என் மலர்
நீங்கள் தேடியது "பணம் பறிப்பு"
- கைபேசியின் மூலம் தகாத மற்றும் பாவியல் ரீதியான செய்திகளை அனுப்பியுள்ளார்.
- பிரம்மநாயகத்தை பல முறை தொலைபேசியில் எச்சரித்துள்ளார்.
சேலம் பள்ளப்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாலத்தில் நடந்து சென்றவரிடம் செல்போன் மற்றும் பணம் பறிப்பு என்று வெளிவந்த செய்தி குறித்து காவல் துறை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமகிருஷ்ணன் அம்பேத்கார் காலனி அதிகாரிப்பட்டி அம்மாபேட்டை என்பவர் ஒரு சிறுமியுடன் (பெயர் வெளியிடப்படவில்லை) சுமார் ஒரு வருடமாக நட்பில் இருந்துள்ளார்.
சுமார் 6 மாதங்களுக்கு முன்பு பிரம்மநாயகம் என்பவர் அந்த சிறுமிக்கு தவறாக கைபேசி அழைப்பு கொடுத்து தன்னை அவளுடைய உறவினர் என்று அறிமுகப்படுத்தி மரியாதைக்குன்றிய வார்த்தைகளில் பேசியுள்ளார்.
இதை சிறுமி ராமகிருஷ்ணனிடம் தெரிவித்தபோது அவர் பிரம்மநாயகத்தை பல முறை தொலைபேசியில் எச்சரித்துள்ளார்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பிரம்மநாயகம் மீண்டும் சுரேஷ் என்னும் பெயரில் இன்ஸ்டாகிராம் ஐடி நுவங்கி அதன் வழியாக தொடர்பு கொண்டு கைபேசியின் மூலம் தகாத மற்றும் பாவியல் ரீதியான செய்திகளை அனுப்பியுள்ளார்.
சிறுமி அவரை பிளாக் செய்து அவர் அனுப்பிய செய்திகளை ராமகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். பிரம்மநாயகத்தை பிடிப்பதற்காக ராமகிருஷ்ணன் ஒரு போலியான இன்ஸ்டாகிராம் ஐடி ஒரு பெண் பெயரில் உருவாக்கி சில நாட்களாக பிரம்மநாயகத்துடன் இன்ஸ்டாகிராமில் உரையாடியுள்ளார்.
ராமகிருஷ்ணளின் நோக்கம் பிரம்மநாயகத்தை சேலத்திற்கு வரசெய்து அவர் அனுப்பிய தகாத செய்திகள் மற்றும் புகை படங்களை நீக்க செய்து மேலும் இனி சிறுமியை தொந்தரவு செய்யாதவாறு எச்சரிப்பதற்காகவும் அந்த ஆன்லைன் உரையாடல் அடிப்படையில் பிரம்மநாயகம் இன்று 25.10.2025 ம்தேதி சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
ராமகிருஷ்ணன் அவரது நண்பர்கள் வினிக்குமார் மற்றும் பிரதீப்ராஜ் மூவரும் பிரம்மநாயகத்தை பின்தொடர்ந்து பேருந்து நிலையம் அருகிள் உள்ள பாலம் அருகில் வருமாறு கேட்டுள்ளனர்.
அங்கு அவர்கள் பிரம்மநாயகத்தை தாக்கி அவரது அலைப்பேசியை பறித்து உடைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த தாக்குதலின் நோக்கம் பிரம்மநாயகம் இனி அந்த சிறுமியை தொந்தரவு செய்யாமல் இருப்பதையும் அவளுக்கு அனுப்பிய தகாத செய்திகள் மற்றும் புகைப்படத்தை அவரது மொபைலில் இருந்து நீக்குவதை உறுதி செய்வதே ஆகும்
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- கடந்த ஜனவரி மாதம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஒரு வாலிபருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது.
- பணத்தை வாங்கிய கோபால் கும்பல் அவரிடம் தொடர்ந்து பணம் பறிக்க முடிவு செய்தனர்.
