என் மலர்

    நீங்கள் தேடியது "tuticorin"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அப்போது, மொய்தீன் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், முனியசாமி, தனிப்பிரிவு தலைமை காவலர் முருகேசன் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, தூத்துக்குடி கோமாஸ்புரம், ராஜீவ்காந்தி ஹவுசிங் போர்டு குவாட்டர்ஸ் பகுதியில், அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் (வயது 40) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மொய்தீனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த 33 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொய்தீன் புகையிலை பொருட்களை எங்கிருந்து கொண்டு வந்தார்? எங்கு கொண்டு செல்கிறார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தூத்துக்குடியில் நடைபெற்ற தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் தங்கள் நலனை மட்டுமே சிந்தித்தார்கள் என அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டி உள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பேருந்துநிறுத்தம் அருகில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் நடைபெற்றது.

    பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் அறநிலைத்துறை மூலம் ரூ.2500 கோடி மதிப்புள்ள கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டுள்ளது. 81 கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.  வரும் ஆண்டில் ஆயிரம் கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டு குடமுழுக்கு பணிகளுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூசாரிகளுக்கு மாத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

    சமூக நலத்துறை மூலம் காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். 
    தமிழகம் முழுவதும் குழந்தைகள் கணக்கெடுப்பின் மூலம் 10 லட்சம் குழந்தைகள் சத்துக்குறைவு உள்ளது என கண்டறியபட்டு அதற்கு தேவையான ஊட்டச்சத்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

    குழந்தை பருவம் தான் நல்ல ஆரோக்கியம், மூளை வளர்ச்சி, அறிவுத்திறன் பெறும் காலம் கர்ப்பினி பெண்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்பில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு வந்து தேர்வு எழுதி அரசு பணியில் சேர்வதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தமிழில் எழுத்து தேர்வு பெற்று வெற்றி பெற வேண்டும். தமிழர்களுக்கு மட்டும்  தான் இனி அரசு வேலை என்பதை முதல்-அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

    மாவட்டத்தில் 1100 ஏக்கரில் ரூ.1400 கோடி முதலீட்டில் பர்னிச்சர் பூங்கா அமைப்பதற்காக முதல்கட்ட பணியாக சாலை போடும் பணி நடைபெறுகிறது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களிலிருந்து இங்கு தொழில் தொடங்க தயாராகி வருகின்றனர். இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்வீட்டு பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 
    அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களுக்கு மாதந்தோறும் 600 முதல் 1200 வரை மிச்சப்படுகிறது. இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில் தற்போது அதன்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி நடைபெற்ற சம்பவங்களில் ஒன்று தான். விருதுநகர் சம்பவம் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் பெண்களுக்கு எல்லா தொலை தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. 

    இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாத எடப்பாடி பழனிசாமி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்கிறார். கடந்த 10 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக வளர்ச்சிக்கென்று எந்த திட்டங்களும் செயல்படுத்தாமல் அமைச்சர்களின் நலன் மட்டுமே முக்கியம் என்று பணியாற்றினார்கள் தி.மு.க. ஆட்சியில் ஓராண்டு சாதனை அனைவரும் வரவேற்கும் வகையில் உள்ளது.
    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநில பேச்சாளர்கள் இளங்கோவன், இருதயராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா உள்பட பலர் பேசினார்கள். 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதியம்புத்தூர் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் மாரி கணேஷ் (வயது 23). இவரது மனைவி முத்துக்கொடி (21). மாரி கணேஷ் அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துக்கொடி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    சம்பவத்தன்று மாரி கணேஷ் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது மனைவியை தாக்கியதோடு அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்துக்கொடி புதியம்பு த்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாரி கணேசை கைது செய்தனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை -செட்டிக்குளம் சாலை பணி அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம்  அருகே பன்னம்பாறை விலக்கில் இருந்து செட்டிக்குளம் இடையே சுமார் 1 கி.மீ தூரமுள்ள சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் இதுகுறித்து முறையிட்டனர்.

    இதையடுத்து அவர் பரிந்துரையின்படி பன்னம்பாறை விலக்கில் இருந்து செட்டிக்குளம் இடையே சேதமான சுமார்  1400 மீட்டர் தொலைவில் சாலை அமைக்க ரூ.1கோடியே 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடக்க விழா   நடைபெற்றது. சாத்தான்குளம் நெடுஞ்சாலை உதவி பொறியாளர் விக்ரமசிங் தலைமை தாங்கினார்.

