என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் கைது"

    • ஓட்டல் நிர்வாகம் தனது வங்கி கணக்கை சரிபார்த்தபோது, ஒரு ரூபாய் கூட வரவு வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
    • மொத்தம் ரூ.6.17 லட்சம் பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அரியானா மாநிலம் சோனாவைச் சேர்ந்தவர் ஹிமான்ஷூ (வயது 26). எம்.சி.ஏ. பட்டம் பெற்ற இவர், யூடியூப் சேனல் விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். குருகிராம் டி.எஸ்.எப் பேஸ்-5 பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஹிமான்ஷு தங்கி வந்துள்ளார்.

    கடந்த பிப்ரவரி 24-ந்தேதி வரை தங்கியிருந்த அவர், ஓட்டல் வாடகையாக 16 தவணைகளில் பணம் செலுத்தியதாகக் கூறி, அதற்கான 'ஸ்கிரீன்ஷாட்'டுகளை வாட்ஸ்அப் மூலம் ஓட்டல் மேலாளருக்கு அனுப்பியுள்ளார்.

    ஓட்டல் நிர்வாகம் தனது வங்கி கணக்கை சரிபார்த்தபோது, ஒரு ரூபாய் கூட வரவு வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஹிமான்ஷுவிடம் கேட்டபோது, அவர் வங்கி கணக்கு விவரங்களை தர மறுத்துவிட்டு ஓட்டலை விட்டு வெளியேறினார். மொத்தம் ரூ.6.17 லட்சம் பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து ஓட்டல் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹிமான்ஷுவை கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. "போலி போன்பே செயலி மூலம் பணம் செலுத்தியது போல் எப்படி ஏமாற்றுவது என்பது குறித்து யூடியூப்பில் வீடியோ பார்த்தேன். அதன் மூலம் ஒரு போலி செயலியை பதிவிறக்கம் செய்து, ஓட்டல் மேலாளருக்கு போலி ஸ்கிரீன்ஷாட்டுகளை அனுப்பி ஏமாற்றினேன்" என்று அவர் ஒப்புக்கொண்டார்.

    அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
    • இந்த விவகாரத்தில் யது கிரிசின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

    இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள், அதன் மூலம் தெரிந்தவர்கள்-தெரியாதவர்கள் என பலருடன் நட்பு வைத்துக்கொள்கிறார்கள். சமூக வலைதள பக்கங்களை பெரும்பாலானோர் நட்பு ரீதியாக பழகுவதற்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள்.

    ஆனால் சில மோசடி ஆசாமிகள், அதனை தங்களின் மோசடிக்கான தளமாக சமூகவலைதள பக்கங்களை மாற்றிக் கொள்கிறார்கள். அது போன்ற நபர்கள், தங்களின் சிந்தனைக்கு ஏற்ப பல்வேறு விதமான மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

    அப்படித்தான் கேரள மாநிலத்தில் ஒரு நபர், இன்ஸ்டாகிராமின் மூலம் கிடைத்த இளம்பெண்களுடன் நட்பை ஏற்படுத்தி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கேரள மாநிலம் திருச்சூர் தான்யம் பகுதியை சேர்ந்தவர் யது கிரிஷ்(வயது38). சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கும் அவருக்கு, அதன் மூலமாக ஏராளமான புதிய நண்பர்கள் அறிமுகமாகி இருக்கின்றனர். அவர்களில் கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் என பல இளம்பெண்களும் அடங்குவர்.

    அவர்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்ட யது கிரிஷ், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தனது வலையில் சிக்கவைத்து சீரழித்துள்ளார். தான் கூறும் ஆசை வார்த்தையில் ஏமாந்து பழகும் பெண்களை தனியாக பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

    பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகளை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அதனை காண்பித்து மிரட்டி அந்த பெண்களுடன் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டபடி இருந்திருக்கிறார். யது கிரிசின் வலையில் சிக்கி ஏமாந்த இளம்பெண்களில் 3பேர், அவரைப்பற்றி திருச்சூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் யது கிரிஷ் ஏராளமான இளம் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

    அவர் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி பழகிய 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்வதை வீடியோ எடுத்து, சம்பந்தப்பட்ட இளம்பெண்களை மிரட்டி பணமும் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து யது கிரிசின் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அவரின் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

    யது கிரிஷ் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த 3 இளம்பெண்களிடமும் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். ஆனால் அவரிடம் சிக்கி ஏமாந்த மற்ற பெண்கள், அவமானத்துக்கு பயந்து புகார் அளிக்கவில்லை. ஆனால் அவர்களையும் கண்டுபிடித்து வாக்கு மூலம் பெறும் முயற்சியில் திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் யது கிரிசின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர். அதில் அவர் பாலியல் வன்கொடுமை செய்த இளம்பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் இருந்துள்ளன. அவற்றை போலீசார் தொழில்நுட்ப ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீடியோ வைரலான நிலையில் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • வீடியோவை பதிவிட்டவர் மேல்மலை கிராமம் பூம்பாறையைச் சேர்ந்த செல்வக்குமார் என தெரிய வந்தது.

