என் மலர்tooltip icon

    கேரளா

    • தாக்குதல் சம்பவம் குறித்து கண்ணூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • இந்த சம்பவத்திற்கு பின்னால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஆட்சியில் உள்ள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மந்திரி சபையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பவர் வீணா ஜார்ஜ். இவர் நேற்று கண்ணூரில் நடைபெற்ற பன்னாட்டு ஆயுர்வேத மருத்துவ ஆய்வு மாநாட்டை தொடங்கி வைத்து விட்டு திருவனந்தபுரம் செல்வதற்காக கண்ணூர் ரெயில் நிலையம் வந்தார்.

    அப்போது அங்கு திரண்ட காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர், வீணா ஜார்ஜிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்புக் கொடியுடன் வந்து கோஷமிட்ட அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். இருப்பினும் அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மந்திரி வீணா ஜார்ஜ் தாக்கப்பட்டார். இதில் காயம் அடைந்த அவர் கண்ணூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தாக்குதல் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் முதல்-மந்திரி பினராயி விஜயன், கண்ணூர் அரசு மருத்துவமனைக்கு வந்து வீணா ஜார்ஜிடம் நலம் விசாரித்தார். தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார். தாக்குதலுக்கு உள்ளான வீணா ஜார்ஜ், கழுத்தில் வலி இருப்பதாக கூறியதை தொடர்ந்து, பரியாரம் பகுதியில் உள்ள கண்ணூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தனர். இந்த சூழ்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து கண்ணூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.

    போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கேரள மாணவர் காங்கிரசின் கண்ணூர் மாவட்டத் தலைவர் எம்.சி. அதுல், பொருளாளர் அக்ஷய் மட்டுல் மற்றும் நிர்வாகிகள் முபாஸ், பிதுல் பாலன் மற்றும் முகமது யாசின் ஆகியோர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள், ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதற்கிடையில் பெண் மந்திரி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் அழைப்பு விடுத்தார். இதனால் மாநிலத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மகளிர் மற்றும் மாணவர் பிரிவுகள் இணைந்து கண்ணூர் நகரில் தனித்தனி போராட்ட பேரணிகளை நடத்தியது. இந்த பேரணியின் போது காங்கிரஸ் தேர்தல் பணிக்காக வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் அங்குள்ள காங்கிரஸ் அலுவலகம் மீது கல் வீசப்பட்டதில் மாநில நிர்வாகி பர்ஹான் முண்டேரி காயமடைந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் கண்ணூர் கோடியேரி பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

    • கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.
    • முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது.

    கேரள முதல்வர் பினராயி விஜயனை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நேர்காணல் செய்துள்ளார்.

    முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணலின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. முழுமையான நேர்காணல் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

    இந்த நேர்காணலின் டீசரில் மோகன்லால் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நீங்கள் பழைய நேர்காணல்களில் ரஜினிகாந்த் படங்கள் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளீர்கள் என்று கேட்க, அதற்கு ஆம் என்று கூறிய பினராயி விஜயன், ரஜினிகாந்தின் ஆக்சன் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

    • மோகன்லால் ஒரு முதலமைச்சரை நேர்காணல் செய்வது இது முதல் முறையல்ல.
    • கேரளாவில் தேர்தல் நெருங்கி வருகிறது.

    கேரள முதல்வர் பினராயி விஜயனை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நேர்காணல் செய்துள்ளார்.

    முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது.

    பினராயி விஜயனின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது அரசியல் பயணம் மற்றும் தற்போதைய அரசின் நிர்வாகம் குறித்து மோகன்லால் கேள்விகளை எழுப்பியதாகத் தெரிகிறது.

    இந்த நேர்காணலின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட்டது. முழுமையான நேர்காணல் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

    கேரளாவில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த நேர்காணல் நடைபெறுவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    இது அரசின் ஒரு விளம்பர முயற்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    மோகன்லால் ஒரு முதலமைச்சரை நேர்காணல் செய்வது இது முதல் முறையல்ல.

    இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அவர்களையும் அவர் இதேபோல் நேர்காணல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மலையாள மொழியில் 'கேரளம்' என்று அழைக்கப்படுவதை, அதிகாரப்பூர்வ பெயராக மாற்ற வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
    • 'கேரளம்' என்பதற்கு "தென்னை மரங்கள் நிறைந்த நிலம்" என்று அர்த்தம்.

    'கேரளா'வை 'கேரளம்' என்று பெயர் மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு பினராயி விஜயன் தலைமையிலான கேரள சட்டப்பேரவையில் இந்த பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதாவிற்கு இன்று நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    மலையாளத்தில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என்றுதான் உள்ளது. ஆனால், ஆங்கிலத்திலும் இந்திய அரசியலமைப்பிலும் 'கேரளா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அனைத்து மொழிகளிலும் 'கேரளம்' என்றே அழைக்க வேண்டும் என அம்மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து, அரசியலமைப்பின் பிரிவு 3 இன் கீழ் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதன்பின் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் பெயர் நடைமுறைக்கு வரும்.  

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்குவதற்கு முன்பு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரத்து 855 ஆக இருந்தது.
    • இறுதி வாக்காளர் பட்டியலில் 2 கோடியே 69 லட்சத்து 53 ஆயிரத்து 644 வாக்காளர்கள் உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்குவதற்கு முன்பு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரத்து 855 ஆக இருந்தது.

    தற்போது வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 2 கோடியே 69 லட்சத்து 53 ஆயிரத்து 644 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து 8 லட்சத்து 97 ஆயிரத்து 211 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திருத்தப்பட்ட பட்டியலில் ஆண் வாக்காளர்கள் கோடியே 31 லட்சத்து 26 ஆயிரத்து 48 பேர், பெண் வாக்காளர்கள் 1 கோடியே 38 லட்சத்து 27 ஆயிரத்து 319 பேர், திருநங்கைகள் 277 பேர் உள்ளனர்.

    • உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
    • இந்த விவகாரத்தில் யது கிரிசின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

    இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள், அதன் மூலம் தெரிந்தவர்கள்-தெரியாதவர்கள் என பலருடன் நட்பு வைத்துக்கொள்கிறார்கள். சமூக வலைதள பக்கங்களை பெரும்பாலானோர் நட்பு ரீதியாக பழகுவதற்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள்.

    ஆனால் சில மோசடி ஆசாமிகள், அதனை தங்களின் மோசடிக்கான தளமாக சமூகவலைதள பக்கங்களை மாற்றிக் கொள்கிறார்கள். அது போன்ற நபர்கள், தங்களின் சிந்தனைக்கு ஏற்ப பல்வேறு விதமான மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

    அப்படித்தான் கேரள மாநிலத்தில் ஒரு நபர், இன்ஸ்டாகிராமின் மூலம் கிடைத்த இளம்பெண்களுடன் நட்பை ஏற்படுத்தி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கேரள மாநிலம் திருச்சூர் தான்யம் பகுதியை சேர்ந்தவர் யது கிரிஷ்(வயது38). சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கும் அவருக்கு, அதன் மூலமாக ஏராளமான புதிய நண்பர்கள் அறிமுகமாகி இருக்கின்றனர். அவர்களில் கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் என பல இளம்பெண்களும் அடங்குவர்.

    அவர்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்ட யது கிரிஷ், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தனது வலையில் சிக்கவைத்து சீரழித்துள்ளார். தான் கூறும் ஆசை வார்த்தையில் ஏமாந்து பழகும் பெண்களை தனியாக பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

    பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகளை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அதனை காண்பித்து மிரட்டி அந்த பெண்களுடன் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டபடி இருந்திருக்கிறார். யது கிரிசின் வலையில் சிக்கி ஏமாந்த இளம்பெண்களில் 3பேர், அவரைப்பற்றி திருச்சூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் யது கிரிஷ் ஏராளமான இளம் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