சேலம்:
சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் சசிசேகர் (44), திருமணமாகி இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் தருமபுரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு சேலத்தில் உள்ள மற்றொரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தார்.
அப்போது அங்கு பணியாற்றிய திருமணமாகாத இளம்பெண் ஒருவருடன் சசிசேகர் பேசி பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்த பெண்ணுடன் சசிசேகர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஒரு வாலிபருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. திருமணமான 10 நாளில் அந்த பெண் வாந்தி எடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அந்த இளம்பெண் 2 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த அந்த இளம்பெண்ணின் கணவர் திருமணமாகி 10 நாளில் எப்படி 2 மாதம் கர்ப்பம் என்று மனைவியிடம் கேட்டார்.
அப்போது கதறி அழுத அந்த இளம்பெண் என்னை மன்னித்து விடுங்கள் என கண்ணீர் விட்டு கதறினார். மேலும் தன்னுடன் வேலை பார்த்தவருடன் ஏற்பட்ட பழக்கம் குறித்த விவரத்தையும் கணவரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதையடுத்து கருவை கலைத்து விட முடிவு செய்த புது மாப்பிள்ளை சசிசேகரை தேடி சென்றார். அவர் அப்போது தனது நண்பரான கோபால் என்பவரையும் உடன் அழைத்து சென்றார். சசிசேகரை பிடித்து எச்சரித்த 2 பேரும் கருவை கலைக்க ரூ.80 ஆயிரம் பணம் கேட்டனர். கொடுக்காவிட்டால் போலீசில் புகார் கொடுக்கப்போவதாகவும் கூறினர்.
இதனால் பயந்து போன சசிசேகர் உடனடியாக கேட்ட பணத்தை கொடுத்து விட்டார். பணத்தை வாங்கிய புதுமாப்பிள்ளை மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் வேறு யாருக்கும் தெரியாமல் கருவை கலைத்தார். தொடர்ந்து புது மாப்பிள்ளை, மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இதையடுத்து புதுமாப்பிள்ளையுடன் சென்ற கோபால் சசிசேகரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டார். அதன்படி சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடிகளான மோகன் என்ற பாஸ்ட் புட் மோகன், உலகநாதன், பூமாலை ராஜன் ஆகிய 3 பேரை அழைத்து கொண்டு மீண்டும் சசி சேகரை கோபால் சந்தித்தார்.
அப்போது மேலும் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினர். கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்றால் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிடுவோம் , பின்னர் நீ சிறைக்கு சென்று விடுவாய் என்று மிரட்டினர். இதனால் பயந்து போன சசிசேகர் ரூ.9 லட்சம் பணத்தை கொடுத்தார்.
பணத்தை வாங்கிய கோபால் கும்பல் அவரிடம் தொடர்ந்து பணம் பறிக்க முடிவு செய்தனர். அதன்படி மேலும் ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் இந்த பிரச்சனையை முடித்து விடலாம் இல்லை என்றால் சிக்கலில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று மிரட்டினர்.
இதனால் செய்வதறியாது திகைத்த சசிசேகர் ஏற்கனவே இந்த பிரச்சனைக்கு ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்த நிலையில் மேலும் ரூ.10 லட்சம் கொடுக்க முடியாது என்று கூறிய நிலையில் பயந்து போன அவர் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி அழகாபுரம் போலீசில் புகார் கொடுத்த அவர் இந்த பிரச்சனையில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு கதறினார்.
அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அந்த பெண்ணின் கணவரின் நண்பரான கோபால் மற்றும் பிரபல ரவுடிகளான மோகன் என்ற பாஸ்ட் புட் மோகன், பூமாலை ராஜன், உலகநாதன் ஆகிய 4 பேர் மீதும் மிரட்டி ரூ.9 லட்சம் பணம் பறித்ததாக வழக்கு பதிவு செய்து அவர்களை தேடினர். அப்போது 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். வழக்கு பதிவு செய்யப்பட்ட கோபால் தவிர மற்ற 3 பேர் மீதும் சேலம் டவுன், அழகாபுரம் போலீஸ் நிலையங்களில் 5-க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மணவாளநகர் கபிலர் நகர் பகுதியை சேர்ந்தவர் மீன் வியாபாரி லட்சுமி.
- நேற்று லட்சுமி தனது மகளுடன் கடையில் இருந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் கபிலர் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. மீன் வியாபாரி. இவர் பட்டரை அரசு பள்ளி எதிரே மீன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று லட்சுமி தனது மகளுடன் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தேவன், பாலாஜி, வெங்கடேசன், வரதராஜன், கவுரிசங்கர் ஆகிய 5 பேரும் லட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். மேலும் அவரிடம் இருந்த ரூ.15 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 2 வாலிபர்கள் கோபியை தடுத்து நிறுத்தி பணம் கேட்டனர்.
- வியாபாரியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள செந்தமிழ் நகரை சேர்ந்தவர் கோபி என்ற யூசுப் (வயது 33). வியாபாரி. சம்பவத்தன்று இவர் செந்தமிழ் நகர் வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் கோபியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுக்கவே பாக்கெட்டில் இருந்து ரூ.2,500 பணத்தை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து கோபி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாபாரியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
- மகாலிங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், தஞ்சாவூர் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார்.
- உங்களை சோதனையிட வேண்டும் என்று கூறிய அந்த நபர், சோதனையிடுவது போல நடித்து மகாலிங்கம் சட்டை பையில் கையை விட்டு அதிலிருந்த ரூ. 2000 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.
திருச்சி,
திருச்சி திருவெறும்பூர் ஜெய் நகர் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது68). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், தஞ்சாவூர் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அருகாமையில் வந்த ஒரு நபர், தான் ஒரு போலீஸ்காரர் என கூறினார். பின்னர் அவரிடம் சில கேள்விகளை கேட்டார். மகாலிங்கமும் அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து உள்ளார். அப்போது உன் மீது சந்தேகமாக உள்ளது . உன்னை சோதனையிட வேண்டும் என்று கூறிய அந்த நபர், சோதனையிடுவது போல நடித்து மகாலிங்கம் சட்டை பையில் கையை விட்டு அதிலிருந்த ரூ. 2000 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.
இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இந்த துணிகர வழிபறி செயலில் ஈடுபட்டது திருவண்ணாமலை மாவட்டம் கிள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த சாமுன் (வயது52) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
- பணம், வெள்ளி கை செயின், வெள்ளி மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
கோவை,
கோவை சுந்தராபுரம் மதுக்கரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). தனியார் வங்கி ஊழியர்.
இவர் சம்பவத்தன்று குறிச்சி எம்.எம்.பி நகரில் உள்ள தனது நண்பர் ஒருவரை பார்க்க நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென அவரை வழிமறித்து பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார்.
இதனால் வாலிபர்கள் 3 பேரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.700 பணம், வெள்ளி கை செயின், வெள்ளி மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து மணிகண்டன் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பணம் மற்றும் வெள்ளியை பறித்தது கோவை போத்தனூர் பாரதிநகரை சேர்ந்த ஷாரூக்கான்(24), போத்தனூர் திருமறை நகரை சேர்ந்த ரியாஸ்கான்(28) மற்றும் போத்தனூர் சாரதா மில் ரோட்டை சேர்ந்த காஜா மொய்தீன்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், ஷாரூக்கான் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 9 வழக்குகளும், காஜா மொய்தீன் மீது 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அடையாளம் தெரியாத நபர்கள் காதல் வலை வீசினால் நம்பி ஏமாற வேண்டாம்.
- பணம் கேட்டு மிரட்டினால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள கூடுரை சேர்ந்தவர் சேகர் (வயது 24). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்களுக்கு வலைவீசி பணம் பறிக்க திட்டமிட்டார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சேகரை இன்ஸ்டாகிராமில் நண்பராக ஏற்றுக்கொண்டார். இருவரும் அடிக்கடி அதில் தகவல்களை பரிமாறத் தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் சேகர் இளம்பெண்ணை காதலிக்குமாறு கூறியுள்ளார். அதனை இளம்பெண் ஏற்றுக்கொண்டுள்ளார். இருவரும் காதல் மொழிகளை பேச ஆரம்பித்தனர்.
