search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police seizure"

    • போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 113 வாகனங்கள் ஏலம் விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • பொது ஏலம் வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதான வளாகத்தில் நடைபெற உள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் மது கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் போலீஸ் காவலில் வைக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம். போலீசாரால் கைப்பற்றப் பட்ட வாகனங்களுக்கான பொது ஏலம் வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதான வளாகத்தில் நடைபெற உள்ளது.

    பொது ஏலத்தில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலத்தில் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 113 வாகனங்களை 31 மற்றும் 1-ந்தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இருசக்கர வாகனத்திற்கு முன்பதிவாக ரூ.5ஆயிரமும், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10ஆயிரமும் செலுத்த வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் அந்த வாகனத்தின் ஏலத்தொகை யை அன்றைய தினமே கட்டி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.

    வாகனத்தை ஏலம் எடுத்து முழுப்பணம் கட்டி வாகனத்தை எடுக்காத வர்களின் முன்பணம் திருப்பி தரப்பட மாட்டாது. அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும். ஏலத்தில் எடுக்கப் படும் வாகனத்திற்கு அரசால் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி தனியாக வசூலிக்கப்படும்.

    இந்த தகவல் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போலீசாரை பார்த்ததும், வாலிபர் தப்பியோட முயன்றார். தொடர்ந்து, போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
    • கஞ்சாவை வாங்கிவந்து, அதை சிறு சிறு பொட்டங்களாக மாற்றி சிறுவர்களுக்கு விற்றதையும் அவர் ஒப்புகொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியான பி.எஸ்.ஆர். கோல்டன் நகர் அருகே, சிறுவர்களுக்கு கஞ்சா விற்பதற்காக, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்றனர். போலீசாரை பார்த்ததும், வாலிபர் தப்பியோட முயன்றார். தொடர்ந்து, போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர், அவரை சோதனை செய்போது, அவர் பாக்கெட்டில் 70 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அவரிடம் நடத்திய விசார–ணையில், காரைக்கால் லெமேர் வீதியைச்சேர்ந்த அந்துவான் (வயது 22) என்பதும், நாகை மாவட்ட–த்திலிருந்து கஞ்சாவை வாங்கிவந்து, அதை சிறு சிறு பொட்டங்களாக மாற்றி சிறுவர்களுக்கு விற்றதையும் அவர் ஒப்புகொண்டார். தொடர்ந்து, அந்துவானை கைது செய்து, அவரிட–மிருந்து ரூ.8 ஆயிரம் மதிப்பி–லான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×