    அவர் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி பழகிய 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்வதை வீடியோ எடுத்து, சம்பந்தப்பட்ட இளம்பெண்களை மிரட்டி பணமும் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து யது கிரிசின் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அவரின் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

    யது கிரிஷ் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த 3 இளம்பெண்களிடமும் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். ஆனால் அவரிடம் சிக்கி ஏமாந்த மற்ற பெண்கள், அவமானத்துக்கு பயந்து புகார் அளிக்கவில்லை. ஆனால் அவர்களையும் கண்டுபிடித்து வாக்கு மூலம் பெறும் முயற்சியில் திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் யது கிரிசின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர். அதில் அவர் பாலியல் வன்கொடுமை செய்த இளம்பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் இருந்துள்ளன. அவற்றை போலீசார் தொழில்நுட்ப ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெண்ணுக்கு சிறுநீர் கழிப்பதிலும் பிரச்சனை ஏற்பட்டது. அதாவது சிறுநீரில் ரத்தம் வெளியேறியது.
    • அலட்சிய சிகிச்சை பற்றிய விவரத்தை அறிந்ததும் டாக்டர்கள் பதற்றமடைந்தனர்.

    கேரள மாநிலம் ஆலப்புழா புன்னபுரா பகுதியை சேர்ந்தவர் உஷா ஜோசப் (வயது 51). இவர் ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 2021-ம் ஆண்டு ஆலப்புழா அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உஷாவுக்கு, கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அதன் பிறகு வீடு திரும்பிய நாளில் இருந்து வயிற்று வலி இருந்தது. பல ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குறையவில்லை. அதே சமயத்தில் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

    ஆண்டு கணக்கில் தொடர்ந்து வலி மாத்திரை சாப்பிட்டு வந்ததால் அந்த பெண்ணுக்கு சிறுநீர் கழிப்பதிலும் பிரச்சனை ஏற்பட்டது. அதாவது சிறுநீரில் ரத்தம் வெளியேறியது.

    இதனால் பயந்து போன அவர் சிறுநீரக மருத்துவரை பார்த்தார். அப்போது எடுக்கப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனை முடிவில் தான் அதிர்ச்சி தகவல் வெளியானது.

    பெண்ணின் வயிற்றில் 10 செ.மீ. நீளமுள்ள கத்தரிக்கோல் இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அந்த பெண் எக்ஸ்ரே பரிசோதனை முடிவுகளுடன் மீண்டும் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்றார்

    அலட்சிய சிகிச்சை பற்றிய விவரத்தை அறிந்ததும் டாக்டர்கள் பதற்றமடைந்தனர். பிறகு வயிற்றில் உள்ள கத்தரிக் கோலை எடுத்து விடலாம். இது தொடர்பாக யாரிடமும் கூற வேண்டாம் எனவும் கூறி அனுப்பியுள்ளனர்.

    அதன்பிறகு நடந்த விசாரணையில், அதே ஆஸ்பத்திரியில் கடந்த 2021-ம் ஆண்டு அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்த விவகாரம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.

    மேலும் அலட்சிய சிகிச்சை விஷயம் பூதாகரமானது. அதே சமயத்தில் பாதிக்கப்பட்ட பெண் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற விரும்பவில்லை. கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார்.

    அந்த பெண்ணின் அறுவை சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும், அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பஞ்சாயத்து துணை தலைவர் தொபியாஸ் கேட்டு கொண்டார். அதற்கு தேவையான உதவிகளை செய்வதாக வேணுகோபால் எம்.பி.யும் உறுதியளித்து உள்ளார்.

    அரசு ஆஸ்பத்திரியின் அலட்சிய அறுவை சிகிச்சையால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • காரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் மற்றும் பீர்பாட்டில்கள் ஏராளமாக இருந்தன.
    • மதுபானம் தேவைப்படுபவர்களுக்கு, தேவையான மது வகைகளை தனது காரில் எடுத்துச் சென்று சப்ளை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருரங்காடி பகுதியை சேர்ந்தவர் அல்கு என்கிற ஷெபிக். இவர் ஏராளமான மலையாள திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். "ஆட்டோர்ஷா" என்ற மலையாள படத்தில் அறிமுகமான இவர், "ஆக்ஷன் ஹீரோ பிஜூ" என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடத்திருக்கிறார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில் அவர் தனது காரில் எர்ணாகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கலால் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் நடிகர் ஷெபிக் காரிலும் சோதனை செய்தனர்.

    அப்போது அவரது காரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் மற்றும் பீர்பாட்டில்கள் ஏராளமாக இருந்தன. அதனை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது, கலால் துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நடிகர் ஷெபிக்கை கலால் அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவரது காரில் இருந்த இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் 52 லிட்டர் மற்றும் 58 பாட்டில் பீர் (37.7 லிட்டர்) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து சிறிய வேடங்களில் நடித்து வந்த நடிகர் ஷாபிக், இரவு நேரத்தில் மதுபான விற்பனையில் ரகசியமாக ஈடுபட்டு வந்திருக்கிறார். அவர் மதுபானம் தேவைப்படுபவர்களுக்கு, தேவையான மது வகைகளை தனது காரில் எடுத்துச் சென்று சப்ளை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அவ்வாறு மதுபானங்களை விற்பனை செய்வதற்கு எர்ணாகுளம் சென்ற போது தான், கலால் துறையினரின் சோதனையில் சிக்கிக்கொண்டார். 

    • மாணவியின் உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள கல்பெட்டா பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் மாணவி மனதளவில் பாதிக்கப்பட்டவரை போன்று காணப்பட்டார்.

    இதையடுத்து மாணவியை அவரது தந்தை, மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவருக்கு மனநல பாதிப்பு தொடர்பான ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சிகிச்சை அளித்த டாக்டர், பள்ளி மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்தார்.

    அப்போது தன்னை இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய விவரத்தை டாக்டர் மற்றும் தனது தந்தையிடம் மாணவி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, தனது மகள் படித்த பள்ளி ஆலோசகருக்கு தகவல் கொடுத்தார்.

    அவர் அதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியிடம் போலீசார் விவரங்களை கேட்டனர். அப்போது அவர் தன்னை உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி வந்ததாக தெரிவித்தார்.

    அதில் உறவினர் ஒரு முறையும், பக்கத்து வீட்டுக்காரர் பல முறையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருக்கிறார். பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் 2024-2025 காலக்கட்டத்தில் நடந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து மாணவியின் உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை கைது செய்தனர். போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பள்ளி மாணவி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து மாணவியின் தந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி, கடந்த இரு வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால், அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். கடும் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் தூக்கில் பிணமாக தொங்கியதால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    அதே நேரத்தில் மாணவியின் சாவுக்கு வேறு எதுவும் காரணமாக இருக்கலாமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே மாணவி மரணம் தொடர்பாக "இயற்கைக்கு மாறான மரணம்" என்று போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பள்ளி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 41 நாட்களாக சிறையில் உள்ள அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது.
    • தந்திரி கண்டரரு ராஜீவருவின் ஜாமின் மனு மீதான விசாரணை கொல்லம் குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்றது.

    சபரிமலையில் துவார பாலகர் சிலை தங்கம் மற்றும் கருவறை வாசல் நிலை தங்கம் கொள்ளை தொடர்பான 2 வழக்குகளில் தந்திரி கண்டரரு ராஜீவரு கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    கடந்த 41 நாட்களாக சிறையில் உள்ள அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. 41 நாட்களில் 2 முறை நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்தநிலையில் நேற்று தந்திரி கண்டரரு ராஜீவருவின் ஜாமின் மனு மீதான விசாரணை கொல்லம் குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது தந்திரி தரப்பில், தங்கம் கொள்ளையில் தந்திரிக்கு தொடர்பு இல்லை. மேலும் சிறையில் உள்ள அவருக்கு அடிக்கடி ஏற்படும் உடல் நலக்குறைவை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி. தங்கம் கொள்ளையில் தந்திரிக்கு நேரடி தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை சிறப்பு விசாரணை குழு தரப்பில் ஆஜர்படுத்தவில்லை என்ற அடிப்படையில், தந்திரிக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கன்னியாகுமரியில் இருந்து திங்கள், புதன், வியாழன், சனி என வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படுகிறது.
    • கஞ்சாவை கடத்தி வந்த நபர்களை ரெயிலில் போலீசார் தேடிப்பார்த்தனர்.

