என் மலர்
நீங்கள் தேடியது "Truck hijacking"
- 10 கி.மீ.செல்வதற்குள் மடக்கி பிடித்தனர்
- போலி நம்பர் பிளேட் மாட்டி துணிகரம்
அணைக்கட்டு:
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் குமார் (வயது 34) பிரபல கார் திருடன். இவர் நேற்று இரவு மாதனூர் பகுதியில் கார்களை திருடுவதற்காக நோட்டமிட்டார். அப்போது மாதனூர் அருகே மினி லாரியை நிறுத்தி வைத்திருந்தனர். அதனை திருடிக் கொண்டு குமார் பள்ளிகொண்டா பகுதிக்கு வந்தார்.
அங்கு வைத்து அந்த லாரியின் இருபுறமும் போலி நம்பர் பிளேட்டை மாட்டினார். பின்னர் வேலூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் வந்து கொண்டிருந்தார். அப்போது பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அவர்கள் குமார் ஓட்டி வந்த வாகனத்தை மடக்கினர். அவர்களை பார்த்ததும் வாகனத்தை நிறுத்திவிட்டு குமார் அந்த பகுதியில் உள்ள புதர் பகுதிக்கு ஓடினார். போலீசார் அவரை விரட்டி சென்றனர். அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் பின்புறம் உள்ள புதரில் குமார் பதுங்கிக் கொண்டார்.
அந்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை ஈடுபட்டனர்.
2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு பதுங்கி இருந்த குமாரை லாரியை திருடி கொண்டு 10 கிலோமீட்டர் வருவதற்குள் அவர் சிக்கி உள்ளார். பிடித்தனர். விசாரணையில் அவர் மாதனூர் பகுதியில் இருந்து போலியான நம்பர் பிளேட் மாட்டி மினி லாரியை திருடி வந்தது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குமார் மீது வேறு ஏதாவது வழக்குகள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லூரி அருகில் நேற்று 2 பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள், அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்தனர்.
- ரூ.40 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதி மெயின் ரோட்டில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரி அருகில் நேற்று 2 பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள், அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்தனர். பின்னர் லாரி டிரைவரிடம் பேச்சுக் கொடுத்த அவர்கள், அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர், சம்பவம் குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தார்.
அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி டிரைவரிடம் 2 பெண்கள் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.