என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
    • அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரையில் நிலவி வந்த டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், டிட்வா புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து பிரசார பயணத்தை வஜய் ஒத்திவைத்திருந்தார்.
    • ஒரு மாத காலத்திற்கு பிறகு, விஜய் காஞ்சிபுரம் மக்களை உள்ளரங்கத்தில் அழைத்து வந்து சந்தித்தார்.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பிரசாரம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது.

    ஆனால், கரூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து அரசியல் பிரசாரம் மேற்கொள்ள விஜய் தொடர்ந்து பல சவால்களை சந்தித்து வருகிறார்.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து பிரசார பயணத்தை வஜய் ஒத்திவைத்திருந்தார். பின்னர், ஒரு மாத காலத்திற்கு பிறகு, விஜய் காஞ்சிபுரம் மக்களை உள்ளரங்கத்தில் அழைத்து வந்து சந்தித்தார்.

    இந்நிலையில், புதுச்சேரியில் வரும் டிச.5ம் தேதி விஜயின் ரோடு ஷோ நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து மக்கள் அதிகளவில் திரண்டால் கரூர் போன்ற அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி, தவெகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    • கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
    • சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றம்.

    இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. நவ.30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நாகை, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டிட்வா புயல் எதிரொலியால் புதுச்சேரி துறைமுகத்தில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

    • புதுச்சேரிக்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

    இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயல் காரணமாக தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, 'டிட்வா' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

    புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிட்வா புயல் எச்சரிக்கை எதிரொலியாக புதுச்சேரியில் நாளை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
    • தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும்.

    இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. நவ.30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்றும் ராமநாதபுரம், திருச்சி, அரியலூரி, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் நிலவி வரும் டிட்வா புயல் காரணமாக நாளை புதுச்சேரிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புதுச்சேரி, போலி மாத்திரைகள் தயாரித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என கண்டன ஆர்ப்பாட்டம்.
    • விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

    புதுச்சேரியில் இருந்து பிரபல மருந்து நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சிபிசிஐடி போலீசாருக்கு புகார் கிடைத்தது.

    அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கி வரும் ஒரு தொழிற்சாலையில் போலி மாத்திரைகள் தயாரிப்பது தெரியவந்தது.

    அதன் பெயரில் நேற்று மாலை சிபிசிஐடி போலீசார் தொழிற்சாலையில் சோதனை செய்ததில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மாத்திரைகள், மாத்திரைகள் தயாரிக்கும் இயந்திரம் உள்ளிட்டவை இருப்பதை கண்டு அதனை பறிமுதல் செய்து தொழிற்சாலை மற்றும் அதனை சார்ந்த நான்கு குடோன்களுக்கு போலீசார் சீல் வைத்தனர்.

    இந்த விவகாரம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகவும், பொதுமக்களில் உயிர் சார்ந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்படும் புதுச்சேரி அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் தலைமையில், 200 க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பி சட்டபேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் கலந்து கொண்டார். ஆர்ப்பாடத்தை தொடர்ந்து ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், சட்டமன்ற உறுப்பினர் அங்களான் உள்ளிட்டோர் இந்த விவகாரத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநர் மாளிகையில் மனு அளித்தனர்.

    • பாஜகவில் இருந்து முழுமையாக விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்தார்.
    • புதிய அரசு அமைய முழு வீச்சில் பாடுபடுவேன் என்றார்.

    புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவராக இருந்த முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன், கடந்த செப்டம்பர் மாதத்தில் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 25 ஆண்களுக்கு மேலாக இருந்த பாஜகவில் இருந்து முழுமையாக விலகிக் கொள்கிறேன்.

    புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன். புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். ஊழலற்ற, நேர்மையான புதியவர்களை கொண்டு புதிய அரசு அமைய முழு வீச்சில் பாடுபடுவேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், புதுச்சேரி மாநில பாஜக முன்னாள் தலைவர் சுவாமிநாதன் தவெகவில் நாளை இணைவதாக அறிவித்துள்ளார். கடந்த வாரம் விஜயை நேரில் சந்தித்து அவர் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
    • முன்னெச்சரிக்கையாக காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கு தென்மேற்கே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி நிலவி வருகிறது. அதனுடன் தொடர்புடைய மேல் வளிமண்டல சுழற்சி கடல் மட்டத்திலிருந்து 5.8 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு திசை நோக்கி சாய்ந்த நிலையில் பரவியுள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் இது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது.

    இதன் காரணமாக காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

    • புதுச்சேரியில் உள்ள 26 படுகை அணைகளும் நிரம்பி வழிந்தது.
    • வதந்திகளை நம்பாமல் அரசு அளிக்கும் செய்திகளை மட்டுமே பின்பற்றுமாறு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கோடை காலத்தை தாண்டி ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கடும் வெயில் சுட்டெரித்தது. பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெயில் கொளுத்தி வந்தது.

    இந்த நிலையில் கடந்த அக்டோபர் 15-ந் தேதி முதல் வட கிழக்கு பருவமழை தொடங்கியது. அவ்வப்போது மழையும் பெய்தது.

    இதனிடேயே வங்கக்கடலில் அக்டோபர் 27-ந் தேதி மோந்தா புயல் உருவானது. இந்த புயல் புதுச்சேரியை தாக்கும் என வானிலை மையம் எச்சரித்தது. ஆனால் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தது.

    இருப்பினும், புதுச்சேரி மற்றும் புதுச்சேரியை சுற்றி உள்ள தமிழக பகுதிகளில் கன மழை பெய்தது. புதுச்சேரியிலும் கனமழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்களில் வெள்ள நீர் நிரம்பியது.

    அதே நேரம் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் பெய்த கனமழையால் தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் புதுச்சேரியில் உள்ள 26 படுகை அணைகளும் நிரம்பி வழிந்தது.

    இந்த மாத தொடக்கத்தில் மழை இல்லை. பகல் நேரத்தில் கடும் வெயில் அடித்தது. ஆனால் இடையில் சில நாட்கள் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது.

    இன்று அதிகாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. அதோடு வானம் இருண்டு காணப்படுகிறது.

    இதனிடையே பருவமழையின் தொடர்ச்சியாக இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடா கடற்பரப்பின் மீது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) கனமழை மற்றும் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் காற்று மணிக்கு 55 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

    மேலும் புதுச்சேரி பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும்படியும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    மேலும், அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுவதுடன், வதந்திகளை நம்பாமல் அரசு அளிக்கும் செய்திகளை மட்டுமே பின்பற்றுமாறு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.

    • விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • பள்ளிகள் அடுத்த ஆண்டு ஜன. 3ம் தேதி வேலைநாளாக செயல்படும்.

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால் புதுச்சேரியில் நாளை (15.11.25) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கெனவே விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்து.

    டெட் தேர்வு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

    நாளைய விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த ஆண்டு ஜன. 3ம் தேதி வேலைநாளாக செயல்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

    • திருச்சியில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பழனியாண்டி இல்ல திருமண விழாவில் மணமக்கள் விஜயபாரதி-மனிஷா ஆகியோர் திருமணம் நாளை (ஞாயிறுக்கிழமை) திருச்சி சோமரசம்பேட்டை டாக்டர் கலைஞர் திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூரில் உள்ள மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவிலும் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) சென்னை சித்தரஞ்சன் பகுதியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படுகிறார். தொடர்ந்து, சென்னை விமான நிலையத்திற்கு மாலை 6.10 மணிக்கு வருகிறார். 6.20 மணிக்கு திருச்சிக்கு புறப்படுகிறார். இரவு 7.25 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறார். 7.35 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு சுற்றுலா மாளிகை வருகிறார். இரவு அங்கு தங்குகிறார்.

    முன்னதாக, விமான நிலையத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.45 மணிக்கு சுற்றுலா மாளிகையில் திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டைக்கு காலை 9.20 மணிக்கு செல்கிறார். அங்கு திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார். பின்னர், காலை 10.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை செல்கிறார்.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூரில் உள்ள மூகாம்பிகை பொறியியல் கல்லூரிக்கு காலை 11.15 மணிக்கு முதலமைச்சர் செல்கிறார். அங்கு நடைபெற உள்ள அரசு விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று ரூ.201.70 கோடி மதிப்பில் 103 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.223.06 கோடி மதிப்பில் 577 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். ரூ.348.43 கோடிக்கு 44 ஆயிரத்து 93 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    நிகழ்ச்சியை முடித்து அங்கிருந்து பகல் 12.15 மணிக்கு புறப்படுகிறார். பகல் 12.45 மணிக்கு திருச்சி பொன்மலையில் உள்ள முதியோர்களுக்கான 'அன்புச்சோலை' திட்டத்தை தொடங்க்கி வைக்கிறார். பின்னர், மதியம் 1 மணியளவில் பொன்மலையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு செல்கிறார்.

    மதியம் 1.30 மணிக்கு விமான நிலையம் வந்தடைகிறார். தொடர்ந்து, பகல் 2.55 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு மாலை 4 மணிக்கு செல்கிறார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, திருச்சியில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருச்சியில் மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

    • 1 யூனிட்டுக்கு ரூ.2.70ஆக இருந்த மின் கட்டணம் தற்போது ரூ.2.90ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
    • 300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80 லிருந்து ரூ.7.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட் வரை, 1 யூனிட்டுக்கு ரூ.2.70ஆக இருந்த மின் கட்டணம் தற்போது ரூ.2.90ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    101 முதல் 200 யூனிட் வரை ரூ.3.25 லிருந்து ரூ.4 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை ரூ.5.40 லிருந்து ரூ.6 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80 லிருந்து ரூ.7.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ×