என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Naxalites"
- சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது
- நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் அதிகம் உள்ளது
இந்திய பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் இம்மாதம் பல்வேறு தேதிகளில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தல்களுக்கும் டிசம்பர் 3 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
மத்திய இந்தியாவில் உள்ள அதிகளவு வனப்பிரதேசங்களை கொண்ட மாநிலமான சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது. அம்மாநில சட்டசபையில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன.
நாளை அங்கு 20 இடங்களுக்கு முதற்கட்ட தேர்தலும், மீதமுள்ள 70 இடங்களுக்கு வரும் 17-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கெனவே அங்கு அமலில் உள்ளது.
அம்மாநில பஸ்டார் (Bastar) பகுதியில் 12 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவோயிஸ்ட்கள் மற்றும் நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல் பெருமளவு உள்ள பகுதி என்பதால் சுமார் 60 ஆயிரம் சீருடை பணியாளர்களை காவலுக்கு தேர்தல் ஆணையம் பணியில் அமர்த்தி உள்ளது. இவர்களில் 40 ஆயிரம் மத்திய ஆயுத காவல் படையினர் (CAPF) மற்றும் 20 ஆயிரம் மாநில காவல்துறையினர் அடங்குவர். இப்பணியில் பெண் கமாண்டோ படையினரும், நக்சலைட்டு எதிர்ப்பு பிரிவு வீரர்களும் அடங்குவர்.
மொத்தம் 5304 வாக்குச்சாவடிகள் நாளைய தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாதுகாப்பு காரணங்களுக்காக 149 வாக்குச்சாவடிகள் காவல் நிலையங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட தேர்தலில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 25 பேர் பெண்கள்.
சுமார் 40,78,681 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 19,93,937 பேர் ஆண்கள், 20,84,675 பேர் பெண்கள் மற்றும் 69 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
கடந்த 2018 சட்டசபை தேர்தலில் 68 இடங்களை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், 15 இடங்களை பாரதிய ஜனதா கட்சியும் பெற்றன. தற்போதைய தேர்தலில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.வும் மும்முரமாக போராடி வருகின்றன.
- இருவரும் மாவட்டத்தின் பெஜ்னி பகுதியில் பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
- மாநில அரசின் சரணடைதல் கொள்கையின்படி இருவருக்கும் மறுவாழ்வு அளிக்க முடிவு.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா என்ற பகுதயில், சட்டவிரோத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாத குழு உறுப்பினர் உள்பட இரண்டு நக்சலைட்டுகள் இன்று சரணடைந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சரணடைந்த தேவா மற்றும் எர்ரா ஆகிய இருவரும், "மனிதாபிமானமற்ற மற்றும் வெற்று மாவோயிஸ்ட் சித்தாந்தத்தால் தாங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், எனவே ஆயுதங்களைக் கீழே போட முடிவு செய்துள்ளதாகவும்" போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
தேவா ஒரு போராளி படைப்பிரிவின் உறுப்பினராகவும், எர்ரா போராளிகளின் ஒரு பிரிவாகவும், சட்டவிரோதமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) கொரோஷேகுடா புரட்சிகர மக்கள் கவுன்சிலின் (ஆர்பிசி) விவசாயக் குழு உறுப்பினராகவும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் மாவட்டத்தின் பெஜ்னி பகுதியில் பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.
இந்நிலையில், மாநில அரசின் சரணடைதல் கொள்கையின்படி தேவாவுக்கும், எர்ராவுக்கும் மறுவாழ்வு அளிக்கப்படும் என்று மேலும் கூறினர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வானவர் கிடாரி சர்வேஸ்வரா ராவ்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர். பிறகு ஆளும் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சந்திரபாபு நாயுடு அரசு கொறடா பொறுப்பை வழங்கி இருந்தது.
இவர் தனது அரக்கு தொகுதியில் உள்ள குடா கிராமம் உள்பட பல இடங்களில் கருங்கல் குவாரிகளை நடத்தி வந்தார். அந்த குவாரிகளால் தங்களது வீடுகள் சேதம் அடைவதாக பழங்குடி இன மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். அதோடு கிடாரி சர்வேஸ்வரா ராவுக்கு எதிராக கிராம மக்கள் போராட்டங்களும் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மக்களை பாதிக்கும் செயல்களை சர்வேஸ்வரா ராவ் நிறுத்த வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் கடிதம் மூலமாகவும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் எச்சரித்தனர். அதை சர்வேஸ்வரா ராவ் கண்டு கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து அவரை கொலை செய்யப் போவதாக மாவோயிஸ்டுகள் கடந்த ஏப்ரல் மாதம் கடிதங்கள் மூலம் மிரட்டல் விடுத்தனர்.
மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் குறித்து ஆந்திர போலீசார் கடந்த சில மாதங்களாக அடிக்கடி எம்.எல்.ஏ. சர்வேஸ்வரா ராவை உஷார்படுத்தியபடி இருந்தனர். ஆனால் சர்வேஸ்வர ராவ் போலீஸ் எச்சரிக்கையை கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் செப்டம்பர் 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ஒரு வார காலத்தை தங்கள் அமைப்பின் உதய வாரமாகக் கொண்டாடப்போவதாக அறிவித்தனர். எனவே இந்த கால கட்டத்தில் மாவோயிஸ்டுகள் கொலை பட்டியலில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் உஷாராக இருக்கும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ.வுக்கு போலீசார் பிரத்யேகமாக கடிதம் அனுப்பி இருந்தனர். அதில் மாவோயிஸ்டுகள் செப்டம்பர் 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை உதய தினம் கொண்டாடுவதால் நீங்கள் இந்த ஒரு வாரம் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். வீட்டிலேயே இருப்பது நல்லது” என்று அறிவுறுத்தி இருந்தனர்.
போலீசாரின் இந்த குறிப்பிட்ட எச்சரிக்கையையும் சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ. உதாசீனப்படுத்தினார். ஆந்திரா-ஒடிசா எல்லை அருகே தனது தொகுதிக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நேற்று நடந்த “கிராமதர்சினி” திட்ட விழாவில் கலந்து கொள்ள சென்றார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமாவும் சென்றிருந்தார்.
பிறகு அவர்கள் இருவரும் அருகில் உள்ள மற்ற கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்தனர். நிகழ்ச்சிகளை முடித்து விட்டு அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கார்களில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
துடாங்கி எனும் கிராமம் அருகே அவர்கள் கார்கள் வந்து கொண்டிருந்தபோது ஏராளமான பெண் தீவிரவாதிகள் உள்பட சுமார் 40- மாவோயிஸ்டுகள் வழி மறித்தனர். கார்கள் நின்றதும் பின்னால் இருந்து வந்த சுமார் 20 பேர் முற்றுகையிட்டனர். அவர்கள் 60 பேரும் நவீன துப்பாக்கிகள் வைத்திருந்தனர்.
எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கார்களுக்கு பாதுகாப்பாக சென்றிருந்த 2 போலீசார் உள்பட சிலர் காரில் இருந்து இறங்கி சென்று மாவோயிஸ்டுகளை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். உடனே மாவோயிஸ்டுகள் காவலர்களிடம் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடுமாறு உத்தரவிட்டனர்.
பயந்து போன காவலர்கள் அடுத்த நிமிடமே துப்பாக்கிகளை கொடுத்து விட்டு ஓடி விட்டனர்.
இதையடுத்து மாவோயிஸ்டுகள் காரில் இருந்து எம்.எல்.ஏ. சர்வேஸ்வரா ராவையும், முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமாவையும் காரில் இருந்து இறக்கினார்கள். பிறகு அவர்களை அருகில் உள்ள காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு சுமார் 10 நிமிடங்கள் எம்.எல்.ஏ.வுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பேச்சு நடந்தது.
மாவோயிஸ்டுகள் வழக்கமாக கடத்தி வருபவர்களை கோர்ட்டில் விசாரிப்பது போல விசாரித்து விட்டு சுட்டுக் கொல்வது வழக்கம். அதுபோல்தான் சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ.விடம் மாவோயிஸ்டுகள் விசாரித்ததாக கூறப்படுகிறது.
அந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா தப்பி ஓட முயன்றார். உடனடியாக அவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர். அடுத்ததாக சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ.வையும் சுட்டுக் கொன்றனர்.
சர்வேஸ்வரா ராவை நோக்கி மாவோயிஸ்டுகள் மொத்தம் 6 ரவுண்டுகள் சுட்டனர். இதில் எம்.எல்.ஏ.வின் உடல் சல்லடையாக துளைக்கப்பட்டது. அவர் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். பிறகு அவர்களது உடல்களை போட்டு விட்டு மாவோயிஸ்டுகள் தப்பி ஓடி விட்டனர்.
எம்.எல்.ஏ. சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ. உடலை மீட்டு விசாகப்பட்டினத்துக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே தகவல் அறிந்ததும் சர்வேஸ்வராராவ் குடும்பத்தினரும் அங்கு விரைந்தனர்.
இதையடுத்து பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். என்றாலும் ஆங்காங்கே அசம்பாவித சம்பவங்கள் நடந்தன.
இதற்கிடையே தெலுங்கு தேசம் தொண்டர்களும் போராட்டத்தில் குதித்தனர். சில இடங்களில் போலீசார் மீது தாக்குதல்கள் நடந்தன. அதுமட்டுமின்றி எதிரே வந்த வாகனங்கள் அனைத்தையும் அடித்து உடைத்து சூறையாடி னார்கள்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த கலவரத்தால் முற்றிலும் சேதம் அடைந்தன. நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடும் சேதம் அடைந்துள்ளன.
