என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udhayanidhi Stalin"

    • இபிஎஸ் மனதில் அண்ணாவோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா அம்மையோரோ கிடையாது. அவர் மனதில் முழுக்க நிறைந்திருப்பது அமித்ஷா மட்டும்தான்.
    • அடிமைகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

    ஈரோடு எழுமாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், அமித்ஷா ஆலோசனைபடியே செங்கோட்டையன் வேறு கட்சியில் சேர்ந்துள்ளார். செங்கோட்டையன் கட்சி மாறவில்லை. ஒரே கட்சியின் வேறொரு கிளைக்கு மாறி இருக்கிறார்.

    தனது கட்சி பெயரில் உள்ள திராவிடத்தை மறந்துவிட்டார் இபிஎஸ். ஆளுநர் திராவிடத்தை அவமதித்தபோது இபிஎஸ் எனது எதிர்ப்பும் கூறவில்லை. 

    இபிஎஸ் மனதில் அண்ணாவோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா அம்மையோரோ கிடையாது. அவர் மனதில் முழுக்க நிறைந்திருப்பது அமித்ஷா மட்டும்தான்.

    அதிமுகவின் மூத்த தலைவர்கள் கூட பாஜகவிடம் எந்தக் கட்சியில் சேரலாம் என அனுமதி வாங்கி தான் சேர்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் அதிமுக உட்பட பல கட்சிகளுக்கு அமித்ஷா வீடுதான் தலைமை அலுவலகமாக உள்ளது.

    அடிமைகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்." என்று தெரிவித்தார் 

    • மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!
    • இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்!

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

    இளைஞரணிச் செயலாளராக - விளையாட்டுத் துறை அமைச்சராக - மாண்புமிகு துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக நான் உனக்கு அறிவுறுத்துவது,

    காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக, எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும்.

    இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. இளைஞரணி செயலாளர், துணை முதல்வர், சகோதரர் உதயநிதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
    • உதயநிதி தேசிய சிந்தனை கொண்ட வெற்றிகரமான மக்கள் நல அரசியல்வாதியாக சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறேன்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    இந்நிலையில், பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    தி.மு.க. இளைஞரணி செயலாளர், துணை முதல்வர், சகோதரர் உதயநிதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    உதயநிதி தேசிய சிந்தனை கொண்ட வெற்றிகரமான மக்கள் நல அரசியல்வாதியாக சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு துணை முதல்வர், எப்போதும் இனியவர்
    • என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் நீடு வாழ்க.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யாக கமல்ஹாசன், துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு துணை முதல்வர், எப்போதும் இனியவர், என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் நீடு வாழ்க.

    பொன்றாப் புகழுடனும் குன்றாப் பெருமையோடும் நிலைத்து வளர்க.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • தாய், தந்தையை கூட இன்னும் சந்திக்காமல் நேராக பெரியார் திடலுக்கு வந்தேன்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது 49-வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அப்போது அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதையடுத்து வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உதயநிதி உரையாற்றினார். அவர் பேசுகையில்,

    தாய், தந்தையை கூட இன்னும் சந்திக்காமல் நேராக பெரியார் திடலுக்கு வந்தேன்.

    மூத்தவர்களாகிய உங்களை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக வந்துள்ளேன். கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன் என்று பேசினார்.

    • கடந்த 4½ ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாவை தமிழக அரசு வழங்கி உள்ளது.
    • மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்ல வீட்டை வழங்கியவர் முதலமைச்சர்.

    திருவேற்காடு நகராட்சி சுந்தரசோழபுரத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 294 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் முடிவுற்ற கட்டிடங்கள் திறப்பு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார்.

    தொடர்ந்து பல கூட்டங்களில் பேசி வருவதால் தொண்டை கட்டி உள்ளது. மூன்று நாட்களுக்கு பேசக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தாலும் உங்களிடம் பேச வந்துள்ளேன். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கினோம்.