    யூனியன் தலைவர்  ஜெயபதி, மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் ஜோசப், கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர்  பார்த்தசாரதி, பன்னம்பாறை ஊராட்சித் தலைவர்   அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை ஆய்வாளர் சுப்பிரமணியன்  வரவேற்றார். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக  கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். முன்னதாக  சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    இதில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்  சங்கர், மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் எடிசன்,  நகர தலைவர் வேணுகோபால், வட்டார தலைவர்கள்  லூர்துமணி, சக்திவேல்முருகன், கோதாண்டராமன், நகர துணைத் தலைவர் கதிர்வேல், நகர மகிளா காங்கிரஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை ஆய்வாளர் முருகன் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொரோனா தடுப்பு பிரசாரங்களில் மருத்துவ மாணவர்களின் ஈடுபாடு பாராட்டுக்குரியது என தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-

    தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இப்போது 1552 படுக்கை களுடன் தேவையான மருத்துவப் பொருட்கள் மற்றும் தேவையான ஒவ்வொரு திறமையையும் கற்று பயிற்சி செய்வதற்கான வழிகள் இருப்பதால், நிஜ உலகத்தை எதிர்கொள்ளும் போதுமான அறிவும், அனுபவமும் உங்கள் அனைவருக்கும் இருப்பதாக நான் நம்புகிறேன்.

    கொரோனா தடுப்பு பிரசாரங்களில் மருத்துவ மாணவர்களின் ஈடுபாடு பாராட்டுக்குரியது. மருத்துவ மாணவர் என்ற நிலையில் இருந்து மருத்துவராக இன்று மாறியுள்ளீர்கள். பெற்றோரின் கனவை நிறைவேற்றியுள்ளீர்கள். என்னுடைய பட்டமளிப்பு விழாவில் பேசியது எனக்கு நினைவில்லை.

    மருத்துவக்கல்லூரி முதல்வர் மிகச் சிறந்த பேச்சாளர் அவருடைய பேச்சை நான் ரசிப்பேன். நீங்கள் எங்கு உட்காருகிறீர்கள் என்பது முக்கியமல்ல. எதனை அடைகிறீர்கள் என்பது தான் முக்கியம்.  கொரோனா வால் 3 ஆண்டுகள் கழித்து  இந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது. நீங்கள் கஷ்டமான காலத்தில் படித்துள்ளீர்கள்.

    உங்கள் வாழ்க்கை, எதிர்காலம் சிறந்ததாக அமையும். கொரோனா காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. அதற்கு முக்கிய காரணம் மாணவர்கள்தான். டாக்டர் ஆவது மிகப்பெரிய கனவாக உள்ளது. நிறைய பள்ளிகளில் குழந்தைகளை கேட்டால் டாக்டர் ஆக வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்.

    சிறு, சிறு தவறுகள் நடந்தா லும் கல்லூரி முதல்வர் மன்னித்து விடுவார். அனைவரும் வெவ்வேறு இடத்திற்கு போகப் போகிறீர்கள். போட்டி நிறைந்த உலகமாக உள்ளது. உங்களுடைய கைகள் ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்ட கைகள் என்று முதல்வர் கூறினார். அது உண்மையும் கூட.

    உலகம் முழுவதும் மருத்துவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். உங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களே உங்களது பெற்றோருக்கு இணையாக வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    நீங்கள் இங்கிருந்து சென்று பெரிய மருத்துவர்களாகி மீண்டும் இந்த கல்லூரிக்கு வந்து பெருமைகள் சேர்க்க வேண்டும். உங்களுக்கும், உங்களுடைய பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, துணை முதல்வர் கலைவாணி, கண்காணிப்பாளர் சைலேஸ், மருத்துவ அலுவலர் குமரன், குமாரசாமி, பேராசிரியர்கள், மருத்துவர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தூத்துக்குடியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்ததால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில 4 மண்டலம் 60 வார்டுகள் உள்ளது.மாநகர தெருக்களில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    நேற்று நள்ளிரவில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதியில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண்களை நாய்கள் விரட்டி சென்றது. இதனை  கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் போடவே விரட்டி சென்ற நாய்கள் திரும்பிச் சென்றது.

