என் மலர்
நீங்கள் தேடியது "விருப்ப ஓய்வு"
- விதிகளை, கடந்த 2-ந்தேதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அரசிதழில் வெளியிட்டது.
- பணியாற்றிய ஆண்டுகளை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டு, உறுதியளிக்கப்பட்ட ஊதியம் சந்தாதாரருக்கு வழங்கப்படும்.
புதுடெல்லி:
25 ஆண்டுகள் பணி முடித்த மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின்கீழ் (யு.பி.எஸ்.), முழுமையான உறுதியளிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தேசிய ஓய்வூதிய முறையின்கீழ் (என்.பி.எஸ்.), ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் தொடர்பான விஷயங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சமீபத்தில் 'மத்திய சிவில் சர்வீசஸ் (தேசிய ஓய்வூதிய முறையின்கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல்) விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த விதிகளை, கடந்த 2-ந்தேதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அரசிதழில் வெளியிட்டது.
அந்த விதியின்படி, 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்கள், விகிதாச்சார அடிப்படையில் உறுதியளிக்கப்பட்ட ஊதியம் பெற தகுதி உடையவர்கள் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விதிகள், 20 ஆண்டுகள் பணிக்கு பிறகு விருப்ப ஓய்வுபெற ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது.
பணியாற்றிய ஆண்டுகளை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டு, உறுதியளிக்கப்பட்ட ஊதியம் சந்தாதாரருக்கு வழங்கப்படும். அவர் ஓய்வு பெறும் நாளில் இருந்து இத்தொகை வழங்கப்படும்.
தனிப்பட்ட தொகுப்பில் 60 சதவீதத்தை இறுதியாக திரும்பப்பெறுதல், ஒவ்வொரு 6 மாத பணிக்கும் அகவிலைப்படி, ஓய்வு பணிக்கொடை, விடுப்பை பணமாக்குதல், மத்திய அரசு ஊழியர்கள் குழு காப்பீட்டு திட்டம் போன்ற இதர சலுகைகளையும் ஓய்வு பெறும்போது பெறலாம்.
ஒருவேளை, விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு, உறுதியளிக்கப்பட்ட ஊதியம் பெறுவதற்கு முன்பே சந்தாதாரர் இறந்து விட்டால், சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட அவரது கணவர்/மனைவிக்கு குடும்ப ஊதியம் வழங்கப்படும். இத்தகவல்களை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இந்தச் சம்பவம் தனது குடும்பத்தையும் உலுக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
- அவமானப்படுத்தும் நோக்கம் முதல்வருக்கு இல்லை என்றும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் பெலகாவியில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏசிபி) நாராயணா பரமணியை நோக்கி கர்நாடக முதல்வர் சித்தராமையா கை ஓங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தால் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறி, நாராயணா பரமணி விருப்ப ஓய்வு கோரி கடிதம் அளித்திருந்தார். அரசு மற்றும் காவல்துறையிடம் இருந்து ஏற்பட்ட அவமானத்தையும், ஆதரவின்மையையும் இதற்கு காரணமாகக் குறிப்பிட்டிருந்தார்.
கன்னடத்தில் எழுதப்பட்ட மூன்று பக்க கடிதத்தில், இந்தச் சம்பவத்தால் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அவமதிக்கப்பட்டதாகவும் உணர்வுபூர்வமாக விளக்கினார்.
"முதலமைச்சரை நான் நேருக்கு நேர் சந்திக்க விரும்பினேன்... ஆனால் பொதுவெளியில் அது ஏற்படுத்தும் தர்மசங்கடத்தைப் புரிந்துகொண்டு அதைத் தவிர்த்தேன்" என்று அவர் எழுதினார். இந்தச் சம்பவம் தனது குடும்பத்தையும் உலுக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சித்தராமையா, உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பரமணி தனது ஓய்வு முடிவை கைவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பினார்.
இது ஒரு உணர்ச்சிவசப்பட்ட செயல் என்றும், அவமானப்படுத்தும் நோக்கம் முதல்வருக்கு இல்லை என்றும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா விளக்கமளித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
- போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தனது பணிகாலம் முடிவதற்கு 6 மாதத்திற்கு முன்பே விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 மாதங்கள் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மோகன்ராஜ் கடந்த3.1.2023-ந் தேதி பொறுப்பேற்றார். இவர் ஓய்வு பெற கூடிய காலம் 31.5.2024-ந் தேதி ஆகும்.
ஆனால் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தார். அதன்படி கடந்த 3 மாதத்திற்கு முன்பு விருப்ப ஓய்வு பெறுவதற்கான மனுவை தமிழக டி.ஜி.பி. சங்கர்ஜிவாலுக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு விருப்ப ஓய்வு பெற அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு நேற்று மாலை 7 மணி அளவில் விருப்ப ஓய்வு பெறுவதற்கான கடிதம் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் மைக் மூலமாக தொடர்பு கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் தன்னுடன் சிறப்பான முறையில்பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தனது பணிகாலம் முடிவதற்கு 6 மாதத்திற்கு முன்பே விருப்ப ஓய்வு பெற் றுள்ளார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 மாதங்கள் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விருப்ப ஓய்வு பெற்றதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷசாங் சாய்க்கு கூடுதலாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- 57 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் 3 ஆண்டுகளும், 59 வயதில் விருப்ப ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.
- விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58 ஆக இருந்தபோது அரசு ஊழியர் ஒருவர் 54 வயது மற்றும் அதற்கு குறைந்த வயதில் விருப்ப ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு கூடுதலாக 5 ஆண்டு பணியாற்றியதாக 'வெயிட்டேஜ்' கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் 54-க்கு பதிலாக 56 வயது மற்றும் அதற்கு கீழ் வயதில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றால் அவருக்கு 4 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் அவர் பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.
அதேபோல் 57 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் 3 ஆண்டுகளும், 59 வயதில் விருப்ப ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