    இந்தியாவிலேயே நீர் நிலைகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக திருவள்ளூர் மாவட்டம் பாலபுரம் ஊராட்சி மத்திய அரசின் விருது வாங்கி உள்ளது. அதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதே திருவள்ளூர் மாவட்டத்தில் 65 ஆயிரம் பேருக்கு முதல்வர் வீட்டு மனை பட்டாக்களை வழங்கி உள்ளார். கடந்த 4½ ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாவை தமிழக அரசு வழங்கி உள்ளது.

    தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் கலைஞர் ஆட்சியில்தான் ரேசன்கடை திறக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுதேடி ரேசன் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.

    குடிசை வீடுகளை கான் கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். கலைஞர் கனவு இல்லம் வாயிலாக ஏராளமானோர் வீடு பெற்று உள்ளனர். மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்ல வீட்டை வழங்கியவர் முதலமைச்சர்.

    மாணவி தான்யாவின் இல்லத்திற்கு சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தவர் முதலமைச்சர். தான்யாக்கள், பிரேமாக்கள் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வர கூடிய ஆட்சி தான் முதல்வர் ஆட்சி.

    கும்மிடிப்பூண்டி, திரு வள்ளூர் தொகுதிகளில் அமைக்கப்படும் மினி ஸ்டேடியங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும். தமிழ கத்தில் ஏராளமான திட்டங் கள் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விடியல் பயணம், காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

    மகளிர் சுய உதவி குழுக் களை சேர்ந்த பெண்களுக்கு ஐ.டி.கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மகளிர் சுய உதவி குழு பெண்கள் தயாரிக்கும் பொருட்களில் 25 கிலோ வரை அரசு பஸ்களில் 100 கிலோ மீட்டர் வரை கட்டணமின்றி எடுத்து செல்லலாம். இதனால் அவர்களின் லாபம் அதிகரிக்கும்.

    டிசம்பர் 15-ந்தேதி முதல் விடுபட்ட அனைத்து மகளி ருக்கும் மாதம் 1000 மகளிர் உரிமைத்தொகை வந்து சேரும். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பின ருக்குமான ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அறிவு திருவிழாவில் அவர்கள் விமர்சித்து பேசிவிட்டோம் என்ற கோபம் வேற.
    • எப்படி போலீஸ் பெயரை கேட்டால் திருடனுக்கு பயம் வருமோ, அதேபோல் அறிவு என்ற வார்த்தையை கேட்டாலே அவர்களுக்கு அலர்ஜி

    தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் "அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளைத் தூசு தட்டித் தோரணம் கட்டப் பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் பார்க்கலாமா?

    யாரை ஏளனமாகப் பரிகாசம் செய்தார்களோ அவர்களிடமே பதவிக்காகப் பம்மினரே, அப்போது எங்கே போயிற்று மானம்?

    ஆட்சியில் இல்லாதபோது 'தமிழ் தமிழ்' என்பதும், 'தமிழர் தமிழர்' என்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்துகொண்டு, அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது பழி போட்டுப் பதவி சுகம் காணும்போது எங்கே போனது மண், மானம் மற்றும் மொழி மீதான கொள்கைப் பாசம்?

    சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?

    அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது?

    பெரியார், அண்ணா கொள்கைகளை மறந்துவிட்ட அவர்கள், மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து, கொள்கையற்றவர்கள் என்று கூறுவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலும் குமைச்சலுமன்றி வேறென்ன?

    53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு 'பக்கா மாஸ்' கட்சி வந்திருப்பதைக் கண்டு நாள்தோறும் நாக்குழறி, உளறும் அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் என்ன தெரியுமா?

    பவளவிழா பாப்பா - நீ

    பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா

    நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து

    நாடே சிரிக்கிறது பாப்பா.

    சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்கூட யாரை விமர்சிக்க வேண்டுமோ அவர்களை விமர்சிப்பதைவிட, நம்மைத் திட்டவைத்து அகமகிழ்ந்ததே நடந்தது.

    எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மேலும், மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதூறு மன்னர்கள் உணரச் செய்வோம்" என திமுக-வை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற அறிவு திருவிழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது "எப்படி நீங்கள் அறிவு திருவிழா நடத்தலாம். யாரைக் கேட்டு நடத்துறிங்க. எதுக்காக நடத்துறிங்க. அறிவு இருக்கிறவன் திருவிழா நடத்துறான். அறிவு திருவிழாவில் அவர்கள் விமர்சித்து பேசிவிட்டோம் என்ற கோபம் வேற. எப்படி போலீஸ் பெயரை கேட்டால், திருடனுக்கு பயம் வருமோ, அதேபோல் அறிவு என்ற வார்த்தையை கேட்டாலே அவர்களுக்கு அலர்ஜி" எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

    • 360 டிகிரியில் யோசித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    • குழந்தைகளை எந்நாளும் கொண்டாடுவோம்!!

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மனதை மயக்கும் மழலை மொழியாலும் - சின்ன சின்ன குறும்பாலும் - தூய அன்பாலும் - ஒவ்வொரு இல்லத்தையும் வண்ணமயமாக்குவது குழந்தைகள்!

    இனிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் #ChildrensDay நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டுக் குழந்தைகளின் ஊட்டச்சத்து - ஆரோக்கியம் - கல்வி - விளையாட்டு என 360 டிகிரியில் யோசித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

    குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க அவர்களின் முன்னேற்றத்துக்கு என்றும் துணை நிற்போம்! குழந்தைகளை எந்நாளும் கொண்டாடுவோம்!! என்று கூறியுள்ளார். 

    • பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள்.
    • நேற்றைய மாலை விருந்தில் மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் அடையாறு போட் கிளப்பில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எம்.பி.யின் வீட்டுக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்த புகைப்படங்களை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    என்னுடைய அழைப்பை ஏற்று எனது இல்லத்துக்கு வருகை தந்து, என்னையும் என் மூத்த சகோதரர் சாருஹாசன் அவர்களையும் கவுரவப்படுத்திய தமிழ்நாடு முதல்வர், அன்புக்குரிய நண்பர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் தம்பதியருக்கும், துணை முதலமைச்சர், என் அன்புக்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா தம்பதியருக்கும், என் அன்புக்குரிய நண்பர் சபரீசனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மரியாதையுடனான சிறு விலகல் இருக்கும். ஆனால், முத்தமிழறிஞர் உடனான எனது உறவு 3 தலைமுறைத் தாண்டிய நெருக்கம் கொண்டது. நிபந்தனைகளற்ற தூய பேரன்பினால், அளவு கடந்த மரியாதையால் பிணைத்துக்கட்டப்பட்டது எங்கள் உறவு. அதை உறுதி செய்யும் வகையில் அமைந்தது இந்த சந்திப்பு.

    நேற்றைய மாலை விருந்தில் மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    • ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் கிட்டத்தட்ட 1¼ கோடி பேருக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கிறார்.
    • திட்டங்களை எல்லாம் மக்களிடம் தொடர்ந்து பேசிப் பேசி அவர்களிடம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அணைக்கட்டு சட்டசபை தொகுதியில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் 2026-ம் ஆண்டு தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-

    தலைவருடைய எதிர்பார்ப்பும், எனது எண்ணமும் இதுதான். நிச்சயம் உங்களின் கோரிக்கையைத் தலைவரிடத்தில் எடுத்துச் சொல்லி 2026 தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகளைப் பெற்றுத் தர நான் முயற்சிக்கிறேன். இங்கு வந்திருக்கின்ற மூத்த கழக நிர்வாகிகள், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து புதிதாக வரக்கூடிய இளைஞர்களை நீங்கள்தான் வழிநடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    நம்முடைய அரசு இந்த 4½ ஆண்டுகளில் பெண்கள், இளைஞர்கள், முதியோர்கள், குழந்தைகள், திருநங்கைகள் மாற்றுத் திறனாளிகள் இப்படி அத்தனை பேருக்கும் நம்முடைய தலைவர் பார்த்துப் பார்த்து பல்வேறு திட்டங்களை கொடுத்திருக்கிறார். இந்தத் திட்டங்களை எல்லாம் மக்களிடம் தொடர்ந்து பேசிப் பேசி அவர்களிடம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

    இந்த 4½ ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் 941 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 31 லட்சம் பேர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்புகளை நாம் வழங்கி இருக்கின்றோம். அதுமட்டுமல்ல, நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக 10 லட்சம் மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கி 3 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கி இருக்கின்றோம்.

