search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Station"

    • பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களை ஒப்படைத்து வருகின்றனர்.
    • கோபிசெட்டி பாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் மொத்தம் 291 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர்.

    கோபி:

    தேர்தல் நடைபெறும் போது உரிமம் பெற்ற துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கு உத்தரவிடப்படுவது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களை ஒப்படைத்து வருகின்றனர்.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் மொத்தம் 291 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கோபி, கவுந்தப்பாடி, திங்களூர், நம்பியூர், கடத்தூர், வரப்பாளையம், சிறுவலூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இதுவரை 111 பேர் தங்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.

    • சிறிது காலம் வேலையை நிறுத்திவிட்டு கனகராஜ் மீண்டும் வீடு கட்டும் பணியை தொடங்கினார்.
    • இடம் தனக்கு உரிமையானது என்று கூறிய கனகராஜ் வாதிட்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே அமைந்துள்ளது சிலமலை கிராமம். இங்கிருந்து போடி செல்லும் ராணி மங்கம்மாள் சாலை அருகே ஜமீன் பைபாஸ் வண்டிப் பாதையில் சுமார் 34 சென்ட் நிலம் போடி சரக போக்குவரத்து போலீஸ் நிலையம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீண் உமேஷ் டோங்கரே தலையீட்டின் பேரில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    மேலும் சிலமலை ஊராட்சி மன்ற கூட்டத்தில் போலீஸ்நிலையம் கட்டுவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்நிலையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் புதிய போக்குவரத்து போலீஸ் நிலையம் கட்டுவதற்கு அனுமதி பெற்று நிதி ஒதுக்கீடு கூறி விண்ணப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில் சிலமலை அருகில் உள்ள ராணி மங்கம்மாள் சாலை வண்டிப்பாதை அருகே வசித்து வரும் கனகராஜ் என்பவர் போலீஸ் நிலையம் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 34 சென்ட் நிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து புதிதாக வீடு கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு கட்டிடப் பணிகளை தொடங்கினார்.

    அஸ்திவாரங்கள் தோண்டப்படும் நிலையில் தகவல் அறிந்த போலீசார் சம்பந்தப்பட்ட நபரை எச்சரித்து பணியை நிறுத்துமாறு கூறினார். இதனால் சிறிது காலம் வேலையை நிறுத்திவிட்டு கனகராஜ் மீண்டும் வீடு கட்டும் பணியை தொடங்கினார்.

    தற்போது அஸ்திவாரங்களில் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டு சுவர் எழுப்பப்படும் நிலையில் தகவல் அறிந்த போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கனகராஜிடம் வேலையை நிறுத்தும்படியும், இல்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

    மேலும் அப்பகுதியை சர்வே செய்ததில் அப்பகுதியில் உள்ள 34 சென்ட் நிலம் சிட்டா அடங்கல் பட்டாவில் வண்டிப்பாதையாக குறிப்பிட்டுள்ளது.

    இருந்தபோதும் இந்த இடம் தனக்கு உரிமையானது என்று கூறிய கனகராஜ் வாதிட்டார். அதனையடுத்து ஆவணங்களை காட்டி இந்த இடம் உங்களுடையது இல்லை என கூறினார். மேலும் அப்பகுதிக்கு ஜே.சி.பி இயந்திரத்தை கொண்டு வந்து புதிதாக கட்டப்பட்ட சுவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து கனகராஜ் தானே புதிதாக கட்டிய சுவர்களை அகற்றினார். அதன்பின் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

    • புகார் அளிக்க வந்த பவானியை சேர்ந்த பரத் என்பவர் படுகாயம்.
    • சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு.

    சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில், ஆய்வு செய்வதற்காக சுத்தம் செய்தபோது பட்டாசு வெடித்து சிதறியது.

    திடீரென பட்டாசு வெடித்ததில் மியாமத்துல்லா என்பவர் உயிரிழந்துள்ளார். புகார் அளிக்க வந்த பவானியை சேர்ந்த பரத் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    பட்டாசு வெடித்ததில் காவல் நிலைய மேற்கூரை சரிந்து விழுந்து மியாமத்துல்லா உயிரிழந்துள்ளார்.

