என் மலர்
நீங்கள் தேடியது "நக்சலைட்டுகள் சரண்"
- மூத்த போலீஸ் அதிகாரிகள் முன்பு அவர்கள் சரண் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மாவோயிஸ்டு தலைவர்கள் பழங்குடியினரின் உண்மையான எதிரிகள்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் 16 நக்சலைட்டுகள் சரண் அடைந்தனர். போலீஸ் நிலையத் தில் மூத்த போலீஸ் அதிகாரிகள் முன்பு அவர்கள் சரண் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் அதில் இருந்து விலகி சரண் அடைந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
விசாரணையின் போது மாவோயிஸ்டு தலைவர்கள் பழங்குடியினரின் உண்மையான எதிரிகள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
- சரண் அடைந்த நக்சலைட்டுகளில் 3 பேர் பெண்கள்.
- பெரும்பாலானோர் நக்சலைட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மர்ஜூம் பகுதியில் வசிப்பவர்கள்.
புதுடெல்லி:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் 8 பேர் போலீசில் சரண் அடைந்தனர். இவர்களில் 3 பேர் பெண்கள். இவர்கள் பல ஆண்டுகளாக நக்சல் அமைப்பில் செயல்பட்டு வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் நக்சலைட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மர்ஜூம் பகுதியில் வசிப்பவர்கள்.
காவல்துறை நடவடிக்கையால் இதுவரை மொத்தம் 639 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே தண்டேவாடாவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது 6 நக்சலைட்டுகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இருந்து வெடிபொருட்கள் மற்றும் ரூ.54 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.






