search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில்  ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 வாலிபர்கள் கைது
    X

    தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 வாலிபர்கள் கைது

    • தூத்துக்குடி புதுகிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டு மாடியில் வாலிபர்கள் சிலர் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ஒருவர் தப்பி ஓட, மீதி 3 பேர் தப்பிச் செல்ல முடியாததால் கையில் அரிவாளுடன் போலீசாரை தாக்குவதற்காக பாய்ந்து வந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுகிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டு மாடியில் வாலிபர்கள் சிலர் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து தென்பாகம் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். திடீரென போலீசாரை கண்டதும் அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் தப்பி ஓட முயற்சித்தனர்.

    இதில் ஒருவர் தப்பி ஓட, மீதி 3 பேர் தப்பிச் செல்ல முடியாததால் கையில் அரிவாளுடன் போலீசாரை தாக்குவதற்காக பாய்ந்து வந்தனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட போலீசார் லாவகமாக அவர்களை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்த கணேஷ் (வயது 28), முத்தையாபுரத்தை சேர்ந்த ரத்தினகுமார் ஹரீஷ் (29), மற்றும் லோகேஸ்வரன் என்பது தெரிய வந்தது. அவர்கள் எதற்காக ஆயுதங்களுடன் வீட்டு மாடியில் பதுங்கி இருந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×