search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்"

    • பெங்களூரில் டாட்டூ சூத்ரா ஸ்டூடியோ வைத்திருக்கும் கலைஞர் ரிதேஷ் அகாரியா
    • அவரது நெஞ்சில் “F**k the police” என்று எழுத சொல்லியதாக தெரிவித்துள்ளார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள டாட்டூ கலைஞர் ஒருவர் "F**k the police" என்று நபர் ஒருவரின் நெஞ்சில் குத்திய டாட்டூவை இணையத்தில் பகிர்ந்து வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார். பெங்களூரில் டாட்டூ சூத்ரா ஸ்டூடியோ வைத்திருக்கும் ரிதேஷ் அகாரியா என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நபர் ஒருவரின் நெஞ்சில் "F**k the police" என்று எழுதப்பட்டிருந்த டாட்டூவை பகிர்ந்ததிலிருந்தே இந்த பிரச்சனை தொடங்கியுள்ளது.

     

    இந்த புகைப்படம் வைரலாக நிலையில் போலீசின் கவனத்துக்கும் இது சென்றுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரிதேஷ், தனது கடைக்கு வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர் அவரது நெஞ்சில் "F**k the police" என்று எழுத சொல்லியதாக தெரிவித்துள்ளார்.

    இருந்தபோதிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக டாட்டூ கலைஞர் ரிதேஷ் அகாரியா மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 352 இந்த கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    • BTV அலுவலகத்தின் வரவேற்பு கட்டிடத்துக்கும் பார்க்கிங்கில் நின்றிருந்த வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • நாடு பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971 இல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.  இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

     

    தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

     

    இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

     

    பல்கலைக்கழகம் மட்டுமின்றி தலைநகர் டாக்காவிலும் மற்றைய பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. டாக்காவில் உள்ள BTV தொலைக்காட்சியின் தலைமையகத்துக்கு வெளியில் போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. BTV அலுவலகத்தின் வரவேற்பு கட்டிடத்துக்கும் பார்க்கிங்கில் நின்றிருந்த வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்துக்குள்ளே பலர் சிக்கினர்.

     

    இதனைத்தொடர்ந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிகிறது. இதுபோன்று நேற்று பல்வேறு இடங்களில் நடந்த போராட்ட்டத்தில் மேலும் சுமார் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவரை நடந்த போராட்டங்களில் ஒட்டுமொத்தமாக பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

    போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரகள் மீது ரப்பர் குண்டுகளையும், ஒலியெழுப்பும் கிரைனைடுகளையும் போலீசார் உபயோகித்து வருகின்றனர்.

     

    தலைநகரில் உள்ள மெட்ரோ நிலையங்கள் சேவையை நிறுத்தியுள்ளன. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டவர எல்லை பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தில் வசிக்கும் இந்தியர்களை கவனமுடன் இருக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

    • இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உள்ளூர் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    • சில நாட்களுக்கு முன்புதான் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது கொலை முயற்சி நடந்தது.

    அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு அருகே சாமுவேல் ஷார்ப் என அடையாளம் காணப்பட்ட நபர் ஓஹியோ காவல்துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு அருகிலுள்ள வீடற்ற முகாமில் வசித்து வரும் சாமுவேல் ஷார்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. அவர் சம்பத்தன்று 2 கைகளிலும் கத்தியை வைத்து கொண்டு ஒருவரை தாக்க சென்றதாகவும் பாதுகாப்பு கருதி அவரை சுட்டு கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உள்ளூர் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    சில நாட்களுக்கு முன்புதான் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது கொலை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • பழங்குடியின இளைஞரை அவரது திருமணம் நடந்து கொண்டிருந்தபோதே நடுவில் புகுந்து போலீசார் கைது செய்தனர்.
    • மணப்பெண் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்துள்ளது.

    மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவா என்ற 25 வயது பழங்குடியின இளைஞரை அவரது திருமணம் நடந்து கொண்டிருந்தபோதே நடுவில் புகுந்து போலீசார் கைது செய்தனர். திருட்டு வழக்கு தொடர்பாக தேவாவும் அவரது உறவினர் கங்காராமும் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட அன்றைய இரவே, 'உங்களது மகன் தேவா கஸ்டடியில் மாரடைப்பால் இறந்துவிட்டான்' என்று அவரது குடுபத்துக்கு போலீசிடம் இருந்து போன் வந்துள்ளது.

    இதனால் பழங்குடியின இளைஞரான தேவாவின் குடும்பபும் உறவினர்களும் அதிர்ச்சியைடந்த நிலையில் போலீஸ்தான் தேவாவை அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தேவாவுடன் கல்யாணமாக இருந்த மணப்பெண் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்துள்ளது.

    இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் திரண்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கொதிப்படைந்த தேவாவின் உறவின பெண்மணிகள் ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து தங்களின் ஆடைகளை அவிழ்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உள்ளே தரையில் படுத்து அழுது புலம்பியுள்ளனர். தங்களின் வளையல்களை உடைத்து கூச்சலிட்டனர் அவர்களை போலீசார் வெளியேற்ற முயன்ற நிலையில் அங்கு நடந்த கைகலப்பில் ஒரு பெண் படுகாயமடைந்தார்.

    தேவாவுக்கு மாரடைப்பு வந்தது உண்மைதான் என்றும் மாவட்ட மருத்துவமனையில் அவருக்கு சிபிஆர் வழங்கியும் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்படுகிறது. ஆனால் 'இளம் வயதில் எப்படி மாரடைப்பு வரும், தேவாவையும், கங்காரமையும் போலீசார் அடித்து துன்புறுத்தியுள்ளனர். தற்போது படுகாயங்களுடன் இருக்கும் கங்காராமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என்று தேவாவின் உறவினர்கள் தரப்பில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. 

     

    • இந்த நூதன தண்டனையால் நொந்து போன சுற்றுலா பயணிகள் போலீசாரிடம் தொடர்ந்து கெஞ்சினர்.
    • போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

    கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் அருகே முடிகரே பகுதியில் உள்ள சார்மதி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அப்பகுதியில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரிப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அருவியை சுற்றி பல இடங்களில் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் சிலர் போலீசாரின் எச்சரிக்கையை மீறி அந்த அருவிக்கு சென்று குளித்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அருவியில் சில வாலிபர்கள் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர். அவர்களின் ஆடைகள் அருவிக்கரையில் இருந்தது. உடனே போலீசார் அந்த உடைகளை எடுத்துக்கொண்டு சென்றனர். இதைப்பார்த்த வாலிபர்கள் அருவியில் இருந்து ஓடி வந்து போலீசாரிடம் தங்கள் ஆடைகளை கேட்டு கெஞ்சினர். ஆனால் அவற்றை உடனடியாக போலீசார் கொடுக்கவில்லை. இந்த நூதன தண்டனையால் நொந்து போன சுற்றுலா பயணிகள் போலீசாரிடம் தொடர்ந்து கெஞ்சினர்.

    இதையடுத்து போலீசார் சுற்றுலா பயணிகளை எச்சரித்து போதிய அறிவுரைகள் வழங்கி, ஆடைகளை கொடுத்து அனுப்பினர். இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பயனர்கள் பலரும் போலீசாரின் நடவடிக்கையை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    • தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மகாராஷ்டிரா அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன்விளக்கையும் பயன்படுத்தி வந்தார்.
    • இவரது தாய் கையில் துப்பாக்கியுடன் விவசாயிகளை மிரட்டும் பழைய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது

    மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பூஜா கேத்கர் நியமிக்கப்பட்டிருந்தார். யு.பி.எஸ்.சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்ற இவர் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்தது.