    யாருமே எதிர்பார்க்காத 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் கிட்டத்தட்ட 1¼ கோடி பேருக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கிறார். 'தமிழ்ப் புதல்வன் திட்டம்', புதுமைப் பெண் திட்டம், தாயுமானவர் திட்டம், 70 வயதுக்கு மேல் இருக்கக்கூடிய முதியோர்கள் இனிமேல் ரேஷன் கடைக்குப் போகத் தேவையில்லை. அவர்களின் வீடுகளுக்கே மாதந்தோறும் அந்த ரேஷன் பொருட்கள் வந்து சேரும் என்ற திட்டம். நேற்று முன்தினம் ஒரு ஜி.ஓ. போட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 70 வயதைக் குறைத்து இப்போது 65 வயதாக மாற்றிவிட்டார்.

    இப்படி ஒவ்வொரு பிரிவாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்குப் பொறுப்பு, இது இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளைஞர்களின் ஆதரவை கழகத்திற்கு தர ஒருங்கிணைக்க வேண்டிய பணிகளை இளைஞர் அணி தம்பிமார்கள் செய்வார்கள்.
    • நாம் அனைவரும் களத்தில் இறங்கி மக்களை சந்தித்து நம் பிரசாரத்தை இன்னும் அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் காட்பாடி தொகுதியில் தி.மு.க. நிர்வாகிகளுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தி.மு.க. நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கமாக பதில் அளித்தார்.

    காட்பாடி ஒன்றியத்தை சேர்ந்த சசிகுமார் என்பவர், "தமிழகத்தில் உள்ள இளம் தலைமுறையினரை தி.மு.க.வில் சேர்ப்பது எப்படி?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    இன்றைக்கு இளைஞர் அணியில் கிளை, வட்டம், பாகம் வாரியாக சுமார் 5 லட்சம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு மாவட்டமாக ஒவ்வொரு நாளும் அறிவிப்பு வந்து கொண்டு இருக்கிறது. சில மாவட்டங்களின் அறிவிப்பு வந்து விட்டது. மீதமுள்ள மாவட்டங்களிலும் நிர்வாகிகளில் அறிவிப்பு விரைவில் வர இருக்கிறது.

    இளைஞர் அணி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் அவர்களின் பகுதியில் உள்ள இளைஞர்களை அணுகி கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, இளைஞர்களின் ஆதரவை கழகத்திற்கு தர ஒருங்கிணைக்க வேண்டிய பணிகளை இளைஞர் அணி தம்பிமார்கள் செய்வார்கள்.

    அதையெல்லாம் இங்கு வந்திருக்கின்ற ஒன்றிய கழக செயலாளர்கள், கழகத்தின் நிர்வாகிகளாகிய நீங்கள் இளைஞர் அணியை வழி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள்தான் இருக்கின்றன. இப்போதே உங்கள் களப்பணியைத் தொடங்குங்கள். நம்முடைய தலைவர் 200 தொகுதிகள் வெற்றி பெறி வேண்டும் என்று இலக்கு கொடுத்து உள்ளார். வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு என்று சொல்லி இருக்கிறார். அது பத்தாது. நாம் அடுத்த 5 மாதங்கள் சிறப்பாக பணியாற்றினோம் என்றால், நமக்குள் இருக்கின்ற மனகசப்புகளை மறந்து, வெற்றி ஒன்றே குறிக்கோள் என்று பணியாற்றினோம் என்றால் 200 இல்லை 200க்கும் அதிகமான தொகுதிகளில் நம் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

