என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai High court"

    • விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலித்து உத்தரவிட கோரிக்கை.
    • தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ள பிரசாரத்துக்கு அனுமதி கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

    விஜய் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், அனுமதிகோரிய விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலித்து உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    • தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    • இவர்களது பதவி காலம் 2024-ம் ஆண்டு முடிவடைந்தது.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் நடிகர் சங்க உறுப்பினர் நம்பிராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கில், '2022-ம் ஆண்டு நடந்த தேர்தலின்படி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணை தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களது பதவி காலம் 2024-ம் ஆண்டு முடிவடைந்தது.

    ஆனால், மேலும் 3 ஆண்டுகளுக்கு பதவியை நீட்டிப்பு செய்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் இயற்றியுள்ளனர். இதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்'' என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்கத்தை நிர்வகிக்கவும், தேர்தலை நடத்தவும் ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்'' என்று வாதிடப்பட்டது. உடனே நீதிபதி, நடிகர் சங்கத்தின் தேர்தலை நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு நடிகர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், "தேர்தல் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. தற்போது, நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகின்றன. பணிகள் முடிவடையும் நிலையில் தேர்தல் நடத்தினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் என்பதால், நிர்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டித்து, பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்'' என்று விளக்கம் அளித்தார்.

    இதையடுத்து, இந்த வழக்கில், நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பு வாதம் செய்வதற்காக விசாரணை வருகிற 15-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • ரிதன்யா தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.
    • வழக்கு விசாரணையை மேற்பார்வையிட திருப்பூர் எஸ்.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது தந்தை அண்ணாதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து விசாரணை அதிகாரி வழக்கின் விசாரணையை முறையாக மேற்கொள்ளவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதில் எந்த பயனும் இல்லை" என்று தெரிவித்துள்ளது.

    மேலும், ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணையை மேற்பார்வையிட திருப்பூர் எஸ்.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும் உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய விசாரணை நீதிமன்றத்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கவினின் செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அதன் அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது.
    • மகப்பேறு விடுப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி உத்தரவு.

    மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த ரஞ்சிதா என்பவருக்கு 3வது பிரசவத்திற்கான ஓராண்டு மகப்பேறு விடுப்பும், சலுகைகளும் உளுந்தூர்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் நீதிபதி நிராகரித்துள்ளார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அமர்வு, பணிக்கு சேரும் முன்பே இரண்டு குழந்தைகளை பெற்ற நிலையில், மூன்றாவது முறையாக கருவுற்று பணிக்கு சேர்ந்த பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, ரஞ்சிதாவுக்கு சட்டப்படி மகப்பேறு விடுப்பு வழங்க, உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது.

    மேலும் அந்த உத்தரவில், குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்க கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது. மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    • சென்சார் சான்று வழங்கப்பட்ட பிறகு படம் திரையிடப்படுவதை யாரும் தடுக்க முடியாது
    • உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சிக்கு உரிமை உள்ளது

    நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான 'கிங்டம்', ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

    இதனையொட்டி, கிங்டம் திரைப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, 'கிங்டம்' படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதனையடுத்து, தமிழ் மக்களிடம் 'கிங்டம்' பட நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அப்பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிங்டம் படத்தின் சில காட்சிகள் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக அறிந்தோம். படத்தின் கதை முற்றிலும் கற்பனையானது என உறுதியளிக்கிறோம். தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். இதையும் மீறி மக்களின் உணர்வுகள் ஏதேனும் புண்பட்டு இருந்தால் மிகவும் வருந்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் கிங்டம் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பட நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையில், 'கிங்டம்' படம் திரையிட இடையூறு செய்தால், திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும், சென்சார் சான்று வழங்கப்பட்ட பிறகு படம் திரையிடப்படுவதை யாரும் தடுக்க முடியாது என்றும் அதே நேரத்தில் உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சிக்கு உரிமை உள்ளது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது. 

    • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆர். ஸ்ரீராம், ராஜஸ்தானுக்கு மாற்றப்பட்டது.
    • அவருக்குப் பதிலாக ராஜஸ்தான் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா சென்னைக்கு மாற்றப்பட்டார்.

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் கே.ஆர். ஸ்ரீராம். இவர் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்.

    ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்

    இந்த நிலையில் எம்.எம். ஸ்ரீவஸ்தவா இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் இருந்து வருகிறார்.
    • இவர் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் கே.ஆர். ஸ்ரீராம். இவர் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளனர்.

    ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

    • குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரின் தொலைபேசி உரையாடல்கள், தரவுகளை ஒட்டுக்கேட்க முடியாது.
    • குற்றச்செயல்களை கண்டறிவதற்காக தனிநபரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது அனுமதிக்கதக்கது அல்ல.

