என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபாச வீடியோ"

    • மகள் ஒரு நபருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருப்பதை அவரது தாய் கவனித்துள்ளார்.
    • குடும்பத்தினர் தடுத்தும் கேட்காத அந்தப் பெண், வருணைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு மைசூரு ரோடு பகுதியில் பிபிஏ பட்டதாரியான 23 வயது இளம்பெண் ஒருவர் தனது தாய் தந்தை மற்றும் இளைய சகோதரி உடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் 49 வயதுடைய அந்த தாய், தனது மூத்த மகள் மீது பெங்களூரு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் போலீசாரையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, வேலை தேடுவதற்காக கூறி, தனது தந்தையிடம் கேட்டு ஒரு ஸ்மார்ட்போனை அந்தப் பெண் வாங்கியுள்ளார்.

    ஒரு மாதத்திற்கு முன்பு, மகள் ஒரு நபருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருப்பதை அவரது தாய் கவனித்துள்ளார். மகளின் மொபைல் போனை வாங்கிச் சோதித்தபோது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    தனது தாய் தூங்கிக்கொண்டிருக்கும்போது அவரது அந்தரங்க உறுப்புகளைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, வருண் என்ற நபருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளது தெரியவந்தது.

    மேலும், தனது தாயின் அக்கா (பெரியம்மா) குளித்துக்கொண்டிருந்தபோது அவருக்குத் தெரியாமல் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அதே நபருக்கு அனுப்பியுள்ளார்.

    மொபைல் சாட்களை ஆராய்ந்தபோது வருண் என்ற அந்த நபரே இது போன்ற புகைப்படங்களை அனுப்புமாறு அப்பெண்ணைத் தூண்டியது தெரியவந்தது.

    குடும்பத்தினர் தடுத்தும் கேட்காத அந்தப் பெண், கடந்த வாரம் வருணைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

    இந்நிலையில் தனது மகள் குறித்தும், புகைப்படங்கள் குறித்தும் அச்சத்தில் இருந்த தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.

    வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள வருணையும், அப்பெண்ணையும் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • அந்தத் தளத்தில் நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டிருப்பது அவருக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது.
    • ஆயிரக்கணக்கான தம்பதிகள் மற்றும் தனிநபர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே இந்தக் குற்றச் செயலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சீனாவில் நபர் ஒருவர் இணையத்தில் ஆபாச வீடியோ தேடும்போது அவர் தனது காதலியுடன் அந்தரங்கமாக இருந்த வீடியோ அந்த தளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

    அந்த வீடியோ, அந்தத் தளத்தில் நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டிருப்பது அவருக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது.

    முன்பு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தபோது அந்த காட்சிகள் அவர்களுக்கு தெரியாமல் ஸ்விச் போர்டில் மறைத்து வைக்கப்பட்ட 'ஸ்பை கேமரா' மூலம் படமாக்கப்பட்டது பின்னர் தெரியவந்தது.

    இது குறித்து அவர் காவல் துறையில் புகார் அளித்தார். விசாரணையில், சீனா முழுவதும் பல ஹோட்டல் அறைகளில் இது போன்ற ரகசிய கேமராக்களைப் பொருத்தி, அதன் மூலம் தம்பதிகள் மற்றும் காதலர்களின் அந்தரங்க வீடியோக்கள் படமாக்கப்பட்டு கள்ளச்சந்தையில் ஆபாச இணையதளங்களுக்கு விற்கும் மிகப்பெரிய கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கபட்டது.

    மேலும், இந்தக் கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்படும் காட்சிகள், கட்டணம் செலுத்திப் பார்க்கும் சந்தாதாரர்களுக்குச் சிறப்புச் செயலிகள் மற்றும் இணையதளங்கள் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன.

    ஆயிரக்கணக்கான தம்பதிகள் மற்றும் தனிநபர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே இந்தக் குற்றச் செயலில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு சீன காவல்துறை விசாரணையில் இறங்கி உள்ளது. 

    • சீருடை அணிந்த நிலையில் பெண்களை கட்டியணைத்து முத்தமழை பொழிந்த ஆபாச வீடியோக்கள் வெளியாகின.
    • யாரோ சதி செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர் என்றும் ராமசந்திர ராவ் தெரிவித்தார்.

    கர்நாடக மாநில குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் ராமசந்திர ராவ் (வயது 59). இவரது வளர்ப்பு மகள் நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த வழக்கில் சிறையில் உள்ளார்.

    தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விவகாரத்தில் ராமசந்திர ராவும் சிக்கி இருந்தார். கடந்த ஆண்டு ராமசந்திர ராவை கட்டாய விடுப்பில் அரசு அனுப்பி வைத்திருந்தது. மாத கணக்கில் அவருக்கு பொறுப்பு வழங்காமல் அரசு இருந்தது.

    அதன்பிறகு தான் குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு டி.ஜி.பி.யாக ராமசந்திர ராவ் நியமிக்கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில், ராமசந்திர ராவ் தனது அலுவலகத்திலேயே சீருடை அணிந்த நிலையில் பெண்களை கட்டியணைத்து முத்தமழை பொழிந்ததுடன் உடல்களை தொட்டு லீலையில் ஈடுபட்ட ஆபாச வீடியோக்கள் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராமசந்திர ராவ் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் 3 வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில், 2 வீடியோக்களில் அவர் சீருடை அணிந்து கொண்டு இருக்கிறார். மற்றொரு வீடியோவில் மட்டும் சாதாரண உடையை அவர் அணிந்திருக்கிறார்.

    அது போலி வீடியோக்கள் என்றும் யாரோ சதி செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர் என்றும் ராமசந்திர ராவ் தெரிவித்தார்.

    இந்த வீடியோக்கள் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி பதவியில் இருந்து ராமசந்திர ராவ் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.    

    • வெவ்வேறு ஐடிகளை உருவாக்கி தொடர்ந்து ஆபாசமான செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.
    • ஆனால் அங்கும் அவர் அநாகரிகமாக நடந்துகொண்டார்.

    கர்நாடக மாநிலம் வெங்களூருவில் வசிக்கும் 41 வயதான ரஜினி என்ற கன்னட-தெலுங்கு தொலைக்காட்சி சீரியல் நடிகை, பேஸ்புக்கில் ஒருவர் ஆபாச வீடியோக்கள் மற்றும் செய்திகளை அனுப்பி தன்னை துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

    குற்றம் சாட்டப்பட்ட நவீன் ஆரம்பத்தில் ஒரு ஐடியிலிருந்து நடிகைக்கு நண்பர் கோரிக்கையை அனுப்பிய நிலையில் நடிகை அதை நிராகரித்தார்.

    அந்த நபரை நடிகை ‛பிளாக்' செய்தாலும் வெவ்வேறு ஐடிகளை உருவாக்கி தொடர்ந்து ஆபாசமான செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.

    மூன்று மாதங்களாக தொடர்ந்த துன்புறுத்தல் தாங்க முடியாமல், நடிகை நவம்பர் 1ஆம் தேதி நாகரபாவி பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சந்திப்பதாகக் கூறி அவரை வரவழைத்து நேரடியாகக் கண்டித்தார்.

    ஆனால் அங்கும் அவர் அநாகரிகமாக நடந்துகொண்டதைத் தொடர்ந்து, நடிகை உடனடியாக போலீஸாரை அழைத்துள்ளார். நடிகையின் புகாரை அடுத்து போலீசார் நவீனை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.  

    • சங்கீத்குமார் முகநூல் பக்கத்தில் கணக்கு வைத்திருக்கும கல்லூரி மாணவிகளின் விவரங்களை முதலில் சேகரிப்பார்.
    • கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் வடக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சங்கீத்குமார்(வயது29). கல்லூரி மாணவிகளின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் இவரை கைது செய்தனர்.

    சங்கீத்குமார் முகநூல் பக்கத்தில் கணக்கு வைத்திருக்கும கல்லூரி மாணவிகளின் விவரங்களை முதலில் சேகரிப்பார். பின்பு மாணவிகளின் பக்கத்திற்குள் சென்று அவர்கள் படிக்கும் கல்லூரி, செல்போன் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்துக் கொள்வார்.

    அதன்பிறகு மாணவிகளின் செல்போனுக்கு, அவர்கள் படிக்கும் கல்லூரியின் சீனியர் மாணவி என்று கூறி குறுந்தகவல் அனுப்புவார். அவர்களும் சீனியர் மாணவி என்ற அடிப்படையில் குறுந்தகவல் அனுப்பிவிட்டால், அவர்களுடன் நட்பாக பேச ஆரம்பித்து விடுவார்.

