என் மலர்
நீங்கள் தேடியது "gun shot"
- இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நபரை பிடித்து அந்நாட்டினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாகவே கொடைக்கானலில் இஸ்ரேல் நாட்டினர் வந்தவண்ணம் உள்ளனர்.
கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.
அவர்கள் இங்கு 10 நாட்களுக்கு மேல் தங்கியிருந்து பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பிறகு சொந்த நாட்டுக்கு திரும்புவார்கள்.
குறிப்பாக இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூதர்கள் கொடைக்கானல் அருகில் உள்ள வட்டகானல் பகுதியில் சுமார் 1 மாதம் வரை தங்கி ஓய்வு எடுத்து செல்வது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களாகவே கொடைக்கானலில் இஸ்ரேல் நாட்டினர் வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டும் மலை உச்சியில் அமர்ந்து தியானம் செய்தும் தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.
இவர்கள் தங்கியுள்ள பகுதிக்கு முன்பாக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வெளிநபர்கள் அல்லது சந்தேகப்படும்படியான நபர்கள் வருகிறார்களா? என சோதனையிட்டு வருகிறார்கள்.
24 மணி நேரமும் செயல்படும் இந்த சோதனைச்சாவடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் 20க்கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் யூதர்களை குறிவைத்து நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நபரை பிடித்து அந்நாட்டினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொடைக்கானல் வட்டகானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டினர் தங்கியுள்ள பகுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சி.சி.டி.வி. காமிராக்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு சந்தேகப்படும்படியான நபர்கள் வருகிறார்களா? என சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- நக்சலைட்டுகளை தேடும் வேட்டை நடைபெற்று வருகிறது.
- சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இதுவரை 284 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் கோலப்பள்ளி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக மாவட்ட ரிசர்வ் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து இன்று காலை பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பெண் உள்பட 3 நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள். 3 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக சுக்மா மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு கிரண் சவால் தெரிவித்தார். அந்த பகுதியில் தொடர்ந்து நக்சலைட்டுகளை தேடும் வேட்டை நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இதுவரை 284 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் சுக்மா, பிஜப்பூர், தாண்டிவாடா உள்பட 7 மாவட்டங்களில் 255 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் கரிதாபாத் மாவட்டத்திலும், சவுக்கி மாவட்டத்தில் 2 நக்சலைட்டுகளும் கொல்லப்பட்டனர்.
- துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்மநபரை மடக்கிப் பிடித்தனர்.
- துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணம் பிராங்க்போர்ட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பல்கலைக்கழக வளாகத்துக்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதில் ஒரு மாணவர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒரு மாணவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக பல்கலைக்கழகத்துக்கு வந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்மநபரை மடக்கிப் பிடித்தனர்.
மேலும், படுகாயம் அடைந்த மாணவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்ததால் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருந்தில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓடினர்.
- துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஸ்டாக்டனில் உள்ள விருந்து மண்டபத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது அங்கு துப்பாக்கி சூடு நடந்தது. இதனால் விருந்தில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓடினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கி சூடு நடத்தியவர் யார்? என்ன காரணம்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சிகிச்சை பலனின்றி பெண் பாதுகாப்பு படைவீரர் சாரா பெக்ஸ்ட்ரோம் பரிதாபமாக உயிரிழந்தார்.
- மற்றொரு இளைஞன் ஆண்ட்ரூ வுல்ப் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே நேற்று மர்ம நபர் ஒருவர் அங்கு ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.
இதில் ஒரு ஆண், ஒரு பெண் என 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். உடனே சுதாரித்த மற்ற பாதுகாப்பு படை வீரர்கள் அந்த மர்ம நபரை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர். படுகாயமடைந்த வீரர்களை உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனின்றி பெண் பாதுகாப்பு படைவீரர் சாரா பெக்ஸ்ட்ரோம் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர்," மிகவும் மதிக்கப்படும் ஒரு அற்புதமான இளம் வீரரை நாடு இழந்துள்ளது. அவர் இப்போது நம்முடன் இல்லை. அவரை காப்பாற்ற முடியாத எங்களை இப்போது அவர் இழிவாக எண்ணிக்கொண்டிருப்பார். அவரது பெற்றோர்களுக்கு நாங்கள் ஆறுதலாக இருக்கிறோம். நடந்ததை சரி செய்யமுடியாது.