    சிபிஐ பதிவு செய்த வழக்கு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கிஷோர் என்பவரின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்க உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்திருந்தது. மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்யக்கோரி கிஷோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் "குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரின் தொலைபேசி உரையாடல்கள், தரவுகளை ஒட்டுக்கேட்க முடியாது. இது அந்தரங்க உரிமைக்கு விரோதமானது.

    குற்றச்செயல்களை கண்டறிவதற்காக தனிநபரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது அனுமதிக்கதக்கது அல்ல" என நீதிமன்றம் தெரிவித்தது.

    மேலும் பொது அவசரம், பொது பாதுகாப்பு ஏதம் சம்பந்தப்படவில்லை என்பதால் அனுமதி ரத்து செய்யப்படுகிறது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • யானை சின்னத்தை தவெக கொடி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி மனு தாக்கல் செய்திருந்தது.
    • பகுஜன் சமாஜ் கட்சி கொடிக்கும் தவெக கொடிக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என தவெக தரப்பு தெரிவித்திருந்தது.

    தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூலை 3-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    பகுஜன் சமாஜ் கொடியில் உள்ள யானை சின்னத்தை தவெக கொடி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலர் இளங்கோவன் சென்னை முதலாவது உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக தவெக பொதுச்செயலர் என்.ஆனந்த் தாக்க செய்த பதில் மனுவில், "பல தகவல்களை மறைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. பகுஜன் சமாஜ் கட்சி கொடிக்கும் தவெக கொடிக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை. கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்காலத் திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் உள்ள ஒற்றை யானைக்கும் தவெக கொடியில் உள்ள எக்காலம் ஊதும் இரட்டை யானைக்கும் பல மாறுபாடுகள் உள்ளன. தனித்துவத்துடன் தவெக கொடி உருவாக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை குழப்பும் வகையில் உருவாக்கப்படவில்லை எனவே, அபராதத்துடன் இந்த மனுவை தள்ளுட செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

    • சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரான பூவை ஜெகன் மூர்த்தி மீது புகார் எழுந்தது.
    • இது தொடர்பாக முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    காதல் திருமண பிரச்சனையால் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கேவி குப்பம் எம்.எல்.ஏ.வும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான பூவை ஜெகன் மூர்த்தி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இதற்காக அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நேற்று முதல் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணைக்காக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். ஜாமீன் மீதான விசாரணை தொடங்கியுள்ளது.

    அந்த விசாரணையில், கட்டப்பஞ்சாயத்து செய்யவா மக்கள் உங்களை ஓட்டு போட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பினார்கள் என ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி வேல்முருகன் காட்டமாக கேள்வி எழுப்பினார்.

    மேலும், உங்களுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும், உங்கள் பெயரை பயன்படுத்தினாலும் குற்றம்தான்.

    சட்டமன்றத்தில் பேசத்தான் மக்கள் வாக்களித்தனர். அதனை மறந்து கட்டபஞ்சாயத்து செய்வதா?. விசாரணை நடத்த வந்த காவல்துறையினரை உங்கள் கட்சிக்காரர்கள் தடுத்தது ஏன்?

    நீதிமன்றம் நினைத்திருத்திருந்தால் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்க முடியும்.

    MLA மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமே தவிர கட்ட பஞ்சாயத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

    பதவியை தவறாக பயன்படுத்தினால் வேடிக்கை பார்க்க முடியாது. எம்பி, எம்.எல்.ஏ.க்கள் உதாரணமாக இருக்க வேண்டும்.

    போலீசார் விசாரணைக்கு எம்எல்ஏ ஒத்துழைக்காவிட்டால் சாதாரண மக்கள் எப்படி ஒத்துழைப்பார்கள்.

    விசாரணைக்கு தனியாக செல்ல வேண்டும் என கூறிய நீதிபதி, விசாரணைக்கு ஒத்துழைப்பு தருமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 16-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

    • ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து 46 வாரங்கள் கடந்தும் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
    • குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை கண்காணிக்க, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ள மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரியும் அங்குள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், திருவண்ணாமலை கோவில் தாமரை குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து 46 வாரங்கள் கடந்தும் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை கண்காணிக்க, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விதிகளை பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை.
    • உண்மை தன்மையை ஆராய போதுமான எண்ணிக்கையில் மாநில அளவில் குழு.

    சாதிச்சான்றிதழ்கள் முழுமையான விசாரணைக்கு பிறகே வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சாதிச் சான்றிதழ்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரிவிட்டுள்ளது.

    மேலும், பட்டியலின, பழங்குடியினர் சாதிசான்றிதழ்கள் வழங்க விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

    சாதி சான்றிதழ்கள் வழங்குவதற்கான விதிகளை பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய போதுமான எண்ணிக்கையில் மாநில அளவில் குழு அமைக்க நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளது.

    குழுக்கள் விதிகளின்படி விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    ×