என் மலர்
நீங்கள் தேடியது "வெடிகுண்டு"
- கட்டுமானப் பணிகளுக்காக தோண்டிக் கொண்டிருந்தபோது இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
- இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த ஹாங்காங் மீது நேச நாடுகள் கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
சீனாவின் சிறப்பு அந்தஸ்து மாகாணமான ஹாங் காங்கில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
குவாரி பே (Quarry Bay) பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கட்டுமானப் பணிகளுக்காக தோண்டிக் கொண்டிருந்தபோது இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
ஆய்வில், இது 1.5 மீட்டர் நீளமும், 450 கிலோகிராம் எடையும் கொண்ட அமெரிக்க குண்டு என்று கண்டறியப்பட்டது.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஆண்டி சான் டின்-சு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இது இரண்டாம் உலகப் போர் காலத்து குண்டு என்பதை உறுதி செய்துள்ளோம்.
இதை செயலிழக்கச் செய்யும் பணி மிகவும் ஆபத்தானது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,900 வீடுகளில் வசிக்கும் சுமார் 6,000 பேரை வெளியேற்றினோம்" என்று தெரிவித்தார்.
வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் பல மணி நேரம் போராடி குண்டை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்ததால் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த ஹாங்காங் மீது நேச நாடுகள் கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
அந்தத் தாக்குதல்களில் வெடிக்காமல் பூமியில் புதைந்துபோன குண்டுகள், இன்றும் கட்டுமானப் பணிகளின் போது அடிக்கடி கண்டுபிடிக்கப்படுவது வழக்கம். 2018 ஆம் ஆண்டிலும், வான் சாய் பகுதியில் இதேபோன்ற ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- வேறு வேறு இ-மெயில் முகவரி மூலம் அந்த நபர் மிரட்டல் அனுப்பி வருகிறார்.
- போலீசார் சென்று 4 முறை சோதனை நடத்தினர்.
கோவை:
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. இதுகுறித்து கோவை வெடி குண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் சென்று 4 முறை சோதனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சைபர் கிரைம் போலீசில் இ-மெயில் கடிதம் அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மதியம் மீண்டும் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வேறு ஒரு இ-மெயில் முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உடனே போலீசார் சென்று சோதனை நடத்தினர்.
தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்களால் கோவை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ஓய்வு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
நேற்று மாலை கோவை விமான நிலையம் அருகே விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள டைட்டல் பார்க் கட்டிடத்திற்கும் வெடி குண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் அங்கு சென்று சோதனை நடத்தினர். டைடல் பார்க் பகுதியில் 2 கட்டிடங்களில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
அங்கு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் மலர் மற்றும் அயன் ஆகிய மோப்ப நாய்கள் கொண்டு போலீசார் ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.
கட்டிடங்களின் கார் பார்க்கிங் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் என அனைத்து பகுதிகளிலும் சோதனை நடந்தது. 2 மணி நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் மீண்டும் புரளி என்றுதெரிய வந்தது. இந்த சோதனையால் அங்கு பரபரப்பு நிலவியது.
கலெக்டர் அலுவலகம் மற்றும் கோவை பாஸ்போர்ட் அலுவலகம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய அதே நபர்தான் டைட்டல் பார்க்கிற்கும் அனுப்பியதாக கூறப்படுகிறது. வேறு வேறு இ-மெயில் முகவரி மூலம் அந்த நபர் மிரட்டல் அனுப்பி வருகிறார்.
அவரை பிடிக்க போலீ சார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் என்ற பெயரில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
- கொத்து குண்டுகளை உற்பத்தி செய்தல், சேமித்து வைத்தல், மாற்றுதல் மற்றும் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஒரு சர்வதேச ஒப்பந்தம் 2008 இல் கையெழுத்தானது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த 7 நாளாக தாக்குதல் நீடித்து வருகிறது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானை கடந்த வாரம் இஸ்ரேல் தாக்கிய நிலையில் ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் என்ற பெயரில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ஈரான் தங்கள் எல்லையில் கொத்து குண்டுகளை ஏவுவதாக இஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. பொதுமக்களுக்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தடை செய்யப்பட்ட குண்டுகளை ஈரான் பயன்படுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈரான் ஏவிய ஏவுகணையின் போர்முனை சுமார் 7 கிலோமீட்டர் (4 மைல்) உயரத்தில் உடைந்து, மத்திய இஸ்ரேலிய பிரதேசத்தில் சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்) சுற்றளவில் சுமார் 20 சிறிய குண்டுகளாக வெடித்து சிதறடித்தது.
