என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NDA Alliance"

    • கடந்த தேர்தலில் போட்டியிட்ட 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட உள்ளது.
    • புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம்பெறும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    வருகிற சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்கிறது. இதை கடந்த 14-ந்தேதி காரைக்காலுக்கு வந்த மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்த பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட உள்ளது. ஒரு சில தொகுதிகளை மாற்றம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுவைக்கு பிரதமர் வருகை, தொகுதி பங்கீடு குறித்து புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை இன்று திலாசுப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார். சுமார் 5 நிமிடங்கள்தான் இந்த சந்திப்பு நடந்தது.

    இதன் பின்னர் சுரானா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பின்போது, முதல்-அமைச்சர் ரங்கசாமி, புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம்பெறும். அதேநேரத்தில் தமிழகத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கட்சி தலைமையிடம் தகவலை தெரிவிப்பதாக கூறிவிட்டு, நிர்மல் குமார் சுரானா வெளியேறியுள்ளார்.

    புதுவையையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு செல்வாக்கு உள்ளது. இந்த பகுதிகளில் ரங்கசாமியின் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

    ஏற்கனவே தமிழகத்திலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் கால் பதிக்கும் என ரங்கசாமி கூறியிருந்தார். அந்த மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அடிக்கடி சந்தித்து வருகின்றனர்.

    இதனடிப்படையில் தமிழகத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி என முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார். ஏற்கனவே மாநிலத்துக்கு, மாநிலம் கம்யூனிஸ்ட்டு கட்சிகள் கூட்டணி அமைப்பார்கள்.

    இதுபோல கடந்த 2001 சட்டமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் அதிமுக தலைமையில் காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

    ஆனால் புதுவையில் அ.தி.மு.க., பா.ம.க.வுடன் தனி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் தனியாக போட்டியிட்டது.

    அதுபோல தற்போது புதுவைக்கு ஒரு கூட்டணியும், தமிழகத்துக்கு தனி கூட்டணி என்ற முடிவை ரங்கசாமி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    • அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
    • அரசு ஊழியர்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சியை பிடித்தது.

    ராயப்பேட்டை:

    சென்னை ராயப்பேட்டையில் பா.ம.க. மாநில இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

    * எ.வ.வேலு அமைச்சர் கிடையாது வியாபாரி. இன்னும் 2 மாதத்தில் 1, 2, 3 என சிறையில் கம்பி எண்ணப்போகிறார்.

    * சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி உட்பட 47 தொகுதிகளை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஒதுக்கி உள்ளது தி.மு.க.

    * தி.மு.க.வினர் கிராமங்கள் அளவில் ஓட்டுக்கு பணம் கொடுக்க பணத்தை கொண்டுபோய் பதுக்கி வைத்துள்ளனர்.

    * பணத்தை மட்டுமே நம்பி தி.மு.க. இந்த சட்டசபை தேர்தலை சந்திக்கிறது.

    * கேடு கெட்ட தி.மு.க. ஆட்சி குறித்து வீடு வீடாக சென்று கூறுங்கள்.

    * இளைஞர்களால் எத்தனையோ பல புரட்சிகள் நாட்டில் நடைபெற்று இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற புரட்சி நடக்கும்.

    * தேர்தலில் தி.மு.க. ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெல்லும். தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்தது 200 தொகுதிகளில் வெல்லும்.

    * அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

    * அரசு ஊழியர்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சியை பிடித்தது.

    * துணை பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், ஊராட்சி செயலாளர்கள், சத்துணவு ஊழியர்களுக்கு தி.மு.க. போலி வாக்குறுதி அளித்துள்ளது என்றார்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு குற்ற சம்பவங்கள் அதிகரித்து தான் உள்ளது.
    • சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    மதுரை:

    மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் தென்மண்டல மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராக உள்ளார்கள். தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் 70 சதவீதம் நிறைவேற்றவில்லை. ஆட்சி முடியும் போது தி.மு.க. அரசு புதிய திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவது தொடர் கதையாகி வருகிறது. புதிய அறிவிப்புகளை வெளியிடுவது மக்களை முகம் சுழிக்கும் அளவில் தான் உள்ளது.

