என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசாரம்"

    • நடிகர் சூர்யாவின் அகரம் பவுன்டேஷன் விழாவில் சனாதானம் குறித்து கமல் பேசியிருந்தார்.
    • 'கமல் கழுத்தை அறுத்து விடுவேன்' என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

    விஜய் டிவியில் `பாண்டியன் ஸ்டோர்ஸ்', சன் டிவியில் `மருமகள்' ஆகிய சீரியல்களில் நடித்தவர் ரவிச்சந்திரன்.

    இவர் யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு ஆதாரவாக அரசியல் கருத்துகளை பேசி வருகிறார்.

    சில மாதங்களுக்கு முன், நடிகர் சூர்யாவின் அகரம் பவுன்டேஷன் விழாவில் சனாதானம் குறித்து கமல் பேசிய தை கண்டித்து நடிகர் ரவிச்சந்திரன் யூடியூப் வலைதளத்தில், 'கமல் கழுத்தை அறுத்து விடுவேன்' என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

    இதுதொடர்பாக மக்கள் நீதி மயயம் சார்பில் இவர் மீது போலீஸில் புகார் தரப்பட்டது. இந்த புகாரில் கைதில் இருந்து தப்பிக்க ரவிச்சந்திரன் முன்ஜாமீன் பெற்றார்.

    இந்நிலையில் தற்போது பாஜகவில் நடிகர் ரவிச்சந்திரனுக்கு மாநில பிரச்சார அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    • நாளை 2 இடங்களில் நடைபெற இருந்த இபிஎஸ் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • பிரசாரம் நடைபெறுவதற்கு ஒருநாளே இருக்கும் நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதிமுக சார்பில் தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை 2 இடங்களில் நடைபெற இருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, குமாரபாளையம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் நாளை நடைபெறவிருந்த எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு அதிமுகவினர் தேர்வு செய்த இடங்கள் நெடுஞ்சாலை பகுதியாக இருப்பதால் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

    பிரசாரம் நடைபெறுவதற்கு ஒருநாளே இருக்கும் நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மேகுமாரபாளையம், திருச்செங்கோடு தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட பரமத்திவேலூர்-பொத்தனூர் நான்கு ரோடு சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமி பேச போலீசில் அனுமதி கேட்கப்பட்டது.
    • அனுமதி கேட்ட இடங்களுக்கு போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நாமக்கல்:

    தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி கடந்த 19-ந்தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20-ந்தேதி நாமக்கல் மற்றும் பரமத்திவேலூரிலும், 21-ந் தேதி திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையத்திலும் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் நடக்க இருந்தது. ஆனால் மழை காரணமாக அவரின் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பதிலாக அக்டோபர் 5 மற்றும் 6-ந்தேதிகளில் பிரசாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருச்செங்கோடு தொகுதியில் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகிலும், அதன்பிறகு குமாரபாளையம் தொகுதியில் ஓலப்பாளையத்தில் உள்ள தியேட்டர் அருகிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய போலீசில் அனுமதி கேட்கப்பட்டது. அதேபோல், நாளை மறுநாள் (6-ந்தேதி) மாலையில் நாமக்கல் பழைய பஸ் நிலையம் அருகிலும், அதைத்தொடர்ந்து பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட பரமத்திவேலூர்-பொத்தனூர் நான்கு ரோடு சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமி பேச போலீசில் அனுமதி கேட்கப்பட்டது.

    இதற்கிடையே அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய திருச்செங்கோடு, குமாரபாளையம், நாமக்கல், பரமத்திவேலூர் ஆகிய பகுதிகளில் அனுமதி கேட்ட இடங்களுக்கு போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் ஓரங்களில் பொதுக்கூட்டம் நடத்த அரசியல் கட்சிகளுக்கு கோர்ட் அனுமதி கொடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் அவர்கள் கேட்ட இடங்களுக்கு அனுமதி கொடுக்க முடியாது என்றனர். எனவே எடப்பாடி பழனிசாமி வேறு இடத்தில் பிரசாரம் செய்யவும், பட்டா இடத்தில் 3 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் கூட்டத்தை நடத்திக்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நாளையும், நாளை மறுநாளும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை.

