என் மலர்
நீங்கள் தேடியது "Actor vijay Sethupathi"
'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு "தலைவன் தலைவி" என பெயரிடப்பட்டுள்ளது.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 25 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைப்பெற்றது அதில் இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில் "ஏறத்தாழ மூன்றரை வருடங்களுக்கு பிறகு பத்திரிகையாளர்களாகிய உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இதுவரை 11 படங்களை இயக்கி இருக்கிறேன்.
பத்து படங்களுக்கு நான் நினைத்த ஹீரோயின் கிடைத்ததில்லை. முதல் முறையாக நான் திரைக்கதையில் என்ன எழுதினேனோ..! நித்யா மேனன் தான் வேண்டுமென்று கேட்டேன். அவர் தான் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இதற்காக தயாரிப்பாளர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
96 இயக்குநர் பிரேம் குமாரை பசங்க படத்தின் ஒளிப்பதிவாளராக எனக்கு அறிமுகப்படுத்தியது விஜய் சேதுபதி தான். பசங்க திரைப்படத்தில் விஜய் சேதுபதி வேண்டாம் என ரிஜெக்ட் செய்தேன் . அதற்கு பிறகு விமலை அறிமுகப்படுத்தியதும் விஜய் சேதுபதி தான். இவ்வளவு நல்லவனாக இருக்கிறானே கண்டிப்பாக நன்றாக வருவான் என நினைத்தேன் இப்பொழுது இங்கு வந்து இருக்கிறார்.
அதற்கு பிறகு எனக்கும் அவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. வாழ்க்கையில் விஜய் சேதுபதி நடிப்பில் படத்தை இயக்கக்கூடாது என நினைத்தேன். விஜய் சேதுபதியும் என்னுடன் படம் பண்ண விருப்பமில்லை. ஆனால் அப்படி இருந்த நாங்கள் தற்பொழுது ஒன்றாக இணைந்து படத்தை உருவாக்கியுள்ளோம்" என கூறியுள்ளார்.
- இந்த கேரக்டரை விஜய் சேதுபதியால் மட்டுமே செய்திட இயலும்.
- சாக்லேட் பரோட்டா... வாட்டர்மெலன் பரோட்டா.. என வகை வகையாக கண்டுபிடித்து தயாரிப்பார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன், தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் ரோஹன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாயகன் விஜய் சேதுபதி பேசுகையில், ' இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது ஏராளமான சண்டை, சச்சரவுகள் இருந்தன. அதற்கு இடையில் தான் இப்படத்தின் பணி தொடங்கியது. படத்தின் இயக்குநரும், நாயகனும் ஒன்று சேர்ந்த தருணம் இருக்கிறதே, அதை நாங்களே எதிர்பார்க்கவில்லை.
இவருடன் இணைந்து பணியாற்றக்கூடாது என்று அவரும், இவரது இயக்கத்தில் பணியாற்றக் கூடாது என்று நானும் இருந்த காலகட்டம் அது. இரண்டு பேருக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் இல்லை. அதனால் அழகான தருணத்தில் ஒரு சிறிய பூ எப்படி இயல்பாக மலருமோ, அதேபோல் எங்களுக்கு இடையேயான கோபம் மறைந்து, அன்பு மலர்ந்தது. அதன் பிறகு எல்லா விஷயங்களும் படபடவென நடந்தன.
நித்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் இப்படி ஒரு வேடத்தில் அவர்களுடன் இணைந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. அந்த கதாபாத்திரத்தில் நித்யாவை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க இயலாது. இந்த படம் ஒரு ஃபுல் பேக்கேஜ் ஃபேமிலி என்டர்டெய்னர். படத்தை பார்க்கும் போது அனைவரும் ரசிப்பார்கள்,'' என்றார்.
நடிகை நித்யா மேனன் பேசுகையில், 'இந்தப் படத்தில் பணியாற்றியது என்னுடைய வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோசமான அனுபவம். இந்த படத்தைப் பற்றி எனக்கு அதிக நம்பிக்கையும் இருக்கிறது. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது,'' என்றார்.
இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், ''ஏறத்தாழ மூன்றரை வருடங்களுக்கு பிறகு பத்திரிகையாளர்களாகிய உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
'தலைவன் தலைவி' என்ற இந்தப் படத்தின் தலைப்பு தோன்றிய தருணங்களும் அற்புதமானது. இந்த படத்திற்கான கதை தோன்றிய சம்பவங்களும் அழகானது. ஒரு உண்மை சம்பவத்திலிருந்து இந்த கதையை எழுதி இருக்கிறேன். என் மகனுடைய பிறந்தநாள் விழாவிற்காக குலதெய்வ ஆலயத்திற்கு சென்ற போது நான் சந்தித்த இரண்டு கதாபாத்திரங்கள் தான் ஆகாச வீரன் - பேரரசி.
