என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்கள் ஏலம்"

    • கோவை, சென்னை, புதுச்சேரி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நபர்கள் வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்காக முன்பணம் கட்டி இருந்தனர்.
    • திட்டமிட்டபடி இன்று காலை ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்தில் 24 கார்கள், 4 இருசக்கர வாகனங்கள் என 28 வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் மதுவிலக்கு சோதனையின் போது ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனங்கள் அனைத்தும் மரக்காணம் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இந்த வாகனங்கள் அனைத்தும் இன்று (9-ந்தேதி) ஏலம் விடப்படும் என்றுஅறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கோவை, சென்னை, புதுச்சேரி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நபர்கள் வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்காக முன்பணம் கட்டி இருந்தனர்.

    திட்டமிட்டபடி இன்று காலை ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்தில் 24 கார்கள், 4 இருசக்கர வாகனங்கள் என 28 வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.

    அப்போது ஒரு கார் ஏலம் விடப்பட்ட போது காரில் இருந்த பிளாஸ்டிக் வாளியில் மண்டை ஓடு கிடந்தது. இதனை பார்த்ததும் ஏலம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். எனவே அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி அறிந்த மரக்காணம் போலீசார் அங்கு விரைந்தனர். மண்டை ஓட்டினை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த மண்டை ஓடு காருக்குள் எப்படி வந்தது. இதனை வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்ட காவல் துறையால் பயன்படுத்தப்பட்ட 7 நான்கு சக்கர வாகனங்கள், 10 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 17 வாகனங்கள் கழிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த வாகனங்களுக்கான பொது ஏலம் காங்கயம் சாலை நல்லிகவுண்டன் நகரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

    இந்த ஏலத்தில் பங்கேற்க விருப்பம் உள்ள நபா்கள் நுழைவுக்கட்டணமாக ரூ.100, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,000 மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.2,000 முன்பணமாக செலுத்தி தங்களது பெயரை ஆதாா் அட்டையுடன் பதிவு செய்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

    ஏலத்தில் பங்கேற்பவா்களுக்கு ஆயுதப்படை மைதானத்தில் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரையில் ரசீது வழங்கப்படும். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகையை ஜிஎஸ்டி வரியுடன் சோ்த்து ரொக்கமாக செலுத்த வேண்டும். ஏல ரசீது எந்தப் பெயரில் பெறப்படுகிறதோ அதே நபா் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க வேண்டும்.

    இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ஆயுதப்படை காவல் ஆய்வாளரை நேரிலோ அல்லது 95668-88041, 87540-30229 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 14 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 122 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 137 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட உள்ளது.
    • இந்த வாகனங்களை வருகிற 4- ந் தேதி காலை 10 மணி முதல் நேரில் பார்வையிடலாம்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 14 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 122 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 137 வாகனங்கள் சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், வருகிற 7- ந் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. இந்த வாகனங்களை வருகிற 4- ந் தேதி காலை 10 மணி முதல் நேரில் பார்வையிடலாம். ஏலம் எடுப்பவர்கள் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.5000, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 முன் பணம் கட்ட வேண்டும்.

    வருகிற 5- ந் தேதி காலை 10 மணி முதல் 6- ந் தேதி மாலை 5 மணிக்குள் ஆயுதப்படை மைதானத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • கலெக்டர் கார்மேகம் உத்தரவின் அடிப்படையில் பொது ஏலம் விடப்படும் என்று கடந்த 28-ந் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
    • அரசு பணிமனை பொறியாளர் மதிப்பீட்டின்படி இந்த வாகனங்களுக்கு குறைந்த பட்ச தொகை நிர்ணயம் செய்து ஏலம் விடப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டத்தின்படி குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவின் அடிப்படையில் பொது ஏலம் விடப்படும் என்று கடந்த 28-ந் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுத படை மைதானத்தில் இன்று பொது ஏலம் விடப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் கென்னடி, காலால் உதவி ஆணையர் மாறன் உள்ளிட்டோர் தலைமையில் இந்த ஏலம் நடந்தது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்ட 2, 3, 4 சக்கர வாகனங்களில் மொத்தம் 132 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.

    அரசு பணிமனை பொறியாளர் மதிப்பீட்டின்படி இந்த வாகனங்களுக்கு குறைந்த பட்ச தொகை நிர்ணயம் செய்து ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் வாகனங்களை எடுப்ப தற்காக முன் பணம் கட்டிய 200-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். ஏலம் விடப்பட்ட வாகனங்களை அவரவர் விருப்பத்திற்கேற்ற வாறு ஏலத்தில் வாகனத்தை எடுத்து மீதி தொகையும் செலுத்திவிட்டு வாக னங்களை வாங்கி சென்றனர்.