    திருவனந்தபுரம்:

    அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் வாராந்திர ரெயில் திப்ருகர் எக்ஸ்பிரஸ். இந்தியாவின் மிகவும் நீளமான ரெயில் பாதையை கொண்ட இந்த எக்ஸ்பிரஸ், 4,189 கிலோமீட்டர் தூரத்தை 74 மணி நேரத்தில் கடக்கிறது.

    விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 2013-ம் ஆண்டு இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து திங்கள், புதன், வியாழன், சனி என வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படுகிறது.

    அசாம், நாகாலாந்து, மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 9 மாநிலங்களின் வழியாக இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரசில், சமீபகாலமாக அதிகளவில் கஞ்சா கடத்தி கொண்டுவரப்படுகிறது.

    அவ்வாறு கடத்தி வரப்பட்ட கிலோ கணக்கிலான கஞ்சாவை, குமரி மாவட்ட ரெயில்வே போலீசார் பிடித்துள்ளனர். இந்தநிலையில் விவேக் எக்ஸ்பிரசில் கடத்தி கொண்டுவரப்பட்ட 33 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி வந்த அந்த ரெயில், ஆலுவா ரெயில் நிலையத்திற்கு வந்தபோது கலால் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த ரெயிலின் பின்பகுதியில் இருந்த பொதுப்பெட்டியில் கழிவறைக்கு அருகே சந்தேகமளிக்கும் வகையில் சில பைகள் கிடந்தன. அவற்றை அவர்கள் சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மொத்தம் 33 கிலோ கஞ்சா இருந்தது. அதனை போலீசாரும், கலால் துறையினரும் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்த நபர்களை ரெயிலில் போலீசார் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு பல லட்சம் ரூபாய் ஆகும்.

    ஆலுவா ரெயில் நிலையத்தில் கடந்த 13-ந்தேதி 10 கிலோ கஞ்சாவும், ஆலுவா சந்தையில் ரூ.17லட்சம் மதிப்புள்ள கஞ்சாவும், திருச்சூர் ரெயில் நிலையத்தில் நேற்று(17-ந்தேதி) 5 கிலோ கஞ்சாவும் பிடிபட்டது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் வெளி மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தல் அதிகரித்திருப்பதாக குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜிபின் தெரிவித்துள்ளார்.

    • கார் டிரைவர் உள்பட 6 பேரும் மீன்குழம்புடன் உணவு சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
    • வழியில் திடீரென ஷாஜி, அவரது மனைவி சஜினா, மாமியார் ரஷீதா பீவி ஆகியோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நிலமேல் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (வயது 48). நேற்று முன்தினம் இரவு மனைவி சஜினா, மாமியார் ரஷீதா பீவி (58), தனது 2 குழந்தைகளுடன் காரில் விழிஞ்ஞத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார். அங்கு கார் டிரைவர் உள்பட 6 பேரும் மீன்குழம்புடன் உணவு சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    செல்லும் வழியில் திடீரென ஷாஜி, அவரது மனைவி சஜினா, மாமியார் ரஷீதா பீவி ஆகியோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து 3 பேரும் பாரிப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷாஜி மற்றும் அவரது மாமியார் ரஷீதா பீவி அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும் சஜினா மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    கெட்டுப்போன மீன்குழம்பை சாப்பிட்டதால் அது விஷமாக மாறி 2 பேரின் உயிரை பறித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    ×