search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auction of vehicles"

    • வருகிற 12-ந்தேதி நடக்கிறது
    • முன் பணமாக ரூ.2 ஆயிரம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் துறையால் சாராய வழக்குகளில் பலவகையான 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் வருகிற 12-ந் தேதி காலை 10 மணிக்கு திருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.

    பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்ப முள்ளவர்கள் டிசம்பர் 10 மற்றும் 11-ந் தேதிகளில் நுழைவு கட்டணமாக ரூ.100, முன் பணமாக ரூ.2 ஆயிரம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

    ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் 18 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை சேர்த்து உடனடியாக செலுத்த வேண்டும். ஏலம் எடுக்கப்பட்ட வாகனத்திற்கு அதற்கான ரசீதே வாகனத்தின் உரிமை ஆவணமாகும்.

    பொது ஏலம் குறித்து கூடுதல் விபரங்களை அறிய திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04175 233920 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
    • நுழைவுக் கட்டணம் ரூ.100 வசூலிக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் குற்ற வழக்குகளில் பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்ப ட்டுள்ளன.

    இதில் பைக், கார் உள்ளிட்ட 115 வாகனங்கள் இன்று வேலூர் நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்பட்டது. வாகனத்தை ஏலம் எடுக்க வந்தவர்களிடம் ரூ.100 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு பின்னர் அவர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    மதுவிலக்கு வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனங்க ளுக்கு ஏலத்தொகையுடன் இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் விற்பனை வரியும் சேர்த்து வசூலித்தனர்.

    மேலும் வழக்குகளில் சம்மந்தப் பட்டுள்ள வாகனங்கள் அனைத்திற்கும் ரசீது வழங்கினர்.

    ஏலம் எடுத்த வாகனத்திற்குண்டான ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணம் என போலீசார் தெரிவித்தனர். இதனை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பார்வையிட்டார்.

    • வருகிற 13-ந் தேதி நடக்கிறது
    • போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    வேலுார்:

    வேலுார் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் மற்றும் 4 சக்கர வாகனங்கள், வருகிற 13-ந் தேதி காலை 9 மணி முதல் வேலுார் நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது.

    இவற்றின் உரிமையா ளர்கள் உரிமை கோரிய வாகனங்களை தவிர்த்து, மீதமுள்ளவை பொது ஏலம் விடப்படும். ஏலம் எடுக்க பார்வையிடுவோர் ரூ.100 நுழைவுக்கட்டணம் செலுத்திய பின்னரே ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர்.

    ஏலத்தொகையுடன் பைக்குகளுக்கு 12 சதவீத விற்பனை வரியும், 4 சக்கர வாகனங்களுக்கு 18 சதவீத விற்பனை வரியும் சேர்த்து செலுத்தவேண்டும்.மேலும் இதற்கான ரசீது வழங்கப்படும். அதுவே அந்த வாகனத்தின் உரிமை ஆவணம் ஆகும்.

    இவ்வாறு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

    • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
    • போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த 363 வாகனங்கள் இன்று நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்பட்டது.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எடி. எஸ்.பி. மனோகரன் ஆகியோர் தலைமையில் ஏலம் நடந்தது. ஏலத்தில் பங்கேற்க ஏராளமானவர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் ஏலத்தில் பங்கேற்க வந்தவர்களை ஒழுங்கு படுத்தினர்.

    வாகன ஏலத்தில் கலந்து கொள்ள ரூ.50 நுழைவு கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த ஏலத்தில் மொத்தம் 359 பைக், ஒரு ஆட்டோ ஏலம் விடப்பட்டது.

    இதன் மொத்த மதிப்பு ரூ.14 லட்சத்து 45,160 என போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்தார்.

    • வருகிற 9-ந் தேதி நடக்கிறது
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு பிரிவில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட95 வாகனங்கள் பொது ஏலம் மூலம் அகற்றுதல் குறித்து விரிவான அறிக்கையில் வாகன உரிமையாளர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் 95 வாகனங்களையும் யாரும் உரிமை கோராததால் அரசுடைமையா க்கப்பட்டது.

    மேற்படி வாகனங்களின் பொது ஏலம் வருகின்ற 9-ந் தேதி காலை 10 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.

