என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Youth arrest"
- தூத்துக்குடியில் டி.எஸ்.பி. சுரேஷ் மேற்பார்வையில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- விசாரணையில் விக்னேஸ்வரன் என்ற விக்கி விற்பனைக்காக காரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி யில் ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. சுரேஷ் மேற்பார்வையில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தூத்துக்குடி ராஜகோபால்நகர் பகுதியில் காருடன் சந்தே கத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற விக்கி (வயது 33) என்பதும், அவர் விற்பனைக்காக காரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா பதுக்கிய காரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பாக விழுப்புரம் பெரியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் 6 பவுன் தங்க செயின் திருடியது தெரியவந்தது.
- சென்னை, செங்கல்பட்டு போன்ற இடங்களில் உள்ள பல்வேறு வீடுகளில் திருடியதும், அந்த பணத்தை வைத்து பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் தாலுக்கா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் சென்னையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்த கிஷோர் (வயது 27) என்பது தெரியவந்தது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக விழுப்புரம் பெரியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் 6 பவுன் தங்க செயின் திருடியது தெரியவந்தது.
மேலும் இவர் சென்னை, செங்கல்பட்டு போன்ற இடங்களில் உள்ள பல்வேறு வீடுகளில் திருடியதும், அந்த பணத்தை வைத்து பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விழுப்புரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் ஆனந்தன், கிஷோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
- திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது வாலிபர் பள்ளி மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தி பேசிக்கொண்டிருந்தார்.
- பஸ் பயணிகள் வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது 18) என்பவர் தினமும் மாணவி பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும் பின் தொடர்ந்து சென்று காதலிக்க வற்புறுத்தி டார்ச்சர் செய்துள்ளார்.
நேற்று வழக்கம்போல் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அந்த வாலிபர் பள்ளி மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தி பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அந்த மாணவி காதலை ஏற்க மறுத்ததோடு வாலிபரை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் பள்ளி மாணவியை பொது இடத்தில் வைத்து தாக்கியுள்ளார். இதனைப் பார்த்த பஸ் பயணிகள் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீஸ்வரனை கைது செய்தனர்.
- வாடகைக்கு எடுத்து சென்ற 521 “லேப்டாப்” களையும் தினேஷ் வேறு ஒரு நிறுவனத்திடம் ரூ.80 லட்சத்துக்கு விற்று மோசடியில் ஈடுபட்டது தெரிந்து பிரேமலதா அதிர்ச்சி அடைந்தார்.
- நேரில் சென்று கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசிய தினேஷ், பிரேமலதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
போரூர்:
சென்னை நொளம்பூர், பகுதியை சேர்ந்தவர் பிரேமலதா. இவர் விருகம்பாக்கம் பகுதியில் லேப்டாப், கம்ப்யூட்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை மாத வாடகைக்கு கொடுத்து வரும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவருக்கு பம்மல் சங்கர் நகரை சேர்ந்த டிப்ளமோ பட்டதாரி தினேஷ் லிங்கம் (27) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமானார். மேலும் மாத வாடகைக்கு "லேப்டாப்"களை எடுத்து சென்று முறையாக வாடகையும் செலுத்தி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ3.5 கோடி மதிப்புள்ள 521 "லேப்டாப்"களை தினேஷ் மாத வாடகைக்கு எடுத்து சென்றார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர் "லேப்டாப்"களை திரும்ப ஒப்படைக்கவில்லை. அவரது செல்போனும் "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டு இருந்தது.
இதற்கிடையில் தன்னிடம் வாடகைக்கு எடுத்து சென்ற 521 "லேப்டாப்" களையும் தினேஷ் வேறு ஒரு நிறுவனத்திடம் ரூ.80 லட்சத்துக்கு விற்று மோசடியில் ஈடுபட்டது தெரிந்து பிரேமலதா அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி நேரில் சென்று கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசிய தினேஷ், பிரேமலதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து பிரேமலதா விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் சுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படை போலீசார் தினேஷ் லிங்கத்தை கைது செய்தனர். அவர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- பெற்றோருடன் சென்று கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி திருமணம் செய்ய மறுத்து விட்டார்.
- வாலிபரை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை:
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். கல்லூரியில் படிக்கும் போது எனக்கு நெய்வேலியை சேர்ந்த புவன் கிருஷ்ணன் (வயது 24) என்ற வாலிபருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் 2 பேரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தோம். அப்போது புவன் கிருஷ்ணன் என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார்.
அவர் என்னிடம் திருமணம் செய்வதாக உறுதியளித்து என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பின்னர் என்னை அவர் திருமணம் செய்ய மறுத்தார். பின்னர் புவன் கிருஷ்ணன் என்னிடம் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார்.
இது குறித்து நான் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி ஏற்கனவே புகார் அளித்தேன். புகாரின் பேரில் போலீசார் அவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் என்னை திருமணம் செய்வதாக போலீசாரிடம் கூறினார். ஆனால் தற்போது வரை அவர் என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார். இது குறித்து நான் எனது பெற்றோருடன் சென்று கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி திருமணம் செய்ய மறுத்து விட்டார்.