    கொடைக்கானல்:

    சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் இளைஞர்கள் ஆர்வ மிகுதியில் பல்வேறு வீடியோக்களை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளில் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் செல்வது, தடை செய்யப்பட்ட அருவிகள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சென்று அதன் அனுபவங்களை தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    இது போல கடந்த சில நாட்களாக கையில் மிகப்பெரிய வாளுடன் திரைப்பட பாடல் பின்னணியில் வாகனங்களில் அமர்ந்தவாறு வீடியோ எடுத்து வாலிபர் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் இது குறித்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் வீடியோவை பதிவிட்டவர் மேல்மலை கிராமம் பூம்பாறையைச் சேர்ந்த செல்வக்குமார் (25) என தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். வீடியோவில் பதிவு செய்த வாள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றினர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் இது போன்று வீடியோ பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • வாலிபர் துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு படுத்துக்கொண்டார்.
    • எரிவாயு, முகமூடி, ஹெல்மெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாராளுமன்றத்தின் மேற்கு பகுதியில் வாலிபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் வந்தார்.

    அவர் பாராளுமன்றத்துக்குள் நுழைய முயன்றார். இதை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனே அந்த வாலிபரை சுற்றி வளைத்தனர். ஆயுதத்தை கீழே போடும்படி உத்தரவிட்டனர்.

    இதையடுத்து வாலிபர் துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு படுத்துக்கொண்டார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். அந்த வாலிபர் தன்னிடம் வெடி மருந்துகளையும் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும், பாராளுமன்ற வளாகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாலிபர் வாகனத்தையும், ஒரு காரையும் போலீசார் சோதனை செய்தனர்.

    அதில் எரிவாயு, முகமூடி, ஹெல்மெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாலிபர் யார், எதற்காக துப்பாக்கியுடன் வந்தார் என்பது குறித்த விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

    • சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடினர்.
    • பந்தர் பூரில் உள்ள குடிசைப்பகுதியில் தங்கியிருந்த சுஹைலை கைது செய்தனர்.

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சுஹைல் (வயது20). இவர் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பந்திரங்காவு பகுதியில் வசித்துவரும் தனது குடும்பத்தினரை சந்திக்க வந்திருந்தார்.

    அப்போது அவருக்கு, அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அறிமுகமானார். சம்பவத்தன்று அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அதனையறிந்த சுஹைல், சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை அந்த சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்திருக்கிறார்.

    இந்தநிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டன் காரணமாக, அந்த சிறுமி கர்ப்பமானார். இதையறிந்த சுஹைல் கேரளாவில் இருந்து தப்பிச் சென்றார். வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பமானது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, பந்திரங்காவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சுஹைலை வலைவீசி தேடினர். ஆனால், தான் பயன்படுத்திய செல்போன் மற்றும் சிம்கார்டு உள்ளிட்டவைகளை கேரளாவிலேயே கைவிட்டுவிட்டு தப்பியதால் அவர் எங்கு இருக்கிறார்? என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    அதே நேரத்தில் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க, கோழிக்கோடு பந்திரங்காவில் தங்கியிருந்த சுஹைலின் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியபடி இருந்தனர். இந்தநிலையில் அவர் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூரில் இருக்கும் தகவல் பந்திரங்காவு போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து உதவி கமிஷனர் பரோக் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் மகாராஷ்டிரா மாநில போலீசாரின் உதவியுடன் சுஹைலை தேடினர். பந்தர் பூரில் உள்ள குடிசைப்பகுதியில் தங்கியிருந்த சுஹைலை கைது செய்தனர்.

    பின்பு அவரை அங்கிருந்து கேரளாவுக்கு அழைத்து வந்தனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பாமக்கிய விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    • இருவரும் வெகுநாட்களாக 'டேட்டிங்' செயலி மூலமாக பேசி பழகி வந்தனர்.
    • இளம்பெண்ணுடன் பேசுவதை அனந்த கிருஷ்ணன் தவிர்த்து வந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எரஞ்சிக்கல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரேயாஸ் அனந்தகிருஷ்ணன் (வயது26). இவருக்கு 'டேட்டிங்' செயலி மூலமாக மலப்புரம் வண்டூரை சேர்ந்த ஒரு இளம்பெண் அறிமுகமானார்.