சிறிய குண்டுகளில் ஒன்று மத்திய இஸ்ரேலில் உள்ள அசோர் நகரில் உள்ள ஒரு வீட்டைத் தாக்கி சேதம் ஏற்படுத்தியதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் இராணுவ நிருபர் இம்மானுவேல் ஃபேபியன் தெரிவித்தார். இருப்பினும், உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை.

வெடிக்காத குண்டுகளின் ஆபத்துகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கும் ஒரு கிராஃபிக் வீடியோவையும் இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டது.
கொத்து குண்டுகள் (Cluster bombs) என்பவை மிகவும் ஆபத்தான ஆயுதமாக வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். ஏவப்படும் ஒரு குண்டு பல சிறிய குண்டுகளாக இலக்கின் மீது விழுந்து வெடிக்கிறது.
இவற்றில் சில உடனடியாக வெடிக்காமல் போகலாம். நீண்ட காலத்திற்குப் பிறகும் அவை வெடித்து பொதுமக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே கொத்து குண்டுகளின் பயன்பாடு குறித்து சர்வதேச அளவில் சர்ச்சை நீடித்து வருகிறது
கொத்து குண்டுகளை உற்பத்தி செய்தல், சேமித்து வைத்தல், மாற்றுதல் மற்றும் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஒரு சர்வதேச ஒப்பந்தம் 2008 இல் கையெழுத்தானது. இதில் 111 நாடுகளும் 12 பிற அமைப்புகளும் கையெழுத்திட்டன. இருப்பினும், ஈரானும் இஸ்ரேலும் இந்த ஒப்பந்தத்தில் சேர மறுத்துவிட்டன.
இதற்கிடையில், நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ரஷிய படைகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக அமெரிக்கா 2023 இல் உக்ரைனுக்கு கொத்து குண்டுகளை வழங்கியது. ரஷியாவும் கொத்து குண்டுகளை பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டுகிறது. அமெரிக்கா, ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளும் கொத்து குண்டுகளுக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடிக்க தேடுதல் நடந்து வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய வாடிக்கையாளர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு துறையின் மின்னஞ்சல் முகவரிக்கு கடந்த 16-ந்தேதி இரவு 10.18 மணியளவில் அலெக்ஸ் பால் மேனன் என்ற ஹாட்மெயில் முகவரியிலிருந்து ஒரு தகவல் வந்தது. அதில், பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டது சரியல்ல, ஐ.பி.எஸ். அதிகாரி பல்லன் ஏ. அருண் சவ்கு சங்கரை சட்டவிரோதமாக கைது செய்தது தவறு. எனவே, நாங்கள் வெடிகுண்டை வைக்கிறோம். விமான நிலைய கழிப்பறையிலும் அதன் குழாயிலும் ஒரு ஐஇடி குண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் ஒரு புதிர் விளையாட்டைப் போல, திட்டம் 'ஏ' தோல்வியடைந்தது. ஆனால் திட்டம் 'பி' என குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து விமான நிலைய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக எல்லா இடங்களிலும் சோதனை நடத்தினர். இருப்பினும், எங்கும் வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. புரளி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, விமான நிலையத்தின் முனையம்-2 மேலாளர் பி.சி. திம்மண்ணா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடிக்க தேடுதல் நடந்து வருகிறது.
