search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் பொதுமக்கள்-காவலர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய  போலீஸ் சூப்பிரண்டு
    X

    பொதுமக்களுடன் சேர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய காட்சி.


    தூத்துக்குடியில் பொதுமக்கள்-காவலர்களுடன் 'கேக்' வெட்டி புத்தாண்டை கொண்டாடிய போலீஸ் சூப்பிரண்டு

    • தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் புத்தாண்டு தினத்தை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.
    • இதனை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய பகுதியில் உள்ள குருஸ் பர்னாந்து சிக்னல் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் புத்தாண்டு தினத்தை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் 'கேக்' வெட்டி கொண்டாடினார்.

    இதனை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய பகுதியில் உள்ள குருஸ் பர்னாந்து சிக்னல் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் 'கேக்' வெட்டி கொண்டாடினார்.

    அப்போது பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் அவர் கேக்வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்

    நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. சத்தியராஜ், மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம்,போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகப்பெருமாள், வெங்கடேஷ், நாகராஜன் உட்பட போலீசார் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×