    இந்த விவகாரத்தை தொடர்ந்து, சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    விபத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நள்ளிரவு மர்ம நபர்கள் 2 பேர், தாலுகா போலீஸ் நிலையம் உள்ளே புகுந்தனர்.
    • போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி:

    ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டராக ஷாபுதீன் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் பணி புரிகின்றனர்.

    இந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் வழிப்பறி, திருட்டு மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் பைக்குகளை, போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    மேலும், மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்த 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு பாதுகாப்பு பணிக்காக இங்குள்ளபோலீசார் சென்றனர்.

    ஒரு சில போலீசார் இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு மர்ம நபர்கள் 2 பேர், தாலுகா போலீஸ் நிலையம் உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பைக்குகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சென்று 50-க்கும் மேற்பட்ட, பைக்குகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு' தப்பித்து சென்றனர்.

    சிறிது நேரத்தில் பைக்குகள் அனைத்தும் தீப்பற்றி எரிந்தது. திடீரென உள்ளே பைக்குகள் தீப்பற்றி எரிவதை கண்ட போலீசார் விரைந்து சென்று தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அதற்குள் பல பைக்குகள் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • குறவைய்யாவை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது சம்பந்தமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், தாடி பத்திரி, சி.பி.ஐ காலனியை சேர்ந்தவர் ராம குறவைய்யா. கடந்த மாதம் 25-ந் தேதி ராம குறவைய்யாவுக்கும் அவரது நண்பருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் காயம் அடைந்த நண்பர் இது குறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அமீத்கான் வழக்கு பதிவு செய்து குறவைய்யாவை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தார்.

    பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து குறவைய்யாவின் மூக்கு மற்றும் காதில் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்தார். இதில் குறவைய்யாவின் மூக்கு மற்றும் காதில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து குறவைய்யாவை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து குறவைய்யா அனந்தபூர் போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜனிடம் புகார் செய்தார். மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது சம்பந்தமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

    விசாரணையில் இன்ஸ்பெக்டர் அமித்கான் என்பவர் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது தெரிய வந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பு ராஜன் தெரிவித்தார்.

    • அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • திரு.வி.க. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொளத்தூர்:

    சென்னை பெரவள்ளூர், கே.சி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் இம்மானுவேல்(25). இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் நேற்று மாலை திரு.வி.க. நகர் போலீஸ் நிலையத்திற்கு திடீரென இமானுவேல் வந்தார். அப்போது அவர் போலீசார் தன் மீது அடிக்கடி பொய் வழக்கு போடுவதாக கூறியபடி பிளேடால் கழுத்து மற்றும் இடது கையை அறுத்துக் கொண்டார்.

    இதில் அவர் ரத்தம் சிந்தியபடி மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இம்மானுவேலுக்கு 20 தையல்கள் போடப்பட்டது. அவருக்கு அங்கு தொடர்ந்து சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திரு.வி.க. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு ஆவணங்கள் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசனை அழைத்து விவரம் கேட்டுள்ளார்.
    • போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டிக்கு தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜ்குமார் பணிபுரிந்து வருகிறார். சப்-இன்ஸ்பெக்டராக கதிரேசன் உள்ளார்.

    இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு ஆவணங்கள் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசனை அழைத்து விவரம் கேட்டுள்ளார்.

    இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த விளக்கம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு திருப்தி ஏற்படவில்லை.

    இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அங்கிருந்த போலீசார் 2 பேரையும் சமாதானம் செய்தனர். பின்னர் 2 பேரும் போலீஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

    போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டிக்கு தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரித்து அவர்களை கண்டித்துள்ளார். அதன் பிறகு 2 பேரும் பணிக்கு திரும்பினர்.

    பொதுமக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டிய போலீசாரே போலீஸ் நிலையத்தில் மல்லுக் கட்டிய சம்பவம் நெட்டப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புதிய கட்டிடத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டாலும் அதனை சுற்றி உள்ள சுமார் 3 ஏக்கர் அரசு நிலம் முட்புதர்களாக கிடந்தன.
    • விவசாயிகள் போன்று தினந்தோறும் தோட்டத்தை பார்வையிட்டு கீரைகள், செடிகளுக்கு தேவையான தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழகம்-ஆந்திரா எல்லையில் ஆர்.கே.பேட்டை அருகே உள்ளது பொதட்டூர்பேட்டை. மாவட்ட எல்லையின் கடைசி போலீஸ்நிலையம் இங்கு அமைந்து உள்ளது. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதட்டூர் போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டாலும் அதனை சுற்றி உள்ள சுமார் 3 ஏக்கர் அரசு நிலம் முட்புதர்களாக கிடந்தன.

