search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "criminal case"

    • கேரளாவில் மொத்தம் உள்ள 135 எம்.எல்.ஏ.க்களில் 95 பேர் (70 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
    • குற்றப் பதிவுகள் மட்டுமின்றி எம்.எல்.ஏ.க்களின் சொத்துகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

    புதுடெல்லி :

    இந்தியாவின் ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு மையம் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து, நாடு முழுவதும் உள்ள மாநில சட்டமன்றங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் இந்தியா முழுவதும் 44 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்கிற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

    28 மாநில சட்டசபைகள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும் 4,033 எம்.எல்.ஏ.க்களில் 4,001 பேரை இந்த ஆய்வு உள்ளடக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 1,136 எம்.எல்.ஏ.க்கள் (28 சதவீதம்) மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

    அதிகபட்சமாக கேரளாவில் மொத்தம் உள்ள 135 எம்.எல்.ஏ.க்களில் 95 பேர் (70 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதேபோல், பீகாரில் 242 எம்.எல்.ஏ.க்களில் 161 பேர் (67 சதவீதம்), டெல்லியில் 70 எம்.எல்.ஏ.க்களில் 44 பேர் (63 சதவீதம்), மராட்டியத்தில் 284 எம்.எல்.ஏ.க்களில் 175 பேர் (62 சதவீதம்), தெலுங்கானாவில் 118 எம்.எல்.ஏ.க்களில் 72 பேர் (61 சதவீதம்), தமிழகத்தில் 224 எம்.எல்.ஏ.க்களில் 134 பேர் (60 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

    மொத்தம் 114 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும், அவர்களில் 14 பேர் மீது கற்பழிப்பு வழக்கு உள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. குற்றப் பதிவுகள் மட்டுமின்றி எம்.எல்.ஏ.க்களின் சொத்துகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன்படி மாநில சட்டசபைகளில் ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.63 கோடி என கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், கிரிமினல் வழக்குகள் உள்ள எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.16.36 கோடியாகவும், குற்ற வழக்குகள் இல்லாதவர்களின் சொத்து மதிப்பு ரூ.11.45 கோடியாகவும் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

    டி.ஜி.பி.சைலேந்திர பாபு போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ஆகியவற்றை வழங்கி பாராட்டினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று காலை போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு நேரில் வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் வரவேற்றார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாக அரங்கில் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அந்தந்த நபர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் கடலூர் மாவட்டத்தில் முக்கிய குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை பிடித்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ஆகியவற்றை வழங்கி பாராட்டினார். இதில் போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் டி.ஜி.பி சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் போலீசாரின் புலன் விசாரணை சிறப்பாக உள்ளது. இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முத்தாண்டிக்குப்பம் கொலை வழக்கில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்து 48 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது பாராட்டுக்குரியதாகும். மேலும் போலீசார் புலன் விசாரணையில் அறிவியல் ரீதியாக பல்வேறு சாதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. மேலும் தமிழகத்தில் பெரிய அளவிலான கலவரம், வட மாநிலத்தவர்கள் கொள்ளையில் ஈடுபடுவது மற்றும் சீரியல் தொடர் கொள்ளை போன்றவற்றை நடைபெறாமல் பாதுகாத்து வருகின்றோம். சிதம்பரம் சிறுமி திருமண வழக்கு மற்றும் விசாரணை தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதன் செயலாளர் பதில் அளிப்பார்கள். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10,000 போலீசார் புதியதாக நியமித்த நிலையில் தற்போது 3,200 போலீசார் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பல்வேறு கட்டத்தில் போலீசார் புதிதாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    தமிழக எல்லைகளில் உள்ள சோதனை சாவடியில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 16 சோதனை சாவடியில் போலீசார் மற்றும் பல்வேறு துறைகள் இணைந்து பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் சைபர் கிரைம் குற்றத்தில் எதிர்பாராத குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகின்றது. இதில் அரசு ஊழியர்கள் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தொழிலதிபர்கள் வேலை தேடி அலையும் இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் பண மோசடியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் அதற்காக போலீசார் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 37 மாவட்டத்தில் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் மற்றும் குற்றப்பிரிவு மையங்கள் ஏடிஜிபி தலைமையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மேலும் வெளிநாடுகளில் ஏமாற்றப்படும் பணங்கள் உடனடியாக பறிமுதல் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் 26,000 சிம் கார்டுகள் மற்றும் 1700 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய குற்றவாளிகளை பிடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான குற்றங்கள் கண்டுபிடித்து ரூ.32 லட்சம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது காவல் உதவி என்ற செயலி மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு, அவசர உதவி போன்றவற்றில் போலீசார் உடனுக்குடன் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த செயலி மூலம் 66 விதமான உதவிகள் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வாரந்தோறும் ஒரு நாள் போலீசாருக்கு ஓய்வு கிடைக்க வேண்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் சிறப்பான திட்டத்தை வடிவமைத்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இதன் மூலம் அனைத்து போலீசாருக்கும் வாரம் ஒரு முறை விடுமுறை கிடைப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மேலும் சில நேரங்களில் ஒரு நாள் விடுமுறை அளிப்பதற்கு சிரமம் ஏற்பட்டு வருகின்றது. எனவே தமிழ்நாடு போலீசார் சிறப்பாக பணிபுரிந்து சட்ட ஒழுங்கு சிறப்பான நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • காவல் அதிகாரிகள், ஆளினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • அதனை தொடர்ந்து குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பார்வையிட்டார்.

