என் மலர்
நீங்கள் தேடியது "naxalites"
- சிறப்பு அதிரடிப்படை, கோப்ரா வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- அடர்ந்த காட்டில் நடைபெற்ற சண்டையில் 8 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் இன்று நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
சிறப்பு அதிரடிப்படை (SIT) கோப்ரா (CoBRA) படை வீரர்களுடன் உள்ளூர் போலீஸ் குழுவினர் சேர்ந்து மெய்ன்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நக்சலைட்டுகளுக்கும்- வீரர்களுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் குறைந்தது 8 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராய்ப்பூர் சரக ஐஜி தெரிவித்துள்ளார்.
- தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
- பல மாவோயிஸ்டுகளின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா-நாராயண்பூர் எல்லையில் அபுஜ்மத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
பாதுகாப்பு படை வீரர்களின் தாக்குதலில் 5 முதல் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். பாதுகாப்பு படையின் பதிலடி தாக்குதலில் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். பல மாவோயிஸ்டுகளின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
- கடந்த மூன்று நாட்களில் முக்கிய தலைவர் உள்பட 7 பேர் சுட்டுக்கொலை.
- நேற்றிரவு மற்றும் இன்று காலை நடைபெற்ற சண்டையில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையில் நடைபெற்ற என்கவுண்டரில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கடந்த மூன்று நாட்களில் முக்கிய தலைவர்கள் சுதாகர், பாஸ்கர் உள்பட 7 நக்சலைட்டுகள் சுட்டு வீ்ழ்த்தப்பட்டனர்.
பிஜாபூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் நடைபெற்ற நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஏழு நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்திப்பட்டனர். அவர்களின் உடல்களை பாதுகாப்புப்படையினர் கண்டெடுத்துள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு நடைபெற்ற சண்டைக்குப்பிறகு 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இன்று காலை இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சிறப்பு அதிரடிப்படை (Special Task Force), மாவட்ட ரிசர்வ் கார்டு (District Reserve Guard), மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) சிறப்புக் குழுவான CoBRA ஆகியவை இணைந்து கடந்த 4ஆம் தேதி ரகசிய தகவல் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நேற்று பாஸ்கர் சுட்டு வீழ்த்தப்பட்டார். நேற்று முன்தினம் சுதாகர் சுட்டு வீழ்த்தப்பட்டார். இவர்களது தலைக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சுட்டுக்கொலை செய்யப்பட்ட மற்ற 5 பேர்களில் இருவர் பெண்கள் ஆவார்கள். இந்த சண்டையின்போது பாம்பு, தேனீக்கள் காரணமாக சில வீரர்கள் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- வரிசையாக வைக்கப்பட்டிருந்த சடலங்களுக்கு முன்னால் ஆயுதங்களுடன் நடனமாடி புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
- இந்த நடவடிக்கைகள் போர்க்குற்றங்களுக்குச் சமம்.
நக்சலிசத்தை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று மத்திய அரசு சபதம் எடுத்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மேடைதோறும் இதேயே முழங்கி வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான நக்சலைட்டுகள் பாதுகாப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வரம்பற்ற என்கவுன்டர்கள் குறித்து கவலை தெரிவித்து வெளிநாடு வாழ் இந்தியர்களின் அமைப்புகள் கூட்டாக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், இந்தியாவில் கல்வி சுதந்திரத்திற்கான சர்வதேச ஒற்றுமை (InSAF India), SOAS Bla(c)k Panthers, இந்திய தொழிலாளர் சங்கம் GB, இந்திய தொழிலாளர் ஒற்றுமை (UK) உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன.
கடந்த மாதம் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் காட்டில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் நம்பலா கேசவ ராவ் மற்றும் 26 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இதில் 12 பெண்களும் அடங்குவர்.