நேரில் பார்த்ததை படமாக எடுக்க முடியாது. ஆனால் இப்படி இருந்தால். எப்படி இருக்கும்? என்ற ஒரு கேள்விதான் இந்த கதாபாத்திரம். அதன் பிறகு இதை எழுதத் தொடங்கினேன். எழுத எழுத அது வேறு ஒன்றாக மாற்றம் பெற்றது. அதை எழுதும் போது தான் ஆகாச வீரன் எனும் கதாபாத்திரத்தின் மதிப்பு உயர்ந்தது. ஏனென்றால் ஆகாச வீரன் சிரிக்க வைப்பான்.. அழ வைப்பான்... டார்ச்சர் செய்வான்... இவன் எந்த மாதிரியான கேரக்டர் என்று வரையறுக்க முடியாது.
பொதுவாக ஹீரோ கேரக்டர் என்றால்.. அதற்கென்று ஒரு வரையறை இருக்கும். இதில் எந்த வரையறையும் இல்லாத ஒரு கதாபாத்திரம் தான் ஆகாச வீரன். இந்த கேரக்டரை எல்லா ஹீரோக்களாலும் செய்திட இயலாது.இந்த கேரக்டரை விஜய் சேதுபதியால் மட்டுமே செய்திட இயலும்.
படப்பிடிப்பு தளத்தில் அவர் செய்த ஒவ்வொரு விசயத்தையும் அனைவரும் ரசித்தோம். படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி பரோட்டாவை தயாரிப்பார். சாக்லேட் பரோட்டா... வாட்டர்மெலன் பரோட்டா.. என வகை வகையாக கண்டுபிடித்து தயாரிப்பார். அதுவும் சுவையாக தான் இருக்கும்.

முதல்முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இந்த திரைப்படத்தில் விவாகரத்தை பற்றி பேசி இருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் விவாகரத்துகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. ஏன்? என்ற ஒரு கேள்விதான் இப்படத்தின் கதை. இந்தப் படம் வெளியான பிறகு விவாகரத்திற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கும் பலரும் யோசிப்பார்கள்.
இந்தப் படம் வெளியான பிறகு'தலைவன் தலைவி' வெளியான பிறகு விவாகரத்திற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கும் பலரும் யோசிப்பார்கள் - இயக்குனர் பாண்டிராஜ் குறித்து ஏதேனும் முடிவு செய்திருந்தால்.. அதற்கு செல்ல வேண்டுமா? என யோசிப்பார்கள். அந்த யோசனையை இந்த படம் வழங்கும் என்று நான் நம்புகிறேன்'' என்றார்.
- சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
- வருகிற 25ஆம் தேதி படம் ரிலீ்ஸ் ஆகிறது.
'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு "தலைவன் தலைவி" என பெயரிடப்பட்டுள்ளது.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
மேலும், விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வரும் 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் ஆகாச வீரன் என்ற 2ஆவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
- பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- 'தலைவனின் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு "தலைவன் தலைவி" என பெயரிடப்பட்டுள்ளது.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரித்துள்ளது.
இத்திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
மேலும், விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
'தலைவனின் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தலைவன் தலைவி படம் வரும் ஜூலை 25ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் தலைவன் தலைவி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு சென்னை வர்த்தக மைத்தில் நடைபெற இருக்கிறது.
- தவறு என்று தெரிந்தால் உடனடியாக மன்னிப்பு கேட்டுவிடுங்கள்.
- விமர்சிப்போரையும் உறவுகளாக பாருங்கள்.
முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, அனல் அரசு இயக்கத்தில் உருவான 'பீனிக்ஸ்' படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் சென்னையில் நடந்த இந்த பட விழாவில், சூர்யா வாயில் 'சுவிங்கம்' மென்றபடி, ரசிகர்களுடன் கலந்துரையாடியது விமர்சனத்துக்குள்ளானது. 'முதல் படத்திலேயே பந்தா தேவையா...', என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது.
இந்தநிலையில் 'பீனிக்ஸ்' படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கொண்டாடிய விழாவில் இயக்குனர் அனல் அரசு பங்கேற்று பேசும்போது, 'பீனிக்ஸ்' படம் சூர்யாவுக்காக மட்டும் எடுக்கப்பட்டது கிடையாது. சூர்யா மீது குற்றச்சாட்டு கூறுவோருக்கும், அவரை விமர்சித்து டிரோல் செய்வோருக்கும் நான் சொல்லிக்கொள்வது, 'நீங்கள் சூர்யாவின் வாழ்க்கையில் மட்டும் விளையாடவில்லை, இந்த படத்தின் மூலமாக புதிதாக சினிமாவில் எட்டிப்பார்த்துள்ள அனைவரது வாழ்க்கையிலும் விளையாடுகிறீர்கள்.
ஒரு படத்தில் பலரது வாழ்க்கை அடங்கியிருக்கிறது என்று உணர்ந்து, யோசித்து செயல்பட்டால் நல்லது. (சூர்யாவை நோக்கி) தவறு என்று தெரிந்தால் உடனடியாக மன்னிப்பு கேட்டுவிடுங்கள். விமர்சிப்போரையும் உறவுகளாக பாருங்கள். மன்னிப்பு பல பிரச்சனைகளை தீர்த்துவிடும்' என்றார்.
- "தலைவன் தலைவி" படம் வரும் ஜூலை 25ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.
- "தலைவன் தலைவி" திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.
படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வௌியிட்டது. இந்த படத்திற்கு "தலைவன் தலைவி" என பெயரிடப்பட்டது.
இத்திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
மேலும், விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
'தலைவனின் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், அதன்படி, தலைவன் தலைவி படம் வரும் ஜூலை 25ம் தேதி வெளியாகும் என டைட்டில் டீசர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தலைவன் தலைவி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, தலைவன் தலைவி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 12ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை வர்த்தக மைத்தில் நடைபெறும் என ப்ரோமோ வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பூரி ஜெகநாத் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் திரைப்படத்தை இயக்குகிறார்.
- விஜய் சேதுபதியுடன் தபு,சம்யுக்தா, துனியா விஜய், நிவேதா தாமஸ், மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.ப
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் பவன் கல்யாண் நடிப்பில் பத்ரி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து மகேஷ் பாபு நடிப்பில் போக்கிரி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்று படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்தனர்.
இந்நிலையில் பூரி ஜெகநாத் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் திரைப்படத்தை இயக்குகிறார்.
படத்தில் விஜய் சேதுபதியுடன் தபு,சம்யுக்தா, துனியா விஜய், நிவேதா தாமஸ், மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.படத்தின் படப்பிடிப்பு பணி இன்று ஐதராபாத் உள்ள செட்டில் தொடங்கியது. தொடர்ந்து சில வாரங்களுக்கு அங்கு படப்பிடிப்பு நடக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
இப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
- திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
- 'தலைவனின் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.
படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வௌியிட்டது. இந்த படத்திற்கு "தலைவன் தலைவி" என பெயரிடப்பட்டது.
இத்திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
மேலும், விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
'தலைவனின் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 'தலைவன் தலைவி' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, தலைவன் தலைவி படம் வரும் ஜூலை 25ம் தேதி வெளியாகும் என டைட்டில் டீசர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.
- திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
- 'தலைவனின் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.
படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வௌியிட்டது. இந்த படத்திற்கு "தலைவன் தலைவி" என பெயரிடப்பட்டது.
இத்திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
மேலும், விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
'தலைவனின் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 'தலைவன் தலைவி' படத்தின் ரிலீஸ் தேதி நாளை காலை 11.11க்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
- விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
- சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார்.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார். பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.
படத்தில் சூர்யா பாக்சராக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் ஜுலை 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இந்தா வாங்கிக்கோ என்ற குத்து பாடலை விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- மகாராஜா திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய் வசூலித்தது.
- திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு உலகளவில் உள்ள பலரும் இந்த படத்தை பாராட்டினர்.
விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியானது மகாராஜா திரைப்படம். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய் வசூலித்தது.
மகாராஜா திரைப்படம் சீன மொழியிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று சர்வதேச அங்கீகாரம் பெற்றது. மேலும் திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு உலகளவில் உள்ள பலரும் இந்த படத்தை பாராட்டினர்.
இந்நிலையில், மகாராஜா பட வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய்சேதுபதி- இயக்குனர் நிதிலன் மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத்.
- பூரி ஜெகநாத் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி வைத்து திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் பவன் கல்யாண் நடிப்பில் பத்ரி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். .
இவர் இயக்கிய போக்கிரி, இட்லு ச்ரவனி சுப்ரமணியம்,அப்பு, இடியட், சிவமணி, பிஸ்னஸ்மேன், ஹார்ட் அடாக், டெம்பர், இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.
இவர் கடைசியாக டபுள் இஸ்மார்ட் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் பூரி ஜெகநாத் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி வைத்து திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தின் நடிகை தபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் இப்படத்தில் கன்னட முன்னணி நடிகரான துனியா விஜய் மற்றும் நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தம் ஆகியதை படக்குழு சில் வாரங்களுக்கு முன் அறிவித்தது. இந்நிலையில் அடுத்ததாக தெலுங்கு நடிகை சம்யுக்தா படத்தில் இணைந்துள்ளதை படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.
சம்யுக்தா இதற்கு முன் தனுஷ் நடித்த வாத்தி மற்றும் விருபக்ஷா போன்ற வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.