    பின்னர் மாணவிகளின் செல்போன்களுக்கு பாலியல் ரீதியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்புவார். இதே போன்று ஏராளமான மாணவிகளுக்கு வாலிபர் சங்கீத்குமார் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி தொல்லை கொடுத்தபடி இருந்துள்ளார்.

    ஆகவே அவரைப்பற்றி சில மாணவிகள் போலீசில் புகார் செய்தனர். அதுகுறித்து கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவாக இருந்த சங்கீத்குமாரை தேடினர். அவரின் இருப்பிடத்தை செல்போன் டவர் மூலமாக கண்டறிந்து சென்று கைது செய்தனர்.

    அவரிடமிருந்து மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்ப பயன்படுத்திய செல்போன் மற்றும் சிம் கார்டை போலீசார் பறிமுதல் செய்தனர். சங்கீத்குமார் மீது இதேபோல் மேலும் சில போலீஸ் நிலையங்களிலும் வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மூத்த மகள் பி.டெக் படிக்கிறார். இரண்டாவது மகள் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வி படிக்க காத்திருக்கிறார்.
    • படம்பிடித்து பதிவேற்றியதற்காக அவர்களுக்கு ரூ.500 சம்பளம் வழங்கப்பட்டது. தவிர நேரடி ஒளிபரப்புக்கு ரூ.2,000 வசூலிக்கப்பட்டது.

    தெலுங்கானா மாநிலம் அதிராபாத்தில் ஒரு தம்பதியினர் தங்கள் மகளின் கல்லூரி கட்டணத்தை செலுத்துவதற்காக பாலியல் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டனர்.

    இந்த தம்பதியினர் தங்கள் இரண்டு மகள்களின் கட்டணத்தை செலுத்த சிரமப்பட்டனர். மூத்த மகள் பி.டெக் படிக்கிறார். இரண்டாவது மகள் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வி படிக்க காத்திருக்கிறார். இந்நிலையில் தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுகளைச் சமாளிக்க முடியாததால், பெற்றோர் மொபைல் செயலி மூலம் தங்கள் இருவரின் அந்தரங்க காட்சிகளை ஒளிபரப்பி பணம் ஈட்டியுள்ளனர்.

    சிறுமிகளின் தந்தை ஆட்டோரிக்ஷா ஓட்டுநராக இருப்பதால், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக வேலைக்குச் செல்ல முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். வீடியோவைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்தக் காட்சிகளைப் படம்பிடித்து பதிவேற்றியதற்காக அவர்களுக்கு ரூ.500 சம்பளம் வழங்கப்பட்டது. தவிர நேரடி ஒளிபரப்புக்கு ரூ.2,000 வசூலிக்கப்பட்டதாகபோலீசார் தெரிவித்தனர். உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் அவர்களின் வீடு சோதனை செய்யப்பட்ட பின் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    • பங்குத்தந்தை ஒரு பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
    • தன்னை சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் மிரட்டியதாக குறிப்பிட்டு இருந்தார்.

    நாகர்கோவில் :

    குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பங்குத் தந்தையாக 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பணியாற்றி வருகிறார்.

    இவர் சில நாட்களுக்கு முன்பு தேவாலயம் உள்ள பகுதியில் நின்ற போது, அங்கு ஓரு கார் வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது.

    பின்னர் அவர் வைத்திருந்த லேப்-டாப் மற்றும் மொபைலை அந்தக் கும்பல் பறித்துச் சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த சிலர் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில் இது பற்றி புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் தற்போது தாக்குதலுக்கு உள்ளான பங்குத்தந்தை ஒரு பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடி யோக்களில் பெண்ணுடன் அவர் டிக்-டாக் பாணியில் பாடல் பாடுவது, முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

    இந்த வீடியோக்கள் வேகமாக பரவி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைப் பார்த்த பலரும் பங்குத் தந்தை மீது ஏற்கனவே பல புகார்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். தேவாலயம் வரும் பெண்களிடம் அவர் தகாத முறையில் பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.