நக்சல்கள் பேசுவார்த்தைக்கு சம்மதித்தும் மத்திய அரசு அதை ஏற்காமல் பாசிச போக்குடன் நடந்து கொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் இந்த என்கவுன்டர்களை மையப்படுத்தி கண்டன அறிக்கை வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கர் என்கவுன்டர்கள்
அந்த அறிக்கையில், "சத்தீஸ்கரில் உள்ள பஸ்தர் பிரிவின் நாராயண்பூர் மாவட்டத்தில் அபுஜ்மத் பகுதியில் கடந்த மே 21, 2025 அன்று 28 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உட்பட, ஆதிவாசி பகுதிகளில் மாநில மற்றும் மத்தியப் படைகள் தொடர்ந்து கொலைகளை செய்து வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதே அளவில், சத்தீஸ்கர் காவல்துறையினர், கொல்லப்பட்ட எட்டு பேரின் உடல்களை சட்டவிரோதமாக எரித்ததையும் கண்டிக்கிறோம்"
"ஆரம்பத்திலிருந்தே அரசின் நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியின்படி இல்லாமல், திட்டமிட்ட கொடுமையின் வடிவமாகவே இருந்துள்ளன. கொலைகளைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் பொதுவெளியில் அதை கொண்டாடினர்.
வரிசையாக வைக்கப்பட்டிருந்த சடலங்களுக்கு முன்னால் ஆயுதங்களுடன் நடனமாடி புகைப்படங்களை எடுத்துள்ளனர். எந்த ஒரு முறையான நடைமுறையும் இல்லாமல் தனது சொந்த குடிமக்களைக் கொல்வதில் அரசின் வெற்றியை இது வெளிப்படுத்துகிறது" என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உடல்கள் முறையாக பாதுகாக்கப்படாமல் சிதைக்க விடப்பட்டதாகவும், உடல்களைப் பெற வந்த குடும்பத்தினர் துன்புறுத்தப்பட்டு வாய்மொழியாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆதாரங்களை அழித்து நீதித்துறை ஆய்வைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, வாழ்க்கையிலும் இறப்பிலும் கண்ணியத்திற்கான உரிமையை உத்தரவாதம் செய்யும் இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கடுமையான மீறல் என்று அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
"சட்டத்திற்குப் புறம்பான மரணதண்டனை, உடல்களை வலுக்கட்டாயமாக எரித்தல், குடும்பங்களுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் உடல்களை வேண்டுமென்றே மறைத்தல் ஆகியவை மனிதாபிமானச் சட்டத்தை மீறுவதாகும். இந்த நடவடிக்கைகள் போர்க்குற்றங்களுக்குச் சமம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சிபிஐ (மாவோயிஸ்ட்) மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து போர்நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான பல கோரிக்கைகள் இருந்தபோதிலும், அரசாங்கம் இந்தப் படுகொலையை நடத்தியது மற்றும் சொந்த குடிமக்களை பொதுவில் சட்டவிரோதமாக எரித்தது வருத்தமளிக்கிறது" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"சர்வதேச சமூகமும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இந்த அநீதிக்கு எதிராக அவசரமாகவும், வலுவாகவும், சமரசமில்லாமலும் பதிலளிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
நாராயண்பூரில் நடந்தது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல. இது ஒரு திருப்புமுனை. இந்த மோதல் தீர்க்கப்படாவிட்டால் இதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்" என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கிழக்கு என்றால் அதிகாரம் அளித்தல், செயல்படுதல், வலுப்படுத்துதல் மற்றும் மாற்றம் என்று பொருள்.
- கடந்த10 ஆண்டுகளில் வடகிழக்கில் கல்வித்துறையில் ரூ. 21 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று முன்னேறி வரும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
வடகிழக்கு நமது நாட்டின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பகுதியாகும். வர்த்தகம் முதல் பாரம்பரியம் வரை, ஜவுளி முதல் சுற்றுலா வரை, வடகிழக்கின் பன்முகத்தன்மை அதன் பலமாக இருந்து வருகிறது.
வடகிழக்கு என்றால் உயிரியல் பொருளாதாரம், மூங்கில், தேயிலை உற்பத்தி, பெட்ரோலியம், விளையாட்டு, திறன், சுற்றுச்சூழல் சுற்றுலாவின் வளர்ந்து வரும் மையம் மற்றும் கரிமப் பொருட்களுக்கான புதிய உலகம் ஆகும்.
அது ஆற்றலின் சக்தி மையமாக உள்ளது. வடகிழக்கு நமக்கு அஷ்டலட்சுமி போன்றது.
எங்களுக்கு கிழக்கு என்பது வெறும் திசையல்ல. கிழக்கு என்றால் அதிகாரம் அளித்தல், செயல்படுதல், வலுப்படுத்துதல் மற்றும் மாற்றம் என்று பொருள்.