    இவர் தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மகாராஷ்டிரா அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன்விளக்கையும் பயன்படுத்தி வந்தார். இதையடுத்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக பூஜா புனேயில் இருந்து வாசிம் மாவட்டத்திற்கு பணி இடம் மாற்றம் செய்யப்பட்டார்.தேர்வு செயல்பாட்டில் சலுகைகள் பெற அவர் தன்னை பார்வை பாதிக்கப்பட்டவர் என்று குறப்பிட்டிருந்தார் என்று  குற்றச்சாட்டும் எழுந்தது.

    இதைப்போல பூஜாவின் தந்தை திலீப்கேத்கர் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அகமத் நகரில் வஞ்சித் பகுஜன்கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்கப்பட்டார். அப்போது வேட்பு மனுத்தாக்கலின் போது தனக்கு ரூ.43 லட்சம் ஆண்டு வருமானம் இருப்பதாகவும், 40 கோடி சொத்து இருப்பதாகவும் திலீப் கணக்கு காட்டி இருந்தார். ரூ.40 கோடி சொத்து வைத்துள்ளவர் கிரீமிலேயரில் இல்லை என்று சான்று பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் அரசியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது தாய் கையில் துப்பாக்கியுடன் விவசாயிகளை மிரட்டும் பழைய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுதொடர்பாக பூஜாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பூஜாகேத்கர் மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் குழுவை அமைத்து உத்தர விட்டுள்ளது. இந்நிலையில் பூஜாவின் ஆடி சொகுசு காரை புனே போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். திருட்டு வழக்கில் சிக்கிய தனது உறவினர் ஒருவரை விடுவிக்கவும் பூஜா போலீசை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது

    • விபத்துக்கு முன் காரினுள் அந்த இளைஞர்கள் சத்தமாக பாட்டு கேட்டபடி ரீல்ஸ் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
    • விபத்தில் நடைபாதையில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

    மதுபோதையில் சொகுசு கார் ஓட்டி பெரிய புள்ளிகளின் மகன்கள் விபத்து ஏற்படுத்தி உயிரிழப்புகளுக்க்கு காரணமாகும் சமபாவங்கள் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புனேவில் மதுபோதையில் தொழிலதிபரின் 17 வயது மகன் இயக்கிய போர்ச்சே சொகுசு கார் மோதி 2 இளம் ஐடி ஊழியர்கள் உயிரிழந்தனர்.

    மும்பையில் பாஜக கூட்டணி ஷிண்டே சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர் ரமேஷ் ஷாவின் மகன் குடிபோதையில் பி.எம்.டபில்யூ காரை இயக்கி ஏற்படுத்திய விபத்தில் நடுத்தர வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் அதே மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மதுபோதையில் 19 , 20 வயதுடைய 5 இளைஞர்கள்  சமூக  வலைதளங்களில் பதிவிடுவதற்காக ரீலிஸ் செய்து கொண்டே காரை இயக்கி சாலையோரம் இருந்த வேலி மீது மோதி ஏற்படுத்திய விபத்தில் நடைபாதையில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

    ஜூலை 11 அதிகாலை 2.38 மணியளவில் இந்த விபத்து நடந்த்துள்ளது. விபத்துக்கு முன் காரினுள் அந்த இளைஞர்கள் சத்தமாக பாட்டு கேட்டபடி  ரீல்ஸ் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கை துண்டிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை வழங்காமல் அப்படியே சாலையோரத்தில் முதலாளிகள் விட்டுச் சென்றனர்
    • வாரத்தில் 7 நாட்கள் தினமும் 10 முதல் 12 நேரம் வரை அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இத்தாலி நாட்டில் உள்ள வெரோனா மாகாணத்தில் உள்ள விவசாய நிலங்களில் முதலாளிகளால் கொத்தடிமைகளாக நடந்தப்பட்ட 33 இந்திய விவசாயப் பணியாளர்களை அங்கிருந்து இத்தாலிய அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.