    • ஏப்ரல் 4-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
    • முன்பணம் செலுத்துபவர்கள் மட்டுமே பொது ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

     கிருஷ்ணகிரி,

    மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 25 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 24 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 51 வாகனங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் வருகிற ஏப்ரல் 4-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில் பொது ஏலத்தில் விடப்படுகிறது. இந்த வாகனங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்திலும், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்திலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை வருகிற ஏப்ரல் 1-ந் தேதி மற்றும் 2-ந் தேதி பார்வையிடலாம். ஏலம் எடுக்க விரும்புபவர்கள் இருசக்கர வாகனங்களுக்கு முன்பணமாக ரூ.5 ஆயிரமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரமும் முன்பணமாக வருகிற ஏப்ரல் மாதம் 2-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ளலாம். முன்பணம் செலுத்துபவர்கள் மட்டுமே பொது ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி தொகை முழுவதையும் செலுத்தி, வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஓசூரில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி எண்.9498105529 மற்றும் ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் தொலைபேசி எண் 9498175188 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

    • 4 நான்கு சக்கர வாகனங்கள், 69 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 73 வாக னங்கள்.
    • 31 வாகனங்களை வாகன உரிமையாளர்களே ஏலம் மூலம் பெற்றுக்கொண்டனர்.

    மொடக்குறிச்சி, மே.1-

    ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 4 நான்கு சக்கர வாகனங்கள், 69 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 73 வாக னங்களுக்கான பொது ஏலம் விட தயார் செய்ய ப்பட்டது.

    இதில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த வாகனங்களின் உரிமை யாளர்களே ஏலத்தொ கையை செலுத்தி பெற்று க்கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 31 வாகனங்களை வாகன உரிமையாளர்களே ஏலம் மூலம் பெற்றுக்கொண்டனர்.

    இதையடுத்து மீதமுள்ள 42 வாகனங்கள் ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்பட்டது.

    இந்த ஏலத்தில் வாகனங்களை எடுப்பதற்காக முன்பணம் செலுத்தியிருந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து பங்கேற்றனர்.

    ஏலத்தினை ஈரோடு மது விலக்கு டி.எஸ்.பி. பவித்ரா தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஒரு நான்கு சக்கர வாகனம், 26 இரண்டு சக்கர வாகனங்கள் ரூ.4லட்சத்து 66ஆயிரத்து 336க்கு ஏலம் போனது. அதேபோல், வாகன உரிமையாளர்கள் பெற்று சென்றதுடன் சேர்த்து மொத்தம் 57 வாகனங்கள் ரூ.15 லட்சத்து 64 ஆயிரத்து 960க்கு ஏலம் போனது.

    ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் 14 இரண்டு சக்கர வாகனங்கள் ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 113 வாகனங்கள் ஏலம் விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • பொது ஏலம் வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதான வளாகத்தில் நடைபெற உள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் மது கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் போலீஸ் காவலில் வைக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம். போலீசாரால் கைப்பற்றப் பட்ட வாகனங்களுக்கான பொது ஏலம் வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதான வளாகத்தில் நடைபெற உள்ளது.

    பொது ஏலத்தில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலத்தில் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 113 வாகனங்களை 31 மற்றும் 1-ந்தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இருசக்கர வாகனத்திற்கு முன்பதிவாக ரூ.5ஆயிரமும், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10ஆயிரமும் செலுத்த வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் அந்த வாகனத்தின் ஏலத்தொகை யை அன்றைய தினமே கட்டி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.

    வாகனத்தை ஏலம் எடுத்து முழுப்பணம் கட்டி வாகனத்தை எடுக்காத வர்களின் முன்பணம் திருப்பி தரப்பட மாட்டாது. அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும். ஏலத்தில் எடுக்கப் படும் வாகனத்திற்கு அரசால் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி தனியாக வசூலிக்கப்படும்.

    இந்த தகவல் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏலம் விடப்படவுள்ள வாகனங்களைத் தருமபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் நாளை காலை 8 மணிக்கு நேரில் பார்வையிடலாம்.
    • இருசக்கர வாகனத்திற்கு ஏலத்தொகைக்கு 12 விழுக்காடு (GST) யும் சேர்த்துச் செலுத்தப்பட வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ள 6 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 48 இருசக்கர வாகனங்கள் மொத்தம்-54 வாகனங்கள் நாளை 27-ந் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.

    நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் முன் வைப்பு தொகையாக ரூபாய் 10,000 -ம், நாளை 27-ந் ேதி காலை 8 மணிக்குள் ஏலம் நடைபெறவுள்ள இடத்தில் செலுத்த வேண்டும்.

    முன் வைப்புத்தொகை செலுத்துவோர் மட்டுமே ஏலத்தில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். ஏலம் விடப்படவுள்ள வாகனங்களைத் தருமபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் நாளை காலை 8 மணிக்கு நேரில் பார்வையிடலாம்.

    இருசக்கர வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    நான்கு சக்கர வாகனத்திற்கு ஏலத்தொகைக்கு 18 விழுக்காடு (GST) யும், இருசக்கர வாகனத்திற்கு ஏலத்தொகைக்கு 12 விழுக்காடு (GST) யும் சேர்த்துச் செலுத்தப்பட வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமல்பிரிவு, தருமபுரி அலுவலகத்தினை நேரடியாகவோ அல்லது 04342-230759, 262581 என்கிற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என தருமபுரி மாவட்ட காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • 9 இரண்டு சக்கர வாகனங்களும் (கழிவு செய்யப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன.
    • அந்த ஏலமானது வருகின்ற 17.8.2023 அன்று காலை தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காவல் துறையில் காவல் பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டு காலாவதியான அரசு காவல் வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு, அதனை ஏலம் முறையில் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ஏற்கனவே ஏலத்தில் விற்பனை செய்யப்படாமல் உள்ள 5 வாகனங்களுடன், தற்போது கழிவு செய்யப்பட்டுள்ள 14 வாகனங்களையும் சேர்த்து, 19 வாகனங்களான 2 ஈச்சர், 3 பொலேரோ, 1 டாடா சுமோ கிரான்டே, 1 டாடா ஸ்பேசியோ, 1 அம்பாஸ்டர், 2 எம்.எம் 540 ஜீப் மற்றும் 9 இரண்டு சக்கர வாகனங்களும் (கழிவு செய்யப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன.

    அந்த ஏலமானது வருகின்ற 17.8.2023 அன்று காலை தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஏலம் விடப்படும் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக வாகனத்தை பார்வையிட அனுமதிக்கப்படும்.

    ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலம் துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஆயுதப்படை வாகனப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி முன்பணத் தொகையை வைப்புத் தொகையாக செலுத்தி, ஏலத்தில் பங்கேற்க வேண்டும்.

    அவ்வாறு வைப்புத் தொகையை செலுத்த தவறியவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏலம் எடுத்து 30 நிமிடத்தில் பணம் செலுத்தாதவர்களின் ஏலம் ரத்து செய்யப்பட்டு, அந்த வாகனத்தை மறு ஏலம் விடுப்படும்.

    மேலும், பணம் கட்டத் தவறியவரின் வைப்பீட்டுத் தொகையை திருப்பி தர இயலாது. ஏலம் முடிந்து 30 நிமிடங்களில் பணம் செலுத்தி வாகனத்தை பெற்றுச் செல்ல வேண்டும்.

    • வருகிற 9-ந் தேதி நடக்கிறது
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு பிரிவில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட95 வாகனங்கள் பொது ஏலம் மூலம் அகற்றுதல் குறித்து விரிவான அறிக்கையில் வாகன உரிமையாளர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் 95 வாகனங்களையும் யாரும் உரிமை கோராததால் அரசுடைமையா க்கப்பட்டது.

    மேற்படி வாகனங்களின் பொது ஏலம் வருகின்ற 9-ந் தேதி காலை 10 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.

    வாகனங்களை 6,7ஆகிய தேதிகளில் பார்வையிடவும் ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் 8-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரூ.15 ஆயிரம் முன் வைப்புத் தொகையை ராணிப்பேட்டை ஆயுதப்படையில் செலுத்தி தங்களுடைய பெயர் விலாசத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    9-ந்தேதி காலை 10 மணியிலிருந்து பொது ஏலம் நடைபெறும். மேலும் ஏலம் எடுப்பவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து காண்பித்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் ஜி.எஸ்.டி.தொகையும் சேர்த்து உடனடியாக செலுத்தி வாகனத்தை சான்றிதழுடன் பெற்றுக் கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

    • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
    • போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த 363 வாகனங்கள் இன்று நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்பட்டது.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எடி. எஸ்.பி. மனோகரன் ஆகியோர் தலைமையில் ஏலம் நடந்தது. ஏலத்தில் பங்கேற்க ஏராளமானவர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் ஏலத்தில் பங்கேற்க வந்தவர்களை ஒழுங்கு படுத்தினர்.

    வாகன ஏலத்தில் கலந்து கொள்ள ரூ.50 நுழைவு கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த ஏலத்தில் மொத்தம் 359 பைக், ஒரு ஆட்டோ ஏலம் விடப்பட்டது.

    இதன் மொத்த மதிப்பு ரூ.14 லட்சத்து 45,160 என போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்தார்.

    • வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்து துரு பிடித்து கிடக்கின்றன.
    • காவல் துறை நடவடிக்கை எடுத்து வாகனங்களை பொது ஏலத்தில் விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டு போலீஸ் நிலைய எல்லைக்குள் பலவித குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை வைப்பதற்கு இடமில்லாமல் பள்ளிப்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் குவித்து வைத்துள்ளனர். இவ்வாறு வைத்துள்ள இந்த வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்து துரு பிடித்து கிடக்கின்றன.

    இவற்றை பொது ஏலத்தில் விட்டால் அரசுக்கு ஓரளவிற்கு வருமானம் கிடைக்கும் என்றும் இந்த வாகனங்களும் நல்ல முறையில் இருக்கும் போது பொதுமக்கள் உபயோகப்படுத்த முடியும் என்றும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே திருவள்ளூர் மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுத்து வாகனங்களை பொது ஏலத்தில் விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×