    வாகனங்களை 6,7ஆகிய தேதிகளில் பார்வையிடவும் ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் 8-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரூ.15 ஆயிரம் முன் வைப்புத் தொகையை ராணிப்பேட்டை ஆயுதப்படையில் செலுத்தி தங்களுடைய பெயர் விலாசத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    9-ந்தேதி காலை 10 மணியிலிருந்து பொது ஏலம் நடைபெறும். மேலும் ஏலம் எடுப்பவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து காண்பித்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் ஜி.எஸ்.டி.தொகையும் சேர்த்து உடனடியாக செலுத்தி வாகனத்தை சான்றிதழுடன் பெற்றுக் கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

    • போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 113 வாகனங்கள் ஏலம் விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • பொது ஏலம் வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதான வளாகத்தில் நடைபெற உள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் மது கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் போலீஸ் காவலில் வைக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம். போலீசாரால் கைப்பற்றப் பட்ட வாகனங்களுக்கான பொது ஏலம் வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதான வளாகத்தில் நடைபெற உள்ளது.

    பொது ஏலத்தில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலத்தில் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 113 வாகனங்களை 31 மற்றும் 1-ந்தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இருசக்கர வாகனத்திற்கு முன்பதிவாக ரூ.5ஆயிரமும், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10ஆயிரமும் செலுத்த வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் அந்த வாகனத்தின் ஏலத்தொகை யை அன்றைய தினமே கட்டி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.

    வாகனத்தை ஏலம் எடுத்து முழுப்பணம் கட்டி வாகனத்தை எடுக்காத வர்களின் முன்பணம் திருப்பி தரப்பட மாட்டாது. அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும். ஏலத்தில் எடுக்கப் படும் வாகனத்திற்கு அரசால் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி தனியாக வசூலிக்கப்படும்.

    இந்த தகவல் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 4 நான்கு சக்கர வாகனங்கள், 69 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 73 வாக னங்கள்.
    • 31 வாகனங்களை வாகன உரிமையாளர்களே ஏலம் மூலம் பெற்றுக்கொண்டனர்.

    மொடக்குறிச்சி, மே.1-

    ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 4 நான்கு சக்கர வாகனங்கள், 69 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 73 வாக னங்களுக்கான பொது ஏலம் விட தயார் செய்ய ப்பட்டது.

    இதில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த வாகனங்களின் உரிமை யாளர்களே ஏலத்தொ கையை செலுத்தி பெற்று க்கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 31 வாகனங்களை வாகன உரிமையாளர்களே ஏலம் மூலம் பெற்றுக்கொண்டனர்.

    இதையடுத்து மீதமுள்ள 42 வாகனங்கள் ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்பட்டது.

    இந்த ஏலத்தில் வாகனங்களை எடுப்பதற்காக முன்பணம் செலுத்தியிருந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து பங்கேற்றனர்.

    ஏலத்தினை ஈரோடு மது விலக்கு டி.எஸ்.பி. பவித்ரா தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஒரு நான்கு சக்கர வாகனம், 26 இரண்டு சக்கர வாகனங்கள் ரூ.4லட்சத்து 66ஆயிரத்து 336க்கு ஏலம் போனது. அதேபோல், வாகன உரிமையாளர்கள் பெற்று சென்றதுடன் சேர்த்து மொத்தம் 57 வாகனங்கள் ரூ.15 லட்சத்து 64 ஆயிரத்து 960க்கு ஏலம் போனது.

    ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் 14 இரண்டு சக்கர வாகனங்கள் ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதலான வாகனங்கள் ஏலம் 27-ந் தேதி நடக்கிறது/
    • அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும்.

    மதுரை

    மதுரை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையிடம்) விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் மதுகடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட வாகனங்களை தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் படி பொது ஏலம் விடப்படுகிறது.

    இந்த ஏலம் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலத்தில் எடுக்க விருப்பமுள்ளவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஏலம் விட நிறுத்திவைக்கப்பட்டுள்ள 105 வாகனங்களை 23, 24 ஆகிய இரு தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பார்வையிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இரு சக்கரவாகனத்திற்கு முன்பதிவாக ரூ.5 ஆயிரம், 4 சக்கர வாகனத்துக்கு ரூ: 10ஆயிரம் செலுத்த வேண்டும். வாகனத்கை ஏலம் எடுத்தவர்கள் அந்த வாகனத்தின் ஏலத்தொகையை அன்றைய தினமே கட்டி வாகனத்தை பெற்றுக் கொள்ளவேண்டும்.

    மேலும் வாகனத்தை ஏலம் எடுத்து முழுப்பணம் கட்டி வாகனத்தை எடுக்காதவர்களின் முன்பணம் திருப்பித் தரபடமாட்டாது. அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும். ஏலம் எடுத்த வாகனத்திற்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியும் ஏலத்தொகையுடன் சேர்த்து வசூலிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×