என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நக்சலைட்டுகள் சரண்"

    • 'பூனா மார்கம்' (புனர்வாழ்வு) திட்டத்தின் கீழ் சரணடைந்தனர்.
    • சோதி ராஜே மற்றும் மாட்வி புதாரி ஆகியோர் மீது தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் இன்று தங்களது ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தனர்.

    நக்சலைட்டுகளின் தெற்கு பஸ்தர் பிரிவின் கிஸ்தாரம் பகுதி குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களான இவர்கள் மாநிலத்தின் 'பூனா மார்கம்' (புனர்வாழ்வு) திட்டத்தின் கீழ் சரணடைந்தனர் என்று பஸ்தர் காவல்துறைத் தலைவர் சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, மாநில அரசின் சரணடைதல் மற்றும் புனர்வாழ்வுக் கொள்கையால் தாங்கள் ஈர்க்கப்பட்டதாக அந்த நக்சலைட்டுகள் தெரிவித்தனர் என்று கூறினார்.

    சரணடைந்தவர்களில் சோதி ஜோகா பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. 5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. டபார் கங்கா மாட்கம் கங்கா, சோதி ராஜே மற்றும் மாட்வி புதாரி ஆகியோர் மீது தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மூத்த போலீஸ் அதிகாரிகள் முன்பு அவர்கள் சரண் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மாவோயிஸ்டு தலைவர்கள் பழங்குடியினரின் உண்மையான எதிரிகள்.

    சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் 16 நக்சலைட்டுகள் சரண் அடைந்தனர். போலீஸ் நிலையத் தில் மூத்த போலீஸ் அதிகாரிகள் முன்பு அவர்கள் சரண் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் அதில் இருந்து விலகி சரண் அடைந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

    விசாரணையின் போது மாவோயிஸ்டு தலைவர்கள் பழங்குடியினரின் உண்மையான எதிரிகள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • சரண் அடைந்த நக்சலைட்டுகளில் 3 பேர் பெண்கள்.
    • பெரும்பாலானோர் நக்சலைட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மர்ஜூம் பகுதியில் வசிப்பவர்கள்.

    புதுடெல்லி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் 8 பேர் போலீசில் சரண் அடைந்தனர். இவர்களில் 3 பேர் பெண்கள். இவர்கள் பல ஆண்டுகளாக நக்சல் அமைப்பில் செயல்பட்டு வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் நக்சலைட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மர்ஜூம் பகுதியில் வசிப்பவர்கள்.

    காவல்துறை நடவடிக்கையால் இதுவரை மொத்தம் 639 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே தண்டேவாடாவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது 6 நக்சலைட்டுகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இருந்து வெடிபொருட்கள் மற்றும் ரூ.54 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×