எனவே திருமணம் செய்வதாக உறுதியளித்து என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த புவன் கிருஷ்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்ய மறுத்த புவன் கிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- அழைப்பு மணியை அடித்து வீட்டில் இருந்து பெண்கள் வெளியே வந்தால் உடனடியாக தலை முடியை பிடித்து கொள்வான்.
- வீட்டில் இருக்கும் நகை, பணம், விலை உயர்ந்த பொருட்கள் எதன் மீதும் ஆசை கிடையாது.
தாம்பரம்:
பெண்களின் உள்ளத்தை திருடும் இளைஞர்களை கேள்விப்பட்டு இருப்போம். உள்ளாடைகளை திருடும் இளைஞர்களை பார்த்து இருப்போமா? இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தாம்பரத்தை அடுத்த சேலையூர் எம்.இ.சாலை, முருகன் தெரு, வீரபத்திரன் தெரு ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் கத்திமுனையில் பாலியல் சீண்டல்களில் ஒரு மர்ம மனிதன் ஈடுபட்டு வருவதாக சேலையூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அவமானம் என நினைத்து புகார் கொடுக்க எந்த பெண்ணும் முன் வரவில்லை. ஆனாலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து தேடிக்கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்களும் இரவு நேரத்தில் ரகசியமாக கண்காணித்து கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் சந்தேகப்படும்படி அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு வாலிபரை பார்த்ததும் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். அவன் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவனை வெளுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவனிடம் விசாரித்த போது அந்த நள்ளிரவு ரோமியோ அவன்தான் என்பது தெரியவந்தது. அவனது பெயர் தமிழ் பிரபு (28). கார் டிரைவராக வேலை பார்க்கிறான். சொந்த ஊர் தஞ்சாவூர். சேலையூரில் தான் வாடகை வீட்டில் தங்கி உள்ளான். இவருக்கு ஒரு வினோதமான ஆசை. பெண்களின் உள்ளாடைகளை திருடி தனது அறைக்கு கொண்டு சென்று தன் அருகே வைத்து கொண்டு தூங்குவான். மறுநாள் அதை குப்பையில் வீசி விடுவான்.
மீண்டும் அதே போல் திருடுவான். ஒரு கட்டத்தில் பெண்களை பாலியல் ரீதியாக சீண்டி பார்க்க ஆசைப்பட்டுள்ளான். அதற்காக அவர் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை தேட தொடங்கி இருக்கிறான்.
இரவில் தெருவில் சாதாரணமாக நடந்து செல்வது போல் செல்வான். அப்போது பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிடுவான். அந்த வீட்டின் முன்பு பெண்கள் செருப்பு மட்டும் கிடந்தால் பெண்கள்தான் தனியாக இருக்கிறார்கள் என்று உறுதி செய்வான்.
பின்னர் அழைப்பு மணியை அடித்து வீட்டில் இருந்து பெண்கள் வெளியே வந்தால் உடனடியாக தலை முடியை பிடித்து கொள்வான். சத்தம் போடாமல் இருப்பதற்காக தயாராக இருக்கும் கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து கொள்வான். அப்படியே வீட்டுக்குள் தள்ளி சென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவான். வேறு அந்த வீட்டில் இருக்கும் நகை, பணம், விலை உயர்ந்த பொருட்கள் எதன் மீதும் அவருக்கு ஆசை கிடையாது. சத்தமின்றி தனது ஆசை தீர சில்மிஷம் செய்து விட்டு சத்தமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி விடுவான்.
இப்படி பத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் நடந்துள்ளதாக கூறியிருக்கிறார். ஆனால் இதுவரை போலீஸ் கையில் சிக்கியது இல்லை. அதற்கு முக்கிய காரணம் பெண்கள் புகார் கொடுக்க முன் வராததுதான். இப்போதுதான் முதல் முறையாக போலீசிடம் சிக்கி இருக்கிறார்.
தமிழ்பிரபுவை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- வங்கி பண பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கியிருப்பது தெரிய வந்தது.
- டெலிகிராம் மூலம் அறிமுகமான மும்பையை சேர்ந்த க்ளோன் என்ற நபருடன் இணைந்து பல்வேறு சதி திட்டங்களை தீட்டியுள்ளனர்.
செந்துறை:
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முகமது தன்வீர்(வயது 35). இவர் தற்போது அரியலூர் ஜெஜெ நகரில் வசித்து வருகிறார்.
இவரது செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் பகுதி நேர வேலை தொடர்பாக குறுஞ்செய்தி வந்தது. இதை பார்த்து, அவர் அதில் உள்ள டெலிகிராம் குரூப்பை தொடர்பு கொண்டார். அப்போது, அதில் பேசிய நபர் தன்னிடம் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகள் கூறினார்.