    இதனை பயன் உள்ளதாக மாற்ற திட்டமிட்ட போலீசார் அந்த நிலத்தை சீரமைத்து முள்வேலி அமைத்து உள்ளனர். மேலும் மூலிகை மற்றும் காய்கறி தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார்கள்.

    இந்த தோட்டத்தில் துளசி, கற்பூரவள்ளி, சிறியாநங்கை, பாகற்காய் , அருகம்புல், ஓமவல்லி, ஆடாதொடை, தூதுவளை, எலுமிச்சை, கருந்துளசி, வாழை, முருங்கை, வள்ளிக்கிழங்கு, கொய்யா, மாமரம், தென்னை மரம், முசுமுசுக்கை, கீழாநெல்லி, வெண்டைக்காய், கத்தரி போன்ற பல்வேறு வகையான மூலிகை, காய்கறி செடிகளையும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொன்னாங்கண்ணி, பசலை, முளைக்கீரை, மணத்தக்காளி, வல்லாரை போன்ற பலவகைக் கீரைகளையும் வளர்த்து வருகின்றனர். இதனால் தற்போது பொதட்டூர் பேட்டை போலீஸ்நிலையத்தை சுற்றிலும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவின் மேற்பார்வையில் போலீசார் தங்களது அன்றாட கடமைகளுடன் இந்த காய்கறி, மூலிகை தோட்டத்தையும் சிறப்பாக கவனித்து வருகிறார்கள். விவசாயிகள் போன்று தினந்தோறும் தோட்டத்தை பார்வையிட்டு கீரைகள், செடிகளுக்கு தேவையான தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.

    போலீசாரின் இந்த முயற்சிக்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், திருத்தணி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் ஆகியோர் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாரை பாராட்டி உள்ளனர்.

    இதனால் இந்த போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்கவும், விசாரணைக்கு வருபவர்களும் தங்கள் பிரச்சினைகளை மறந்து, அந்தத் தோட்டத்தை ஆர்வத்துடன் சுற்றிப்பார்த்து செல்கின்றனர். மேலும், தங்களுக்குத் தேவையான மூலிகைகளை அனுமதிபெற்று பறித்துச்செல்கின்றனர்.

    • இவர் பலரிடம் ஆடுகளை ஓப்படைத்து மேய்ச்சலுக்கு அனுப்பி வைப்பார்.
    • இது குறித்து கேள்வி கேட்ட ஓடையாருக்கு, கருணைகுமார் சரியாக பதில் கூறவில்லை

    கள்ளக்குறிச்சி:

    திருநெல்வேலி மாவட்டம் இளையான்குடி அருகில் உள்ள பிரம்மச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஒடையார் (வயது 53). செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் பலரிடம் ஆடுகளை ஓப்படைத்து மேய்ச்சலுக்கு அனுப்பி வைப்பார். அதற்கு அவர்களுக்கு கூலிப் பணம் கொடுத்துவிடுவார். இவர் திருவாரூர் மாவட்டம் கிடார் கிராமத்தை சேர்ந்த கருணைகுமார் (23) என்பவரிடம் 200 ஆடுகளை ஓப்படைத்து மேய்ச்ச லுக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு வந்த ஆட்டின் உரிமையாளர் ஒடையார், கருணை குமாரை தொடர்பு கொண்டு ஆடுகள் எங்குள்ளன என்று கேட்டார்.

    உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள சேந்தநத்தத்தில் பட்டி போட்டு ஆடுகளை மேய்த்து வருவதாக கருணைகுமார் கூறியுள்ளார். அங்கு சென்ற ஒடையார், ஆடுகளை எண்ணிப்பார்த்தார். 10 ஆடுகள் குறைவாக இருந்தது. இது குறித்து கேள்வி கேட்ட ஓடையாருக்கு, கருணைகுமார் சரியாக பதில் கூறவில்லை. இது குறித்து திருநாவலூர் போலீசாரிடம் ஆட்டின் உரிமையாளர் ஒடையார் புகார் கொடுத்தார். அதன்பேரில் கருணை குமாரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் கருணைகுமாரும், ராமநாதபுரம் மாவட்டம் சந்திரகுடியை சேர்ந்த கலைச்செல்வனும் ஆடுகளை திருடி விற்றது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், கருணைகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள கலைச்செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • திசையன்விளை அருகே உள்ள நந்தன்குளம் தசரா குழுவினர் ஒலிபெருக்கியை பயன்படுத்தி ஆடல், பாடல் நடத்தி கொண்டு இருந்தனர்.
    • தகவல் அறிந்து அங்கு சென்ற திசையன்விளை போலீசார் ஒலிபெருக்கி வைத்து ஆடல், பாடல் நடத்த அனுமதி இல்லை என்று கூறி ஒலிபெருக்கியை எடுத்து சென்றனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள நந்தன்குளம் தசரா குழுவினர் ஒலிபெருக்கியை பயன்படுத்தி ஆடல், பாடல் நடத்தி கொண்டு இருந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற திசையன்விளை போலீசார் ஒலிபெருக்கி வைத்து ஆடல், பாடல் நடத்த அனுமதி இல்லை என்று கூறி ஒலிபெருக்கியை எடுத்து சென்றனர்.

    இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் இந்து முன்ணியினர் திசையன்விளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்தனர். அதை தொடர்ந்துகோவில் தர்மகர்தாவிடம் போலீசார் ஒலிபெருக்கியை ஒப்படைத்தனர். பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • திருமண நிகழ்ச்சிக்காக வங்கி லாக்கரிலிருந்து நகைகளை எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்தேன்.
    • விட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது தங்க நகைகளை காணவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழவாசல் சாமியப்பா பிள்ளை வீதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா கமால் பாட்ஷா.

    இவரது மனைவி தாகிருநிசா பேகம் (வயது 58).

    இவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் எனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக வங்கி லாக்கரிலிருந்து நகைகளை எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்தேன்.

    அதில் இருந்து 24 பவுன் தங்க நகைகளை மட்டும் வீட்டில் ஒரு அறையில் வைத்து விட்டு மீதி நகைகளை கழுத்தில் அணிந்து கொண்டு திருமண நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றேன்.

    திரும்பி வந்து பார்த்தபோது வைத்திருந்த இடத்தில் 24 பவுன் தங்க நகைகளை காணவில்லை.

    வீட்டின் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    எனது வீட்டில் பணிபுரி வர்கள் மீது சந்தேகம் உள்ளது.

    காணாமல் போன நகைகளை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டரை விட போலீஸ் மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது.
    • அரசின் நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கான திட்டம் என்று கருத்து நிலவியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் போலீஸ் நிலையங்களை வாடகைக்கு எடுக்கலாம் என்று கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. போலீஸ் நிலையத்துடன் இன்ஸ்பெக்டர் மோப்பநாய், வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்டவைகளையும் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

    மேலும் ஒவ்வொரு வசதிக்கான கட்டண பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு போலீஸ் நிலையத்திற்கு ரூ12 ஆயிரம், வயர்லெஸ் கருவிகளுக்கு ரூ12ஆயிரத்து 130, மோப்ப நாய்க்கு ரூ7ஆயிரத்து 280, போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ3 ஆயிரத்து 35 முதல் ரூ3ஆயிரத்து 340 வரை என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மொத்தமாக ஒரு போலீஸ் நிலையம், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், வயர்லெஸ் கருவிகள், மோப்பநாய் என அனைத்தும் சேர்த்து ரூ34 ஆயிரத்து 750 கட்டணமாக இருக்கிறது. இன்ஸ்பெக்டருக்கு பதிலாக சிவில் போலீஸ அதிகாரிக்கான கட்டணம் ரூ610 ஆகும்.

    காவல்துறை வெளியிட்டுள்ள இந்த பட்டிலின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டரை விட போலீஸ் மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது. ஆனால் அதற்கான காரணம் தெளிவாக கூறப்படவில்லை.

    காவல்துறையின் இந்த முடிவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அரசு அதிகாரிகள் சிலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

    அரசின் நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கான திட்டம் என்று கருத்து நிலவியது. ஆனால் இது நிதிநிலையை உயர்த்துவதற்கான திட்டம் இல்லை என்றும், இது ஏற்கனவே உள்ள பழைய திட்டம் எனவும், புதிய கட்டணங்களுடன் தற்போது வெளிவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ×