என் மலர்

    நீங்கள் தேடியது "ongc"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொருளாதாரத்தில் நலிவுற்ற பின் தங்கிய மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளித்து வருகிறார்.
    • இம்மாணவ மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் பகுதியைச் சேர்ந்த கிரண்ட் மாஸ்டர்எஸ்.பாண்டியன் அரசின் பொதுத் துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளான திருமருகல் திருப்பு கலூர், திருக்கண்ணபுரம், ஏனங்குடி, வவ்வாலடி, கணபதிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடந்த 20 ஆண்டு காலமாக பொருளாதாரத்தில் நலிவுற்ற பின் தங்கிய மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு தற்காப்பு கலை (டேக்வாண்டோ) பயிற்சி அளித்து வருகிறார்.

    மேலும் இம்மாணவ மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றுள்ளனர்.கடந்த 20 ஆண்டுகளில் தங்கம் 98, சில்வர் 75,பித்தளை 112 உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுள்ளனர்.அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் பயிற்சியாளர் மாஸ்டர் பாண்டியனை ஜாக்கி புக் ஆப் வேல்டு என்ற நிறுவனம் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கெளரவித்துள்ளது.அதை தொடர்ந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதில் ஓ.என்.ஜி.சி யின் அதிகாரி சம்பத்குமார், சீனியர் செக்யூரிட்டி மேனேஜர்கள் முரளி கிருஷ்ணன்,அஜய் மாலிக், ஆதித்யா ஆகியோர் கலந்து கொண்டு மாஸ்டர் பாண்டியனை பாராட்டினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்களின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு குறைந்த காலத்துக்குள் இவற்றை அமைத்துக் கொடுத்த ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
    • மழை வெள்ளம்இல்லாத காலங்களில் மாணவர்களுக்கான வகுப்பறைகளாகவும் பயன் தரும் என்று தெரிவித்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் களப்பால் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி. சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி 400மீ குழாய் அமைப்பு மற்றும் மின்விசை அறை ஆகியவற்றை ஓ.என்.ஜி.சி செயல் இயக்குனர் அனுராக் தலைமையில் செல்வராஜ் எம்.பி. திறந்து வைத்து ஊராட்சியிடம் ஒப்படைத்தார்.

    இவ்விழாவில் மாரிமுத்து எம்.எல்.ஏ, கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன், ஊராட்சி மன்றத் தலைவர் சுஜாதா பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி பாலசுந்தரம், ஓ.என்.ஜி.சி பொறியியல் துறை அதிகாரி சுதிஷ், பொது மேலாளர் சம்பத், ஏரியா மேனேஜர் சரவணன், மேலாளர் கண்ணன், கட்டுமானபிரிவு மேலாளர் ரெத்தினம், மக்கள் தொடர்பு அதிகாரி ராஜசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் முருகானந்தம், கார்த்தி கேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொறுக்கை ஊராட்சியில் நீர்நிலை புறம்போக்குப் பகுதியிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட பொதுமக்களின் மழை மற்றும் வெள்ளக்கால பயன்பாட்டிற்காக, ஓ.என்.ஜி.சி சார்பில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு தங்கும் முகாம் கட்டிடங்களை ஓ.என்.ஜி.சி. செயல் இயக்குனர் அனுராக் முன்னிலையில் செல்வராஜ் எம்.பி. மற்றும் மாரிமுத்து எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.

    மக்களின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு குறைந்த காலத்துக்குள் இவற்றை அமைத்துக் கொடுத்த ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்குப் பாராட்டுத் தெரிவித்த செல்வராஜ் எம்.பி., அவை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ளதால் மழை வெள்ளம்இல்லாத காலங்களில் மாணவர்களுக்கான வகுப்பறைகளாகவும் பயன் தரும் என்று தெரிவித்தார்.

    இவ்விழாவில் ஒன்றி யப் பெருந்தலைவர்பாஸ்கரன், துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகி ராமன், ஒன்றிய கவுன்சிலர் வேதரெத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓ.என்.ஜி.சி, ஒரு மத்திய அரசு நிறுவனம், காவிரி படுகையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறது.
    • படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், இலவச தொழில் பயிற்சியும் வழங்குகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் இருந்து ஓ.என்.ஜி.சி வெளியேறினால் காவிரி படுகையில் பத்தாயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக தொழிற்சங்கங்கள், விவசாய நலச்சங்கங்கள், உள்நாட்டு மீனவர்கள் கலெக்டரிடம் மனு வழங்கினர்.

    மனுவில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, இயற்கை எண்ணெய் எரிவாயு கழகமான ஓ.என்.ஜி.சி, ஒரு மத்திய அரசு நிறுவனம், காவிரி படுகையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தை சார்ந்து பல தொழில்கள், வணிக நிறுவனங்கள், நேரடி மற்றும் மறைமுக தொழிலாளர்கள் பல ஆயிரம் பேர் வேலை செய்து வருகிறார்கள்.ஓ.என்.ஜி.சி மக்கள் பணியில் தொடர்ந்து செயலாற்றி கொண்டு இருக்கிறது, ஓ.என்.ஜி.சி நிறுவனம் பலமுறை மீத்தேன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தவில்லை எனவும், எதிர்காலத்தில் அப்படி எந்த திட்டமும் செயல்படுத்துவதில்லை என உறுதியாக தெரிவித்து விட்டது.

    இந்தியாவின் எண்ணெய் எரிவாயு தேவையை பூர்த்தி செய்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு முழுமையாக செயலாற்றி வருகிறது. தமிழக அரசுக்கு ஆண்டிற்கு ஆயிரம் கோடிக்கு மேல் ராயல்டி தொகை வழங்கப்பட்டு நலத்திட்டங்கள செயல்படுத்தப்படுகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், இலவச தொழில் பயிற்சியும் வழங்குகிறது. சமூக பொறுப்பு திட்டத்தின் மூலம் பல ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கிராம, நகர பகுதிகளில் போர்வெல் அமைத்து சுத்தமான குடிநீர், கழிவறை கட்டுதல், குளம், குட்டை' வாய்க்கால் தூர்வாருதல், சமுதாய கூடங்கள், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல், சாலை வசதிகள், விவசாயிகளுக்கு விதை நெல் வழங்குதல், படித்த இளைஞர்களுக்கு இலவச, படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை, ஏழை பெண்களுக்கு தையல் மிஷின் வழங்குதல் போன்ற நலத்திட்ட களை செயல்படுத்துகிறது. குறிப்பாக புயல் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் நிவாரண உதவிகளும் உணவும் வழங்கப்பட்டது. கஜா புயலின் போது வழங்கிய நிவாரண உதவிகள இன்னும் மக்கள் மனதில் நிலைத்துள்ளது.

    இப்படி பல்வேறு வகையில் நாட்டை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் குறித்து ஆதாரமில்லாத குற்றசாட்டுகளை சிலர் கூறிவதுடன் இந்நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என கூறி வருகின்றனர். இதனால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும், நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும். எனவே அவதூறு பரப்பும் தனிநபர்கள், தற்காலிக அமைப்புகள் மீது தமிழக அரசு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சீர்காழி அருகே கெயில் நிறுவனம் சார்பில் லாரிகளில் வந்த இரும்பு குழாய்களை இறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் 20க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு எடுக்கப்படும் திரவ நிலையிலான எரிவாயு வர்த்தக நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல வேட்டங்குடி, எடமணல், திருநகரி ஊராட்சிகள் வழியாக தரங்கம்பாடி தாலுக்கா மேமாத்தூருக்கு 27 கிலோ மீட்டர் தொலைவுக்கு விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்கும் பணி கெயில் நிறுவனத்தால் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 

    வேம்படி கிராமத்தில் விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்தபோது விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் வேம்படி கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேட்டங்குடி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கெயில் நிறுவனம் சார்பில் லாரிகளில் கொண்டு வந்த 26 இரும்பு குழாய்களை 50-க்கும் மேற்பட்ட போலீசார் உதவியுடன் லாரியிலிருந்து இறக்கும் பணியில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது வேட்டங்குடியைச் சேர்ந்த நஞ்சை, புஞ்சை விவசாயிகள் சங்கத்தலைவர் வில்வநாதன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அங்குதன் மற்றும் விவசாயிகள் சம்பவ இடத்திற்கு வந்து இரும்பு குழாய்களை இறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். 

    இதையடுத்து பேச்சு வார்த்தை நடத்தி பின்னர் இது குறித்து முடிவு செய்வதாக கூறி இரும்பு குழாய்கள் இறக்கப்படாமல் லாரிகளிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காவிரி படுகை பகுதியில் இருந்து எரிவாயு நிறுவனங்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளார். #professorjayaraman #ongc
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்கும் திட்டங்கள் எதுவும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் இல்லை என்று மேலாளர் மிஸ்ரா  தெரிவிப்பது உண்மைக்கு புறம்பான செயல். அதுபோன்றே எண்ணெய் எரிவாயு எடுப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் கூறியுள்ளதும் தவறானது.

