search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில்  சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது
    X

    காரைக்காலில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது

    • போலீசாரை பார்த்ததும், வாலிபர் தப்பியோட முயன்றார். தொடர்ந்து, போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
    • கஞ்சாவை வாங்கிவந்து, அதை சிறு சிறு பொட்டங்களாக மாற்றி சிறுவர்களுக்கு விற்றதையும் அவர் ஒப்புகொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியான பி.எஸ்.ஆர். கோல்டன் நகர் அருகே, சிறுவர்களுக்கு கஞ்சா விற்பதற்காக, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்றனர். போலீசாரை பார்த்ததும், வாலிபர் தப்பியோட முயன்றார். தொடர்ந்து, போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர், அவரை சோதனை செய்போது, அவர் பாக்கெட்டில் 70 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அவரிடம் நடத்திய விசார–ணையில், காரைக்கால் லெமேர் வீதியைச்சேர்ந்த அந்துவான் (வயது 22) என்பதும், நாகை மாவட்ட–த்திலிருந்து கஞ்சாவை வாங்கிவந்து, அதை சிறு சிறு பொட்டங்களாக மாற்றி சிறுவர்களுக்கு விற்றதையும் அவர் ஒப்புகொண்டார். தொடர்ந்து, அந்துவானை கைது செய்து, அவரிட–மிருந்து ரூ.8 ஆயிரம் மதிப்பி–லான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×