    கடந்த ஜூன் மாதம் அந்த பகுதியில் உள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இந்தியாவைச் சேர்ந்த 31 வயதான சத்தன் சிங் எனபரின் கை பணியின்போது இயந்திரத்தில் சிக்கி துண்டானது. அவர்க்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாமல் அவரை அப்படியே சாலையோரம் ரத்த வெள்ளத்தில் முதலாளிகள் விட்டுச் சென்றனர்.

     

    இதனைத்தொடர்ந்து அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இத்தாலிய பண்ணைகளில் இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது வெளிச்சத்துக்கு வந்தது. வாரத்தில் 7 நாட்கள் தினமும் 10 முதல் 12 நேரம் வரை அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்திய மதிப்பில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.360 கூலியாக வழங்கப்பட்டு வந்துள்ளது.

    ரூ.15 லட்சம் கட்டினால் இத்தாலியில் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தித்தருவதாக 2 இந்திய ஏஜெண்டுகள் இவர்களை ஏமாற்றி சீசனல் ஒர்க்கர் பெர்மிட்டில் அங்கு அழைத்துச்சென்று வேலைக்கு சேர்த்துள்ளனர்.

    இந்த ரூ.15 லட்சம் தொகையை முழுமையாக கழிக்கும் வரை அவர்களுக்கு சம்பளம் கிடையாது. மேலும் கூடுதலாக ரூ.12 லட்சம் செலுத்தினால் நிரந்தர பெர்மிட் வாங்கித்தருவதாகவும் இவர்களை ஏஜெண்டுகள் ஏமாற்றியுள்ளனர். தற்போது அப்படி ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாக 33 இந்தியர்களை மீட்ட இத்தாலிய அதிகாரிகள் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, வேலை வாய்ப்பு மற்றும் குடியிருப்பு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

     

    • ஸ்லாமியர்கள் வாழ்க்கை முழுவதும் தாடி வைத்திருப்பது வழக்கம்.
    • பல மதங்கள், இனங்களை கொண்ட இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது சிறப்பு.

    மதுரையைச் சேர்ந்த முதல்நிலை காவலரான அப்துல் காதர் இப்ராஹிம், கடந்த 2018ம் ஆண்டு தாடி வைத்திருந்ததால் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து காவலர் அப்துல் காதர் இப்ராஹிம், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கெளரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, "இறைத்தூதர் நபிகளை பின்பற்றும் இஸ்லாமியர்கள் வாழ்க்கை முழுவதும் தாடி வைத்திருப்பது வழக்கம். பல மதங்கள், இனங்களை கொண்ட இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது சிறப்பு.

    தமிழக காவல்துறையில் பணியாற்றும் முஸ்லிம் காவலர் தாடி வைக்க தடையில்லை. அவர்கள் நேர்த்தியாக தாடி வைத்து கொள்ள அனுமதி உண்டு. காவல் சட்ட விதிகளில் இதற்கு அனுமதி இருப்பதாகக் கூறிய நீதிபதி விக்டோரியா கெளரி, ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    • ரவுடி ஒழிப்பு நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.
    • சென்னையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரவுடி ஒழிப்பு நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.

    தமிழகம் முழுவதும் 21 ஆயிரம் ரவுடிகள் இருப்பதாக கணக்கிட்டு போலீசார் ஏற்கனவே தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சென்னையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட உள்ளன.

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரை ஒழித்துக்கட்ட புதிய போலீஸ் கமிஷனர் அருண் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

    அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உள்ள சரித்திர பதிவேடுகளை தூசு தட்டுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார். போலீஸ் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வரும் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றவர்களில் யார்-யார் எங்கு இருக்கிறார்கள்? அவர்களின் தற்போதைய நிலை என்ன? என்பது பற்றிய விவரங்களை புள்ளி விவரத்தோடு பட்டியல் போட்டு வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஏ.பிளஸ், ஏ, பி, சி என 4 பிரிவுகளாக ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தயார் நிலையில் உள்ளது. தாதாக்கள் போல செயல்படும் ரவுடிகள் ஏ.பிளஸ், பிரிவிலும், அவர்களுக்கு கீழே ரவுடி கும்பலுக்கு தலைமை தாங்கும் ரவுடிகள் ஏ பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர்.