    • விஜய் கடந்த 20-ந்தேதி நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்தார்.
    • சாலை மார்க்கமாக முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 13-ந்தேதி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.

    முதல் நாளில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் திருச்சியில் மக்கள் கூட்டம் அதிக அளவில் திரண்டதால் விஜய் பிரசாரம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

    இதையடுத்து அன்று திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் பிரசாரம் செய்தார். பெரம்பலூர் பிரசாரத்தை ரத்து செய்த அவர் மற்றொரு நாள் வருவதாக தெரிவித்தார்.

    அதன்படி பெரம்பலூரில் நவம்பர் 1-ந்தேதி விஜய் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். சனிக்கிழமை தோறும் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய் கடந்த 20-ந்தேதி நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் 3-வது கட்டமாக விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார். இதற்காக இன்று காலையில் அவர் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார். காலை 9.30 மணியளவில் அவர் திருச்சியை அடைந்தார்.

    இதனை தொடர்ந்து விஜய், பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அவர் வரும் வழி முழுவதும் சாலையின் இருபுறமும் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று விஜய்யை வரவேற்கின்றனர். அவர்களை பார்த்தப்படி விஜய் கையசைத்தப்படியும், வணக்கம் தெரிவித்தப்படியும் வந்தார். 



    • நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மின்வாரியத்தில் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
    • பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லாமல் எல்இடி திரை மற்றும் மேடை அமைக்கக்கூடாது.

    கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், தவெக-வுக்கு 11 நிபந்தனையுடன் காவல்துறை அனுமதி விதித்துள்ளது.

    நிபந்தனைகள் வருமாறு:

    நிகழச்சி நடத்தும் இடத்தில் உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில் பிளக்ஸ், பேனர் வைக்கக்கூடாது, அதன்மீது தொண்டர்கள் ஏற கூடாது.

    நிகழ்ச்சி நடைபெறும்போது தவெக தொண்டர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பாத வண்ணம் கூட்டத்தை நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும்.

    நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மின்வாரியத்தில் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

    ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும், முதலுதவி சிகிச்சைக்கான முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும்.

    கூட்டத்தை முறையாக நடத்த தீயணைப்பு துறையினர் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் தொடர்பாக மாநகராட்சியிடமும் அனுமதி பெற வேண்டும்.

    திருக்காம்புலியூர் ரவுண்டானா தேசிய நெடுஞ்சாலை என்பதால் ரோடு ரேஷ நடத்த தடை, கூட்டம் முடிந்ததும் கொடி, பேனரை அற்ற வேண்டும்.

    பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லாமல் எல்இடி திரை மற்றும் மேடை அமைக்கக்கூடாது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தவெக சார்பில் இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
    • தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை நடத்தினார்.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

    முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.

    இன்று பிற்பகல் தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    இந்நிலையில், விஜய் வாகனம் மீது ஏறி தொண்டர்களுக்கு கையசைத்து வணக்கம் கூறினார். அப்போது, தொண்டர் ஒருவர் விஜய்க்கு ஆள் உயர வேல் ஒன்றை பரிசாக அளித்தார்.

    விஜய் வேலை பெற்றுக் கொண்டு தொண்டர்களிடம் காண்பித்தபடி கையசைத்தார்.

    • தவெக சார்பில் இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
    • தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை நடத்தினார்.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அதன்படி, திருச்சி, அரியலூரை தொடர்ந்து இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.

    இதில், தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார்.

    அப்போது அவர், சனிக்கிழமைகளில் மட்டும் பிரசார பயணம் நடந்துவது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

    பிரசாரத்தில் விஜய் கூறியதாவது:-

    உங்கள் எல்லாரையும் வந்து பார்க்கும்போது யாருக்கும் எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்ற காரணத்தினால்தான் வார இறுதி நாட்கள், ஓய்வு நாட்களில் பயணத்தை திட்டமிட்டுள்ளோம்.

    அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் ஓய்வு நாளில் உங்களை சந்திக்க வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அக்டோபர் 5ம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்கி 13ம் தேதி வரை பிரசாரம்.
    • ஈரோடு வடக்கில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மேற்கொள்ளும் 3ம் கட்ட பிரசார பயணப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    அக்டோபர் 5ம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்கி 13ம் தேதி கோவை வடக்கு வரை பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    மேலும், 5ம் தேதி கிருஷ்ணகிரி, 6ம் தேதி தருமபுரி, 7ம் தேதி ஈரோடு நகரம், ஈரோடு வடக்கில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    8ம் தேதி ஈரோடு தெற்கு, 9ம் தேதி திருப்பூர் நகரம், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு பகுதிகளிலும், 10ம் தேதி திருப்பூர் வடக்கு, 11ம் தேதி கோவை நகர், கோவை தெற்கு, 12ம் தேதி நீலகிரி, கோவை வடக்கில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    • நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
    • வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார்.

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

    அந்த வகையில், நாளை (சனிக்கிழமை) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.

    இந்நிலையில், தவெக பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, டிசம்பர் மாதம் 13ம் தேதியில் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தவெக பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தது.

    மேலும், வரும் 27ம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார்.

    இந்நிலையில், வரும் 27ம் தேதி அன்று சேலம் மற்றும் நாமக்கல்லில் பிரசாரம செய்ய உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.

    • விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலித்து உத்தரவிட கோரிக்கை.
    • தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ள பிரசாரத்துக்கு அனுமதி கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

    விஜய் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், அனுமதிகோரிய விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலித்து உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    • முசிறியில் ரத யாத்திரை மற்றும் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார்.
    • மணப்பாறை பஸ் நிலையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    திருச்சி:

    தே.மு.தி க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பூத் முகவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு கேப்டன் ரத யாத்திரை சென்று மக்களை சந்தித்து வருகிறார்.

    அந்த வகையில் திருச்சியில் 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை மறுநாள்( சனிக்கிழமை)திருச்சி வருகிறார்.

    பின்னர் அன்றைய தினம் காலை அரிஸ்டோ கார்னர் பகுதியில் உள்ள எல் கே எஸ் மஹாலில் பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்குகிறார். அதன் பின்னர் மாலையில் முசிறியில் ரத யாத்திரை மற்றும் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார். அதன் பின்னர் இரவு திருச்சியில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் ஞாயிற்றுக்கிழமை (14 ம் தேதி) திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மணப்பாறை சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 73 அடி உயர கட்சி கொடி கம்பத்தில் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்குகிறார். இந்த கொடிக்கம்பம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்த நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் பின்னர் மணப்பாறை பஸ் நிலையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பிரேமலதா விஜயகாந்த் வருகையை முன்னிட்டு தே.மு.தி.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் டிவி கணேஷ், தெற்கு மாவட்ட செயலாளர் சன்னாசிப்பட்டி ஆர். பாரதிதாசன், வடக்கு மாவட்ட செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • மாநில மற்றும் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்ல தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.

    பீகாரில் இந்தாண்டு இறுதியில் அக்டோபர், நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

    பீகாரில் பா.ஜ.க., ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

    வருகிற சட்டமன்றத் தேர்தலில் பீகாரில் உள்ள 243 தொகுதிகளில் 225 தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் அடிநிலை தொண்டர்களின் கூட்டுக்கூட்டத்தை 243 தொகுதிகளிலும் கூட்ட தேசிய ஜனநாயக கூட்டணி முடிவெடுத்துள்ளது.

    வருகிற ஜூலை 15-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை தொகுதி வாரியாக தொண்டர்களை சந்தித்து மாநில மற்றும் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்ல தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.

    தேர்தலில் வெற்றிப் பெறுவதையே நோக்கமாக கொண்டு கூட்டணியில் கட்சி பேதமின்றி அனைத்துத் தொண்டர்களும் உழைப்பதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்த தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வாக்குச் சாவடிகளில் தங்களை வலுப்படுத்திக் கொள்ள தொண்டர்களுக்கு 2 மாத சிறப்பு பிரசாரத்தை தொடங்கவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ×