என் மலர்
நீங்கள் தேடியது "piyush goyal"
- அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு.
- ஆனால், அமைச்சர் பியூஷ் கோயல் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியது நாடாளுமன்ற மரபுகளை மீறி செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதியிடன் முடிவடைகிறது.
இந்நிலையில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மீது திமுக எம்.பி. திருச்சி சிவா இன்று (பிப்ரவரி 9) உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 3 அன்று, அமைச்சர் பியூஷ் கோயல் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். ஒப்பந்தத்தின் விரிவான விவரங்கள் அடங்கிய கூட்டு அறிக்கை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 7 அன்று அமைச்சர் பியூஷ் கோயல் பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் அம்சங்களை விளக்கினார்.
பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு.
ஆனால், அமைச்சர் பியூஷ் கோயல் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியது நாடாளுமன்ற மரபுகளை மீறிய செயல் என்றும், இது அவையின் உரிமை மீறல் ஆகும் என்றும் திருச்சி சிவா தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவை சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஏற்கனவே அவையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த உரிமை மீறல் நோட்டீஸை பின்னர் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.
சபாநாயகர் பதிலால் அதிருப்தியடைந்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த விவகாரத்தை உடனடியாக விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர்.
- நரேந்திர மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியா-அமெரிக்காவுடன் ஒரு இடைக்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு எட்டப்பட்டுள்ளது.
- குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தையைத் திறந்துவிடும்.
மத்திய மந்திரி பியூஷ் கோயல் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-
நரேந்திர மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியா-அமெரிக்காவுடன் ஒரு இடைக்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு எட்டப்பட்டுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,700 லட்சம் கோடி) சந்தையைத் திறந்துவிடும்.
ஏற்றுமதி அதிகரிப்பு நமது பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்த ஒப்பந்தம் மக்காச்சோளம், கோதுமை, அரிசி, சோயா, கோழிப்பண்ணை, பால், பாலாடைக்கட்டி, எத்தனால், புகையிலை, சில காய்கறிகள், இறைச்சி உள்ளிட்ட முக்கியமான விவசாய மற்றும் பால் பொருட்களை முழுமையாகப் பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், கிராமப்புற வாழ்வாதாரங்களைத்தக்க வைப்பதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
இந்த ஒப்பந்தம் நமது மக்களுக்கும் வணிகங்களுக்கும் நிலையான வளர்ச்சிக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதில் இந்தியாவும் அமெரிக்காவும் கவனம் செலுத்த உதவும் என்று தெரிவித்து உள்ளார்.
- அண்டை நாடுகளை விட சிறந்த வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்கா உடன் ஏற்பட்டுள்ளது.
- சீனாவுக்கு 37 சதவீதம், வங்கதேசத்திற்கு 20 சதவீதம், பாகிஸ்தானுக்கு 19 சதவீதம் வரி விதித்துள்ளது.
இந்தியா- அமெரிக்கா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவை குறைப்பதாக இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் இந்தியா மீதான 50 சதவீதம் வரி விதிப்பை 18 சதவீதமாக குறைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்தியா- அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தை இந்திய அரசுதானே முதலில் அறிவிக்க வேண்டும். டிரம்ப் அறிவித்தது ஏன்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இதற்கு பியூஷ் கோயல் பதில் அளிக்கும் வகையில் கூறியதாவது:-
இந்தியா- அமெரிக்கா ஒப்பந்தம் குறித்து டொனால்டு டிரம்ப் அறிவித்தது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பியதை பார்த்தேன். அமெரிக்கா இந்தியா மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தியது. இதனால் அது நீக்கப்பட்டதை அவர்கள் அறிவித்திருக்க வேண்டும்.
பல தடைகள் மற்றும் பல மாத பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அண்டை நாடுகளை விட சிறந்த வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்கா உடன் ஏற்பட்டுள்ளது.
போட்டி பொருளாதாரத்திற்கான குறைந்த வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனா, பாகிஸ்தான் நாடுகளை விட இந்தியாவுக்கான வரி விதிப்பு குறைவானதாகும்.
நெருக்கடியின் கீழ் பிரதமர் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ராகுல் காந்தி தெரிவிக்கிறார். அவர் மக்களை தவறாக வழி நடத்த விரும்புகிறார். இந்தியாவின் வளர்ச்சி குறித்து அவர் கவலைப்படவில்லை. ராகுல் காந்தியின் பிரச்சனைதான் என்ன?. எதிர்மறையான மனநிலையால் அவர் சாதிக்க விரும்புவது என்ன? என்பதை மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.
சீனாவுக்கு 37 சதவீதம், வங்கதேசத்திற்கு 20 சதவீதம், பாகிஸ்தானுக்கு 19 சதவீதம் வரி விதித்துள்ளது.
