவும், அதன் காரணமாகவே மாணவியின் புகாரை போலீசில் தெரிவிக்க அவரது தாயார் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாமனார் மீது பெண் ஒருவர் புகார் அளித்தார்.
    • விசாரணையில் கணவரின் பேச்சைக் கேட்டு மனைவி பொய் புகார் கொடுத்தது அம்பலமானது.

    சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை என பொய்யாக போக்சோ புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சென்னை ராயப்பேட்டையில் தனது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாமனார் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

    இந்த வழக்கின் விசாரணையில் கணவரின் பேச்சைக் கேட்டு மனைவி பொய் புகார் கொடுத்தது அம்பலமானது.

    இதனையடுத்து, "போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22(1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். .

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • மாணவிகள் ஆங்கில ஆசிரியரின் அத்துமீறல் குறித்து 1098 என்ற எண்ணுக்கு புகார் தெரிவித்தனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ரஞ்சித்குமார். இவர் வகுப்பறையில் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அவர் வகுப்புக்கு வந்தாலே மாணவிகள் அச்சமடையும் நிலை ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிகாரிகள் வகுப்பறை மற்றும் குடியிருப்புகளில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்து புகார் தெரிவிக்க 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்திருந்தனர்.

    இதனையடுத்து மாணவிகள் ஆங்கில ஆசிரியரின் அத்துமீறல் குறித்து 1098 என்ற எண்ணுக்கு புகார் தெரிவித்தனர். அதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வந்த மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவிகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்ததால் ஆங்கில ஆசிரியர் ரஞ்சித்குமார் மீது ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
    • போக்சோ சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் பாலியல் தொல்லைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யாது என்று தெரிவித்தார்.

    "ஐ லவ் யூ" என்று சொல்வது மட்டும் பாலியல் தொல்லை ஆகாது, தெளிவான பாலியல் நோக்கம் இல்லாவிட்டால் அது பாலியல் சீண்டலாகக் கருதப்படாது என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    தம்தரி மாவட்டத்தில் உள்ள குரூட் காவல் நிலையப் பிரிவில் 15 வயது சிறுமி ஒருவர், தான் வீட்டிற்குச் செல்லும் வழியில் இளைஞர் "ஐ லவ் யூ" என்று சொன்னதாகவும், இதற்கு முன்பும் பலமுறை தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

    அவரது புகாரின் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

    இருப்பினும், போதிய ஆதாரம் இல்லாததால் விசாரணை நீதிமன்றம் ஏற்கனவே இளைஞரை விடுவித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    இந்த மனுவை விசாரித்த உய்ரநீதிமன்ற நீதிபதி சஞ்சய் எஸ் அகர்வால், "ஐ லவ் யூ" என்று ஒருமுறை மட்டும் சொல்வது, தொடர்ந்து அல்லது பாலியல் ரீதியாகத் தூண்டும் நடத்தை இல்லாமல், போக்சோ சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் பாலியல் தொல்லைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யாது என்று தெரிவித்தார்.

    அட்டர்னி ஜெனரல் ஃபார் இந்தியா வெர்சஸ் சதீஷ் (2021) வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, பாலியல் ரீதியான சைகை பாலியல் தொல்லையின் வரம்பிற்குள் வர வேண்டுமானால், அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

    இதையடுத்து, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, இளைஞரின் விடுதலையை நீதிபதி உறுதி செய்தார். 

    • கணவரிடம் விவாரத்து பெற்ற பெண்ணிற்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன.
    • ஏற்கனவே அந்த பெண் இருவரை திருமணம் செய்துள்ளார்.

    மத்திய பிரதேசம் ராட்லாமில் 35 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயது மகளும் மற்றும் 9 வயது மகனும் உள்ளனர். இவர் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். கடந்த ஒரு வருடமாக 10ஆம் வகுப்பு மாணவனிடம், தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனால் போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

    அந்த பெண்ணிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில்தான் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவனிடம், கடந்த ஒருவருடமாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வருகிறார். தனது வீட்டிற்கு அழைத்து திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார்.

    தொடர்ந்து வற்புறுத்தியதால், மாணவன் ஒரு கட்டத்தில் தனது தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தந்தை போலீசில் புகார் அளிக்க, போலீசார் அந்த பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

    • சிறுமியின் கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்தன.
    • இந்த முட்டாள்தனமான செயல் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றமாகும்

    மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூரில் உள்ள லான்வா டிடி பிளாக் நிவாரண முகாமுக்குள் 9 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று மாலை 6:30 மணியளவில் காணாமல் போனாள். நேற்று நள்ளிரவு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

    சிறுமி காணாமல் போனதும், அவளது பெற்றோரும், முகாமில் வசிப்பவர்களும் தீவிர தேடுதலைத் தொடங்கினர். தொடர்ந்து நிவாரண முகாமின் வளாகத்திற்குள் காயங்களுடன் கிடந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் சிறுமி பாலியல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போக்ஸோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    2023 முதல் மணிப்பூரில் இரண்டு சமூகளுக்கிடையே நடந்து வரும் கலவரத்தில் 250 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கடந்த வருட இறுதியில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் கலவரம் தீவிரமடைந்தது.  கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    சிறுமியின் மரணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் பைரன் சிங், இந்த முட்டாள்தனமான செயல் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றமாகும், மேலும் குற்றவாளிகள் தாமதமின்றி நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    • பண்ருட்டி அருகே மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • 15 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே தொரப்பாடியை சேர்ந்தவர் மணிகண்டன் (26) திருமணம் ஆனவர். மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்துவருகிறார்.இந்த நிலையில் கடந்த 17ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 10ம்வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறிகடத்தி சென்றார்.இதுகுறித்து மாணவியின் தாய் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

    புதுக் கோட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்த ப்பட்ட பள்ளி மாணவியை வலை வீசி தேடி வந்தனர். போலீசாரின்தீவிர தேடு தல் வேட்டையில் மணி கண்டனை மடக்கி பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட பள்ளி மாணவியை கடலூர் மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    • திருப்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
    • பனியன் தொழிலாளியான ரியாஸ் அகமது என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். மாநகராட்சி பள்ளியில்,பிளஸ் 2 படித்து வருகிறார். இவரிடம் முதலிபாளையத்தை சேர்ந்த பனியன் தொழிலாளியானரியாஸ் அகமது(வயது 23) என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார்.

    இந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது ரியாஸ் அகமது, சிறுமியை மேட்டுப்பாளையத்துக்குஅழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. சிறுமியை மீட்ட போலீசார்,ரியாஸ் அகமதுவை 'போக்சோ' வழக்கில் கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், சிறையில் அடைத்தனர்.

    ×