search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Superintendent of police"

    • போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தனது பணிகாலம் முடிவதற்கு 6 மாதத்திற்கு முன்பே விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 மாதங்கள் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மோகன்ராஜ் கடந்த3.1.2023-ந் தேதி பொறுப்பேற்றார். இவர் ஓய்வு பெற கூடிய காலம் 31.5.2024-ந் தேதி ஆகும்.

    ஆனால் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தார். அதன்படி கடந்த 3 மாதத்திற்கு முன்பு விருப்ப ஓய்வு பெறுவதற்கான மனுவை தமிழக டி.ஜி.பி. சங்கர்ஜிவாலுக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு விருப்ப ஓய்வு பெற அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு நேற்று மாலை 7 மணி அளவில் விருப்ப ஓய்வு பெறுவதற்கான கடிதம் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் மைக் மூலமாக தொடர்பு கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் தன்னுடன் சிறப்பான முறையில்பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தனது பணிகாலம் முடிவதற்கு 6 மாதத்திற்கு முன்பே விருப்ப ஓய்வு பெற் றுள்ளார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 மாதங்கள் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விருப்ப ஓய்வு பெற்றதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷசாங் சாய்க்கு கூடுதலாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • மருது பாண்டியர்களின் நினைவு தினம் திருப்பத்தூரில் கலெக்டர்- போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தனர்.
    • சாமுண்டீஸ்வரி மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வருகின்ற 24-ந் தேதி மருது பாண்டியர்களின் நினைவு நாள் அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    அதனை முன்னிட்டு போக்குவரத்து நடவடிக்கைகள், பாதுகாப்பு பணிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், மருது பாண்டியர்களின் வாரிசுதாரர் ராமசாமி,திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வருவாய் ஆய்வாளர் மன்சூர் அலிகான், பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி, திருப்புத்தூர் நகர் காவல் சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், செல்வபிரபு, சாமுண்டீஸ்வரி மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
    • குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜெயக்குமார் நேற்று பதவி ஏற்றார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டம், விவசாயம் சார்ந்த மாவட்டம். இங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கும் மிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் அந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் நடப்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக உருவாக்கப்படும்.

    பொதுமக்கள் எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்க 9363495720 இந்த தொலைபேசியின் மூலமாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் புகார் தெரிவிப்பவரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்தார்.

    • சேலம் புறநகர் மாவட்டத்தில் 1000 சிலைகள் மாநகரில் 860 சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
    • தம்மம்பட்டியில் மட்டும் 23-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்படும் என்று அறிவிப்பு

    சேலம்

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 18-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து பொது மக்கள் மற்றும் இந்து அமைப்புகள் ச ார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    1860 சிலைகள்

    சேலம் புறநகர் மாவட்டத்தில் 1000 சிலைகள் மாநகரில் 860 சிலைகளும் கடந்த 20-ந் தேதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலை களில் கரைக்கப்பட்டது.இதில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் மட்டும் 23-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தம்மம்பட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு தொடர்ந்து சிறப்பு பூைஜகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தது.இந்தநிலையில் தம்மம்பட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 36 விநாயகர் சிலைகளும் இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை உடையார் பாளையம் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஜங்கமசமுத்திரம் ஏரியில் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    450 போலீசார்

    இதில் இந்து முன்னணி மாநில செயலாளர் சண்முகம் உள்பட அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்கிறார்கள்.இதையொட்டி சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அருண்கபிலன் ஆகியோர் தலைமையில் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • விநாயகர் சிலை வைப்பதில் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஆய்வு செய்து கோவில் நிர்வாகிகள் மற்றும் போலீசுக்கு அறிவுரை வழங்கினார்

     விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா கோலாகலமாக கொண்டா டப்பட்டது. விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் விநாயகர் சிலை வைப்பதில் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழுப்புரம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சா சாங் சாய் நள்ளிரவு 11 மணியளவில் சாதாரண உடையில் வந்து திண்டிவனம் கோட்ட போலீஸ் நிலையங்கள் மற்றும் பல்வேறு போலீஸ் நிலையங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து கோவில் நிர்வாகிகள் மற்றும் போலீசுக்கு அறிவுரை வழங்கினார்.ஊர்வலம் செல்வது குறித்தும் எப்படி விநாயகர் சிலையை நீர் நிலையங்களில் கரைப்பது குறித்தும் எடுத்துக் கூறினார்.