இதை நம்பி, முகமது தன்வீர் பல்வேறு டாஸ்க்களை முடிப்பதற்காக பல்வேறு தவணைகளாக ரூ.12 லட்சத்து 47 ஆயிரம் செலுத்தினார். ஆனால் அவருக்கு லாப தொகை எதுவும் வழங்கப்படவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகமது தன்வீர் இது குறித்து தன்வீர் அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மர்ம கும்பல் இணையம் வழியாக இதுபோன்று பலரிடம் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இந்த கும்பல் கோடிக்கணக்கில் பணம் சுருட்டியுள்ளது. இதை தொடர்ந்து கொள்ளையர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகளில் இருந்த ரூ.78 லட்சத்து 54 ஆயிரத்து 56 யை போலீசார் முடக்கம் செய்தனர். வங்கி பண பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில் இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கியிருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிவனேசன் சுரேஷ்பாபு, சுரேஷ், ரஞ்சித் குமார் வசந்தி உள்ளிட்ட 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.
அப்போது தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், முஸ்லிம் தெருவில் பதுங்கி இருந்த மாலிக் (35). என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
மாலிக் தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் பகுதியில் ஆல்பா 3 ஐ இன்போ டெக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதில் போதிய லாபம் கிடைக்காததால், ஆன்லைனில் அதிகளவில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டார்.
இதற்காக டெலிகிராம் மூலம் அறிமுகமான மும்பையை சேர்ந்த க்ளோன் என்ற நபருடன் இணைந்து பல்வேறு சதி திட்டங்களை தீட்டியுள்ளனர். இதற்காக கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதில் சிலரை வேலைக்கு சேர்த்தனர்.
அவர்களை ஏமாற்றி பல்வேறு காரணங்கள் கூறி அவர்களுடைய பெயரில் நடப்பு வங்கி கணக்குகள் தொடங்கினர். மேலும் புதிய சிம் கார்டுகளை வாங்கி மோசடி பண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தி உள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மாலிக்கிடம் இருந்து ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்திய 4 செல்போன்கள், 15 சிம்கார்டுகள்,8 ஏ.டி.எம். கார்டுகள், ஒரு காசோலை புத்தகம், இருசக்கர வாகனம் மற்றும் ரூ.2,50,000 ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டுள்ள மும்பையை சேர்ந்து க்ளோன் உள்ளிட்ட சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- குமார் மீது கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு இருப்பது தெரியவந்தது.
- குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கே.கே. நகர்:
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஸ்கூட் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பட்டத்தி காடு கிராமத்தைச் சேர்ந்த குமார் (வயது 40 ) என்ற பயணியின் பாஸ்போர்ட்டை இமிக்ரிவேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவர் மீது கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குமாரை ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஏர்போர்ட் போலீசார் கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்களிடம் குமார் ஒப்படைக்கப்பட்டார்.
குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பாபு சிவேஷ், தனது நண்பர் ரமேசை வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் சேர்ந்து மது குடித்தார்.
- கொடுமை தாங்க முடியாமல் இருந்த இளம்பெண் விக்னேஷ்பாபுவிடம் இருந்து தப்பித்து மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் வந்தார்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே, கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதன் காரணமாக, இளம்பெண் கணவரை பிரிந்து அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்தார்.
இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பாபு சிவேஷ் ( வயது 26) இளம்பெண் தனிமையில் வசிப்பதை அறிந்து கொண்டு அவருக்கு ஆறுதல் கூறி தன்னுடன் வருமாறு அழைத்தார். பின்னர் இளம்பெண்ணிடம் அவர் திருமணம் செய்து கொள்கிறேன், உன்னை ராணிபோல் பார்த்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறினார். இதை உண்மை என நம்பிய இளம்பெண் பாபு சிவேஷ்சுடன் மேட்டுப்பாளையத்துக்கு சென்றார்.
மேட்டுப்பாளையத்தில் ராமசாமி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து இளம்பெண்ணை பாபு சிவேஷ் தங்க வைத்தார்.
அதன் பின்னர் பாபு சிவேஷ், தனது நண்பர் ரமேசை வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் சேர்ந்து மது குடித்தார். பின்னர் அவர் இளம்பெண்ணை மிரட்டி 2 பேரும் ஒன்றாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதனால் பயந்த இளம்பெண் நடந்த சம்பவங்களை யாரிடமும் சொல்லாமல் இருந்தார்.
மேலும் 2 பேரும் மாதக்கணக்கில் வீட்டில் அடைத்து வைத்து இளம்பெண்ணை அவ்வப்போது பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். இதோடு விடாமல் அந்த இளம்பெண்ணை கோவை மற்றும் ஊட்டி ஆகிய பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்களுக்கு அழைத்து சென்று பலருடன் உடலுறவு கொள்ள வைத்து பணம் சம்பாதித்து வந்தனர்.
கொடுமை தாங்க முடியாமல் இருந்த இளம்பெண் விக்னேஷ்பாபுவிடம் இருந்து தப்பித்து மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் வந்தார். பின்னர் நடந்த சம்பவங்களை இளம்பெண் உறவினர்களிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய ராகுல், நீலகிரி மாவட்டம் கூடலூர் சேரம்பாடி சேர்ந்த செந்தில்குமார் (36) ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பாபு சிவேசை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ரமேஷ் என்பவர் உள்பட பலரை போலீசார் தேடி வருகின்றனர்.