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ. சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் கலெக்டர்களை தொடர்பு கொண்டு நிலவரத்தை விசாரித்தார்.
கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி உத்தரவிட்டார். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகளை வேட்டையாடவும் அவர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ஆந்திரா, ஒடிசா எல்லை பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாவோயிஸ்டுகளை பிடிப்பதற்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்களும் ரோந்து சென்று மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணித்தது.
தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் அடர்ந்த காட்டுக்குள் தப்பி சென்று விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் யார் என்பதும் தெரிய வந்துள்ளது.
ஆந்திராவில் மாவோயிஸ்டுகளின் சிறப்பு மண்டல கமிட்டி தலைவராக இருக்கும் பிரதாப் ரெட்டி என்ற சலாபதி தலைமையில் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 வாரங்களாக இவர் தாக்குதல் நடந்த பகுதியில் சுற்றி திரிந்ததாக தெரிய வந்துள்ளது. எனவே தாக்குதலை மிக மிக திட்டமிட்டு மாவோயிஸ்டுகள் நடத்தி இருப்பது தெரிகிறது.
இதற்கிடையே போலீசாரில் சிலர் சலாபதியின் மனைவி அருணா தலைமையிலான மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதாக சொல்கிறார்கள். முதலில் ஆந்திரா-ஒடிசா எல்லையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ராமகிருஷ்ணா என்பவர் தலைமையிலான மாவோயிஸ்டு குழுவினர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று கருதப்பட்டது.
ஆனால் தற்போது சலாபதியின் கைவரிசை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் தலைமையிலான மாவோயிஸ்டுகளை வேட்டையாட போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். #TDPMLA #MLAKidariSarveswaraRao
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 1980-ம் ஆண்டு நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. அதே ஆண்டு ஆகஸ்ட் 6-ந் தேதியான இதே நாளில், ஏலகிரியில் நக்சலைட்டுக்கு மூளையாக செயல்பட்டுவந்த சிவலிங்கத்தை போலீசார் மடக்கிபிடித்து ஜீப்பில் ஏற்றி சென்றனர்.
திருப்பத்தூர் அருகே சேலம் சாலையில் சென்ற போது, நக்சலைட்டு சிவலிங்கம் மறைத்து எடுத்து வந்த நாட்டு வெடிகுண்டை ஜீப்பில் வீசி விட்டு, சினிமா பாணியில் எகிறி குதித்து தப்பி சென்றார். வெடிகுண்டு வெடித்ததில் ஜீப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் பழனிசாமி, ஏட்டு ஆதிகேசவலு மற்றும் போலீஸ்காரர்கள் ஏசுதாஸ், முருகேசன் ஆகிய 4பேர் பலியாகினர்.
வேலூரில் இன்ஸ்பெக்டர் பழனிசாமி இறுதி சடங்கு நடந்தது. அதில், அப்போதைய முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். பங்கேற்று சவ ஊர்வலத்தில் நடந்தே சென்றார். மேலும், போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தை, வேலூரில் உள்ள அண்ணா கலை அரங்கத்தில் எம்.ஜி.ஆர். நடத்தினார். நக்சலைட்டுகளை அடியோடு ஒழிக்க போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, வட ஆற்காடு சரக டி.ஐ.ஜி.யாக இருந்த வால்டர் தேவாரம் தலைமையிலான போலீசார் நக்சலைட்டுகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை தொடங்கினர். அப்போது, தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிர்நீத்த 4 போலீசாருக்கும் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டது. ஆண்டுதோறும் அங்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி, வீரமரணமடைந்த போலீசாருக்கு 38-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடந்தது.
30 துப்பாக்கி குண்டுகள் முழங்க சோக கீதம் இசைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி, முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் மற்றும் டி.ஐ.ஜி. வனிதா, எஸ்.பி. பர்வேஷ்குமார், கியூபிரிவு எஸ்.பி. தர்மராஜன், நல்லதம்பி எம்.எல்.ஏ. மற்றும் பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற டி.ஜி.பி. தேவாரம் பேசியதாவது:-
நக்சலைட்டுகளை ஒழிப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு தான் முக்கிய காரணம். வீரமரணமடைந்த இன்ஸ்பெக்டர் பழனிசாமிக்கு அப்போது, 7 வயதில் அஜந்தா என்ற மகள் இருந்தார். அவரது மகளின் பெயரில் அஜந்தா ஆபரேசன் தொடங்கப்பட்டு நக்சலைட்டுகள் அடியோடு ஒழிக்கப்பட்டனர். தமிழகத்தில் தற்போது நக்சலைட்டுகள் நடமாட்டம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #WalterDevaram
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்