    தமிழ்நாட்டில் 9 பிளாக்குகளில் ஷேல் கேஸ் எடுக்க ஓ.என்.ஜி.சி. அனுமதி பெற்றது. முதற்கட்ட கிணறுகள் அமைப்பு அனுமதியை 2015 -ம் ஆண்டிலேயே  மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வழங்கியது ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது ஷேல் மீத்தேன், ஷேல் ஆயில் உள்ளிட்ட அனைத்து வகை எண்ணை எரிவாயுவை எடுக்கும் திட்டம் ஆகும் . அபாயகர நீரியல் விரிசல் முறையை பயன் படுத்தித்தான் ஹைட்ரோ கார்பன்களை எடுக்க முடியும்.

    முதல் சுற்று ஏலத்தில் காவிரிப் படுகையில் 5094 சதுர கிலோ மீட்டர் பரப்புடைய பெரிய நிலப்பரப்பை மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை ஓ.என்.ஜி.சி. மற்றும்  வேதாந்தா நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்துள்ளன.  நிலப்பரப்பில் 731 சதுர கிலோ மீட்டர் பரப்பை ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.யும் மீதியுள்ள ஆழமற்ற கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனமும் உரிமம் பெற்றுள்ளன. இந்த உண்மையை ஓ.என்.ஜி.சி. மறைக்கின்றது. 

    காவிரிப்படுகையில் பெரும் நிலப்பரப்பில் ஷேல் கேஸ் எடுக்க முயற்சி செய்யும் ஓ.என்.ஜி.சி. யை எதிர்த்தும், உள்ளே நுழைய முயற்சிக்கும் தனியார் நிறுவனங்களை எதிர்த்தும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் மக்களிடம் கருத்துக் கேட்பே இல்லாமல் எரிவாயுக் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி. முயற்சிக்கிறது. இதை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. 

    தமிழக அரசு காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட  வேளாண் மண்டலமாக அறிவித்து, எண்ணை எரிவாயு நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும். தமிழகத்தின் காவிரிப் படுகை முதல் ராமநாதபுரம் வரை நீரையும் நிலத்தையும் சுற்றுச் சூழலையும் தமிழகத்தின் உணவு உறுதிப் பாட்டையும் காக்க, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #professorjayaraman #ongc
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நாட்டிலேயே முதன் முறையாக பன்னாட்டு நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டம் (சிஎஸ்ஆர்) நிதியின் மூலம் கும்பகோணம் பகுதியில் உள்ள வாய்க்கால்கள் தூர் வார முடிவு செய்யப்பட்டுள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுப்பணித்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் விவசாயிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தலைமை வகித்து உதவி கலெக்டர் எம்.பிரதீப்குமார் கூறியதாவது:-

    ஓ.என்.ஜி.சி நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ. 1 கோடி நிதியை வழங்கியுள்ளது. இந்த நிதியின் மூலம் கும்பகோணம் கோட்டத்தில் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய தாலுகாவில் உள்ள 39 அ பிரிவு வாய்க்கால்கள் 213 கி.மீட்டர் தூரத்துக்கு தூர்வாரப்பட உள்ளது.

    சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நாட்டிலேயே முதன்முறையாக வாய்க்கால்கள் தூர்வாரப்படுவது இதுவே முதல் முறை. இதில் விவசாயிகள் எந்தந்த வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என ஏற்கனவே விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    அதன்படி அடுத்த வாரத்தில் இந்த தூர்வாரும் பணி தொடங்கவுள்ளது. தூர்வாருவதற்கு தேவையான எந்திரங்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள எந்திரங்களை பயன்படுத்தப்படும். அங்கு இல்லாத பட்சத்தில் தனியார் வாகனங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

    இந்த பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை முடித்த பிறகு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் ரூ. 20 லட்சம் மதிப்பில் மற்ற எஞ்சிய வாய்க்கால்கள் தூர்வாரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சுந்தரவிமலநாதன் கூறியதாவது: தூர்வாரும் பணியை வாய்க்காலின் இறுதி பகுதியிலிருந்து தொடங்கினால் தான் தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்லும். வாய்க் காலின் இருகரையையும் அளவீடு செய்து, கரைகளை பலப்படுத்தி அதில் பனைமரக்கன்றுகளை நட வேண்டும். முன்மாதிரியாக அனுதிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் எவ்வித முறைகேடுகளும் இல்லாமல் இருக்க விவசாயிகள் ஒத்துழைப்பை தருவோம் என்றார். #ONGC
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழகத்தில் மூன்று இடங்கள் உள்ளிட்ட மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. #HydrocarbonProject #Vedanta
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கான நிறுவனங்களையும் தேர்வு செய்தது. இதன்படி தமிழகத்தில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து 55 இடங்களிலும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு டெண்டர் கோரப்பட்டு, ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

    இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான ஒப்பந்தம் இன்று டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்தானது. 

    இந்த டெண்டரில் வேதாந்தா நிறுவனத்துக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இரண்டு இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு இடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் கிடைத்துள்ளன. 

    தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்களைக் கைவிட வேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ஹைட்ரோகார்பன் எடுக்கும் அனுமதி வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதற்கிடையே நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில், காவரி கடைமடை பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காமேஸ்வரம் தபால் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #HydrocarbonProject #Vedanta
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவாரூர் அருகே கெயில் நிறுவன குழாய் பதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் உள்வாங்கியதால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். #Gail
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே கள்ளிக்குடி, அடியக்கமங்கலம், கானூர் உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

    இந்த நிலையில் கெயில் நிறுவனம், விவசாயிகளின் விளைநிலங்களில் குழித்தோண்டி குழாய்களை பதிக்க முயற்சித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த வாரம் கெயில் நிறுவனம் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் உதவியுடன் விவசாய நிலங்களில் குழாய்களை பதிக்க தொடங்கியது.

    கள்ளிக்குடி, கானூர், அடியக்கமங்கலம் பகுதி விளைநிலங்களில் கெயில் நிறுவனம் அத்துமீறி குழாய்கள் பதித்தது. மேலும் ஜெசிபி எந்திரம் மூலம் தோண்டப்பட்ட நீண்ட பள்ளங்களை சரிவர மூடப்படவில்லை.

    இதனால் கானூர் கிராமத்தை சேர்ந்த 32 விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தில் குழாய் பதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் உள்வாங்கியது. நீளமான புதைக்குழிகள் போல காட்சியளித்ததால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் அந்த பகுதியில் இருந்த 150 ஏக்கர் நிலத்தில் சுமார் 30 சதவீத அளவுக்கு நிலம் உள்வாங்கி இருந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் தற்போது சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் கூறும் போது, ‘‘கள்ளிக்குடி, கானூர், அடியக்கமங்கலம், கிராமத்தில் விவசாயம் மேற்கொள்ள முடியாத பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு தொகையை கெயில் நிறுவனம் வழங்கவேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளின் ஆதரவுடன் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றனர். #Gail
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத அரசு தேவையில்லை என்று கதிராமங்கலம் போராட்டத்தில் கலந்து கொண்ட சீமான் கூறினார். #seeman #ongc

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த ஒராண்டாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    போராட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி நேற்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் கிராமமக்கள் போராடினர்.

    இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன்,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் ரெங்கசாமி, இயக்குனர் கவுதமன் மற்றும் பலர் கலந்து கொண்டு கிராம மக்களின் தொடர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கதிராமங்கலம் போராட்டத்தில் கலந்து கொண்ட சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஆய்வால் நிலம், நீர், காற்று மாசுபடுகிறது. மக்கள் சொந்த மண்ணில் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது.

    மணல் என்பது உலகின் தலை சிறந்த நீர்வடிகட்டி. ஆற்றின் தோலான மணலை எடுக்கும் போது ஆறு மரணம் அடைகிறது. நீரை தேக்கி வைக்கும் திறனை இழந்து விடுகிறது. ஆற்றங்கரையில் உள்ள பனை, தென்னை மரங்கள் பாதிக்கப்படுகிறது என்றால் அந்த ஆறு மரணமடைந்து விட்டது என்பது தெளிவாகும். தற்போது நமது நிலம் பாலைவனமாக மாற்றப்படுகிறது. இயற்கை வாயு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றை பூமிக்கு அடியில் இருந்து எடுத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிக்க தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்.

    கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற மறுத்ததால் கதிராமங்கலம் மக்கள் கடந்த ஓராண்டு காலமாக போராடி வருகிறார்கள். இது மக்கள் மீதான ஆட்சியாளர்களின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத அரசு தேவையில்லை.

    இந்த பிரச்சினைக்காக கதிராமங்கலம் மக்கள் மட்டும் போராடக்கூடாது. சுற்றி உள்ள கிராம மக்களும் கதிராமங்கலம் மக்களுக்கு துணை நிற்க வேண்டும். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முழுவதுமாக வெளியேற்றப்பட வேண்டும். அதுவரை மக்களின் அறவழிப்போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசியதாவது:-

    கதிராமங்கலத்தில் மண்ணை காக்கும் மக்களின் போராட்டம் அரசியல் தலைவர்களால் நடத்தப்படுவதில்லை. மக்களின் ஒற்றுமையால் நடத்தப்படுவதால் தான் இத்தனை உணர்வோடு ஓராண்டாக அறவழி போராட்டம் நடக்கிறது. ஓ.என்.ஜி.சி. ஆய்வால் காவிரி படுகையே பாதிக்கப்பட்டுள்ளது. நாம் தொடர்ந்து போராடி மண்ணை காக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #seeman #ongc

    ×