ஒரு காலத்தில் வடகிழக்கு ஒரு எல்லைப் பகுதி மட்டுமே என்று அழைக்கப்பட்டது. இன்று அது வளர்ச்சியின் முன்னணியில் மாறி வருகிறது. அங்கு சிறந்த உள்கட்டமைப்பு சுற்றுலாவை கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது மற்றும் முதலீட்டாளர்களுக்கு அதிக நம்பிக்கையை அளிக்கிறது.
வடகிழக்கில் ஒரு உள்கட்டமைப்பு புரட்சியை நாங்கள் தொடங்கினோம். அது இப்போது வாய்ப்புகளின் பூமியாக மாறி வருகிறது. வடகிழக்கு பிராந்தியம் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.
அதன் வளர்ச்சியை விரைவுபடுத்த நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கடந்த10 ஆண்டுகளில் வடகிழக்கில் கல்வித்துறையில் ரூ. 21 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, நக்சலிசமாக இருந்தாலும் சரி, எங்கள் அரசு சகித்து கொள்ளாது. வடகிழக்கு முன்பு குண்டுகள், துப்பாக்கிகள், ராக்கெட்டுகளுக்கு இடையே இருந்தது. அவை அங்குள்ள இளைஞர்களிடமிருந்து பல வாய்ப்புகளைப் பறித்தன. கடந்த 10 ஆண்டுகளில் வடகிழக்கில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வன்முறையை கைவிட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, மைய நீரோட்டத்தில் சேருங்கள்.
- வளர்ச்சிக்கு நமக்குத் தேவை துப்பாக்கிகள் அல்ல, கணினிகள்.
சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்திற்கு பழங்குடி கலாச்சார நிகழ்வான பஸ்தர் பந்தமின் நிறைவு விழாவவில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில அவர் பேசியதாவது, பஸ்தரில் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்புகள் நடந்த காலம் போய்விட்டது. இன்றும் கூட, ஆயுதம் ஏந்திய அனைத்து நக்சலைட் சகோதரர்களுக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், உங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, மைய நீரோட்டத்தில் சேருங்கள்.
நீங்கள் எங்களில் ஒருவர். ஒரு நக்சலைட் கொல்லப்படும்போதெல்லாம், யாரும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஆனால் இந்தப் பகுதி வளர்ச்சியை விரும்புகிறது. சரணடைந்த நக்சலைட்டுகள், வளர்ச்சிக்கு நமக்குத் தேவை துப்பாக்கிகள் அல்ல, கணினிகள் என்றும், பேனாக்கள் தேவை IEDகள் அல்லது குண்டுகள் அல்ல என்றும் புரிந்துகொள்கிறார்கள்.
2025 ஆம் ஆண்டில், மூன்று மாதங்களில் 521 நக்சலைட்டுகள் சரணடைந்தனர், கடந்த ஆண்டு 881 பேர் சரணடைந்தனர். இன்னும் ஆயுதங்களை வைத்திருக்க விரும்புபவர்களை ராணுவம் கையாளும். என்ன நடந்தாலும், அடுத்த மார்ச் மாதத்திற்குள் முழு நாடும் நக்சல்களிடமிருந்து விடுபடும்" என்று அமித் ஷா கூறினார்.
- வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- தப்பி ஓடிய மற்ற நக்சலைட்டுகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர்.
போபால்:
மத்தியப் பிரதேச மாநிலம் மண்டலா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த என்கவுண்ட்டரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய மற்ற நக்சலைட்டுகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர். சண்டை நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
- இருவரும் மாவட்டத்தின் பெஜ்னி பகுதியில் பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
- மாநில அரசின் சரணடைதல் கொள்கையின்படி இருவருக்கும் மறுவாழ்வு அளிக்க முடிவு.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா என்ற பகுதயில், சட்டவிரோத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாத குழு உறுப்பினர் உள்பட இரண்டு நக்சலைட்டுகள் இன்று சரணடைந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சரணடைந்த தேவா மற்றும் எர்ரா ஆகிய இருவரும், "மனிதாபிமானமற்ற மற்றும் வெற்று மாவோயிஸ்ட் சித்தாந்தத்தால் தாங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், எனவே ஆயுதங்களைக் கீழே போட முடிவு செய்துள்ளதாகவும்" போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
தேவா ஒரு போராளி படைப்பிரிவின் உறுப்பினராகவும், எர்ரா போராளிகளின் ஒரு பிரிவாகவும், சட்டவிரோதமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) கொரோஷேகுடா புரட்சிகர மக்கள் கவுன்சிலின் (ஆர்பிசி) விவசாயக் குழு உறுப்பினராகவும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் மாவட்டத்தின் பெஜ்னி பகுதியில் பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.
இந்நிலையில், மாநில அரசின் சரணடைதல் கொள்கையின்படி தேவாவுக்கும், எர்ராவுக்கும் மறுவாழ்வு அளிக்கப்படும் என்று மேலும் கூறினர்.
- சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது
- நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் அதிகம் உள்ளது
இந்திய பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் இம்மாதம் பல்வேறு தேதிகளில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தல்களுக்கும் டிசம்பர் 3 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
மத்திய இந்தியாவில் உள்ள அதிகளவு வனப்பிரதேசங்களை கொண்ட மாநிலமான சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது. அம்மாநில சட்டசபையில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன.
நாளை அங்கு 20 இடங்களுக்கு முதற்கட்ட தேர்தலும், மீதமுள்ள 70 இடங்களுக்கு வரும் 17-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கெனவே அங்கு அமலில் உள்ளது.
அம்மாநில பஸ்டார் (Bastar) பகுதியில் 12 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவோயிஸ்ட்கள் மற்றும் நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல் பெருமளவு உள்ள பகுதி என்பதால் சுமார் 60 ஆயிரம் சீருடை பணியாளர்களை காவலுக்கு தேர்தல் ஆணையம் பணியில் அமர்த்தி உள்ளது. இவர்களில் 40 ஆயிரம் மத்திய ஆயுத காவல் படையினர் (CAPF) மற்றும் 20 ஆயிரம் மாநில காவல்துறையினர் அடங்குவர். இப்பணியில் பெண் கமாண்டோ படையினரும், நக்சலைட்டு எதிர்ப்பு பிரிவு வீரர்களும் அடங்குவர்.
மொத்தம் 5304 வாக்குச்சாவடிகள் நாளைய தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாதுகாப்பு காரணங்களுக்காக 149 வாக்குச்சாவடிகள் காவல் நிலையங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட தேர்தலில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 25 பேர் பெண்கள்.
சுமார் 40,78,681 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 19,93,937 பேர் ஆண்கள், 20,84,675 பேர் பெண்கள் மற்றும் 69 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
கடந்த 2018 சட்டசபை தேர்தலில் 68 இடங்களை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், 15 இடங்களை பாரதிய ஜனதா கட்சியும் பெற்றன. தற்போதைய தேர்தலில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.வும் மும்முரமாக போராடி வருகின்றன.
- பயங்கரவாதத்தை தடுப்பதில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
- இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் எதுவும் இல்லை.
ராஞ்சி, மே. 4-
பிரதமர் மோடி இன்று காலை ஜார்கண்ட் மாநிலம் பாலமுவில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
2014-ம் ஆண்டு உங்கள் வாக்கு மூலம் ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசை அகற்றினீர்கள். ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், பீகார், ஆந்திராவில் நக்சலைட்டுகள் பயங்கரவாதத்தை பரப்பி வந்தனர்.
எனவே பல தாய்மார்கள் தங்கள் மகன்களை இழந்தனர். அவர்களது மகன்கள் கெட்ட சகவாசத்தால் ஆயுதம் ஏந்திக் காடுகளை நோக்கி ஓடினார்கள். ஜார்கண்ட மாநிலம் நக்சலைட்டுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
பா.ஜ.க. ஆட்சியால் உங்களது ஒவ்வொரு வாக்கும் இளம் பிள்ளைகளை காப்பாற்றியது. அவர்களின் தாய்மார்களின் நம்பிக்கையை நிறைவேற்றியது. இதுதான் ஒரு வாக்கின் பலம். உங்கள் ஒரு வாக்கின் மதிப்பை உணர்ந்து கொள்ளுங்கள், அதன் விளைவாக ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. 500 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு ராமர் கோவில் கட்ட உங்கள் ஒரு வாக்கு பங்களித்தது.