    அதற்கான தொடக்கமாக இந்த காட்பாடி தொகுதியின் வெற்றியை நீங்கள் அமைத்துக்காட்ட வேண்டும். கழகம் 7-வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், தொடர்ந்து 2-வது முறையாக நம் தலைவர் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்றால் நாம் அனைவரும் களத்தில் இறங்கி மக்களை சந்தித்து நம் பிரசாரத்தை இன்னும் அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

    இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

    • ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பெண்கள் மாதந்தோறும் ஆயிரம் பெற்று வருகின்றனர்.
    • விடுபட்ட பெண்களுக்கு டிசம்பர் மாதம் முதல் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பின் அவர் பேசியதாவது:-

    73 ஆயிரம் பேருக்கு இன்று ரூ.300 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது மகிழ்ச்சி அளிக்கிறது. குறுகிய காலத்தில் இந்த விழாவை மிகப்பிரமாண்டமாக மாவட்ட மாநாடு போல ஏற்பாடு செய்ததற்காக பாராட்டுகிறேன்.

    ராஜாக்கள் பெயரில் அதிக அளவில் ஊர்கள் உள்ளன. ராணிகள் பெயரில் சில ஊர்கள் மட்டுமே உள்ளன. அதில் முக்கியமானது ராணிப்பேட்டை.

    அதனால்தான் ராணிப்பேட்டையில் நடைபெறும் இந்த விழாவில் ராணிகளுக்கு அதாவது பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    இன்று நலத்திட்ட உதவிகள் பெற்ற 73 ஆயிரம் பேரில் 55 ஆயிரம் பேர் பெண்கள்.

    திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து மகளிருக்கான திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்தாக விடியல் பயணத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    கடந்த 4½ ஆண்டுகளில் 820 கோடி பயணங்கள் இதன் மூலம் மகளிர் சென்றுள்ளனர். இதன்மூலம் மாதம் ரூ.900 முதல் ஆயிரம் வரை சேமிக்கிறார்கள்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த திட்டத்தில் 8 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது அரசின் மிகப்பெரிய வெற்றி. அனைவரும் உயர் கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த திட்டத்தில் 8 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் பயனடைகின்றனர். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தங்கள் பிள்ளைகள் பசியுடன் இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புகிறார்கள்.

    இதன் மூலம் தரமான உணவு, கல்வி வழங்கப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தில் தினமும் 22 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 25,000 குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.

    இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என எதிர்கட்சிகள் விமர்சனம் செய்தன.

    கடன் சுமை, நிதிச் சுமை இருந்தாலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 20 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பெண்கள் மாதந்தோறும் ஆயிரம் பெற்று வருகின்றனர்.

    விடுபட்ட பெண்களுக்கு டிசம்பர் மாதம் முதல் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும். இந்த அறிவிப்பை நான் தான் சட்டசபையில் வெளியிட்டேன்.

    திராவிட மாடல் அரசின் திட்டங்களை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் செயல்படுத்தப்படும் மாநிலமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புடன் செயல்பட்டு வருகிறார்.

    மகளிர் குழுவினருக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் அரசு பஸ்களில் சுமார் 25 கிலோ எடை வரை 100 கிலோ மீட்டர் தூரம் வரை இலவசமாக பொருட்களை எடுத்துச் செல்லலாம்.

    எனவே மகளிர் குழுவினர் உங்களுடைய அடையாள அட்டைகளை பாதுகாப்பாக வைத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழகத்தில் கடந்த 4½ ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 12,000 பேருக்கு பட்டா கிடைக்கப் பெற்றுள்ளது.

    பட்டா கேட்டு அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்ற நிலைமை மாறி அரசு தேடி வந்து பட்டா வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அன்பு கரங்கள் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

    விளையாட்டில் ஈடுபடுங்கள் உங்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இன்று அரசு நலத்திட்ட உதவிகள் பெற்ற அனைவருக்கும் பாராட்டு, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல திராவிட மாடல் அரசுக்கும் முதலமைச்சருக்கும் உங்கள் ஆதரவு தொடர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×