search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udhayanidhi Stalin"

    • சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டுத்துறையின் முகமாக தமிழ்நாடு மாறி வருகிறது.
    • தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி.

    விளையாட்டு துறைக்கு, தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது;-

    கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய விளையாட்டு & இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள புள்ளிவிவரம், ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு என்பதற்கான சான்றாக உள்ளது.

    கடந்த 7 ஆண்டுகளில், பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்துக்கும் – குஜராத்துக்கும் தலா ரூ.400 கோடிக்கு மேல் தந்து தாராளம் காட்டியிருக்கிற ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

    உலக செஸ் போட்டி – ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் – தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் – World Surfing League – Squash World Cup- Khelo India Youth Games 2023 என பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தியிருக்கிறோம்.

    சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டுத்துறையின் முகமாக தமிழ்நாடு மாறி வருகிறது.

    விளையாட்டுத்துறையில் இத்தனை ஆக்கப்பூர்வமாக செயல்படும் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டும் ஒதுக்கியிருப்பதை நம் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.

    இது தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி.

    தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டும் பாசிச பா.ஜ.க.வின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    வாக்களிக்காத மாநிலங்களுக்கு எதிரான மனநிலையை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மக்களும் தி.மு.க. அரசுக்கு துணை நிற்பார்கள்.
    • தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியமாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.

    மாதவரம்:

    புழல் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 2124 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களுக்கு தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும். மக்களும் தி.மு.க. அரசுக்கு துணை நிற்பார்கள் என்பதை பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40க்கு வெற்றி பெற செய்து நிரூபித்து உள்ளீர்கள். இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த ஆடை அவசியம். இதனை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. இதன் அவசியம் அறிந்து 1970-ல் கலைஞர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தொடங்கினார். தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியமாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,முத்துச்சாமி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தகவல்களைப் பகிரும் வசதி உங்கள் அனைவருக்கும் பிரித்து வழங்கப்படும்.
    • பாரதிய ஜனதா கட்சி வெறும் பொய்களையே பரப்பி, பொய்களை மட்டுமே பேசி, அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    தி.மு.க. இளைஞரணி 45-வது ஆண்டு தொடக்க விழா, தேனாம்பேட்டையில் உள்ள இளைஞரணி தலைமை செயலகமான அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நடந்தது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,

    இன்றைக்குச் சமூக வலைத்தளப் பக்கங்கள் தொடங்கி இருக்கிறோம். ஏற்கெனவே, இளைஞர் அணிக்கு என்று ஒரு சமூக வலைத்தளம் இருந்தாலும், இன்றைக்கு ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்குமென தனியாக ஒரு சமூக வலைத்தளப் பக்கம், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், ஃபேஸ்புக் ஆகியவற்றைத் தொடங்கி இருக்கிறோம். அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு இந்தச் சமூக வலைத்தளப் பக்கங்கள் அன்பகத்தில் இருந்தே இயங்கும். இதற்கான பயிற்சிகள் முறையாக வழங்கப்பட்ட பிறகு, அவற்றில் தகவல்களைப் பகிரும் வசதி உங்கள் அனைவருக்கும் பிரித்து வழங்கப்படும்.

    நான் உங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், எப்படி அரசியல் களத்தில் மக்களைச் சந்திக்கிறோமோ, அந்தக் களம் எவ்வளவு முக்கியமோ அதேபோல இன்றைக்கு இந்தச் சமூக வலைத்தளங்களும் மிக மிக முக்கியமாக இருக்கின்றன. குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சி வெறும் பொய்களையே பரப்பி, பொய்களை மட்டுமே பேசி, அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம்முடைய இயக்கத்திற்குத்தான் வரலாறும் சாதனைகளும் இருக்கின்றன. அவற்றை நாம் சமூக ஊடகப் பக்கங்கள் வழியாக மக்களிடம் பரவலாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • பிரதமர் மோடி 1000 முறை வந்தாலும் பா.ஜனதாவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது.
    • எங்களது இளைஞரணிக்கு பிராண்ட் அம்பாசிடர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி 45-வது ஆண்டு தொடக்க விழா, தேனாம்பேட்டையில் உள்ள இளைஞரணி தலைமை செயலகமான அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நடந்தது.

    விழாவுக்கு இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    இதில் தி.மு.க. இளைஞர் அணிக்கு மாவட்ட வாரியாக சமூக வலைத்தளப் பக்கங்களை தொடங்கி வைத்தார். இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான சமூக வலைத்தள பயிற்சியையும் தொடங்கி வைத்தார்.

    விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தி.மு.க.வில் இளைஞரணி 44 ஆண்டுகள் முடிந்து 45-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவிலேயே ஒரு இயக்கத்துக்கு அணிகள் இருப்பது தி.மு.க. வுக்குதான். தி.மு.க.வில் பல அணிகள் இருந்தாலும் அதில் முதல் அணியாக இளைஞரணி உள்ளது.

    சேலத்தில் வெற்றிகரமாக இளைஞரணி மாநாட்டை நடத்தி காட்டினீர்கள். அதற்காக மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி 6 முறை தமிழகத்துக்கு வந்தார். இரண்டு அல்லது மூன்று இடங்களில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் வந்தார். அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நான் ஏற்கனவே சொன்னேன். அதே போலவே தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமர் மோடி 1000 முறை வந்தாலும் பா.ஜனதாவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது.

    இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்ற இளைஞரணியை சேர்ந்த பிரகாஷ், அண்ணாதுரை இருவரும் டெல்லி சென்றாலும் இளைஞரணியை மறக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நீங்கள் 15 நாட்கள் தங்கி பணியாற்றினீர்கள்.

    முதலமைச்சர் இப்போது கோட்டையில் இருந்தாலும், அவரது எண்ணம் இங்குதான் இருக்கும். நேற்று நள்ளிரவு 11 மணிக்கும், இன்று காலை 8 மணிக்கும் இளைஞரணி நிகழ்ச்சிக்காக வாழ்த்து தெரிவித்தார்.

    எங்களது இளைஞரணிக்கு பிராண்ட் அம்பாசிடர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். அதை தான் அவரும் விரும்புவார். ஏனென்றால் அதற்காக அவர் கடுமையாக உழைத்து இருக்கிறார். அவர் இந்த அளவுக்கு உயர்வு பெறுவ தற்கு இளைஞரணிதான் காரணம்.

    இன்று அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி பொறுப்புகளில் வருவதற்கு இளைஞரணிதான் அடித்தளம். இளைஞரணிக்கு சமூக வலைதள பக்கம் தொடங்கியுள்ளோம். இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. அரசியல் களம் எவளவு முக்கியமோ, அந்த அளவுக்கு சமூக வலைதளம் முக்கியம்.

    சட்டமன்ற தொகுதிகளில் நூலகம் தொடங்கி வருகிறோம். இதுவரை 50 நூலகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் விரைவில் தொடங்கப்படும். முதலமைச்சருக்கு துணையாக இருக்க வேண்டும் என்று பலர் முன்மொழிந்தீர்கள்.

    ஊடகங்களில் வரும் கிசு... கிசு..., வதந்திகள் உண்மையாகி விடும் என்ற எண்ணத்தில் துண்டு போட்டு வைத்து கொள்வோம் என்ற எண்ணத்தில் பேசுகிறீர்கள்.

    துணை முதலமைச்சர் குறித்து ஏற்கனவே பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டபோது எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்பார்கள் என்று கூறினேன். எந்த பதவிக்கு வந்தாலும் இளைஞரணியை மறந்து விட மாட்டேன். அதுதான் எனது மனதுக்கு பிடித்தமானது.

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எப்படி உழைத்தோமோ அதுபோன்று 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பணியாற்ற வேண்டும். அந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பெண்கள் அதிக அளவு வாக்களித்து இருக்கிறார்கள். அது தி.மு.க. வுக்கு நல்ல பெயரை கொடுத்து இருக்கிறது.

    இதற்கு காரணம், விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை திட்டமாகும். எனவே அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லி 2026-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவோம்.

    சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும். மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார். அந்த எண்ணத்தில் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியை முடித்து விட்டு வெளியே வந்த உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள், எந்த பொறுப்புக்கு சென்றாலும் சனாதனத்தை மறக்க மாட்டேன் என்று பேசினீர்கள் உங்களுக்கான பொறுப்புகள் மாறுகிறதா? என்று கேட்டனர். அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் கூறும்போது, பொறுப்புகள் மாற்றம் குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்றார்.

    நீட் தேர்வு குறித்த மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் நீட் தேர்வுககு எதிர்ப்பு எப்போதும் இருக்கும். தமிழக அரசு சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. ஏற்கனவே நீட் எதிர்ப்பு மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி உள்ளோம் என்றார்.

    • 45-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது தி.மு.க. இளைஞரணி.
    • அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் பெற்றவர்களாக வார்த்தெடுப்பீர்கள் எனக் கழகத் தலைவராக நம்புகிறேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    45-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது தி.மு.க. இளைஞரணி. இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் தம்பி உதயநிதிக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

    கழகக் கொள்கைகளையும் வரலாற்றையும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் எடுத்துச் சென்று, அவர்களை அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் பெற்றவர்களாக வார்த்தெடுப்பீர்கள் எனக் கழகத் தலைவராக நம்புகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • திமுக இளைஞர் அணி 45-ம் ஆண்டு தொடக்க விழாவில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
    • பொறுப்புகள் மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் திமுக இளைஞர் அணி 45-ம் ஆண்டு தொடக்க விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் உங்களின் பொறுப்பு மாற்றப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினர்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில்,

    * பொறுப்புகள் மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்.

    துணை முதலமைச்சர் பொறுப்புக்கு வர வேண்டும் என திமுகவினர் பேசி வருகிறார்கள். இளைஞரணி பதவியே மனதிற்கு மிக மிக நெருங்கிய பொறுப்பு என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி பல முறை தமிழகத்திற்கு வந்தார்.
    • எதிர்வரும் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு திமுக இளைஞரணியினர் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் திமுக இளைஞர் அணி 45-ம் ஆண்டு தொடக்க விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * திமுகவில் பல அணிகள் இருந்தாலும் முதல் அணி இளைஞரணி தான்.

    * பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி பல முறை தமிழகத்திற்கு வந்தார்.

    * பிரதமர் மோடியின் வருகையை நிராகரித்து 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வெற்றி அளித்துள்ளனர்.

    * பாஜக பொய் மட்டுமே பேசி அரசியல் செய்து வருகிறது.

    * திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞரணியும் ஒரு காரணம்.

    * சதிகளை முறியடித்து சாதனை ஆட்சியை 2026-லும் தொடர உறுதியேற்போம்.

    * திமுக இளைஞரணியினர் சமூக வலைதங்களில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    * ஒவ்வொரு மாவட்டத்திற்கு என இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் தளத்தில் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

    * எதிர்வரும் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு திமுக இளைஞரணியினர் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    * இல்லம் தோறும் இளைஞரணி என்ற திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.

    * நகரம் முதல் கிராமம் வரை ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று திமுகவின் திட்டங்கள், சாதனைகளை எடுத்துக்கூற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    • நாம் ஆற்றிய பணிகளும் ஏராளம், காத்திருக்கும் கடமைகளும் ஏராளம்.
    • இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.

    சதிகளை முறியடித்து சாதனை ஆட்சியை 2026லும் தொடர உறுதியேற்போம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

    திமுக இளைஞர் அணி 45ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், அமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திமுக கழக இளைஞர் அணி 44 ஆண்டுகளை நிறைவுசெய்து, 45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நீண்ட வரலாற்றில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டலில், இளைஞர் அணிச் செயலாளராகப் பணியாற்றும் வாய்ப்பை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.

    திமுக இளைஞரணி செயற்பாடுகளில் உற்சாகத்துடன் தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும்.

    நாம் ஆற்றிய பணிகளும் ஏராளம், காத்திருக்கும் கடமைகளும் ஏராளம் என்பதை உணர்ந்து, 2026-இல் மீண்டும் நம் திராவிட மாடல் ஆட்சி அமைய உறுதியேற்போம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெருந்தலைவர் காமராஜர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் இடையே இருந்த அன்பும் நட்பும் நாடறிந்தவை.
    • நம் மாணவர்களின் கற்றல் திறனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது,

    கல்வியை கனவில் கூட நினைக்கத் தயங்கிய ஒரு தலைமுறையை பள்ளிக்கூடங்கள் நோக்கி அழைத்து வந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று.

    கடைக்கோடி மனிதர்களின் முன்னேற்றம் என்ற ஒருமித்த சிந்தனையோடு, பெருந்தலைவர் காமராஜர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் இடையே இருந்த அன்பும் நட்பும் நாடறிந்தவை.

    விடுதலைப் போராட்டம் மாநில முன்னேற்றத்துக்கான ஆட்சி நிர்வாகம் - ஏழை, எளிய மக்களுக்கான அரசியல் என்று உழைத்த காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறிவித்தார்கள்.

    இன்று காமராஜரின் பிறந்த நாளில், உலகமே போற்றி பின்பற்றுகிற காலை உணவுத் திட்டத்தை, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்துள்ளார்கள் நமது முதலமைச்சர்.

    இதனால் காலை உணவுத் திட்டம் மூலம் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது.

    கல்வி வளர்ச்சி நாளையொட்டி விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவுத்திட்டம், நம் மாணவர்களின் கற்றல் திறனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

    பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பணிகளை என்றும் போற்றுவோம். அவரது புகழ் ஓங்கட்டும் என்று கூறியுள்ளார்.