உங்களின் வாக்கு பயங்கரவாதத்தை தடுப்பதில் எங்களுக்கு உதவியது. பயங்கரவாதத்தை தடுப்பதில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதம் அதிகமாக இருந்தது. தற்போது இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் இல்லை.
ஒரு காலத்தில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பலவீனமான காங்கிரஸ் அரசு உலகம் முழுவதும் சென்று கதறி அழுதது. இப்போது பாகிஸ்தான் உலகம் முழுவதும் கதறிக் கொண்டிருக்கிறது. சர்ஜிக்கல் மற்றும் பாலகோட் தாக்குதல்கள் பாகிஸ்தானை உலுக்கியது.
துல்லிய தாக்குதல்களால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் தலைவர்கள், காங்கிரசின் இளவரசர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் வலுவான இந்தியா தற்போது வலுவான அரசாங்கத்தை மட்டுமே விரும்புகிறது.
ஏழைகளுக்கு காந்தி குடும்பம் எதையும் செய்யவில்லை. அவர்களது தலைமுறைக்காக ஏழைகளிடம் இருந்து கொள்ளையடித்தனர்.
காங்கிரசும், ஜார்கண்ட முக்தி மோர்ச்சா கட்சியும் அவர்களது பிள்ளைகளுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நான் உங்களது பிள்ளைகளுக்காக உழைத்து கொண்டிருக்கிறேன். நான் மக்கள் பணி செய்வதற்காக பிறந்தவன்.
கடந்த 25 ஆண்டுகளாக முதல்வராகவும், பிரதமராகவும் இருக்கும் என் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை. எனக்கு சொந்தமாக வீடு இல்லை, சைக்கிள் கூட இல்லை. ஊழல் நிறைந்த ஜார்கண்ட முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ் தலைவர்கள் தங்களது வாரிசுகளுக்காக பெரும் சொத்து குவித்துள்ளனர்.
ஆனால் எனது வாரிசுகள் நீங்கள் அனைவரும்தான். உங்கள் பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் என் வாரிசுகள். வளர்ச்சியான பாரதத்தை உங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரியமாக கொடுக்க விரும்புகிறேன். என் குடும்பமும், கோடிக்கணக்கான குடும்பங்களும் சந்திக்க நேர்ந்ததை (வறுமை) நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை.
வறுமையின் வலி பற்றி எனக்கு தெரியும். நான் ஏழ்மையில் வாழ்ந்தேன். ஒரு ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது என்பதை அறிவேன். கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் எனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை.
நான் பயனாளிகளை சந்திக்கும் போது எனக்கு ஆனந்தக் கண்ணீர் வரும். ஏழ்மையையும், போராட்டத்தையும் கண்டவர்களால்தான் இந்த கண்ணீரைப் புரிந்து கொள்ள முடியும். தனது தாய் அடுப்பில் புகையால் இருமுவதைக் காணாதவரால் இந்த கண்ணீரைப் புரிந்து கொள்ள முடியாது.
மோடியின் கண்ணீரில் காங்கிரசின் இளவரசர் (ராகுல் காந்தி) தனது மகிழ்ச்சியைத் தேடுகிறார். வறுமை பற்றி காங்கிரசுக்கு என்றைக்குமே தெரியாது. காங்கிரஸ் இளவரசர் தான் பணக்காரராக இருப்பதற்காக பெருமைபட்டுக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் வறுமையில் வாழ்வதை நான் விரும்பவில்லை. வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.
நான் உயிருடன் இருக்கும் வரை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியல் சட்டத்தை மாற்றுவதில் காங்கிரசின் எந்த வடிவமைப்பையும் வெற்றிபெற அனுமதிக்க மாட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நக்சல் தடுப்பு வேட்டையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
- நக்சல் தடுப்பு வேட்டையில் நக்சல் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை.
சத்தீஸ்கரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் கங்களூர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
நக்சல் தடுப்பு வேட்டையில் நக்சல் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபூர் மாவட்டம் அடுஜ்மத் வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படை வீரர்களும், 4 மாவட்ட போலீசாரும் இணைந்து நக்சல்வேட்டையில் ஈடுபட்டனர்.
நக்சலைட்டுகளும், பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்கினார்கள். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.
இந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.






