என் மலர்
நீங்கள் தேடியது "Threaten"
- கடந்த ஜனவரி மாதம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஒரு வாலிபருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது.
- பணத்தை வாங்கிய கோபால் கும்பல் அவரிடம் தொடர்ந்து பணம் பறிக்க முடிவு செய்தனர்.
சேலம்:
சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் சசிசேகர் (44), திருமணமாகி இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் தருமபுரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு சேலத்தில் உள்ள மற்றொரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தார்.
அப்போது அங்கு பணியாற்றிய திருமணமாகாத இளம்பெண் ஒருவருடன் சசிசேகர் பேசி பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்த பெண்ணுடன் சசிசேகர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஒரு வாலிபருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. திருமணமான 10 நாளில் அந்த பெண் வாந்தி எடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அந்த இளம்பெண் 2 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த அந்த இளம்பெண்ணின் கணவர் திருமணமாகி 10 நாளில் எப்படி 2 மாதம் கர்ப்பம் என்று மனைவியிடம் கேட்டார்.
அப்போது கதறி அழுத அந்த இளம்பெண் என்னை மன்னித்து விடுங்கள் என கண்ணீர் விட்டு கதறினார். மேலும் தன்னுடன் வேலை பார்த்தவருடன் ஏற்பட்ட பழக்கம் குறித்த விவரத்தையும் கணவரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதையடுத்து கருவை கலைத்து விட முடிவு செய்த புது மாப்பிள்ளை சசிசேகரை தேடி சென்றார். அவர் அப்போது தனது நண்பரான கோபால் என்பவரையும் உடன் அழைத்து சென்றார். சசிசேகரை பிடித்து எச்சரித்த 2 பேரும் கருவை கலைக்க ரூ.80 ஆயிரம் பணம் கேட்டனர். கொடுக்காவிட்டால் போலீசில் புகார் கொடுக்கப்போவதாகவும் கூறினர்.
இதனால் பயந்து போன சசிசேகர் உடனடியாக கேட்ட பணத்தை கொடுத்து விட்டார். பணத்தை வாங்கிய புதுமாப்பிள்ளை மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் வேறு யாருக்கும் தெரியாமல் கருவை கலைத்தார். தொடர்ந்து புது மாப்பிள்ளை, மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இதையடுத்து புதுமாப்பிள்ளையுடன் சென்ற கோபால் சசிசேகரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டார். அதன்படி சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடிகளான மோகன் என்ற பாஸ்ட் புட் மோகன், உலகநாதன், பூமாலை ராஜன் ஆகிய 3 பேரை அழைத்து கொண்டு மீண்டும் சசி சேகரை கோபால் சந்தித்தார்.
அப்போது மேலும் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினர். கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்றால் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிடுவோம் , பின்னர் நீ சிறைக்கு சென்று விடுவாய் என்று மிரட்டினர். இதனால் பயந்து போன சசிசேகர் ரூ.9 லட்சம் பணத்தை கொடுத்தார்.
பணத்தை வாங்கிய கோபால் கும்பல் அவரிடம் தொடர்ந்து பணம் பறிக்க முடிவு செய்தனர். அதன்படி மேலும் ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் இந்த பிரச்சனையை முடித்து விடலாம் இல்லை என்றால் சிக்கலில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று மிரட்டினர்.
இதனால் செய்வதறியாது திகைத்த சசிசேகர் ஏற்கனவே இந்த பிரச்சனைக்கு ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்த நிலையில் மேலும் ரூ.10 லட்சம் கொடுக்க முடியாது என்று கூறிய நிலையில் பயந்து போன அவர் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி அழகாபுரம் போலீசில் புகார் கொடுத்த அவர் இந்த பிரச்சனையில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு கதறினார்.
அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அந்த பெண்ணின் கணவரின் நண்பரான கோபால் மற்றும் பிரபல ரவுடிகளான மோகன் என்ற பாஸ்ட் புட் மோகன், பூமாலை ராஜன், உலகநாதன் ஆகிய 4 பேர் மீதும் மிரட்டி ரூ.9 லட்சம் பணம் பறித்ததாக வழக்கு பதிவு செய்து அவர்களை தேடினர். அப்போது 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். வழக்கு பதிவு செய்யப்பட்ட கோபால் தவிர மற்ற 3 பேர் மீதும் சேலம் டவுன், அழகாபுரம் போலீஸ் நிலையங்களில் 5-க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இவர்கள் இருவருக்கும் இடையே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
- மணமகள் மந்தாஷாவுக்கு பதில் அவரது 45 வயது தாய் தஹிரா மணப்பெண் அலங்காரத்தில் அமர்ந்து இருந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பிரம்புரியில் வசித்து வருபவர் முகமது ஆசிம் (வயது 21). இவருக்கும் பசால்பூரை சேர்ந்த மந்தாஷா (21) என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் பேசி முடிக்கப்பட்டது.