    சிறிய குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் பி மற்றும் சி பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரை பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரித்து வைத்திருக்க வேண்டும் என்கிற உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னையில் 6 ஆயிரம் ரவுடிகள் போலீசாரின் சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 750-க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். போலீசுக்கு பயந்து ரவுடிகள் பலர் வெளி மாநிலங்களுக்கும் தப்பிச் சென்றிருந்தனர்.

    இவர்களில் சிலர்தான் வெளிமாநிலங்களில் இருந்து வந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதையும் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இதுபோன்ற நபர்களையெல்லாம் கண்டுபிடித்து அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ரவுடிகளை ஒழித்துக்கட்டுவதற்காக சென்னை மாநகர காவல் துறையில் உருவாக்கப்பட்டுள்ள 'பருந்து செயலி'யை போலீசார் முறையாக பராமரித்து ரவுடி ஒழிப்பில் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் மற்றும் 12 துணை கமிஷனர்கள் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை மத்திய குற்றப் பிரிவில் ரவுடிகள் ஒழிப்புப் பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுறுசுறுப்பான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

    அவர்கள் ரவுடிகளை ஒழிப்பதில் தீவிரம் காட்டி செயல்பட்டனர். சிறையில் உள்ள ரவுடிகள் வெளி வந்ததும் அவர்களை தீவிரமாக கண்காணித்து குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

    ரவுடிகள் மத்தியில் 'கேங் ஸ்டார் டீம்' என்று அழைக்கப்பட்டு வரும் இந்த ரவுடி ஒழிப்புப் பிரிவை பலப்படுத்தவும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அதே போன்று சட்டம்-ஒழுங்குப் பிரிவில் மின்னல் வேகத்தில் செயல்படும் இன்ஸ்பெக்டர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரை இடமாறுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இப்படி ரவுடிகள் ஒழிப்பில் போலீசார் தீவிரம் காட்டி வருவதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் உள்ள ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    • அவர்களிடம் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்த அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்துள்ளன.
    • காரில் ஏறிய ராஜ்ரிஷி காரை ஸ்டார்ட் செய்து காவேரி மீது மீண்டும் ஏற்றி இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

    மும்பையின் உரோலியில் உள்ள கோலிவாடா பகுதியில் கடந்த ஜூலை 7 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடந்த கார் விபத்து பரபரப்பை ஏற்படுதத்தி வருகிறது. தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் மீன் வாங்க சென்ற காவேரி நாக்வா என்ற பெண் பின்னால் இருந்து வந்து இடித்து பி.எம்.டபில்யூ காரின் பானட்டில் சிக்கி 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

     

    விபத்து ஏற்படுத்திய காரை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் மிஹிர் ஷா ஓட்டி வந்ததும், அப்போது அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய மிஹிர் தலைமறைவான நிலையில் இளைஞனின் தந்தை ராஜேஷ் ஷாவை போலீசார் கைது செய்தனர். மேலும் விபத்து நடந்தபோது மிஹிர் ஷாவுடன் காருக்குள் இருந்த அவரின் குடும்ப ஓட்டுநர் ராஜ்ரிஷி பிதாவாத் கைது செய்யப்டயுள்ளார்.

