வேதாரண்யம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை- 25 பேர் மீது வழக்கு

வேதாரண்யம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருக்கடையூர் அருகே கனமழையால் சாலையில் உடைப்பு- போக்குவரத்து துண்டிப்பு

திருக்கடையூர் அருகே கனமழையால் சாலையில் உடைப்பு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் அடகு கடை உரிமையாளர் மீது தாக்குதல்- 3 பேர் கைது

மயிலாடுதுறையில் நகையை திருப்பி தர தாமதமானதால் அடகு கடை உரிமையாளரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விஷம் குடித்த ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி உயிரிழப்பு

நாகூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பட்டதாரி பெண்

2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் பட்டதாரி பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொறையாறு அருகே அரசு மருத்துவமனை ஊழியர் தற்கொலை

பொறையாறு அருகே விஷம் குடித்து அரசு மருத்துவமனை ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை-பணம் திருட்டு

நாகை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

திருமாவளவன் பற்றி விமர்சித்த காயத்ரி ரகுராமை கண்டித்து நாகை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகையில், கரும்பு-மண்பானைகள் விற்பனை மும்முரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகையில், கரும்பு, மண்பானைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம் அருகே ஊர்க்காவல் படை வீரரின் 2 வீடுகள் எரிந்து சேதம் - ரூ.2 லட்சம் பொருட்கள் நாசம்

வேதாரண்யம் அருகே ஊர்காவல் படை வீரரின் 2 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம் அடைந்தன.
விலையில்லா அரிசியில் புழுக்கள் கிடந்ததால் ஆத்திரம்: அரிசி மூட்டையை சாலையில் வீசி சென்ற பொதுமக்கள்

நாகை அருகே ரேஷனில் வழங்கிய விலையில்லா அரிசியில் புழுக்கள் கிடந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அரிசி மூட்டையை சாலையில் வீசி சென்றனர். தொடர்ந்து இதேபோல் அரிசி வழங்கினால் கடைக்கு பூட்டு போடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
மது குடித்ததை தட்டிக்கேட்டதால் ஓட்டலை சூறையாடி உரிமையாளர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்

நாகையில் மது குடித்ததை தட்டிக்கேட்டதால் ஓட்டலை சூறையாடி விட்டு உரிமையாளர் உள்பட 2 பேரை தாக்கிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை பயிற்சி முகாம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- பிஆர் பாண்டியன்

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சீர்காழியில் பி.ஆர்.பாண்டியன் பேசினார்.
மகளை திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம்: தையல் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு

நாகையில் மகளை திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தையல் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் - சிவசேனா கட்சி வலியுறுத்தல்

நாகை மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

தொடர் பணி வழங்க வேண்டும் என எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்ச்சி

நாகை அரசு மருத்துவமனை, வேதாரண்யம் நகர சுகாதார நிலையம், சிக்கல் அன்பு மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
வேதாரண்யம் பகுதியில் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுத்தரும் முதியவர்

வேதாரண்யம் பகுதியில் மாணவ-மாணவிகளுக்கு சிலம்பம் கலையை இலவசமாக முதியவர் ஒருவர் கற்றுத்தருகிறார்.
கஜா புயலில் பாதிக்கப்பட்ட சவுக்கு மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

கஜா புயலில் பாதிக்கப்பட்ட சவுக்கு மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.