என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money extortion"

    • சந்தேகமடைந்த துர்காதேவி, பணி ஆணையை எடுத்துக் கொண்டு புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தார்.
    • போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விஜயராஜை தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியை சேர்ந்தவர் துர்காதேவி (வயது42). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 2015-ம் ஆண்டு துர்காதேவியுடன் படித்த பண்ருட்டியை சேர்ந்த தேவி என்பவர் உறவினர் விஜயராஜ் என்பவரை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் நிறையபேர் தனக்கு தெரியும் எனவே கல்வித்துறையில் ஆசிரியை பணி வாங்கி தருகிறேன் என துர்காதேவியுடம் கூறியுள்ளார்.

    தொடர்ந்து 2018-ம் ஆண்டு அவரது வீட்டுக்கு சென்ற விஜய்ராஜ், புதுச்சேரி கல்வித்துறையில் ஆசியை பணி வாங்கி தருவதாக கூறி ரூ.4½ லட்சத்தை வாங்கி சென்றார். பின்னர் சில மாதங்களில் அவர் பணி ஆணையை கொடுத்துள்ளார்.

    இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு வேலை போடபோகிறார்கள் எனக்கூறி மேலும் ரூ.88 ஆயிரம் வாங்கினார். பின்னர் ஆர்டர் தற்காலிமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது, விரைவில் வந்துவிடும் என விஜய்ராஜ் கூறியுள்ளார்.

    இதனால் சந்தேகமடைந்த துர்காதேவி, பணி ஆணையை எடுத்துக் கொண்டு புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தார்.

    அப்போது அது போலியானது என தெரிய வந்தது. அதன்பிறகே அவர் பணம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். பின்னர் அவர் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விஜயராஜை தேடி வருகின்றனர்.

    • கல்லூரி அருகில் நேற்று 2 பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள், அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்தனர்.
    • ரூ.40 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதி மெயின் ரோட்டில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது.

    இந்த கல்லூரி அருகில் நேற்று 2 பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள், அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்தனர். பின்னர் லாரி டிரைவரிடம் பேச்சுக் கொடுத்த அவர்கள், அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர், சம்பவம் குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி டிரைவரிடம் 2 பெண்கள் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று கோதைசேரியை சேர்ந்த அருண்குமார் , குமாரிடம் செலவுக்கு பணம் கேட்டார்.
    • அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி, மிரட்டி அவரிடமிருந்த ரூ.300-ஐ பறித்து சென்றார்.

    களக்காடு :

    திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 45). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கோதைசேரி விலக்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோதைசேரியை சேர்ந்த அருண்குமார் (23), குமாரிடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி, மிரட்டி அவரிடமிருந்த ரூ.300-ஐ பறித்து சென்றார். இதுபற்றி குமார் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அருண்குமாரை கைது செய்தனர்.

    • சென்னை அடையாறு சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன்.
    • முதலில் அந்த சிறுவன் என்னிடம் பணம் கேட்டான்.

    சென்னை:

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிவேதா பெத்துராஜ். இவர் 'ஒருநாள் கூத்து', 'பொதுவாக எம்மனசு தங்கம்', 'டிக்...டிக்...டிக்' உட்பட பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜியிடம் சிறுவன் ஒருவன் பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இதுதொடர்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    "சென்னை அடையாறு சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன். முதலில் அந்த சிறுவன் என்னிடம் பணம் கேட்டான். இலவசமாக பணம் கொடுக்க நான் மறுத்தேன். இதையடுத்து அவன் புத்தகத்தை ரூ.50-க்கு என்னிடம் விற்பனை செய்ய முயன்றான். நான் ரூ.100-ஐ எடுத்தேன். இந்த வேளையில் சிறுவன் என்னிடம் ரூ.500 தாங்கனு கேட்டான். அப்போது நான் புத்தகத்தை அவனிடம் கொடுத்து ரூ.100-ஐ மீண்டும் வாங்கினேன். இந்த வேளையில் புத்தகத்தை காருக்குள் வீசிய சிறுவன் என் கையில் இருந்த பணத்தை பறித்து கொண்டு ஓடிவிட்டான்" என கூறியுள்ளார்.

    மேலும் அந்த பதிவில் நிவேதா பெத்துராஜ், "இப்படி ஆக்ரோஷமாக பிச்சை கேட்கும் பழக்கம் எல்லா இடத்திலும் இருப்பது உண்மையா? இந்த பிரச்சினையை நீங்கள் சந்தித்து உள்ளீர்களா?" எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், போக்குவரத்து சிக்னல்களில் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தும் நபர்கள் மற்றும் பணம் பறிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×