என் மலர்
நீங்கள் தேடியது "church"
- முழுமையாக இடிந்துவிழும் முன்பு கிறிஸ்தவ தேவாலாய சீரமைப்பை தொடங்க வேண்டும்.
- பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத் துள்ள தனுஷ்கோடி இலங் கைக்கு மிகவும் குறுகிய தொலைவில் உள்ளது. 1910-ம் ஆண்டு காலகட்டத் தில் மீன்பிடி தொழில் அதிக ளவில் இருந்து வந்தது. இதன் காரணமாக இந்திய இலங்கை பகுதியில் வணிக கப்பல்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்த ஆங்கிலேயர் கள் திட்டமிட்டனர்.
இதனைத்தொடர்ந்து, 1914 ஆம் ஆண்டு பாம்பன் கால்வாய் பகுதியில் ரெயில் பாலம் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் அமைக் கப்பட்டது. இதன் பின்னர் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தும் தொடங்கி யது. இதன் காரணமாக தனுஷ்கோடி மிகப்பெரிய அளவிலான துறைமுக நக ரமாக மாறியது.
50 ஆண்டுகள் இந்திய-இலங்கை பயணிகள் கப்பல் கள் போக்குவரத்தில் அதிக ளவில் வியாபாரம் நடை பெற்று வந்தது. 1910-ம் ஆண்டு காலகட்டத்தில் தனுஷ் கடியில் கிறிஸ்தவ தேவாலாயம் கட்டப்பட்டது. 1964 ஆண்டு ஏற்பட்ட புயலின் தாக்கம் காரணமாக தனுஷ்கோடி துறைமுக நகரம் சேதமடைந்தது.இதில், தேவாலாயம், ரெயில் நிலை யம் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டிடங்களும் தரை மட்டமானது.
தனுஷ்கோடியை சீர மைக்க முயன்ற நிலையில் கடல் சீற்றம் காரணமாக சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தனுஷ்கோடி யின் இயற்கை அழகை காண சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ராமேசு வரம் வருகை தருகிறார்கள். அவர்கள் அனைவரும் முகுந்தராயர் சந்திரம் வரை சென்று அங்கிருந்த கடற் கரை வாகனங்களில் சென்று கடற்கரையின் பரந்து விரிந்த அழகை பார்த்து ரசித்தனர்.
இதனைத்தொடர்ந்து, மீண்டும் 50 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு சாலை அமைக்கப்பட்டது. ராமேசுவரம் வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் தடையின்றி தனுஷ்கோடி வரை சென்று வந்தனர். இதன் காரணமாக ஆண்டுக்கு 2 கோடி பேர் வந்து செல்லும் சுற்றுலா இடமாக தனுஷ்கோடி மாறி யது.
தனுஷ்கோடியை பழமை மாறமல் ரூ.5 கோடி மதிப் பீட்டில் தேவாலாயம் புதுப் பிபித்தல், சுற்றுலா பயணிக ளுக்கு தேவையான அடிப் படை கட்டமைப்பு களை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தனுஷ்கோடி பகுதியை சீரமைக்க மத்திய, மாநில அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு பணி களை மேற்கொண்டு வரு கின்றனர்.
தேவாலாயம் தொடர்ந்து 80 சதவீதம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. தொடர்ந்து சூறைக்காற்று வீசுவதால் முழுமையாக சேதமடைவதற்குள் பழமை மாறாமல் புதுபிக்க பணி களை விரைந்து தொடங்கிட வேண்டும் என பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நாட்டின் முக்கியமான ஆசிரமங்களில் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமும் ஒன்று.
- ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்:
நாட்டின் முக்கியமான ஆசிரமங்களில் புதுச்சேரியில் உள்ள ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமும் ஒன்று. கடந்த 1926-ம் ஆண்டில் இந்த ஆசிரமம் நிறுவப்பட்டது. இதை நிறுவிய ஸ்ரீஅரவிந்தர், அவரது தலைமை சிஷ்யையாக விளங்கிய ஸ்ரீஅன்னை ஆகியோரது சமாதிகள் இங்கு உள்ளன. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் எராளமான பக்தர்கள் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்து செல்கிறார்கள். யோகா, மன அமைதியை விரும்புவோரை ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம் கவர்ந்து வருகிறது.