    விழுப்புரம்:

    திண்டிவனத்தில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அதன் படி திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்ற அவர் போலீஸ் நிலையத்தை சுற்றி பார்வையிட்டு, காவல் அதிகாரிகள், ஆளினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்பு காவலர்கள் மத்தியில் பேசிய அவர் காவல் துறையினர் பொது மக்களிடம் பேசும் போது மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.

    மேலும் பொதுமக்களிடம் கண்ணியமாகவும், பொறுமை யாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், வாகன தணிக்கை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், காவலர்கள் தங்கள் உடல் நலனில் கவனம் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.மேலும் அதனை தொடர்ந்து குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பார்வையிட்டார். அதன் பிறகு போலீஸ் நிலையம் வளாகத்தில் 10 தக்கும் மரக்கன்று நட்டு வைத்தார்.இதில் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி,சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராசன்,பாக்கியலட்சுமி,தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ்,பயிற்சி சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் காவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • மதுரை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதலான வாகனங்கள் ஏலம் 27-ந் தேதி நடக்கிறது/
    • அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும்.

    மதுரை

    மதுரை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையிடம்) விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் மதுகடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட வாகனங்களை தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் படி பொது ஏலம் விடப்படுகிறது.

    இந்த ஏலம் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலத்தில் எடுக்க விருப்பமுள்ளவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஏலம் விட நிறுத்திவைக்கப்பட்டுள்ள 105 வாகனங்களை 23, 24 ஆகிய இரு தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பார்வையிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இரு சக்கரவாகனத்திற்கு முன்பதிவாக ரூ.5 ஆயிரம், 4 சக்கர வாகனத்துக்கு ரூ: 10ஆயிரம் செலுத்த வேண்டும். வாகனத்கை ஏலம் எடுத்தவர்கள் அந்த வாகனத்தின் ஏலத்தொகையை அன்றைய தினமே கட்டி வாகனத்தை பெற்றுக் கொள்ளவேண்டும்.

    மேலும் வாகனத்தை ஏலம் எடுத்து முழுப்பணம் கட்டி வாகனத்தை எடுக்காதவர்களின் முன்பணம் திருப்பித் தரபடமாட்டாது. அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும். ஏலம் எடுத்த வாகனத்திற்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியும் ஏலத்தொகையுடன் சேர்த்து வசூலிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதும், 475 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    சென்னை:

    நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் 539 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களை வைத்து ஒரு தனியார் அமைப்பு ஆய்வு செய்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 233 பேர் (43 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களில் 159 பேர் மீது கொலை, கடத்தல், கற்பழிப்பு போன்ற கொடுங்குற்ற வழக்குகள் உள்ளன. குற்ற வழக்கு உள்ளவர்களில் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் 116 பேர் (கொடுங்குற்ற வழக்கில் 87 பேர்), காங்கிரசார் 29 பேர் (கொடுங்குற்ற வழக்கில் 19), தி.மு.க.வினர் 10 பேர் (கொடுங்குற்ற வழக்கில் 6) என கட்சிகளின் பட்டியல் நீள்கிறது.

    2009-ம் ஆண்டில் இருந்து குற்றப் பின்னணியுள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருப்பது வருத்தத்திற்குரியது. 2009-ம் ஆண்டு 30 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகளும், 14 சதவீதம் பேர் மீது கொடுங்குற்ற வழக்குகளும் இருந்தது. 2014-ம் ஆண்டில் இது 34 சதவீதம் மற்றும் 21 சதவீதம் என்று அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

    கேரளா மாநிலம் இடுக்கி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் டீன் குரியகோஸ் மீது அதிகபட்சமாக 204 வழக்குகள் உள்ளன. இதில் 37 கொடுங்குற்றங்களும் அடங்கும். சில வழக்குகளில் தண்டனையும் அனுபவித்துள்ளார்.

    குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 10 பேர் எம்.பி.க்கள் ஆகியுள்ளனர். அவர்களில் பா.ஜ.க.வினர் 5 பேர், காங்கிரசார் 4 பேர், ஒருவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

    வெற்றி பெற்றவர்களில் 475 பேர் (88 சதவீதம்) கோடீஸ்வரர்கள். அவர்களில் 265 பேர் பா.ஜ.க.வையும், 43 பேர் காங்கிரசையும், 22 பேர் தி.மு.க.வையும் (உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மற்ற கட்சியினரையும் சேர்த்து) சேர்ந்தவர்கள். கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு தேர்தலிலும் உயர்ந்து வருகிறது. 2009-ம் ஆண்டில் 58 சதவீதமாக இருந்த கோடீஸ்வர எம்.பி.க்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 88 சதவீதமாக அதிகரித்தது.

    பெரும் பணக்கார எம்.பி.க்களில் முதல் 3 இடங்களிலும் காங்கிரசார் தான் உள்ளனர். அவர்கள் மத்தியபிரதேசம் நகுல்நாத் (ரூ.660 கோடி), தமிழ்நாடு எச்.வசந்தகுமார் (ரூ.417 கோடி), கர்நாடகா சுரேஷ் (ரூ.338 கோடி). குறைந்த சொத்து உள்ள முதல் 3 பேர் ஆந்திராவை சேர்ந்த மாதவி (ரூ.1.41 லட்சம்), ஒடிசா சந்திரானி முர்மு (ரூ.3.40 லட்சம்), ராஜஸ்தான் மகந்த் பாலக்நாத் (ரூ.3.53 லட்சம்).

    தொடர்ந்து 2-வது முறையாக எம்.பி.யான 224 பேரின் சொத்துகள் சராசரியாக 29 சதவீதம் உயர்ந்துள்ளது. அவர்களில் பா.ஜ.க.வினர் 154 பேருக்கு 35.62 சதவீதமும், காங்கிரசில் 14 பேருக்கு 150 சதவீதமும் சொத்து உயர்ந்துள்ளது.

    392 பேர் பட்டதாரிகள் மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள். 128 பேர் பள்ளிக்கூடத்துக்கு சென்றிருக்கிறார்கள். ஒருவர் எழுதப்படிக்க மட்டும் தெரிந்தவர். ஒருவர் படிக்காதவர். மற்றவர்கள் 17 பேர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    எம்.பி. - எம்.எல்.ஏ.க்களை மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதியாக சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். #SpecialCourt
    சென்னை:

    ஊழல் வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் 6 ஆண்டுகள் பொதுத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வழிவகை செய்கிறது.

    ஆனால், சட்டத்தை உருவாக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்றால் அவர்கள் ஆயுள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகியும், வக்கீலுமான அஸ்வினி உபாத்யாயா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை அமல்படுத்தி அதுகுறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    அதன்படி ஒவ்வொரு மாநில அரசுக்கும், அந்த மாநில ஐகோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டு கடிதம் அனுப்பியது. முதல் கட்டமாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படும் தகவலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.

    இதைத் தொடர்ந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டார்.

    தமிழ்நாட்டில் சிறப்பு கோர்ட்டு அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.14.89 லட்சம் ஒதுக்கீடு செய்தது. அதை பயன்படுத்தி சிறப்பு கோர்ட்டை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி, சிறப்பு கோர்ட்டை சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் திறக்க ஐகோர்ட்டு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு கோர்ட்டு அங்கு உருவாக்கப்பட்டது.

    சிறப்பு கோர்ட்டின் முதல் நீதிபதியாக ஜெ.சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.கண்ணப்பன் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார். இந்த புதிய கோர்ட்டு திறப்பு விழா இன்று காலை 10 மணிக்கு நடந்தது.


    விழாவுக்கு ஐகோர்ட்டு மூத்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் தலைமை தாங்கி புதிய கோர்ட்டை திறந்து வைத்தார். விழாவில், ஐகோர்ட்டு, செசன்சு கோர்ட்டு நீதிபதிகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த சிறப்பு கோர்ட்டில் தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான நிலுவையில் உள்ள கிரிமினல் குற்றச்சாட்டு வழக்குகள் விசாரணை நடைபெறும்.

    தமிழகத்தை பொறுத்த வரையில் 178 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டிலேயே உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 324 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், சொத்துக்களை அபகரித்ததாகவும் தொடரப்பட்ட வழக்குகளை பல எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எதிர் கொண்டு வருகின்றனர். இதுதவிர தேர்தல் வழக்குகள் தனியாக உள்ளன என்று தன்னார்வ நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.  #MP #MLA #Cases #SpecialCourt
    கேரளாவில் பிஷப்பால் வன்புணர்வு செய்யப்பட்ட கன்னியாஸ்திரியின் புகைப்படைத்தை வெளியிட்ட மிஷனரீஸ் ஆப் ஜீசஸ் என்ற அமைப்பின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #Kerala #KeralaNun
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் செயல்படும் சீரோ மலபார் சபையின் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மீது கோட்டயம் குருவிலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். பி‌ஷப்  பிராங்கோ முல்லக்கல் கோட்டயத்திற்கு வந்தபோது தன்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பிஷப்பை இன்னும் கைது செய்யவில்லை. இதனால் கன்னியாஸ்திரிகள் இணைந்து அவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும், கூட்டு கிறிஸ்தவ கவுன்சிலின் உறுப்பினர் ஸ்டீபன் மேத்யூ, பிஷப்பை கைது செய்ய வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். 8 நாட்களுக்கு முன்பு துவங்கிய இந்த உண்ணாவிரதப்போராட்டம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.



    இந்நிலையில், சமீபத்தில் பிஷப்புக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட மிஷனரீஸ் ஆப் ஜீசஸ் என்ற அமைப்பு, பாதிப்புக்குள்ளான கன்னியாஸ்திரியின் புகைப்படத்தையும் வெளியிட்டது. இந்த செயல் பலரது கண்டனங்களுக்கு உள்ளானது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின், மிஷனரீஸ் ஆப் ஜீசஸ் அமைப்பின் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்த கோட்டையம் எஸ்.பி.ஹரிசங்கர், 19-ம் தேதி நேரில் ஆஜராகும்படி பிஷப்புக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். #Kerala #KeralaNun 
    பெண்களுக்கெதிரான குற்ற வழக்குகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கூடுதல் ஏ.டி.எஸ்.பி.க்கள் டி.எஸ்.பி.க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறை அல்லாத இதர பிரிவுகளை சேர்ந்த சமூக நலத்துறை அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், அரசு மருத்துவமனை அதிகாரிகள். சிறைத்துறை, வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட அளவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும், சாலை விபத்துக்கள் நடைபெறாமல் எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும், அறிவுரை வழங்கப்பட்டது. பெண்களுக்கெதிரான குற்ற வழக்குகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

    காணாமல் போன சிறுவர், சிறுமியர்களை விரைந்து கண்டுபிடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள பிடி கட்டளைகளை நிறைவேற்ற தணிகுழு அமைக்க வேண்டும். பற்றியும், ஒவ்வொரு கிராமத் திலும் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களை உரிய மரியாதையுடன் வரவேற்று அவர்களது கோரிக்கைகளை பரிசீலித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு சூப்பிரண்டு பர்வேஷ்குமார் உத்தரவிட்டார். #tamilnews
    கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆத்திரமடைந்த போலீசார் வாலிபரை சரமாரியாக தாக்கியதில் அவரின் பார்வை பறிபோனது. இது குறித்து 3 போலீசார் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் ஆலுவாய் நகரம் குஞ்சாட்டுக்கரையை சேர்ந்தவர் உஸ்மான் (வயது 36). இவர் ஆலுவாய் நகருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது முன்னால் சென்ற கார் மீது லேசாக மோட்டார் சைக்கிள் உரசியது. இதில் நிலைதடுமாறிய உஸ்மான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதனையடுத்து காரில் இருந்து இறங்கி 3 பேர் உஸ்மானை சரமாரியாக தாக்கினர். முகத்தில் பலமாக தாக்கினர். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஓடிவந்து தட்டிக்கேட்டனர். ஆனால் நாங்கள் எடத்தலா போலீஸ் அதிகாரிகள் என்று கூறினர்.

    பின்னர் மீண்டும் உஸ்மானை தாக்கிய போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துக் சென்று அங்கேயும் பலமாக தாக்கினர். வாலிபரை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக அமைப்புகள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

    வேறு வழியில்லாமல் உஸ்மானை போலீசார் விடுவித்தனர். படுகாயம் அடைந்த அவரை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் சோதனை செய்தபோது உஸ்மானின் 2 பற்கள் உடைந்துபோனது. கண்ணுக்கு அடியில் இருந்த எலும்பு முறிந்துபோனது. தாடை எலும்பு முறிந்துபோனது. இது தவிர கண்ணுக்கு செல்லும் ரத்த குழாய் சேதம் ஏற்பட்டதால் 50 சதவீத பார்வை பறிபோனது தெரியவந்தது.

    இது குறித்து முதல்-மந்திரி, மந்திரி மற்றும் டி.எஸ்.பி. ஆகியோருக்கு புகார் செய்யப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தியதில் மோசமான தாக்குதல் இதுவென்று கூறி உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

    இதனையடுத்து ஆலுவாய் டி.எஸ்.பி. திருதுலசந்திரன் தாக்குதலில் ஈடுபட்ட ஏ.எஸ்.ஐ. புஷ்பராஜ் மற்றும் போலீஸ்காரர்கள் ஜலில், அப்சல் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து இடமாற்றம் செய்தார். பலத்த காயம் அடைந்த உஸ்மான் துபாயில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சொந்த ஊர் வந்தார்.

    இந்நிலையில் தான் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்திய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி. தெரிவித்தார். #tamilnews
    ×