    இதையடுத்து அவர்கள் இருவரும் வெகுநாட்களாக 'டேட்டிங்' செயலி மூலமாக பேசி பழகி வந்தனர். இந்த பழக்கம் அவர்களுக்கிடையே நெருக்கத்தை உருவாக்கி உள்ளது. இதையடுத்து அவர்கள் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது அனந்த கிருஷ்ணன், அந்த இளம்பெண்ணிடம் காதலிப்பதாக கூறியிருக்கிறார்.

    அனந்த கிருஷ்ணன் வார்த்தையை நம்பிய அந்த இளம்பெண், அவர் அழைத்ததன்பேரில் பொட்டம்மல் பகுதியில் உள்ள லாட்ஜூக்கு சென்றிருக்கிறார். அங்கு வைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்தநிலையில் இளம்பெண்ணுடன் பேசுவதை அனந்த கிருஷ்ணன் தவிர்த்து வந்தார். மேலும் அந்த பெண்ணும் போன் செய்ய முடியாதவாறு செய்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், லாட்ஜில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து அனந்தகிருஷ்ணன் மீது போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அனந்தகிருஷ்ணனை கைது செய்தனர்.

    'டேட்டிங்' செயலியில் பழகிய இளம்பெண்ணை லாட்ஜூக்கு வரவழைத்து வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
    • ஏற்கனவே 2 முறை வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு நேற்று தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பேசிய மர்மநபர் முதலமைச்சரின் வீட்டில் குண்டு வைத்திருப்பதாக தெரிவித்துவிட்டு போனை துண்டித்து விட்டார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.

    இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் நம்பரை வைத்து துப்பு துலக்கியதில் திருப்போரூரை சேர்ந்த ஐயப்பன் என்ற வாலிபர் சிக்கினார்.

    மாற்றுத்திறனாளியான இவர் இதுபோன்று ஏற்கனவே 2 முறை வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

    கோயம்பேடு பஸ் நிலையம் உள்ளிட்ட சில இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ள ஐயப்பன் 2021-ம் ஆண்டிலும் முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதாகி உள்ளார். இந்த நிலையில்தான் தற்போதும் அவர் வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஐயப்பன் மாற்றுத்திறனாளி என்பதால் அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரை எச்சரித்து அனுப்பி உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இருப்பினும் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பயந்து போன இருவரும் பெற்றோரிடம் சொல்லாமல் அமைதி காத்தனர்.
    • சிறுமியின் பெற்றோர் சைதாபாத் போலீசில் புகார் செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த சைதாபாத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    சிறுமியும், அவரது 7 வயது சகோதரனும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்றனர். பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பினர். பெற்றோர் வேலைக்கு சென்றதால் சிறுமி தனது சகோதரருடன் வீட்டில் இருந்தார். சிறுமி தனியாக இருப்பதை அதே பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் கவனித்தார்.

    கஞ்சா போதையில் இருந்த வாலிபர் சிறுமியின் வீட்டிற்கு வந்து சிறுமியை சரமாரியாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் சிறுமியையும், அவரது சகோதரனையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றார். இதனால் பயந்து போன இருவரும் இதுகுறித்து பெற்றோரிடம் சொல்லாமல் அமைதி காத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது தனக்கு நடந்த கொடுமை குறித்து தெரிவித்தார். சிறுமியின் பெற்றோர் சைதாபாத் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • சங்கீத்குமார் முகநூல் பக்கத்தில் கணக்கு வைத்திருக்கும கல்லூரி மாணவிகளின் விவரங்களை முதலில் சேகரிப்பார்.
    • கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் வடக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சங்கீத்குமார்(வயது29). கல்லூரி மாணவிகளின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் இவரை கைது செய்தனர்.

    சங்கீத்குமார் முகநூல் பக்கத்தில் கணக்கு வைத்திருக்கும கல்லூரி மாணவிகளின் விவரங்களை முதலில் சேகரிப்பார். பின்பு மாணவிகளின் பக்கத்திற்குள் சென்று அவர்கள் படிக்கும் கல்லூரி, செல்போன் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்துக் கொள்வார்.

    அதன்பிறகு மாணவிகளின் செல்போனுக்கு, அவர்கள் படிக்கும் கல்லூரியின் சீனியர் மாணவி என்று கூறி குறுந்தகவல் அனுப்புவார். அவர்களும் சீனியர் மாணவி என்ற அடிப்படையில் குறுந்தகவல் அனுப்பிவிட்டால், அவர்களுடன் நட்பாக பேச ஆரம்பித்து விடுவார்.

