என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேராயர்"

    • ஒரே பாலின தம்பதிகளை ஆசீர்வதித்தது போன்ற சம்பவங்களால் செய்திகளில் இடம்பிடித்தார்.
    • எட்டரை கோடிக்கும் அதிகமான ஆங்ளிகன் விசுவாசிகள் மத்தியில் இவரது நியமனம் சில சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    இங்கிலாந்து திருச்சபையின் 1400 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் பெரியாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    63 வயதான சாராம் முல்லாலி இங்கிலாந்தில் உள்ள கேன்டர்பரி தேவாலயத்தில் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். சாராம் முல்லாலி ஆங்ளிகன் சபையின் 106-வது ஆவார்.

     இவர் 2018 ஆம் ஆண்டு முதல் லண்டன் ஆயராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பரில்  பேராயர் ஜஸ்டின் வெல்பி ராஜினாமா செய்த காலியிடத்தில் சாராம் முல்லாலி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான தேர்வு ஜனவரியில் நடைபெற்றது.

    11 ஆண்டுகளுக்கு முன்பு சபையால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தமே பெண்ணான முல்லாலி, பேராயர் பதவிக்கு வர வழிவகுத்தது.

     இவர் பேராயராக இருந்தபோது, ஒரே பாலின தம்பதிகளை ஆசீர்வதித்தது போன்ற சம்பவங்களால் செய்திகளில் இடம்பிடித்தார். இதனால், சுமார் எட்டரை கோடிக்கும் அதிகமான ஆங்ளிகன் விசுவாசிகள் மத்தியில் இவரது நியமனம் சில சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    • பேராயர் ஜோசப் பாம்பிளானியின் இந்த கருத்துக்கு மார்க்சிஸ்டு கட்சியினரும், மூத்த நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    • ஜோசப் தேவையில்லாத கருத்துக்களை கூறிவருகிறார் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த பேராயர் மார் ஜோசப் பாம்பிளானி. இவர் மத்திய அரசு ரப்பருக்கு உரிய விலை கொடுத்தால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு தொகுதியில் வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.

    இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ஆளும்கட்சியினர் கொண்டாடும் தியாகிகள் தினத்தில், போலீசுக்கு பயந்து பாலத்தில் இருந்து விழுந்து இறந்தவரெல்லாம் தியாகிகள் ஆக கொண்டாடப்படுகிறார்கள், என்றார்.

    பேராயர் ஜோசப் பாம்பிளானியின் இந்த கருத்துக்கு மார்க்சிஸ்டு கட்சியினரும், மூத்த நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மூத்த நிர்வாகி ஜெயராஜன் கூறும்போது, பேராயர் ஜோசப் பாம்பிளானி எப்போதுமே தேவையில்லாத கருத்துக்களை கூறிவருகிறார். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றார்.

    ×