    இந்நிலையில்அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூலமும் போலீஸ் கைப்பற்றிய சிசிடிவி மூலமும் அடுத்தடுத்த அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்துள்ளன. தற்போது போலீஸ் கைப்பற்றியுள்ள சிசிடிவி வீடியோவில் மிஹிர் விபத்து ஏற்படுத்தியவுடன், காரை நிறுத்தாமல் ஒட்டவே, 1.5 கி.மீட்டருக்கு பானட்டில் சிக்கிய காவேரி இழுத்துச் செல்லப்பட்டார். அதன்பின் காரை நிறுத்திய மிஹிர் மற்றும் அவரது ஓட்டுநர் ராஜ்ரிஷி காரில் இருந்து இறங்கி, படுகாயமடைந்த காவேரியை பான்ட்டில் இருந்து விடுவித்து சாலையில் கிடத்தியுள்ளனர். பின்னர் மிஹிருடன் காரில் ஏறிய ராஜ்ரிஷி காரை ஸ்டார்ட் செய்து  காவேரி மீது மீண்டும் ஏற்றி இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றது பதிவாகியுள்ளது.

    இதற்கிடையில், விபத்து குறித்து மிஹிர் தனது தந்தை ராஜேஷ் ஷாவுக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார். மகனை தப்பிக்க வைக்க திட்டமிட்ட ராஜேஷ் ஷா, மெர்ஸண்டிஸ் காரில் வந்து காலா நகர் என்ற இடத்தில் மிஹிரை மெர்ஸண்டிசில் ஏற்றி தப்பிக்க வைத்துள்ளார். பிஎம்டபிள்யூ காரை ஓட்டுநர் ராஜ்ரிஷி ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக போலீசை நம்பவைக்க ராஜேஷ் ஷா திட்டமிட்டிருந்த்ததும் தெரியவந்துள்ளது. முன்னதாக விபத்து நடப்பதற்கு முன் மிஹிர் மதுபான பாரில் இருந்து வெளியில் வரும் சிசிடிவி காட்சிகளை போலீஸ் கைப்பற்றியுள்ளது.

    புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் விபத்தை ஏற்படுத்திய மிஹிர், தந்தை ராஜேஷ் ஷா, ஓட்டுநர் ராஜ்ரிஷி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நீதிமன்றத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி முழுமையான அறிதல் இல்லாததால் போலீஸ் விளக்கம் அளிக்க திணறியதால், அவர்களை நன்கு தயார் செய்துகொண்டு வந்து வழக்கு குறித்து பேசுமாறு நீதிபதி தெரிவித்தது குறிப்பிடதக்கது. மேலும் தற்போது  ராஜேஷ் ஷாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மிஹிர் ஷாவை தேடும் பணியை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது. 

    • ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

    80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

    இந்த விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் போலே பாபா மீது வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.

    ஹத்ராஸில் 121 பேரை பலிகொண்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு பிறகு போலே பாபா தலைமறைவாக இருந்தார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு இரங்கல் வீடியோ வெளியிட்டிருந்தார்.

    அந்த இரங்கல் வீடியோவில், இந்த நிகழ்வால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், இந்த வலியை தாங்குவதற்கான சக்தியை கடவுள் நமக்கு தரட்டும். அரசாங்கத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இந்த அசம்பாவிதத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று நான் நம்புகிறேன். எனது வழக்கறிஞர் மூலம் கமிட்டி நிர்வாகிகளை தொடர்புகொண்டு படுகாயமடைந்த உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு பக்கத்துணையாக நிற்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று பேசியுள்ளார்.

    இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலை நேரில் பார்த்த சுதிர் பிரதாப் சிங் என்பவர் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

    "ஹத்ராஸ் ஆன்மிக கூட்டத்தில், தனது காலடி மண்ணை எல்லோரும் எடுத்துக் கொள்ளுமாறு போலே பாபா அழைத்தார். அதன்பின் கூட்டத்தில் அனைவரும் அந்த மண்ணை எடுக்க முண்டியடித்துச் செல்ல, ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதுவே பலரின் உயிரிழப்புக்குக் காரணம். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார். உள்ளூர் மக்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர்" என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    இதற்கு முன்னதாக, "ஹத்ராஸ் சம்பவம் விபத்து அல்ல. சமூக விரோதிகளின் சதி செயல்" என போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

    ×