- பிரதமர் மோடி அமெரிக்காவுடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளார்.
- மோடிக்கும் டிரம்புக்கும் இடையிலான தனிப்பட்ட உறவின் காரணமாக ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளோம்.
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:-
* நமது போட்டியாளர்களை விட சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை நாம் பெற்றுள்ளோம்:
* இந்த ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச விரும்பினேன். ஆனால் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் உருவாக்கிய விரும்பத்தகாத காட்சிகளால் என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை.
* இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஏழைகள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள்.
* பிரதமர் மோடி அமெரிக்காவுடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளார்.
* ஒட்டுமொத்த தேசமும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறது
* பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இடையிலான தனிப்பட்ட உறவின் காரணமாக இந்தியா அமெரிக்காவுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
* கால்நடை வளர்ப்பு, விவசாயம் மற்றும் பால்வளத் துறைகளின் நலன்களை பிரதமர் மோடி கருத்தில் கொண்டுள்ளார்.
* அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா, முக்கியத்துவம் வாய்ந்த விவசாயம் மற்றும் பால்வளத் துறைகளின் நலன்களைப் பாதுகாத்துள்ளது
* வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு ஒரு நல்ல சகுனம்
இவ்வாறு பியஷ் கோயல் தெரிவித்தார்.
- நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை NDA கூட்டணிக்கு இழுக்க பாஜக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
- திரையுலகில் ரசிகர்களை வைத்திருப்பது முற்றிலும் வேறு.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை NDA கூட்டணிக்கு இழுக்க பாஜக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய் குறித்தும் தமிழக வெற்றிக் கழகம் குறித்தும் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கருத்து தெரிவித்துள்ளார்.
பியூஷ் கோயல் கூறியதாவது, தவெகவை கூட்டணிக்கு இழுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. சூப்பர் ஸ்டார்கள் வருவார்கள்; போவார்கள். அவர்களால் எந்தத் தாக்கமும் இருக்காது.
திரையுலகில் ரசிகர்களை வைத்திருப்பதும் அதை வாக்குகளாக மாற்றுவதும் முற்றிலும் வேறுபட்ட விஷயங்கள்.
விஜய்யுடன் இதுவரை எந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையும் NDA நடத்தவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றியடைவது அவ்வளவு கடினம் அல்ல. திமுகவின் ஊழல் மற்றும் தமிழ் விரோத கலாசாரத்தால் தமிழ்நாடு மிகவும் வெறுப்படைந்துள்ளது" என்றும் தெரிவித்தார்.
- தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு உள்ளன.
- அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.வையும் சேர்ப்பதற்கு தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பா.ஜ.க. தலைவர்களுக்கு விருந்து அளித்து தேர்தல் வியூகம் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இவை பற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-
பா.ஜ.க. வருகிற சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகள் வரையில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுக்கு 25 தொகுதிகள் ஒதுக்குவதற்கு சம்மதித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.ம.மு.க.வுக்கு 6 அல்லது 7 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்புமணி தலைமையிலான பா.ம.க.வுக்கு 17 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அத்துடன் அன்புமணிக்கு மேல்சபை எம்.பி. பதவி அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி, பியூஸ் கோயல் இடையேயான இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை அனைத்து கூட்டணி கட்சிகளோடும் இணைந்து ஒற்றுமையுடன் சந்திப்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்தும் எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசுக்கு எதிராக வியூகம் அமைத்து செயல்படுவது பற்றியும் இன்றைய சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி, பியூஸ் கோயல் இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளனர். இதன்படி தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு கூட்டணி கட்சி தலைவர்களோடு இணைந்து பொதுக் கூட்டங்கள் நடத்துவது பற்றியும் அதில் தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு உள்ளன.
பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் பியூஸ் கோயல் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசி இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த மாதம் வரையில் பா.ஜ.க. கட்சி மட்டுமே இடம் பெற்றிருந்த நிலையில் புத்தாண்டு பிறந்த பிறகு அந்த கூட்டணியில் அதிரடி திருப்பமாக அன்புமணி தலைமையிலான பா.ம.க.வும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வும் சேர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அ.தி.மு.க.-பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகளின் தொண்டர்களும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற சிறிய கட்சிகளின் தொண்டர்களும் உற்சாகம் அடைந்து இருப்பதாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும் போது, வருகிற சட்டமன்ற தேர்தலை மெகா கூட்டணி அமைத்து சந்திப்போம் என்று எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வந்தார். அப்போது எல்லாம் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் ஏளனம் செய்தார்கள். அவர்களது வாயை எல்லாம் அடைக்கும் வகையில் அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணியாக மாறி இருக்கிறது. இதே வேகத்தோடு சென்று நிச்சயம் வருகிற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்றும் தெரிவித்தார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.வையும் சேர்ப்பதற்கு தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் தே.மு.தி.க.வும் விரைவில் அ.தி.மு.க. கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி கூட்டணி இறுதி செய்யப்பட்டதும் கூட்டணி கட்சிகள் அனைத்திற்கும் தொகுதிகளை பங்கீடு செய்து கொடுத்து விட்டு அ.தி.மு.க. 170 தொகுதிகளில் களம் இறங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தமிழகத்தில் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு உள்ளது. இதன் மூலம் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் பியூஷ் கோயலுக்கு காலை விருந்தளித்தார்.