    தமிழக மக்கள் மீண்டும் தி.மு.க.விடம் ஏமாற மாட்டார்கள் என்று நினைக்கிறேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு குற்ற சம்பவங்கள் அதிகரித்து தான் உள்ளது. விஜயின் த.வெ.க.வுக்கு கட்சிக்கு ஒவ்வொரு வரும் ஒவ்வொரு சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என சொல்லி வருகிறார்கள். யாரும் 10 சதவீதம் குறைவாக சொல்லவில்லை.

    சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணியில் தலைமை வகிக்கும் கட்சி தான் எங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். தேசிய அளவில் மோடி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்டோர் உள்ளனர்.

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் பாஜக, த.மா.க உள்ளிட்ட கட்சிகள் உள்ளது அவ்வளவு தான் வித்தியாசம் என்றார்.

    • நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை NDA கூட்டணிக்கு இழுக்க பாஜக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
    • திரையுலகில் ரசிகர்களை வைத்திருப்பது முற்றிலும் வேறு.

    தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை NDA கூட்டணிக்கு இழுக்க பாஜக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் விஜய் குறித்தும் தமிழக வெற்றிக் கழகம் குறித்தும் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கருத்து தெரிவித்துள்ளார்.

    பியூஷ் கோயல் கூறியதாவது, தவெகவை கூட்டணிக்கு இழுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. சூப்பர் ஸ்டார்கள் வருவார்கள்; போவார்கள். அவர்களால் எந்தத் தாக்கமும் இருக்காது.

    திரையுலகில் ரசிகர்களை வைத்திருப்பதும் அதை வாக்குகளாக மாற்றுவதும் முற்றிலும் வேறுபட்ட விஷயங்கள். 

    விஜய்யுடன் இதுவரை எந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையும் NDA நடத்தவில்லை" என்று தெரிவித்துள்ளார்.  

    மேலும், "தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றியடைவது அவ்வளவு கடினம் அல்ல. திமுகவின் ஊழல் மற்றும் தமிழ் விரோத கலாசாரத்தால் தமிழ்நாடு மிகவும் வெறுப்படைந்துள்ளது" என்றும் தெரிவித்தார். 

    • 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் எனது முதல் பயணம் இது.
    • தமிழ்நாடு இப்போது மாற்றத்திற்கு தயாராகிவிட்டது என்பது தான்.

    பாரத் மாதா கீ ஜே எனக் கூறி பிரதமர் மோடி உரையைத் தொடங்கினார். அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், அன்புமணி, டிடிவி தினகரன் ஆகியோரை பிரமர் வரவேற்று பேசினார்.

    கூட்டணி கட்சி தலைவர்கள் பெயர்களை கூறிய பிரதமர் மோடி, இளம் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம் என்று கூறினார்.

    பின்னர் மேலும் அவர் கூறியதாவது:-

    2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் எனது முதல் பயணம் இது. பொங்கலுக்கு பின் சிறப்பான ஆனந்தம் நிறைந்திருக்கிறது.

    பொங்கல், எம்ஜிஆர் பிறந்தநாள் உள்ளிட்ட சிறப்பான நாட்கள் உள்ள மாதத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளேன்.

    மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த ராமரை வணங்குகிறேன், தமிழ்நாட்டின் நலனிற்காகவும் வேண்டிக்கொள்கிறேன்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக மனிதர் எம்ஜிஆர். இங்கு கூடியுள்ள கூட்டம் நாட்டிற்கு ஒரு செய்தி சொல்கிறது. தமிழ்நாடு இப்போது மாற்றத்திற்கு தயாராகிவிட்டது என்பது தான்.

    மோசமான திமுக ஆட்சியில் இருந்து தமிழ்நாடு விடுபடத்துடிக்கிறது, தமிழ்நாடு என்டிஏ கூட்டணியை விரும்புகிறது.

    தமிழ்நாட்டை திமுக அரசிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது தான் நம் அனைவரின் உறுதிப்பாடு.

    திமுக அரசின் முடிவுரைக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம்.
    • மதுராந்தகம் பகுதிக்கு ஹெலிகாப்டரில் பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.

    தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி வியூகங்கள், பிரசாரங்களை வகுத்து வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தல் வியூகங்களில் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.

    இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

    தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகம் பகுதிக்கு ஹெலிகாப்டரில் பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • தமிழக மக்கள் அதிமுக-பாஜக கூட்டணியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
    • இந்தக் கூட்டணி தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி என்றார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழக மக்கள் அதிமுக-பாஜக கூட்டணியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை துரோகி என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்தார்.

    டிடிவி தினகரன் இன்று கூட்டணியில் சேர்ந்தும் இபிஎஸ் பெயரை சொல்வதையே தவிர்க்கிறார். ஆகவே, இந்தக் கூட்டணி தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி.

    மோடி ஒரு முறை அல்ல, 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    பிரதமர் மோடி ஒடிசாவுக்குச் சென்றால் தமிழகத்தில்தான் ஒடிசாவின் கஜானா சாவி இருக்கிறது என பேசுகிறார். பீகாருக்குச் சென்றால் பீகாரிகளை தமிழக மக்கள் வஞ்சிக்கிறார்கள் என்று கூறுவார்.

    இப்படி எல்லாம் பேசிவிட்டு தமிழக மக்கள் யாரும் விவரம் இல்லாதவர்கள், மறந்துவிடுவார்கள், பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள் என பேராசையோடு படையெடுக்கிறார்கள். இந்தப் படையெடுப்பை தமிழக மக்கள் முறியடிப்பார்கள்.

    என்டிஏ கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல். அந்தக் கப்பலில் யாரெல்லாம் பயணிக்கிறார்களோ அவர்களும் சேர்ந்துதான் மூழ்கிப் போவார்கள் என தெரிவித்தார்.

    • அண்ணன் டிடிவி தினகரன் அவர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் பங்கு வகிக்கும்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது என்ற செய்தி, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அமமுக பொதுச்செயலாளர், அன்பு அண்ணன் டிடிவி தினகரன் அவர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆழ்ந்த அரசியல் அனுபவமும், தேர்ந்த வியூகங்களும், வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் பங்கு வகிக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 11 அமைச்சர்களில் ஒன்பது பேர் மீது கலவரம், அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல், மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய வழக்குகள் உள்ளன.
    • 24 அமைச்சர்களில் 21 பேர் ரூ.1 கோடிக்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

    பீகார் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக-ஜேடியு என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது.

    கடந்த வியாழக்கிழமை பீகார் முதல்வராக ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பதவியேற்றார்.

    பாஜகவில் இருந்து 14 பேர், ஜேடியு விலிருந்து இருந்து 8 பேர், லோக் சக்தி (ராம்விலாஸ்) கட்சியில் இருந்து 2 பேர், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சாவில் இருந்து தலா ஒருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். துணை முதல்வர்களாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா பொறுப்பெற்றனர்

    இந்நிலையில் பீகாரில் பொறுப்பேற்ற 24 அமைச்சர்களில் 11 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) அறிக்கை வெளியிட்டுள்ளது.

    24 அமைச்சர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததன் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    24 அமைச்சர்களில் குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் 11 அமைச்சர்களில் ஒன்பது பேர் மீது கலவரம், அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல், மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், உடல் ரீதியான தீங்கு விளைவித்தல் மற்றும் தேர்தல் முறைகேடுகள் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

    இதில் பாஜகவைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. ஜேடியுவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும், லோக் சக்தியின் 2 அமைச்சர்களும், இந்துஸ்தானி அவாமியின் ஒரு அமைச்சரும் குற்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.

    அதேபோல் 24 அமைச்சர்களில் 21 பேர் ரூ.1 கோடிக்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.  

    • தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றுள்ளது.
    • முஸ்லிம்கள் - யாதவ் என்ற சமூக ரீதியான பார்முலா தோற்றது.

    243 தொகுதிகளுக்கு நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றுள்ளது.

    அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவான இந்த தேர்தலில் பெண்களும் இளம் வாக்காளர்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களித்ததாக நம்பப்படுகிறது.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்த வெற்றிக்கு 5  காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

    முதலாவது சரியான சீட் பகிர்வு ஆகும். என்டிஏ கூட்டணியில் உள்ள பாஜக, ஜேடியு, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) உள்ளிட்ட கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே அதிருப்தி இன்றி இணக்கமான முறையில் இடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

    ஆனால் எதிர்தரப்பில் காங்கிரஸ்-ஆர்ஜேடியின் மகாபந்தன் கூட்டணியில் சீட் பகிர்வில் அதிருப்தி காரணமாக வெளிப்படையாக மோதிக்கொண்டது.

    ஹேமந்த் சோரனின் முக்தி மோர்சா, ஒவைசி ஆகியோர் தனித்துப் போட்டியிட்டனர். ஒவைசி 5 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளார். தேசிய கட்சியான காங்கிரஸ் அவரை விட 1 சீட் அதிகமாக 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    அடுத்ததாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது பிரச்சாரத்தின் போது 'காட்டு ராஜ்ஜியம்' மீண்டும் வரும் என்ற அச்சத்தை பீகார் மக்களிடையே உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது.

    மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் பேசிய அனைத்து மேடைகளில் லாலு பிரசாத்-இன் காட்டு ராஜ்ஜியம் குறித்து மக்களுக்கு பயமூட்டிய வண்ணம் இருந்தனர். முடிந்தது.

    மூன்றாவதாக, அனைத்து சாதிகளையும் திருப்திப்படுத்தும் வியூகம் என்டிஏவுக்கு கை கொடுத்தது. காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி முஸ்லிம்கள் - யாதவ் என்ற சமூக ரீதியான பார்முலாவின் மூலம் பயனடைந்து வந்த நிலையில் பாஜக பெண்கள் - இளைஞர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்புகளின் ஒருங்கிணைப்பை உள்ளடக்கிய பார்முலாவை முன்னெடுத்தது.

    குறிப்பாக சுமார் ஒன்றரை கோடி பெண்களுக்கு வங்கிக்கணக்கில் தொழில் தொடங்குவதற்கான உதவித்தொகை என்ற பெயரில் நேரடியாக ரூ.10,000 டெபாசிட் செய்யப்பட்டது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில், பெண்களின் வாக்குப்பதிவு ஆண்களை விட 10-20 சதவீதம் அதிகமாக இருந்தது.

    மேலும் இளைஞர்களை குறிவைத்து சமூக நல திட்டங்களையும் ஆளும் நிதிஷ் குமார் தேர்தலுக்கு முன் முழுவீச்சில் முன்னெடுத்தார்.

    அதேநேரம் முதல் முறை வாக்காளர்கள் 14 லட்சம் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்ட நிலையில் அந்த வாக்கு வங்கி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிகம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. புதிய வாக்காளர்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 

    • தேசிய ஜனநாய கூட்டணி 202 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.
    • இந்தியா கூட்டணி வெறும் 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபைக்கு இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு கடந்த 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின.

    ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், பிற கட்சிகள் இடம்பெற்றன.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், பிற கட்சிகள் இடம்பெற்றன.

    இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தேசிய ஜனநாய கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று 202 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.

    இந்தியா கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பிற கட்சிகள், சுயேட்சைகள் 6 தொகுதிகளை கைப்பற்றின.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து விரைவில் நிதிஷ்குமார் பீகார் முதல் மந்திரியாக மீண்டும் பதவியேற்கிறார்.

    • ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.
    • பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    பாட்னா:

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட சட்ட சபைக்கு இரு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி 121 தொகுதிகளுக்கு நடக்கிறது.

    லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில் எதிர்க்கட்சிகளின், மகாகட்பந்தன் கூட்டணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது. முதல் மந்திரி நிதிஷ்குமார், பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் வெளியிட்டனர். அதன் விபரம் பின்வருமாறு:

    ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

    பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

    விவசாயிகளுக்கு நிதி உதவி ரூ.6,000ல் இருந்து ரூ.9,000ஆக உயர்த்தப்படும்.

    பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவு வழங்கப்படும்.

    பீகாரில் மேலும் 4 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்படும்.

    இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐஐடியும் அமைக்கப்படும்.

    பீகாரில் பத்து புதிய தொழில் பூங்காக்கள் திறக்கப்படும்.

    பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.10 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

    புதிய வீடுகள், இலவச ரேஷன், 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    ×