    • சமூக அக்கறையுடன் செயல்பட்டவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
    • சி.சி.டி.வி. காமிராக்களை நிறுவ வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள், கடைகள், சாலை சந்திப்புகள் ஆகிய பகுதிகளில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்கள் மூலம் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகள் கண்டறியப்பட்ட தோடு, அவர்கள் திருடி வைத்திருந்த சொத்துக்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

    மேலும் பல்வேறு வாகன விபத்து வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறி வதற்கும் விபத்து ஏற்படுத்திய வாகனங்களை கண்டறிந்து பாதிக்கப்பட்ட வர்களுக்கு இழப்பீடு பெற்று தருவதற்கும், உதவியாக இருந்தவர்களின் சமூக பொறுப்பையும், அக்கறையையும் கவுரவிக்க மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் முடிவு செய்தார். அதன்படி பல்வேறு பகுதிகளிலிருந்து சமூக அக்கறையுடன் செயல்பட்ட 50 பேரை நேரில் வரவழைத்து அவர் பாராட்டு தெரிவித்தார்.

    மேலும் பொதுமக்கள் மற்றும் இதர நிறுவனங்கள் தாமாக முன்வந்து தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சமூகநோக்கில் சி.சி.டி.வி. காமிராக்களை நிறுவ வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்தார்.

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கவர்னர் மீது காங்கிரஸ் புகார் மனு கொடுத்தனர்.
    • கவர்னர் ஆர்.என்.ரவி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கி ரஸ் முன்னாள் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை யிலான காங்கிரசார், விருது நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம் வடலூர் ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி யில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசும்போது, சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். அறியாமை மற்றும் காழ்ப்பு ணர்ச்சி காரணமாகவே சிலர் எதிர்க்கிறார்கள்.

    சனாதன தர்மத்தை ஏற்றாலும், எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள்ளேயே இருப்பார்கள். உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பது தான் சனாதன தர்மம்.

    யார் வேண்டுமானாலும் எந்த மார்க்கத்தை வேண்டு மானாலும் பின்பற்றலாம் என்ற நிலை இருந்தது என கருத்து தெரிவித்திருந்தார். இதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத் துக்கு எதிராக உண்மைக்கு புறம்பான கருத்தை பதிவிட்டிருப்பதும் சமத்து வம், சமதர்மம் நிறைந்த மக்களாட்சி முறையில் உயரிய பொறுப்பில் உள்ள ஒருவர் சர்ச்சையை ஏற்படுத் தும் வகையில் மதம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்தி ருப்பதும் சட்டப்படி குற்றமா கும். எனவே தமிழக கவர் னர் ஆர்.என்.ரவி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
    • ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 3 எதிரிகளை விரைந்து கைது செய்த ஆத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 6 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 51 காவல்துறையினர் மற்றும் நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்து சிறப்பாக பணியாற்றிய உதவி அரசு வழக்கறிஞர் ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டுசான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    இதன்படி, ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை கொலை செய்து தங்க நகைகளை பறித்து சென்ற வழக்கில் எதிரியை 24 மணி நேரத்தில் கைது செய்து திருடி சென்ற 11½ சவரன் தங்க நகை மற்றும் ரூ.18,400-ஐ ஆகியவற்றை கைப்பற்றி எதிரியை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்த ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்துராமன், தூத்துக்குடி நடமாடும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் கலா லட்சுமி, உதவி ஆய்வாளர்கள் முத்துராஜா, எபனேசர் மற்றும் தலைமை காவலர் கிருஷ்ணன் ஆகியோர், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள 120 டன் பொட்டாசியம் உரத்தை கடத்திச் சென்ற வழக்கில் 2 எதிரிகளை அதிரடியாக கைது செய்த முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர், தலைமை காவலர்கள் சதீஷ்குமார், அருணாச்சலம், முதல் நிலை காவலர் செல்வின் ராஜா மற்றும் தனிப்பிரிவு காவலர் ஜான்சன் ஆகியோர்,

    ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 3 எதிரிகளை விரைந்து கைது செய்த ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜா, ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலர் முருகேஷ்பாபு மற்றும் திருச்செந்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் சுந்தர்ராஜ் ஆகியோர், கோவில்பட்டி நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 18 சி.சி.டி.வி. காமிராக்கள் மற்றும் 36 சாலை தடுப்புகளை புதிதாக வைத்து திறம்பட போக்குவரத்து விதிமுறைகளை சீர்செய்த கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், தலைமை காவலர் ஸ்டீபன் இளையராஜா, முதல் நிலை காவலர் பால்ராஜ் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் எதிரிகள் மற்றும் சாட்சிகளுக்கு அதிக அளவில் அழைப்பாணைகளை சார்பு செய்த ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில்குமார் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும் மற்றும் 6 காவல் ஆய்வாளர்கள் உட்பட 51 காவல்துறையினர் மற்றும் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உதவி அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    நிகழ்சியின்போது, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்கா ணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் உதவி போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர். 