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட மிரட்டல் செய்தியில் தமிழ்நாட்டை சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜே. ஜெயரஞ்சனின் வீட்டை வெடி குண்டு வைத்து தகர்க்க போவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து தமிழக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நேற்று பெங்களூரு நகரில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மறுபடியும் அடையாளம் தெரியாத ஒருவர் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் செய்தி அனுப்பியுள்ளார். இந்த விஷயம் குறித்து அறிந்ததும் போலீசார் 2 பள்ளிகளிலும் ஆய்வு செய்தனர். இருப்பினும், வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக புலிகேசிநகர் மற்றும் கோவிந்த்பூர் போலீஸ் நிலையங்களில் தனித்தனியே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- காலை நேரத்தில் வங்கி அருகே வெடிகுண்டு உடன் சென்றுள்ளார்.
- கையில் இருக்கும்போதே வெடிகுண்டு வெடித்துள்ளது.
கிரீஸ் நாட்டின் வடக்கு நகரான தெசாலோகினி நகரில் பெண் ஒருவர் வெளிப்படையாக கையில் வெடிகுண்டு எடுத்துச் சென்றபோது திடீரென வெடித்ததில் உடல் சதறி பலியானார்.
இன்று காலை 5 மணிக்கு ஒரு வங்கி அருகில் 38 வயது பெண் ஒருவர் கையில் வெளிப்படையாக வெடிகுண்டு ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது குண்டு வெடித்ததில் அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதில் சாலையோரம் இருந்து பல கடைகள் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன.
அந்த பெண் மீது கடந்த காலங்கில் பல கொள்ளை வழக்குகள் இருந்ததாகவும், தற்போது தீவிர இடதுசாரி குழுக்களடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மாந்தோட்டத்தில் வெடிகுண்டு கிடந்ததை ஆழ்குழாய் கிணறு ஆபரேட்டர் கண்டுபிடித்து தகவல் கொடுத்தார்.
- வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டில் இல்லை
சண்டிகர்:
சண்டிகரில் இன்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 4:30 மணியளவில், ஹெலிபேட் மற்றும் பஞ்சாப் முதல்வரின் வீட்டிற்கு அருகிலுள்ள மாந்தோட்டத்தில் வெடிகுண்டு கிடந்ததை ஆழ்குழாய் கிணறு ஆபரேட்டர் கண்டுபிடித்து தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்திய ராணுவத்தின் மேற்கு பிரிவும் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெடிகுண்டு எப்படி அங்கு வந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- போலீசார், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
- போலீசார் 7 செல்போன்கள் மற்றும் 2 பெண் டிரைவர்கள், மொட்டை கடிதங்களை பறிமுதல் செய்தனர்.
கொழிஞ்சாம்பாறை:
கொல்லம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெயர், முகவரி எதுவும் இல்லாமல் ஒரு மொட்டை கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியான ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் கலெக்டர் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தி கொண்டிருந்தனர். ஆனால் அங்கு குண்டு இல்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த கடிதத்தை யார் அனுப்பியது என்பதை கண்டறியும் பணியில் போலீசார் இறங்கினர்.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர்.
அப்போது கேமிராவில் பதிவாகி இருந்த வாலிபர் மற்றும் பெண் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுபோன்று பல்வேறு இடங்களில் குண்டு வைத்ததாக வந்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்ய இடங்களில் இவர்கள் இருந்துள்ளனர். இதனால் சந்தேகம் அதிகரிக்கவே அவர்கள் யார் என்பது குறித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கொல்லம் அருகே உள்ள பத்தாப்புறத்தை சேர்ந்தவர் கொச்சு தெரசா(வயது62) மற்றும் அவரது மகன் சாஜன்(33) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள், வெடிகுண்டு இருப்பதாக மொட்டை கடிதம் போட்டது நாங்கள் தான் என ஒப்புக்கொண்டனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில், கொச்சு தெரசா அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது இவருக்கு வரும் பென்ஷனை வைத்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே தான் அவர்களுக்கு வெடிகுண்டு இருப்பதாக மொட்டை கடிதம் போடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்படி செய்வதன் மூலம் போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில் மோப்பநாய்கள் மூலம் சோதனை போடுவார்கள். அப்படி நடக்கும் போது, அந்த இடத்திற்கு சென்று, அதனை பார்ப்போம். அப்போது எங்களுக்குள் ஒருவித ஆனந்தம் ஏற்படும். இதனால் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 50க்கும் மேற்பட்ட மொட்டை கடிதங்கள் எழுதி வைக்கப்பட்டு இருந்தது.