- மிகப் பெரிய பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்.
தமிழ்நாடு பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரியுமான பியூஸ் கோயல் முன்னிலையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் நேற்று இணைந்தார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் பியூஷ் கோயலுக்கு காலை விருந்தளித்தார்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
* மிகப் பெரிய பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்.
* சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசும் உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
அப்போது த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவித்தார்.
- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் தனது இல்லத்துக்கு வந்தது மகிழ்ச்சி.
- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலுக்கு காலை விருந்தளித்தார்.
அவருடன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் தனது இல்லத்துக்கு வந்தது மகிழ்ச்சி.
* பிரதமர் மோடி பங்கேற்கும் நாளைய பொதுக்கூட்டம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.
* தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி அமையும்.
* மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.
* அனைத்து துறைகளிலும் தி.மு.க. அரசு தோல்வி அடைந்துள்ளது.
* தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது.
* தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பான அறிக்கையை ஆளுநரிடம் வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. குடும்ப ஆட்சியில் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனது பழைய நண்பர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலுக்கு காலை விருந்தளித்தார்.
அவருடன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் தி.மு.க. அரசை அகற்றிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும்.
* தி.மு.க. குடும்ப ஆட்சியில் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* அனைத்து துறைகளிலும் ஊழல் செய்தது மட்டும் தான் தி.மு.க. அரசின் சாதனை.
* உதயநிதி ஸ்டாலினை உடனடியாக துணை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
* உதயநிதி ஸ்டாலின் தேசியத்திற்கு எதிரான கருத்துகளை கூறி வருகிறார்.
* உதயநிதி பேச்சுக்கு நீதிமன்றமே தனது கண்டனத்தை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
* அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனது பழைய நண்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பியூஸ் கோயல் முன்னிலையில் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.
- தேசிய ஜனநாயக கூட்டணி என்பது 2026 தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக மாறிக்கொண்டு இருக்கிறது.
தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் இருந்து தொடர்ந்து வருகிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதிபடுத்தியுள்ளது. இந்த கூட்டணியில் ஏற்கனவே பா.ம.க. இணைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டணி தலைவர்கள் அணிவகுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரியுமான பியூஸ் கோயல் முன்னிலையில் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் நேற்று இணைந்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்ததற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலுக்கு வருகை புரிந்தார்.
அவருடன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் வந்து இருந்தனர். எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில், மத்திய அமைச்சர், பியூஷ் கோயல், பா.ஜ.க. தலைவர்களுக்கு காலை விருந்து அளிக்கிறார்.
இதுதொடர்பாக கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறுகையில்,
தேசிய ஜனநாயக கூட்டணி என்பது 2026 தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக மாறிக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எங்களுக்கு பலம் சேர்ந்து கொண்டே இருக்கிறது.
நாளை பிரதமர் மோடி சென்னை வருகின்றபோது அங்கு கூடுகின்ற கூட்டம் என்பது தமிழகத்தினுடைய ஆட்சி மாற்றத்திற்கு கட்டியம் கூறுகின்ற கூட்டமாக இருக்கும்.
காலை உணவு முடிந்த பிறகு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உங்களை சந்தித்து பேசுவார் என்று அவர் கூறினார்.
- டி.டி.வி. தினகரனை எடப்பாடி பழனிசாமி வரவேற்று, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணி முடிவை அறிவித்த பின்னர், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்து தினகரன் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில், "மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர்
மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.
- பியூஸ் கோயல், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
- கூட்டணி அறிவிப்புக்கு பிறகு இபிஎஸை டிடிவி தினகரன் சந்திக்கவில்லை.
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணி முடிவை அறிவித்த பின்னர், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்து தினகரன் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.
இந்த சந்திப்பின்போது பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர். ஆனால் இக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான இபிஎஸ் இல்லை. தொடர்ந்து பியூஸ் கோயல், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது உங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? எடப்பாடியை ஏற்றுக்கொள்வீர்களா? என்பதுபோன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அப்போது டிடிவி தினகரன் பதிலளித்துக்கொண்டிருந்தபோதே, பியூஷ் கோயல் நயினார் நாகேந்திரனிடம் கிளம்பலாம் எனக்கூறி பேச்சை நிறுத்தினார். இது தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.