ஆரோவில்:
புதுச்சேரியில் உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் புகழ் பெற்றது. உலகம் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் 124 நாடுகளில் இருந்து மண் எடுத்து வந்து அதை ஒன்றாக்கி வைத்து உள்ளனர். ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாட்டினர் ஆவார்கள்.
பொட்டானிக்கல் கார்டன்:
புதுச்சேரி புது பஸ் நிலையம் அருகில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் 1826&ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். பிரெஞ்சு ஸ்டைலில் அமைக்கப்பட்டு உள்ள இந்த பொட்டானிக்கல் கார்டன் தென்னிந்தியாவின் மிகச்சிறந்த பொட்டானிக்கல் கார்டன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 1500-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்கு உள்ளன. இங்கு வார இறுதி நாட்களில் காட்சிப்படுத்தப்படும் இசைக்கு ஏற்றாற்போல ஆடும் இசை நீரூற்று குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது.
அரிக்கமேடு:
பழங்காலத்தில் ரோமானியர்களின் வர்த்தக மையமாக திகழ்ந்த இடம் அரிக்க மேடு ஆகும். புதுச்சேரியில் இருந்து 4 கி.மீ தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளது. ரோமானியர்கள், சோழர்கள், பிரெஞ்சுக்காரர்கள் தொடர்பான குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன. வரலாற்று விரும்பிகளுக்கு பிடித்த இடம்.
இவை தவிர 300 ஆண்டு பழமையான மணக்குள விநாயகர் கோவில், கி.பி. 600-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள் கோவில், பிரெஞ்சு மிஷனால் கட்டப்பட்ட சேக்ரட் ஹார்ட் ஆப் ஜீசஸ், தேவாலயம், பழமையான ஜமாய் மசூதி போன்ற ஆன்மீக தலங்களும், சில்ட்ரன்ஸ் பார்க், பிரெஞ்சுப் போர் நினைவுச் சின்னம், காந்தி மியூசியம், பிரெஞ்ச்- இந்திய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் ராஜ் நிவாஸ் அரசுக் கட்டிடம், புதுச்சேரி மியூசியம், பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் உள்ளிட்ட பல இடங்கள் புதுச்சேரியில் பார்க்கத் தகுந்தவை.
- திருச்சபைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், ரெவரண்ட் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.
- 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:
மணிப்பூர் மாநிலத்தில் இருதரப்பின் இடையே ஏற்பட்ட கலவரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள், வீடுகள் பள்ளிகள், அடித்து நொறுக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டதை கண்டித்து மீஞ்சூர் பஜார் வீதியில் மீஞ்சூர் வட்டார அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், ரெவரண்ட் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் விடுதலை இயக்க பொதுச்செயலாளர் வினோத் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் மீஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் ரோமன் கத்தோலிக், இ.சி.ஐ, சி.எஸ்.ஐ, சர்ச் ஆஃப் காட், ஏஜி, ஏசிஏ, சர்ச் ஆப் கிரைஸ்ட், பெந்தகொஸ்தே திருச்சபை உட்பட 50 திருச்சபைகள் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் உட்பட மீஞ்சூர் பேரூர் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் திமுக நகரச் செயலாளர் தமிழ்உதயன், துணைத் தலைவர் அலெக்சாண்டர்,அருட்தந்தை அருளப்பா, போதகர்கள் பால் உதயசூரியன் ஜான் ரமேஷ், நெகமியாஜெபராஜ், ஜான் வில்லியம்ஸ், ஜான் ராய், யாபேஸ், ராபர்ட், மாற்கு, ராஜேஷ், ஆகியோர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- இது தனிப்பாறைகளால் அமைக்கப்பட்ட 11 தேவாலயங்களில் ஒன்றாகும்.
- கிரேக்க சிலுவை சின்னத்தின் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
எத்தியோப்பியாவின் அம்காரா நகரில் லலிபெலா என்ற இடத்தில் அமைந்துள்ளது, இந்த புனித ஜார்ஜ் தேவாலயம். இது தனிப்பாறைகளால் அமைக்கப்பட்ட 11 தேவாலயங்களில் ஒன்றாகும்.