போலீசார் 7 செல்போன்கள் மற்றும் 2 பெண் டிரைவர்கள், மொட்டை கடிதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை.
- 5 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
நீடாமங்கலம்:
தஞ்சை மாவட்டம் திருபுவனம் தெற்கு வீதியை சேர்ந்த குரு (வயது 23), பிரித்திவி ராஜ் (20), கும்பகோணத்தை சேர்ந்த சரண்ராஜ் (21), தர்மராஜ் (30), சந்தோஷ் (26) ஆகிய 5 பேர் மீதும் மணஞ்சேரியில் வெடிக்குண்டு வீசிய வழக்கு உள்ளன.
இந்நிலையில் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி குரு, பிரித்திவிராஜ் உள்பட 5 பேரையும் போலீசார் குணடர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- அத்வானியை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் ஆலம்பட்டி தரைப்பாலத்தில் பைப் வெடிகுண்டு வைத்திருந்தனர்.
- தேடப்படும் குற்றவாளி அபுபக்கர் சித்திக் என்று அச்சிடப்பட்டு அவரது படத்துடன் நோட்டீஸ் ஓட்டினர்.
வேதாரண்யம்:
பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்தில் ரத யாத்திரை மேற்கொண்டார். பல்வேறு மாவட்டங்களில் பயணம் செய்தார்.
அப்போது ரத யாத்திரை மதுரை மாவட்டம் திருமங்கலம் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்வதாக இருந்தது. அந்த நேரத்தில் அத்வானியை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் ஆலம்பட்டி தரைப்பாலத்தில் பைப் வெடிகுண்டு வைத்திருந்தனர். உடனடியாக அதனை போலீசார் கண்டுபிடித்து செயல் இழக்க வைத்து அகற்றினர். இதனால் அத்வானி மயிரிழையில் உயிர் தப்பினார்.
வெடிகுண்டு வைத்த வழக்கில் மதுரை நெல்பேட்டையை சேர்ந்த இஸ்மத், அப்துல்லா, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறையை சேர்ந்த அபுபக்கர்சித்திக் (வயது 57) உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் அபுபக்கர் சித்திக் தவிர மற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஏற்கனவே ஒருவர் இறந்து விட்டார்.
இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக அபுபக்கர் சித்திக் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அவரை பிடித்து உடனடியாக ஆஜர்படுத்த வேண்டும் என்று திருவள்ளூர் பூவிருந்தவல்லி சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து இன்று சென்னை, மதுரை சிறப்பு குற்ற புலனாய்வுத்துறை போலீசார் தோப்புத்துறையில் உள்ள அபுபக்கர் சித்திக் வீட்டிற்கு வந்தனர்.
அங்கு அவரது வீட்டில் தேடப்படும் குற்றவாளி அபுபக்கர் சித்திக் என்று அச்சிடப்பட்டு அவரது படத்துடன் நோட்டீஸ் ஓட்டினர். தொடர்ந்து அவரை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
- வத்திராயிருப்பு அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கியது யார்?
- தோட்ட உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை மாவட்டம் பேரையூர், தேனி மாவட்டம் மேகமலை ஆகிய வனப்பகுதிகள் இணைக்கப் ட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்- மேக மலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் வனப் பகுதிக்குள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளை வனத் துறையினர் விதித்தனர். மேலும் வனப்பகுதியில் யாரும் நுழைக்கிறார்களா? என்பதை கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் வத்திரா யிருப்பு மலையடிவார பகுதிகளில் கடந்த ஆண்டு நாட்டு வெடிகுண்டு வைத்து பன்றிகளை வேட்டையாடிய நபரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் கான்சாபுரம் அருகே ஓடை யில் 9 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து அத்திக்கோவில் பகுதியில் உள்ள தனியார் தென்னந் தோப்பில் 5 நாட்டு வெடி குண்டுகளை பதுக்கி வைத் திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். வன விலங்குகளை வேட்டை யாடுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் அடுத் தடுத்து சிக்கிய சம்பவம் வத்திராயிருப்பு பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.