அப்போது இளம்பெண்ணின் போட்டோ மற்றும் வீடியோக்களை சேகர் கேட்டு வாங்கினார். அதனை தனது இணையதளத்தில் பதிவு செய்து கொண்டார்.
சேகர் திட்டமிட்டது போல தனது வேலையை காட்ட ஆரம்பித்தார். இளம்பெண்ணிடம் நான் கேட்கும் போதெல்லாம் பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் வீடியோ மற்றும் செல்போன் உரையாடல்களை ஆன்லைனில் வெளியிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன இளம்பெண் சேகருக்கு பணம் கொடுக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் இளம்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்டாகிராம் முகவரி மூலம் சேகரை போலீசார் கைது செய்தனர்.
அடையாளம் தெரியாத நபர்கள் காதல் வலை வீசினால் நம்பி ஏமாற வேண்டாம். பணம் கேட்டு மிரட்டினால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
- கல்லூரி அருகில் நேற்று 2 பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள், அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்தனர்.
- ரூ.40 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதி மெயின் ரோட்டில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரி அருகில் நேற்று 2 பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள், அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்தனர். பின்னர் லாரி டிரைவரிடம் பேச்சுக் கொடுத்த அவர்கள், அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர், சம்பவம் குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தார்.
அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி டிரைவரிடம் 2 பெண்கள் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரஷிதாவின் ஆசைவார்த்தையில் மயங்கிய முதியவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷிதா வீட்டிற்கு சென்றார்.
- முதியவரின் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் கைமாறிய தகவலை அவரது உறவினர்கள் அறிந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர், குன்னம்குளம் பகுதியை சேர்ந்தவர் நிஷாத். நிஷாத்தின் மனைவி ரஷிதா (வயது 28). இருவரும் சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதன்மூலம் இருவருக்கும் பலரது தொடர்பு கிடைத்தது.
இதில் பணம் படைத்த முதியவர்கள் யார்-யார் என கண்டறிந்து அவர்களுடன் ரஷிதா தொடர்பு கொண்டார். இதில் மலப்புரம் பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவருடன் ரஷிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் ரஷிதா நெருங்கி பழகியதோடு, அந்த முதியவரை தன் வீட்டிற்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் எனவும் ஆசைவார்த்தை கூறினார்.
ரஷிதாவின் ஆசைவார்த்தையில் மயங்கிய முதியவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷிதா வீட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தனர். இதனை ரஷிதாவின் கணவர் நிஷாத் செல்போனில் படம் எடுத்தார்.
அதன்பின்பு கணவன்-மனைவி இருவரும் முதியவரை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர் ரஷிதாவுடன் உல்லாசமாக இருக்கும் படம் இருப்பதாகவும், அதனை சமூகவலைதளத்தில் பதிவிடாமல் இருக்க பணம் தரவேண்டும் எனவும் மிரட்டினர்.
இதனை கேட்டு மிரண்டு போன முதியவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரஷிதா மற்றும் அவரது கணவர் நிஷாத் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பினார்.
இப்படி ரூ.27 லட்சம் வரை இருவரும் பணம் பறித்தனர். அதன்பின்பும் அவர்களின் மிரட்டல் தொடர்ந்தது. இதனால் முதியவர் மிகவும் மன உளச்சலுக்கு ஆளானார்.
இதற்கிடையே முதியவரின் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் கைமாறிய தகவலை அவரது உறவினர்கள் அறிந்தனர். அவர்கள் இதுபற்றி முதியவரிடம் கேட்டபோது அவர் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து கூறி அழுதார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மலப்புரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தலைமறைவாக இருந்த நிஷாத்-ரஷிதா இருவரையும் கைது செய்தனர். அவர்கள் இதுபோல வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பணம் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
வெம்பாக்கம்அ டுத்த ஹரி ஹரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.ஜி.ஆர். (வயது28). இவர் நேற்று முன்தினம் அப்துல்லாபுரம் கிராமம் மின்வாரியம் அருகே எதிரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஒரு வாலிபர் திடீரென பிளேடை காட்டி மிரட்டி எம்ஜிஆர் சட்டை பையில் இருந்த 500 ரூபாய் எடுத்து ஓடினார்.
எம்ஜிஆர் கூச்சல் போடவே அங்கிருந்த பொதுமக்கள் வாலிபரை மடக்கி பிடித்து தூசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில் பிடிபட்ட வாலிபர் காஞ்சிபுரம் மேற்கு பகுதி பல்லவன் தெருவை சேர்ந்த தாமோதரன் 19 என்பது தெரியவந்தது.இதையடுத்து அவரிடம் இருந்த 500 ரூபாயை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து
தாமோதரனை கைது செய்தனர்.
- ராஜா புலியகுளத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சார்லசை கைது செய்தனர்.
கோவை:
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையை சேர்ந்தவர் ராஜா (வயது 30). இவர் புலியகுளத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று ராஜா வேலை செய்து கொண்டு இருந்த போது புலியகுளம் அந்தோணியார் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சார்லஸ் (வயது 26) என்பவர் அங்கு வந்தார். அவர் பீர் பாட்டிலை உடைத்து ராஜாவின் கழுத்தில் வைத்து மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.900 ஆயிரம் பணத்தை பறித்து சென்றார். இது குறித்து அவர் ராமநாதபுரம போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சார்லசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- மேலும் ஒருவர் தலைமறைவு
- சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
நாகர்கோவில்:
கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (வயது 24).
இவர் கருங்கல் பஸ் நிலையம் அருகே உள்ள வேன் ஸ்டாண்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை அஸ்வின் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது போலீஸ் வாகனத்தில் வந்த ஒரு கும்பல் அஸ்வினை வழிமறித்து ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றது.
இந்த கும்பல் மீது அஸ்வினுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அஸ்வின் போலீஸ் வாகனத்தையும் அதிலிருந்த கும்பலையும் செல்போனில் படம்பிடித்தார். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து போலீஸ் வாகனத்தில் தப்பி சென்று விட்டது. நடந்த சம்பவம் குறித்து அஸ்வின் கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அஸ்வின் செல்போனில் பதிவு செய்திருந்த அந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அஸ்வினிடம் பணம் பறித்த கும்பல் பயன்படுத்தியது குலசேகரம் போலீஸ் நிலைய வாகனம் என்பது தெரிய வந்தது. குலசேகரம் போலீஸ் நிலையத்தில் உள்ள வாகனத்தை பழுது நீக்குவதற்காக ஒர்க் ஷாப் ஒன்றில் விட்டு இருந்தனர்.
வேலை முடிந்த பிறகு அந்த வாகனத்தை அங்கு நிறுத்தி இருந்தனர். அந்த வாகனத்தை சிலர் எடுத்து செல்வது போன்ற காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் போலீஸ் வாகனத்தை எடுத்துச் சென்றது காஞ்சிரக்கோடு பகுதியைச் சேர்ந்த போஸ்கோ டைசிங் (38), ரூபன் (38), விஷ்ணு (27), கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஹிட்லர் (45)என்பது தெரியவந்தது. இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 4 பேரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் போஸ்கோ டைசிங், ரூபன், விஷ்ணு ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் வாகனத்தை அந்த பகுதியில் இருந்து எடுத்து சென்று கருங்கல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றதாகவும் திரும்பி வரும் வழியில் அஸ்வினிடம் பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது.
தலைமறைவாகியுள்ள ஹிட்லரை தேடி வருகி றார்கள். போலீஸ் வாகனத்தில் சென்று வாலிபரி டம் பணம் பறித்த சம்ப வம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.