கடந்த வாரம் இவர்கள் இருவருக்கும் இடையே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமண வீடு உறவினர்களால் நிரம்பி களை கட்டி இருந்தது. திருமணத்துக்கு முன்பு மணமகளின் பெயர் தஹிரா என அறிவிக்கப்பட்டது.இந்த பெயரை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணமகன் முகமது ஆசிம் மணமகளின் முக்காடை விலக்கி பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மணமகள் மந்தாஷாவுக்கு பதில் அவரது 45 வயது தாய் தஹிரா மணப்பெண் அலங்காரத்தில் அமர்ந்து இருந்தார். இவர் விதவை ஆவார். முகமது ஆசிமின் மூத்த சசோதரர் மற்றும் அண்ணி ஆகியோர் ஏமாற்றி இந்த திருமணத்தை நடத்தி வைக்க முயற்சி செய்தது தெரியவந்தது.
இது பற்றி கேள்வி கேட்ட முகமது ஆசிமை அவர்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்காவிட்டால் போலியாக பாலியல் புகார் கொடுக்கப்போவதாக மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அவர் மீரட் போலீஸ் சூப்பிரெண்டிடம் தான் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- சீனா பொருட்களுக்கு 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.
- இது தொடர்பாக சீனாவின் வர்த்தக அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது,
இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது. இதற்கு எதிர்வினை ஆற்றாமல் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மவுனம் காத்து வரும் சூழலில் சீனா அமெரிக்கா மீது பதிலுக்கு இறக்குமதி பொருட்களுக்கு 34 சதேவீத வரி விதிப்பதாக அறிவித்தது.
வரும் 10 தேதி முதல் இது அமலுக்கு வரும் எனவும் தெரிவித்தது. இதனால் சூடான டிரம்ப், சீனா உடனைடியாக தனது வரியை திரும்பப்பெறவில்லை என்றால் பதிலுக்கு 50 சதவீத வரி விதிப்பேன் என்று மிரட்டினார்.
இந்நிலையில் சீனா பொருட்களுக்கு 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார். இதற்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தனது சொந்த உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க உறுதியான எதிர்நடவடிக்கைகளை சீனா எடுக்கும்.
சீனாவுக்கு எதிரான வரிகளை அதிகரிப்பதாக அச்சுறுத்துவதன் மூலம் அமெரிக்கா தவறு மேல் தவறு செய்து வருகிறது. அமெரிக்கா தனது விருப்பப்படி நடக்க வலியுறுத்தினால் சீனா இறுதி வரை போராடும் என்று கூறப்பட்டுள்ளது.
- சென்னை முகப்பேரில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
- பள்ளிக்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம், தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 14-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் பிரபல மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனைக்கு இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மருத்துவமனை முழுவதும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை முகப்பேரில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவலின் பேரில் ஜெ.ஜெ.நகர் போலீசார் பள்ளி வளாகம் முழுவதும் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இந்தப் பள்ளிக்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- துபாயில் கலாவதி தனது பெயரில் ஒரு நிறுவனம் தொடங்க லைசன்ஸ் எடுக்க முயற்சித்தார்.
- பாதிக்கப்பட்ட கலாவதி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரம் அழகுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி (வயது 40) பெயர் மாற்றப்பட்டுள்ளது.
பிஎஸ்சி பட்டதாரியான இவருக்கு திருமணமாகி பின்னர் கடந்த 2012ல் விவாகரத்து ஆனது. இவர் வயலூர் பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார்.
அப்போது நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் இலங்கையை சேர்ந்த இளங்கோ என்கிற ஜானி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.
பின்னர் துபாயில் கலாவதி தனது பெயரில் ஒரு நிறுவனம் தொடங்க லைசன்ஸ் எடுக்க முயற்சித்தார். இதற்காக இளங்கோவை அழைத்து உள்ளார். கடந்த ஆகஸ்ட் 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் துபாயில் இருந்தார். அப்போது அவர் உடை மாற்றுவதையும் குளிப்பதையும் இளங்கோ வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அதை வைத்து இளங்கோ அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கலாவதி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதில் நான் தற்போது ஈரோட்டை சேர்ந்த ஜீவா என்பவரை மறுமணம் செய்து முசிறியில் வசித்து வருகிறேன். என் கணவரை விட்டு பிரிந்து லண்டனுக்கு வந்து விட வேண்டும். இல்லாவிட்டால் எனது நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்திலும் நாம் தமிழர் குழுவிலும் பதிவேற்றம் செய்து விடுவேன் என இளங்கோ மிரட்டி வருகிறார்.
தற்போது லண்டனில் வசித்து வரும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். போலீசார் இளங்கோ மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெடிபொருட்கள் அல்லது ரசாயன பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
- வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு சம்பங்கி ராமநகரில் நட்சத்திர ஓட்டலான ஐபிஸ் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் நேற்று இரவு வந்தது. அதில் ஓட்டல் வளாகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளோம். இன்னும் சில மணி நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்டிருந்தது. இந்த செய்தியை பார்த்த ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு, வெடிகுண்டு கண்டறியும் பிரிவு மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஓட்டல் வளாகத்தை ஆய்வு செய்தனர். வெடிபொருட்கள் அல்லது ரசாயன பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது போலி வெடிகுண்டு மிரட்டல் என்பது தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.