இந்தநிலையில் அத்தி கோவில் பகுதியில் வன விலங்குகளை வேட்டை யாடுவதற்காக சிலர் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த பகுதிகளில் இருந்த தோட்டங்களில் சோதனை செய்தனர்.
அப்போது கான்சா புரத்தை சேர்ந்த சோலை யப்பன் என்பவருக்கு சொந்தமான தென்னந் தோப்பில் பதுக்கி வைத்தி ருந்த 4 நாட்டு வெடிகுண்டு களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். வன விலங்குகளை வேட்டையாடு வதற்காக அதனை அங்கு யாரோ மர்மநபர்கள் பதுக்கி வைத்திருந்தது விசாரணை யில் தெரியவந்தது.
ஆனால் பதுக்கிவைத்தது யார்? என்பது தெரிய வில்லை. அவர்கள் யார்? என்று விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. மேலும் வனவிலங்குகள் வேட்டை கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்று தோட்ட உரிமையாளர் சோலை யப்பனிடம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- தீனதயாளன் கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.
- நாட்டு வெடிகுண்டு வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போரூர்:
விருகம்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது21). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. நேற்று நள்ளிரவு அவர், வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரை தெருவில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீரென தீனதயாளன் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக தீனதயாளன் மீது நாட்டு வெடிகுண்டு விழவில்லை. அவரது அருகே சிறிது தூரத்தில் விழுந்து நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தீனதயாளன் கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். எனினும் மர்ம கும்பல் அவரை பட்டாக் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்றனர்.
இதற்கிடையே நாட்டுவெடிகுண்டு வெடித்த சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தீனதயாளனை மர்ம கும்பல் அரிவாளுடன் விரட்டி செல்வதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
சிறிது நேரத்தில் கொலைவெறி கும்பலிடம் இருந்து தப்பிய தீனதயாளன் வீட்டுக்கு திரும்பி வந்தார்.அவர்தான் அணிந்திருந்த சட்டையை மாற்றிக் கொண்டு "அனைவரும் இங்கிருந்து கிளம்பி சென்று விடுங்கள் ஆபத்து உள்ளது" என்று அவரது தாயிடம் கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
நாட்டுவெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பற்றி அறிந்ததும் விருகம்பாக்கம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தீனதயாளன் எங்கு சென்றார் என்று தெரிய வில்லை. அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
நேற்று நண்பர் ஒருவரது பிறந்தநாள் விழாவில் தீனதயாளன் கலந்து கொண்டார். அப்போது அவர் மதுபோதையில் அங்கிருந்த ஒருவரையும் அவரது கூட்டாளிகளையும் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்த தகராறில் அந்த கும்பல் தீனதயாளனை தீர்த்துக்கட்ட நாட்டு வெடி குண்டை வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
- போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
கொல்கத்தா:
கத்தார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை 3.29 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 541 பயணிகள் இருந்தனர்.
அப்போது ஒரு பயணி திடீரென எழுந்து விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்,
இது பற்றி உடனடியாக மத்திய தொழில்பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். ஆனால் இந்த சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதை அறிந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதையடுத்து போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பக்கத்தில் இருந்த ஒருவர் தன்னிடம் இதுபற்றி கூறியதாக தெரிவித்தார்.
உடனே போலீசார் அவரது தந்தையை விமானநிலையத்துக்கு வரவழைத்து விசாரித்த போது அந்த பயணிக்கு சற்று மனநலம் பாதிக்கப்ட்டு இருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தந்தை தெரிவித்தார்.
அந்த பயணி செய்த களேபாரத்தால் லண்டன் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.