    இதுபோல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலையில் செல்லும் பொதுமக்கள் குழந்தைகளை விரட்டி விரட்டி சென்று தெரு நாய்கள் கடித்து  வருகிறது என்று  பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

    இந்நிலையில் தெரு விளக்குகள் எரியவில்லை என்று பொதுமக்கள் கூறிய புகாரை சரி செய்வதற்காக தெருக்களில் நடந்து சென்று எரியாத தெருவிளக்குகளை பார்வையிடச் சென்ற தி.மு.க. கவுன்சிலர் ஒருவரையும் தெருநாய்கள் விரட்டி கடித்து குதறியது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

     இது குறித்து மாநகர சுகாதாரத் துறையினர் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி தெரு நாய் தொல்லைகளில் இருந்து பொது மக்களை காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தூத்துக்குடி தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பெரியசாமியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தி.மு.க. முன்னாள் மாவட்ட செய லாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான  பெரியசாமியின் 5-ம்  ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு பெரியசாமியின் மனைவி எபனேசர், வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் மீனவளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, பொதுக்குழு உறுப்பினரும், மேயருமான ஜெகன் பெரியசாமி, ராஜா பெரியசாமி, அசோக்பெரியசாமி, அவரது மருமகன்கள் ஜீவன்ஜேக்கப், சுதன்கீலர், மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

     பின்னர் அசைவ உணவு பொதுமக்களுக்கு சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினார்கள்.
    மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், செந்தூர்மணி, ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், 

    மாவட்ட மாணவரணி துணைச் செயலாளரும் மாநகராட்சி மண்டல தலைவருமான வக்கீல் பால குருசாமி,  பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி அஜய்கோஷ், தொ.மு.ச. நிர்வாகிகள் முருகன், மரியதாஸ், கருப்பசாமி, சற்குணம், மின்வாரிய நிர்வாகிகள் பேச்சிமுத்து, லிங்கராஜ், அண்ணாநகர் பகுதி துணைச்செயலாளர் பாலு, வட்டச்செயலாளர்கள்  நாராயணன், ராஜா, டென்சிங், சேகர், முனியசாமி, கீதாசெல்வமாரியப்பன், ரவீந்திரன், அரசு வக்கீல் மாலாதேவி, மற்றும் சுப்பையா, சுடலைமணி, பிரபாகர், கருணா, மணி, அல்பர்ட், மகேஸ்வரன்சிங், உள்பட பலர் மரியாதை செலுத்தினார்கள்.

    39-வது வார்டு தி.மு.க. சார்பில் வட்டச்செயலாளர் கீதாசெல்வமாரியப்பன் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட பெரியசாமி படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி பொங்கலிட்டு நலத்திட்ட உதவிகளை பகுதி செயலாளரும் மாநகராட்சி சுகாதாரகுழு தலைவருமான சுரேஷ்குமார், வட்டச்செயலாளர் கீதாசெல்வமாரியப்பன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல் ஆகியோர் வழங்கினார்கள். அவைத்தலைவர் கணேச பாண்டியன், வட்டப்பிரதிநிதிகள் கார்த்திக், பொன்ராஜ், செல்வக்குமார், இளங்கோ அழகன், இளைஞர் அணி விக்னேஷ், மைதீன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தெற்கு மாவட்ட சார்பில் தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட துணைச் செயலாளர் செந்தூர்மணி தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, துணை அமைப்பாளர் அம்பாசங்கர்,  உள்பட பலர் மரியாதை செய்தனர்.

    காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் துணைத்தலைவர் பிரபாகரன், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, மற்றும் பலர் மரியாதை செலுத்தினார்கள்.
    ம.தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளரும் கோவில்பட்டி நகர்மன்ற துணைத்தலைவருமான ரமேஷ், மாவட்ட இளைஞர்அணி செயலாளர் விநாயகரமேஷ், மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், மாநகர செயலாளர் முருகபூபதி உள்பட பலர் மரியாதை செய்தனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதியம்புத்தூர் அருகே புதுப்பிக்கப்பட்ட கூட்டுறவு சங்க கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர்-தட்டப்பறை ரோட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு நாணய சங்க கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இதனால் இந்த வளாகத்தின் பின் பகுதியில் உள்ள குடோனில் தொடக்க கூட்டுறவு வங்கி செயல்பட்டு வந்தது. தற்போது சங்க கட்டிட பணி முடிந்து 6 மாதம் ஆகியும் வங்கி கட்டிடம் திறக்கப்படவில்லை. 