    • ஒன்றிய பிரதமர் மோடி, 7, 8 முறை தமிழ்நாட்டுக்கு பிரசாரத்திற்கு வந்தார்.
    • தி.மு.க. எந்த தேர்தலை சந்தித்தாலும் தமிழக மக்கள் வெற்றியை கொடுத்து வருகிறீர்கள்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையுள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி இன்று காலை தும்பூர் பகுதியில் திறந்த வேனில் தேர்தல் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-

    நேற்று மாலையிலிருந்து விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் சுற்றி சுற்றி அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறேன். உதயசூரியன் வாக்கு பெட்டியில் எப்படி முதல் இடத்தில் இருக்கிறதோ, அதேபோல வாக்கு எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும்.

    பாராளுமன்றத் தேர்தலின்போது முதல்-அமைச்சர் 40 பாராளுமன்ற தொகுதிக்குச் சென்று வாக்கு கேட்டு பா.ஜ.க.வை ஓட ஓட விரட்ட வேண்டும் என்றும், அடிமை அதிமுகவையும் ஓட ஓட விரட்ட வேண்டும் என்றும், இந்திய கூட்டணி ஜெயிக்க வேண்டும் என பிரசாரம் செய்தவர்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    ஒன்றிய பிரதமர் மோடி, 7, 8 முறை தமிழ்நாட்டுக்கு பிரசாரத்திற்கு வந்தார். நீங்கள் ஆயிரம் முறை வந்தாலும் சரி தமிழ்நாட்டில் உங்களால் காலூன்ற முடியாது. தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு அந்த இடத்தை தர மாட்டார்கள். அன்னியூர் சிவாவை குறைந்தது ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    தி.மு.க. எந்த தேர்தலை சந்தித்தாலும் தமிழக மக்கள் வெற்றியை கொடுத்து வருகிறீர்கள். 3 ஆண்டு முன்பு தி.மு.க. ஆட்சி அமைந்தால் பெட்ரோல் விலை குறைப்பேன் என முதல்-அமைச்சர் தெரிவித்தார், ஆட்சி அமைந்த உடன் பெட்ரோலுக்கு ரூ.3 குறைத்தார். பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்தார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் மூலம் பயன் பெற்றிருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் 3 லட்சம் மகளிர் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்றுவருகின்றனர்.

    இன்றைக்கு அனைத்து வட மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள். 7 வருடத்திற்கு முன்பு இந்த நீட் தேர்வு ரத்து செய்யக்கோரியது தி.மு.க. தான். இன்று வட மாநில தலைவர்கள் புரிந்து கொண்டு தற்போது நீட் தேர்வை எதிர்த்து வருகின்றனர்.

    நீட் தேர்வு நடத்தும் கட்சியான பா.ஜ.க.வுடன் சேர்ந்து பா.ம.க. தேர்தல் கூட்டணி அமைத்திருக்கிறது எனவே அவர்களை நிராகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2.72 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
    • எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக-வை பார்த்து மட்டும் பயமில்லை.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். விக்கிரவாண்டிக்கு திமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ள திட்டங்களை பட்டியலிட்டு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

    * பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி.

    * விக்கிரவாண்டியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    * விடியல் பயணம் மூலம் பெண்கள் மாதம் ரூ.1000 சேமித்து வருகின்றனர்.

    * புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2.72 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

    * காலை உணவு திட்டம் மூலம் 17 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

    * மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 1.16 கோடி பேருக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.

    * வருகிற ஜூலை 10-ந்தேதி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு வாக்களித்து, 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    * நமது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலில் போட்டியிடவில்லை. தொடர் தோல்வி பயத்தால் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

    * எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக-வை பார்த்து மட்டும் பயமில்லை. மக்களை பார்த்தே பயம். அதனால் தான் தேர்தலையே புறக்கணித்து விட்டார்.

    * பாஜக-வை பார்த்தும் பயம். அதனால் அவர்களுக்கு வழிவிட்டு போட்டியிடவில்லை என்று கூறினார்.

    • கொடுங்குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறை நேற்று இரவு கைது செய்துள்ளது.
    • குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர நம்முடைய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

    சென்னை:

    திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங், சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் - வேதனையும் அடைந்தேன்.

    அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றி ஏராளமான இளைஞர்களின் கல்விக்காகவும் - ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் களத்தில் உழைத்த ஆம்ஸ்ட்ராங்க் மரணம், ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் மிகப்பெரிய பேரிழப்பாகும்.

    இந்தக் கொடுங்குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறை நேற்று இரவு கைது செய்துள்ளது. மேலும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் இந்தச் சூழலில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர நம்முடைய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

    சகோதரர் ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் – குடும்பத்தினர் – நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    ×