    • தூத்துக்குடி ரூரல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தென்பாகம் காவல் நிலயத்திற்கும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • கடம்பூர் காவலர் சந்தோஷ் செல்வம் புதுக்கோட்டை தனிப்பிரிவிற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் 3 சப்-இன்ஸ் பெக்டர்கள் உட்பட 13 தனிப்பிரிவு காவ லர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு ள்ளனர்.

    இடமாற்றம்

    இதன்படி, விளாத்திகுளம் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தருவைகுளம் காவல் நிலை யத்திற்கும், திருச்செந்தூர் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரகு திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்திற்கும், தூத்துக்குடி ரூரல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தென்பாகம் காவல் நிலயத்திற்கும் இட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

    தென்பாகம் தனிப்பிரிவு காவலர் மாரிக்குமார் தென்பாகம் காவல் நிலை யத்திற்கும், புதுக்கோட்டை தனிப்பிரிவு காவலர் சாமிக்கண்ணு தட்டப்பாறை காவல் நிலையத்திற்கும், எப்போதும்வென்றான் காவலர் செல்வகுமார் பசுவந்தனை தனிப்பிரி விற்கும், பசுவந்தனை காவலர் கணபதி எப்போதும்வென்றான் தனிப்பிரிவிற்கும், கடம்பூர் காவலர் சந்தோஷ் செல்வம் புதுக்கோட்டை தனிப்பிரிவிற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    செய்துங்கநல்லூர்

    சாயர்புரம் காவலர் மைக்கேல்ராஜ் கடம்பூர் தனிப்பிரி விற்கும், விளாத்தி குளம் காவலர் ஜெயசந்திரன் புதூர் தனிப்பிரிவிற்கும், புதூர் காவலர் நாகார்ஜுனன் மாசார்பட்டி தனிப்பிரி விற்கும், செய்துங்கநல்லூர் காவலர் ராஜேஷ் சேரகுளம் தனிப் பிரிவிற்கும், சேர குளம் காவலர் சங்கரசுப்பு செய்துங்க நல்லூர் தனிப் பிரிவிற்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பொதுமக்கள் 72991 92194 என்ற செல்போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாய்பிரனீத் பொறுப்பேற்று உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தளமான மாமல்லபுரத்தின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். மாமல்லபுரத்தில் சட்ட விரோதமாக வெளிநாட்டு மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், ஆன்லைன் விபச்சாரம், உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் ஓ.எம்.ஆர், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கட்ட பஞ்சாயத்து செய்யும் ரவுடிகளை தனிப்படை மூலம் ரகசியமாக கண்காணித்து அவர்களை ஒழிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.

    மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் குறித்து, பொதுமக்கள் 72991 92194 என்ற செல்போன் எண்ணிற்கும், வாட்ஸ் ஆப் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் பெயர்கள் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு மீது மதுரை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சிக்கு கடந்த 2008-09-ம் ஆண்டு குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நிதியை அரசு ஒதுக்கியது. இதனை உரிய பயனாளிகளுக்கு வழங்காமல் விதிமுறைகளை மீறி நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் தங்களுக்கு பயன்படுத்திக் கொண்டதாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக விருது நகரை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் உள்ளாட்சி அமைப்பு முறையீட்டு மன்றத்திடம் புகார் அளித்தார். இதனை விசாரித்த உள்ளாட்சி அமைப்பு மன்றம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரி களுக்கு உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் விருதுநகர் நகராட்சியை சேர்ந்த அலுவலர்கள் 8பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

    இது தொடர்பாக பாண்டுரங்கன் மதுரை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு போலீஸ் சூப்பி ரண்டு 8வாரங்களுக்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் அப்போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நடவ டிக்கை எடுக்காத விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மீது மதுரை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு கடந்த 13-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
    • கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் விஸ்வரூபம் ஆனதையடுத்து புகார் கூறப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப் பட்டார்.

    புதிய எஸ்.பி. நியமனம்

    தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த சிலம்பரசன் நெல்லை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டார்.

    அவர் இன்று காலை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் சாதி ரீதியான மோதல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். உளவுத்துறையின் அறிக்கை யின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.

    பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். கஞ்சா விற்பனையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எந்த நேரமும் என்னை 9498101775 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×