இது தற்செயலாக நடந்த ஒன்று. தாக்குதலில் பாதிக்கப்பட்ட 24 வயதே ஆன மற்றொரு இளைஞன் ஆண்ட்ரூ வுல்ப் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவர் உயர்பிழைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்றார்.
துப்பாக்கி சூடு நடத்திய ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 29 வயதான ரகமானுல்லா லகன்வால் பற்றி சி.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா ராணுவம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த காலக் கட்டத்தில் சி.ஐ.ஏ.வின் ஆதரவு பெற்ற ஆப்கானிஸ்தான் ரகசிய போராட்டக்குழுவான ஜீரோ யூனிட்டில் ரகமானுல்லா லகன்வால் பணியாற்றினார்.
கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து தனது ராணுவத்தை திரும்பப் பெற்றதையடுத்து, அப்போதைய அதிபர் ஜோபைடனின் அலைஸ் வெல்கம் திட்டத்தின் கீழ் ரகமானுல்லா அமெரிக்கா வில் குடியேறினார்.
இந்த குடியேற்றத்தை ஜோபைடன் அரசு பல வழிகளில் நியாயப்படுத்தியது.
பாதுகாப்பு படை வீரர்களை மிக அருகிலிருந்து சுட்டதால் நாம் இப்போது இளம் வீரரை இழந்துள்ளோம் என சி.ஐ.ஏ. இயக்குனர் ராட்கிளிப் தெரிவித்துள்ளார்.
- துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
- முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து உள்ளது. அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.
அமெரிக்காவின் டெக் சாஸ் நகரில் வடக்கு பகுதியில் உள்ள வணிக வளாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வாலிபர் ஒருவர் திடீரென கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
இதைப்பார்த்த மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரும் தனக்குதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் துப்பாக்கியால் சுட்டவர் பெயர் ஜோஸ் ஹெர்னாண்டஸ் காலோ (வயது 21) என அடையாளம் காணப்பட்டு உள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரும் சக ஊழியர்கள் என்பதும் தெரியவந்தது.
இந்த சம்பவத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- ஆப்கானிஸ்தான்- பாக்., சண்டையை முடிவுக்கு கொண்டு வர பலகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
- ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுவை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 206 பேர் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அண்டை நாடான பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டு வரும் தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுவை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 206 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக தலிபான் நடத்திய தாக்குதலில் 23 வீரர்கள் உயிர் இழந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர பலகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக இறுதிகட்ட பேச்சுவார்த்தை இஸ்தான்புல்லில் நடந்தது.
இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தெற்கு கந்தஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் என்ற இடத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிர் இழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தான் முதலில் துப்பாக்கி சூடு நடத்தியது என்றும் இதனால் பதிலடி கொடுக்க வேண்டியது இருந்தது என்றும் பாகிஸ்தான் கூறி இருக்கிறது.
- துப்பாக்கிச் சூடு குறித்து ராணுவம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
- ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நவ்காம் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு பதிலடியாக உடனே இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் இது போர் நிறுத்த மீறலாகாது என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் துப்பாக்கிச் சூடு குறித்து ராணுவம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியது.
இதையடுத்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதற்கு தக்க பதிலடியை இந்திய ராணுவம் கொடுத்தது. பின்னர் இரு நாட்டு ராணுவங்கள் இடையே சண்டை மூண்டது.
4 நாள் மோதலுக்கு பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்கிடையே ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
- குற்ற வழக்கு தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்ய சென்றனர்.
- துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் மத்திய பென்சில்வேனியாவில் உள்ள யாக் கவுண்டி பகுதியில் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்ய சென்றனர்.