இந்த ஆலயம் ஒருவித ஒன்றை சுண்ணாம்புக்கல் பாறையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ளது. 12 அல்லது 13-ம் நூற்றாண்டில், கெம்ரே மெஜ்கல் லலிபெலா அரசின் கீழ் இந்த தேவாலயம் அமைக்கப்பட்டிருக்கிறது.
யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேவாலயம், கிரேக்க சிலுவை சின்னத்தின் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேற்பகுதியில் சிலுவை சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதையும் நாம் பார்க்க முடியும்.
- அர்ச்சிப்பு விழாவை தொடர்ந்து பங்கு குடும்ப விழா தொடங்குகிறது.
- 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தினமும் திருப்பலி, ஜெபமாலை நடக்கிறது.
குளச்சல் அருகே உள்ள கோடிமுனையில் புனித பர்த்தலோமையார் புதிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலய அர்ச்சிப்பு விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை மறுநாள் காலை 6.15 மணிக்கு தற்காலிக ஆலயத்தில் வைத்து திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து 10 மணிக்கு பால் காய்ச்சுதல், மாலை 5 மணிக்கு கொடிமரம் மற்றும் புதிய ஆலயம் அர்ச்சிப்பு நடக்கிறது. இதில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார்.
இரவு 8 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. அர்ச்சிப்பு விழாவை தொடர்ந்து பங்கு குடும்ப விழா தொடங்குகிறது. விழாவையொட்டி 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 9-ந் தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது.
15-ந் தேதி காலை 6.15 மணிக்கு திருப்பலி, திருமுழுக்கு வழங்குதல், 10 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர், இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை மற்றும் மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா ஆகியவை நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 16-ந் தேதி காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இதில் தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு பேரவையினர் மற்றும் பங்குத்தந்தையர்கள் செய்து வருகிறார்கள்.
- சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல நிர்வாகத்தின்கீழ் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
- பாதிரியாரையும், அவரது ஆதரவாளர்களையும் தாக்குவது என்பது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல நிர்வாகத்தின்கீழ் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தத் திருச்சபையின் பிஷப்பாக பர்னபாஸ் இருக்கிறார்.
திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபையின் கல்வி நிலவரக் குழு செயலாளர் மற்றும் திருச்சபை கட்டுப் பாட்டின்கீழ் வரும் பாளையங்கோட்டை செயின்ட் ஜோசப் பள்ளியின் தாளாளர் பதவிகளை தி.மு.க.வைச் சேர்ந்த திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் எஸ். ஞானதிரவியம் வகித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல பிஷப்பின் ஆதரவாளர்களை தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக தாக்குவதும், இந்தத் தாக்குதலில் பிஷப் காட்பிரே நோபிள் மோசமாக தாக்கப்பட்டதும், உதைக்கப்பட்டதும் வீடியோ காட்சிகளாக சமூக வலை தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பாராளுமன்ற உறுப்பினரே தனது ஆதரவாளர்கள் மூலம் ஒரு பாதிரியாரையும், அவரது ஆதரவாளர்களையும் தாக்குவது என்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே அவர்களை கைது செய்யவும் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, தண்டனையைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கி.பி.1485-ல் பனை ஓலை வேய்ந்த சிறு ஆலயத்தை உருவாக்கி வழிபாடு நடத்தினர்.
- இன்றுள்ள ஆலயம் 1972-ம் ஆண்டு அருட்பணியாளர் ஜோசப்ராஜ் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் பழம்பெருமை வாய்ந்த புனித ஆரோபண அன்னை ஆலயம் அமைந்துள்ள இடம் தான் மாத்திரவிளை என்று அழைக்கப்படும் அன்றைய பட்டங்காடு. மாதாவின் அன்பையும், அரவணைப்பையும் உணர்ந்த மக்கள் இவ்விடத்தை மாதா யாத்திரை செய்யும் விளை என்று அழைப்பார்கள். அது மருவியே நாளடைவில் மாத்திரவிளை என பெயர் பெற்றது.
புனித தோமாவின் வருகை
புனித தோமா இயேசுவின் சீடர்களில் ஒருவர். இவர் இயேசுவின் உயிர்ப்புக்கு பின் இந்தியாவுக்கு வந்து இறை போதனைகளிலும், சிற்பக்கலைகளிலும் ஈடுபட்டு வந்தார்.
இவரது வருகைக்கு பிறகு தான், இவரது போதனையால் நம்பிக்கை பெற்ற மக்கள் சிலர் சிலுவையை மையமாக வைத்து வழிபட தொடங்கினார்கள். கி.பி.1435-க்கு முன் இந்த தோமையார் வழி கிறிஸ்தவர்கள் திறந்த வெளி ஜெபக்கூடம் அமைத்து சுற்றிலும் தீப்பந்தங்கள், விளக்கு தூண்கள் அமைத்து வழி பட்டனர்.
ஆலயம்
கி.பி.1485-ல் பனை ஓலை வேய்ந்த சிறு ஆலயத்தை உருவாக்கி வழிபாடு நடத்தினர். கி.பி.16-ம் நூற்றாண்டில் புனித பிரான்சிஸ் சவேரியார் குமரிக்கு வந்தார். சவேரியார் ஊர்-ஊராக சென்று கிறிஸ்தவத்தை போதித்தார். இதனால் உற்சாகமடைந்த மாத்திரவிளை வட்டாரப்பகுதி மக்களும் வழிபாட்டில் முன்னேற்றம் அடைகின்றனர். கி.பி.1555-ல் தென்னை ஓலையால் கூரை வேயப்பட்ட கற்சுவர் ஆலயமாக உருவாக்கி வழிபாடு நடத்தினார்கள்.
16-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசு சேரநாட்டில் தங்களது அரசை நிலைநாட்டுகிறது. இந்த கால கட்டத்தில் தான் தென்னை ஓலையால் வேயப்பட்ட ஆலயம் தீக்கிரையாக்கப்படுகிறது. இந்த தீ விபத்தில் உள் பீடத்தில் வைக்கப்பட்டு இருந்த மாதா சொரூபம் எங்கும் காணப்படவில்லை. அந்த சமயம் எங்கும் கொள்ளை நோய் பரவியது. ஒரு நாள் காலை வேளையில் காணாமல் போன மாதா சொரூபம் ஆலய சுவர்களின் உள்ளே நடுப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்ததை கண்டு மக்கள் திகைப்புற்றனர். அன்றைய நாளில் இருந்து கொள்ளை நோயின் வேகம் குறைய தொடங்கியது. எனவே மீண்டும் ஆலயப்பணி தொடங்கப்பட்டு கி.பி. 1615-ல் ஓட்டுக்கூரையிலான சுண்ணாம்பு சாந்து பூசப்பட்ட கற்சுவர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.
வேத சாட்சி
திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் சிறை அதிகாரியாக இருந்த நட்டாலம் நீலகண்டர், டச்சுப்படை தளபதி டிலனாயின் அறிவுரையால் தேவசகாயம் என்று பெயரில் கிறிஸ்தவரானார். அவர் மதம் மாற காரணமாக இருந்ததாக மாத்திரவிளை,மாங்கோடு பகுதியை சேர்ந்த மரிய அருளப்பன், முத்தப்பன், ஞானப்பிரகாசம், மரிய செபஸ்தியான், சாமியப்பன், ராயன் என்பவர்கள் மரத்தில் தூக்கிலிடப்பட்டனர். இந்த மண்ணின் மைந்தர்கள் அன்றே வேத சாட்சியாக உயிர் தியாகம் செய்து மாத்திரவிளை மண்ணுக்கு புகழ் சேர்த்திருக்கிறார்கள்.
அவர்களின் நினைவாக டிலனாய் தான் வழிபட்டு கொண்டிருந்த மாதா சொரூபத்தை மக்களிடம் வழங்கினார். அந்த சொரூபத்தை தேரில் வைத்து மக்கள் வழிபட்டனர். 1752-ல் சிறிய கோபுரத்துடன் ஆலயத்தை மக்கள் உருவாக்கினார்கள். 1780-ம் ஆண்டிற்கு பின் இவ்வாலயம் ஒரு பணித்தளமாக உயர்ந்து காரங்காடு பங்கின்கீழ் செயல்பட தொடங்கியது. 1825-ம் ஆண்டு அழகிய கோபுரத்துடன் இணைந்த பெரிய ஆலயமானது.
தனி பங்கு
1886-ல் ஒரு பங்கு தளமாக உயர்ந்து, முளகுமூட்டின் கிளை பங்காக செயல்பட தொடங்கியது. பரலோக அன்னை என்ற பெயருடன் விளங்கிய இவ்வாலயத்தை 1906-ல் கொல்லம் மறை மாவட்ட ஆயர் பென்சிகர் தனி பங்காக உயர்த்தினார். முதல் பங்குத்தந்தை வின்சென்ட் பெர்னாண்டஸ். ஆலயத்தில் உள்ள புனித ஆரோபண அன்னை சொரூபம் பன்னிரு விண்மீன் முடிசூட ரோமிலிருந்து கொண்டு வரப்பட்டது. இன்றுள்ள ஆலயம் 1972-ம் ஆண்டு அருட்பணியாளர் பெனடிக்ட் அலெக்சாண்டர் காலத்தில் ஆயர் ஆரோக்கியசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு, அருட்பணியாளர் ஜோசப்ராஜ் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. 1984 டிசம்பர் 30-ந்தேதி ஆயர் ஆரோக்கியசாமி அர்ச்சித்தார்.
புனித ஆரோபண அன்னையின் விழா திருக்கொடியேற்ற நிகழ்ச்சியானது ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி நடைபெறும். 15-ந்தேதி வரை 10 நாட்கள் விழா நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டும் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது. அதன் இறுதியில் நற்கருணை ஆராதனையும் நடக்கிறது. இந்த விழாவில் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்ட மக்களும் பங்கேற்பார்கள். இந்த பங்கின் கீழ் 37 அன்பியங்கள், 1,500 குடும்பங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- நிர்வாண போராட்டம் நடத்திய வாலிபரை மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
- சம்பவத்தால் பிற்பகல் வாடிகன் தேவாலயம் சிறிது நேரம் மூடப்பட்டது.
வாடிகன்:
இத்தாலி வாடிகன் நகரில் உலக பிரசித்தி பெற்ற புனித பீட்டர் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகை தருவார்கள்.
இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் தேவாலயத்துக்கு வந்தார். திடீரென அவர் உக்ரைனில் நடந்து வரும் போரை எதிர்ப்பதாக கூறி தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றார். இதைபார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.
மேலும் அந்த வாலிபர் தனது உடலில் கைவிரல் நகத்தால் கீறி ஆவேசத்துடன் சத்தம் போட்டார். தனது முதுகு பகுதியில் உக்ரைனில் உள்ள குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என பெயிண்டால் எழுதி இருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி அறிந்ததும் இத்தாலி போலீசார் அங்கு விரைந்து வந்து நிர்வாண போராட்டம் நடத்திய வாலிபரை மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர் யார்? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் பிற்பகல் வாடிகன் தேவாலயம் சிறிது நேரம் மூடப்பட்டது. வாலிபரின் நிர்வாண போராட்டத்தை சுற்றுலா பயணிகள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூகவலை தளங்களில் வெளியிட்டு உள்ளனர்.
- நாளை பேராலயத்தில் வைத்து உறுதிபூசுதல் வழங்கும் அருள் அடையாள நிகழ்ச்சி நடக்கிறது.
- 4-ந்தேதி ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.
குழித்துறை அருகே உள்ள திருத்துவபுரத்தில் மூவொரு இறைவன் பேராலயம் குழித்துறை மறைமாவட்ட தலைமை பேராலயமாக உள்ளது. இந்த பேராலயத்தின் திருவிழா நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு இந்த பேராலயத்தில் வைத்து உறுதிபூசுதல் வழங்கும் அருள் அடையாள நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் குழித்துறை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்து கொண்டு உறுதிபூசுதல் வழங்குகிறார். நிகழ்ச்சியில் பங்குதந்தை பீட்டர் முன்னிலை வகிக்கிறார்.
நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு முளகுமூடு மறை வட்டாரத்தில் இருந்து பவனியாக கொண்டுவரப்படும் கொடி பேராலயம் வந்தடைகிறது. தொடர்ந்து முன்னாள் பங்குதந்தை யேசுதாசன் தாமஸ் கொடியை அர்ச்சித்து ஏற்றி வைக்கிறார். 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவடட குருகுல முதல்வர் ஹிலேரியுஸ் தலைமையில் நற்கருணை ஆசீர் நடக்கிறது. இதில் முளகுமூடு மற்றும் காரங்காடு மறை வட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மரிய ராஜேந்திரன் மறையுரையாற்றுகிறார்.
திருவிழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, பொதுக்கூட்டம் ஆகியவை நடக்கிறது.
விழாவில் 29-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மறை மாவட்ட தொடர்பாளர் பேரருட்தந்தை இயேசுரத்தினம் தலைமையில் திருப்பலி நிறைவேற்றுகிறார். மறை மாவட்ட செயலாளர் பேரருட்தந்தை ரசல்ராஜ் மறையுரையாற்றுகிறார். மறைமாவட்ட நிதிக்காப்பாளர் அருட்தந்தை அகஸ்டின், பணி குழுக்களின் இயக்குனர் அருட்தந்தை ஜெலஸ்டின் ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர்.
விழாவில் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி காலை 9 மணிக்கு பேராலய பங்குதந்தை பீட்டர் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6 மணிக்கு மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.
விழாவின் நிறைவு நாளான 4-ந்தேதி காலை 9 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். 11 மணிக்கு அன்பு விருந்து, மாலை 6.30 மணிக்கு கொடிஇறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டம், பரிசு வழங்குதல் ஆகியவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்துவபுரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் பேரருட்பணியாளர் புஷ்பராஜ், பேராலய பங்குதந்தை, அருட்சகோதரிகள், அருட்பணி பேரவை, பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
- எழில்மிகு தோற்றத்தில் இந்த கத்தோலிக்க ஆலயம் அமைந்துள்ளது.
- குமரி மாவட்டத்தில் உள்ளது சிறப்பு மிக்க இந்த திருத்தலம்.
குமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு மிக்க திருத்தலங்களில் சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலம் நாகர்கோவில்-கன்னியாகுமரி சாலையில் சுசீந்திரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வழுக்கம்பாறை சந்திப்பில் இருந்து அஞ்சுகிராமம் சாலையில் ½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
நீர்வளமும், நிலவளமும், இயற்கை எழிலும் நிறைந்த சகாயபுரத்தின் மையமாக இடைவிடா சகாய அன்னையின் பெருமையை பறைசாற்றும் வகையில் எழில்மிகு தோற்றத்தில் இந்த கத்தோலிக்க ஆலயம் அமைந்துள்ளது.
சகாயபுரம் பகுதியில் வாழும் மக்கள் பெரும்பாலும் ஏழைகளாவும், விவசாய தினக்கூலிகளாகவும் உள்ளனர். இந்த பகுதியை சேர்ந்த பலர் பாறையை பிளந்து கல் உடைத்து எடுப்பது, சிற்பங்கள் செதுக்க கீற்றுக்கல் எடுத்து கொடுப்பது, கல் தூண்கள் செதுக்கி கொடுப்பது, ஆட்டுக்கல், அம்மி கொத்தி கொடுப்பது, சிற்பங்களை செதுக்குவது போன்ற பணிகளை செய்து வருகிறார்கள்.
பிரச்சினைகளில் இருந்து விடுதலை
இங்குள்ள சகாய அன்னையின் திருஉருவ படம் உயிர்துடிப்பும், அருள் ஆற்றலும், கனிந்த பார்வையும், நெஞ்சத்தை ஈர்க்கும் தன்மையும் உடையது. இதை உற்று நோக்குவோர், உள்ளம் உருகி அன்னைக்கு அடிமையாகி ஆழ்ந்து போகிறார்கள். அவரது அருளை பல்வேறு வடிவங்களில் பெற்று செல்கிறார்கள்.
குறிப்பாக இறைவன்மீது பற்றுதல், இயேசுவை பின்பற்றும் ஆர்வம், தீய பழக்கங்களில் இருந்து விடுதலை, திருமணம், மகப்பேறு வரம், பல்வேறு பிரச்சினைகளில் இருந்தும், நோய்களில் இருந்தும் விடுதலை போன்றவற்றை பெறுகிறார்கள்.