    பின்னர் மாணவிகளின் செல்போன்களுக்கு பாலியல் ரீதியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்புவார். இதே போன்று ஏராளமான மாணவிகளுக்கு வாலிபர் சங்கீத்குமார் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி தொல்லை கொடுத்தபடி இருந்துள்ளார்.

    ஆகவே அவரைப்பற்றி சில மாணவிகள் போலீசில் புகார் செய்தனர். அதுகுறித்து கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவாக இருந்த சங்கீத்குமாரை தேடினர். அவரின் இருப்பிடத்தை செல்போன் டவர் மூலமாக கண்டறிந்து சென்று கைது செய்தனர்.

    அவரிடமிருந்து மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்ப பயன்படுத்திய செல்போன் மற்றும் சிம் கார்டை போலீசார் பறிமுதல் செய்தனர். சங்கீத்குமார் மீது இதேபோல் மேலும் சில போலீஸ் நிலையங்களிலும் வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கோயம்பேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • நெல்லூர் சென்ற போலீசார் பேருந்தை மீட்டதுடன், கடத்தி சென்ற ஒடிசாவை சேர்ந்தவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருடப்பட்ட அரசு பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டுள்ளது.

    கோயம்பேடு பணிமனையில் இருந்து திருப்பதிக்கு செல்ல இருந்த அரசுப் பேருந்தை மர்ம நபர் கடத்தி சென்றதால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், நடத்துநர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில், தமிழ்நாட்டு பேருந்தை பிடித்து வைத்துள்ளதாக ஆந்திர மாநிலம் நெல்லூர் போலீசார் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின்பேரில், நெல்லூர் சென்ற போலீசார் பேருந்தை மீட்டதுடன், கடத்தி சென்ற ஒடிசாவை சேர்ந்தவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    பேருந்து நிலைய மேலாளர் ராம்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் ஒடிசாவை சேர்ந்த ஞானராஜன் சாகு (24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுவாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கும்போது ஐபிஎல் அணி ரசிகர்களிடையே தங்கள் அணிக்காக வாக்குவாதங்கள், சண்டைகள் நடப்பது வழக்கம்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முக்கியமாக அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்றவர்களுக்கு ஆங்காங்கே ரசிகர்கள் மன்றங்களே  நடத்தி வருகின்றனர்.

    பொதுவாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கும்போது ஐபிஎல் அணி ரசிகர்களிடையே தங்கள் அணிக்காக வாக்குவாதங்கள், சண்டைகள் நடப்பது வழக்கம்.

    இதற்கிடையே கடந்த 2022 ஐபிஎல் சீசனின் போது அரியலூரை சேர்ந்த தர்மராஜ் தனது நண்பர் விக்னேஷ்வுடன் ஊருக்கு வெளியே மது அருந்த சென்றுள்ளார். இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மது அருந்திவிட்டு பேசிக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் குறித்து இருவருக்கும் வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது.

    இந்த வாக்குவாதத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை தவறாக பேச, இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் அரிவாளால் விக்னேஷை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விக்னேஷ் இறந்துள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நடந்து வந்தது.

    இந்நிலையில் விக்னேஷை கொலை செய்த தர்மராஜுக்கு அரியலூர் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கியுள்ளது.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
    • உடையார்பாளைம் பகுதியில் பதுங்கியிருந்த பிரகாசை போலீசார் கைது செய்தனர்.

    வண்டலூர்:

    சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஒரு பெண், தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் மொபைல் போனுக்கு, வாட்ஸ்அப் மூலம் ஒரு வீடியோ வந்துள்ளது. அதில், அந்த பெண்ணும், அவரது கணவரும் தனிமையில் இருந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.

    பின்னர் அந்த வீடியோவை அனுப்பிய மர்ம நபர், அந்த பெண்ணிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தான் கேட்கும் பணத்தை தராவிட்டால், வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டி உள்ளார்.

    இது குறித்து அந்த பெண், தனது கணவரிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த அவர், கிளாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மிரட்டல் விடுத்த நபர் பெரும்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த பிரகாஷ் (வயது 27) என்பது தெரியவந்தது.

    இந்த நிலையில் பிரகாஷ் தலைமறைவானார். இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். பின்னர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளைம் பகுதியில் பதுங்கியிருந்த பிரகாசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது கணவன் - மனைவி இருவரும் தனியாக இருந்ததை பெண் ஒருவர் வீடியோ எடுத்து கொடுத்ததாக கூறினார். அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் பிரகாசை போலீசார் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×