அப்போது போலீசார் மீது வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 போலீஸ் அதிகாரிகள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய நபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்தியர்கள் சிலரின் உதவியுடன் வங்காள தேசத்தை சேர்ந்த இருவர் கால்நடை தலைகளை கடத்த முயன்றது தெரியவந்தது.
- எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இந்தியா வங்காளதேச எல்லையான மேற்கு வங்கத்தில் சந்தேகத்திற்கு இடமாக சிலர் நடமாடுவதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கவனித்தனர். அப்போது சிலர் இந்தியர்கள் சிலரின் உதவியுடன் வங்காள தேசத்தை சேர்ந்த இருவர் கால்நடை தலைகளை கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை ஊர் திரும்பும்படி எல்லை காவல் படையினர் எச்சரித்தனர். ஆனால், கடத்தல்காரர்கள் உயர் பீம் டார்ச் லைட்களை அடித்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீது அடித்தும், மூங்கில் கம்பு மற்றும் கற்களை வீசியும் தாக்கியும் உள்ளனர்.
இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
- ஜாம்நகர் மருத்துவ கல்லூரிக்கு உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
- துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
குஜராத்தில் டிசம்பர் மாதம் 1ம் தேதி, 5ம் தேதி ஆகிய 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மணிப்பூரை சேர்ந்த இந்திய ரிசர்வ் பட்டாலியன் துணை ராணுவ படையினர், போர் பந்தலில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள துக்டா கோசா பகுதியில் உள்ள புயல் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு துணை ராணுவ படையை சேர்ந்த வீரர்களுக்கு இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. அப்போது ராணுவ வீரர் ஒருவர் சக ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
துப்பாக்கி சூட்டில் மேலும் 2 ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஒருவருக்கு வயிற்றிலும், மற்றொருவருக்கு காலிலும் காயம் ஏற்பட்டது.
அவர்கள் உடனடியாக போர் பந்தலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக ஜாம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் தொய்பாசிங், ஜிதேந்திரா சிங் என்று தெரியவந்தது.
மேலும் சொராஜித், ரோஹிகானா ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது இனாவ்ச்சா சிங் என்று தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவருமே மணிப்பூரை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த மோதலுக்கான காரணம் என்ன என்று உடனடியாக தெரியவில்லை.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக அங்கு கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளதாக மாவட்ட மாஜிஸ்திரேட் அசோக் சர்மா தெரிவித்துள்ளார்.
- பயங்கரவாதிகள் தொடர்ந்து சுட்டுக் கொண்டே இருந்ததால் பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் அதிரடி தாக்குதலை மேற்கொண்டனர்.
- காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்த திட்டமிட்டிருந்த மிகப்பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டு உள்ளது.
காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 15 கிலோ கண்ணிவெடி குவியலை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து அழித்தனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீரில் மிகப்பெரிய நாசவேலைக்கு முயற்சி செய்தது. இதன் மூலம் தெரியவந்தது. இதையடுத்து காஷ்மீர் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் காஷ்மீரில் சிட்ரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் காரில் ஊடுருவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர்.
அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையின்போது 4 பயங்கரவாதிகள் ஒரு வாகனத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. பாதுகாப்பு படையினரை கண்டதும் அவர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர்.
பயங்கரவாதிகளை உயிருடன் பிடிக்க பாதுகாப்பு படையினர் முதலில் முயற்சி செய்தனர். ஆனால் பயங்கரவாதிகள் தொடர்ந்து சுட்டுக் கொண்டே இருந்ததால் பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் அதிரடி தாக்குதலை மேற்கொண்டனர்.
காலை 7.30 மணிக்கு தொடங்கிய துப்பாக்கி சண்டை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. 8.30 மணி அளவில் பயங்கரவாதிகள் தரப்பில் இருந்து சுடுவது நின்றது.
அதன்பிறகு அந்த வாகனத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்த திட்டமிட்டிருந்த மிகப்பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது.