மெய்மறந்து மன்றாடுகிறார்கள்
ஆலயத்தின் உள்அமைப்பும், ஆலய வளாகத்தில் காக்கப்படும் அமைதி சூழலும் பக்தர்கள் கடவுளையும் அன்னையையும் நெருக்கமாக சந்திக்கவும், ஆறுதல் அடையவும் தூண்டுகிறது. இதனால் பலர் தனிமையாகவும், குடும்பத்தோடும் எல்லா நாட்களும் இந்த ஆலயத்திற்கு வந்து ஆலயத்தில் அமர்ந்து மெய்மறந்து மன்றாடி செல்கிறார்கள். இங்கு புதுமைகள் நடக்கின்றன என்றோ, பலர் அருங்காட்சிகள் காண்கிறார்கள் என்றோ பொறுப்பானவர்கள் பேசுவதோ, அறிவிப்பதோ இல்லை. சகாய அன்னை வழியாக இறைவனிடம் உருக்கமாக, நம்பிக்கையுடன் மன்றாடி வாழ்வின் பல்வேறு நலன்களை பெற்றவர்களே தங்களது அனுபவங்களை தங்கள் நண்பர்களுக்கு எடுத்துக்கூறுகிறார்கள்.
இதனால் தொடக்க காலத்தில் இருந்தே பெருமளவில் மக்கள் இந்த ஆலயத்திற்கு வந்து நவநாட்களில் பங்கு பெற்றுள்ளனர்.
வாகனங்கள் அர்ச்சிப்பு
இங்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகுவதையும், விண்ணப்பங்கள், நன்றியறிதல்கள் மிகுந்து வருவதையும் புதன்கிழமை நவநாளில் வருவோர் கண்டுகொள்கிறார்கள்.
புதிதாக வாங்கப்பெற்ற மற்றும் தகுதிச்சான்றிதழ் பெற்ற பலவகைப்பட்ட வாகனங்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்துகூட அர்ச்சிக்கப்படுவதற்காக ஒவ்வொரு நாளும் இங்கு கொண்டு வரப்படுகின்றன. சகாய அன்னை ஊர்திகளுக்கும், அவற்றில் பயணம் செய்வோருக்கும், உழைப்போருக்கும் பாதுகாப்பு நல்குகிறார் என்ற நம்பிக்கை மக்கள் இடையே உள்ளது. இதுவும் இந்த திருத்தலத்தின் தனி சிறப்பாகும்.
ஒப்புரவு ஆலயம்
இந்த திருத்தலத்திற்கு வரும் மக்கள் உடலிலும், மனத்திலும், ஆன்மாவிலும் பாரங்களை சுமந்து வந்து திருத்தலத்தில் இறக்கி வைத்துவிட்டு அமைதியான மனதோடு திரும்ப செல்கிறார்கள். இதற்கு உதவும் வகையில் அண்மையில் ஒப்புரவு ஆலயம் ஒன்று ஆலயத்தின் வெளியே முன்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்க இருதனி அறைகள் உள்ளன.
இங்கு நிதானமாக அமர்ந்து தகுந்த தயாரிப்புடனும் மனத்துயருடனும் வழக்கமான தனிப்பாவ மன்னிப்பு பெறவும், உரையாடல் வழி ஒப்புரவு அருளடையாளத்தில் பங்குபெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிரச்சினைகளை உளவியல் அறிஞருடன் அமர்ந்து கலந்துரையாடி வழிகாட்டுதல், மனத்திடன் பெறும் ஆற்றுப்படுத்தலுக்கு வாய்ப்பு உள்ளது.
தற்போது புதன்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை அருட்பணியாளர்கள், உளவியல் அறிஞர்கள் இந்த பணிகளை செய்து வருகிறார்கள். இந்த திருத்தலத்துக்கு வருவோர் மனிதரை மனிதர் அன்பு செய்ய தூண்டும், மனித நேயப்பண்புகளை வளர்த்தெடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த திருத்தலம் கோட்டார் மறைமாவட்டத்தின் அங்கமாக இருப்பதுடன், ஒரு தனி பங்காகவும் செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் பங்குதந்தையாக அருட்பணியாளர் ஜோசப்ரொமால்ட் செயல்பட்டு வருகிறார்.