    குடோனில் வங்கி செயல்படுவதால் விவசாயிகளுக்கு விற்பனை செய்யக்கூடிய பொட்டாஷ், யூரியா போன்ற உரங்கள் வைக்க இடமில்லாமல் உரங்களை வாங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இப்பகுதி விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு உரங்களை வாங்க வேண்டியது உள்ளது. 

    விவசாயிகள் இந்த குடோனில் விவசாய பொருட்களை வைக்க முடிவதில்லை. எனவே புதுப்பிக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் கூட்டுறவு சங்கத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
    தென்திருப்பேரை:

    நவ திருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வைகாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. 

    ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம் நடை பெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு நேற்று காலை 6 மணிக்கு விஸ்வ ரூபம், 8 மணிக்கு ஹோமம், 9.30 மணிக்கு பூர்ணாகுதி, 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கலசங்கள் திருமஞ்சனம், 10.30 மணிக்கு திருவாரா தனம், திருமஞ்சனம் நடை பெற்றது.

    11 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை பின்னர் சுவாமி பொலிந்து நின்றபிரான், நம்மாழ்வார் வாகன குறட்டிற்கு எழுந்தருளி பொலிந்து நின்றபிரான் கருடவாகனத்திலும் நம்மாழ்வார் ஹம்ஸ வாகனத்திலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 

    இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர், நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணி கண்டன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மூழ்கிய படகை சீரமைக்க மீனவருக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ்புரம், குழந்தை தெரசம்மாள் தெருவைச் சேர்ந்த ரஹீம் என்பவர் தனக்கு சொந்தமான நாட்டுப்படகில் கடலுக்குள் சென்று சங்கு குளிக்கும் தொழிலை செய்து வருகிறார்.

    வழக்கம் போல் கடந்த 11-ந் தேதி அவர் தனது நாட்டுப்படகில் திரேஸ்புரத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அவரோடு 11 மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். அன்று வங்க கடலில் உருவான அசானி புயல் காரணமாக வங்க கடல் பகுதியில் பலத்த காற்று வீச தொடங்கியது. 

    தூத்துக்குடி கடல் பகுதியிலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் படகு சென்று கொண்டிருந்த போது சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்த காற்றின் காரணமாக கடலில் அலையின் வேகம் அதிகரித்தது. 

    இந்த நிலையில் கரை திரும்ப இருந்த நேரத்தில் கடலில் ஏற்பட்ட சீற்றத்தினால் ரஹீம் மற்றும் 11 மீனவர்கள் சென்ற படகு கடலில் மூழ்க தொடங்கியது. செய்வதறியாது திகைத்த நிலையில் படகு சிறிது,சிறிதாக கடலுக்குள் மூழ்கியது.படகில் சென்ற மீனவர்கள்  கடலுக்குள் தத்தளித்த நிலையில் சற்று தொலைவில் வேறொரு நாட்டுப் படகில் சென்ற மீனவர்கள் தத்தளித்த 11 மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

     அதன் பின்னர் ஒரு சில நாட்களுக்கு பின் கடலில் மூழ்கிய நாட்டுபடகு விசைப் படகு மற்றும் எந்திரம் மூலமாக மீட்டெடுக்கப்பட்டு திரேஸ்புரம் கடற் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.  

    இந்த படகை மட்டுமே நம்பி தொழில் செய்து வந்த ரஹீம் படகில் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக மன உளைச்சல் அடைந்தார்.அவருடைய வாழ்வாதாரமாக இருந்த படகை சரி செய்ய பணமின்றி தவித்தார்.

    அவருக்கு எந்த ஒரு அமைப்பு உட்பட யாரும் எந்த உதவியும் அளிக்கவில்லை என்ற நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் ரூ.1  லட்சம் நிதி உதவி வழங்கி படகை சரி செய்து கொடுத்துள்ளது.

     நிறுவனமும் எந்த ஒரு அமைப்பும் தனக்கு நிதியுதவி வழங்காத நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் அளித்த இந்த நிதி உதவிக்கு சங்குகுளி மீனவர் ரஹீம் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துள்ளனர். 

    தூத்துக்குடி மக்களின் துயர்துடைப்பதில் ஸ்டெர்லைட் நிறுவனம் என்றும் துணைநிற்கும் என அந்நிறுவன சமூக செயல்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.