    சமூகவலைதளங்களில் வெளியான வீடியோக்கள், பங்குந்தந்தையின் லேப்டாப் மற்றும் மொபைலில் பதிவு செய்யப்பட்டவையாக இருக்கலாம் என்றும், அதனை பறித்துச் சென்றவர்கள் இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    இந்த சூழலில் சம்பந்த ப்பட்ட பாதிரியாரின் தந்தை சில நாட்களுக்கு முன்பு கொல்லங்கோடு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தன்னை சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் மிரட்டியதாக குறிப்பிட்டு இருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த மாணவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பேசிய ஒரு மர்ம நபர் பணம் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ.விடம் பேசிய செல்போன் எண், பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சரவணக்குமார் (வயது 48). தி.மு.க.வைச் சேர்ந்த இவர் தனது குடும்பத்துடன் பாரதி நகரில் வசித்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்தது. அதனை சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆன் செய்தபோது எதிர்முனையில் இருந்து யாரும் பேசவில்லை. அதன் பிறகு சில மணி நேரங்கள் கழித்து வீடியோ கால் பதிவு செய்து அதனுடன் பெண் ஒருவர் செக்சியாக பேசுவது போன்ற தவறாக சித்தரித்து வீடியோவை அவரது செல்போனுக்கு அனுப்பினர்.

    அதன் பிறகு பேசிய ஒரு மர்ம நபர் பணம் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் பணத்தை அனுப்பினார். அதன் பிறகு இதுகுறித்து உரிய விசாரணை நடத்த தேனி சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ.விடம் பேசிய செல்போன் எண், பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உண்மையிலேயே வீடியோ அனுப்பியது பெண்ணா அல்லது வேறு யாருமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பெரியகுளம் எம்.எல்.ஏ.விடம் தொடர்பு கொண்டு கேட்க முயன்றபோது அவர் உரிய பதிலளிக்க மறுத்து விட்டார்.

    • டெலிகிராம் என்ற செயலி மூலம் நேகா என்கிற மெகர் என்ற பெண் தன்னை தொடர்பு கொண்டார்.
    • வீடியோக்களை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறித்துள்ளனர்.

    பெங்களூரு:

    சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் மோசடிகள், குற்றச்சம்பவங்கள் குறித்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை அறியாமல் மோசடி கும்பலின் வலையில் சிக்குபவர்கள் பல லட்சங்களை இழந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    அந்த வகையில் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

    அதில், டெலிகிராம் என்ற செயலி மூலம் நேகா என்கிற மெகர் என்ற பெண் தன்னை தொடர்பு கொண்டார். பின்னர் வாட்ஸ்-அப் மூலம் இருவரும் பேச ஆரம்பித்தோம்.

    அப்போது அவர் எனது கணவர் துபாயில் பணிபுரிகிறார். இதனால் நான் தனிமையில் தவிக்கிறேன். உங்களுடன் உடலுறவில் ஈடுபட விரும்புகிறேன் என கூறியதோடு அவரது புகைப்படங்கள் மற்றும் முகவரியை கூறினார்.

    அதன்படி சம்பவத்தன்று நான் மெகர் வீட்டுக்கு சென்றபோது அங்கு அடையாளம் தெரியாத 3 பேர் திடீரென நுழைந்து ஏன் இங்கு வந்தீர்கள் என கூறி என்னை தாக்கினர்.

    பின்னர் என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து ரூ.3 லட்சம் தராவிட்டால் நிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலமாக அழைத்து செல்வோம் என மிரட்டினார். இரவு வரை என்னை சிறைப்பிடித்து வைத்திருந்த அந்த கும்பல் என்னிடம் இருந்த ஏ.டி.எம். கார்டுகளை பறித்து கொண்டதோடு கூடுதலாக ரூ.2 லட்சம் கேட்டனர்.

    அப்போது என்னுடைய கிரெடிட் கார்டு வீட்டில் இருப்பதாக கூறி நான் வீட்டுக்கு முயன்றபோது ஒரு வழியாக அவர்களிடம் இருந்து தப்பித்தேன். என்னை கடத்தி தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அந்த வாலிபரை கடத்தி தாக்கி பணம் பறித்த கும்பலை சேர்ந்த சரண பிரகாஷ், அப்துல் காதர், யாஷின் என்பது தெரிய வந்தது. அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட நேகா என்ற மெகர் மும்பையை சேர்ந்த மாடல் அழகி என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் மும்பை விரைந்து சென்று அவரை பிடித்தனர்.

    மாடல் அழகி நேகா ஹனிடிராப் முறையில் தொழில் அதிபர்கள், வாலிபர்கள் என 50-க்கும் மேற்பட்டோரிடம் செல்போன் செயலிகள் மூலம் உரையாடி உள்ளார்.

    அப்போது கொஞ்சி குலாவி பேசி அவர்களை தனது வலையில் வீழ்த்தி உள்ளார். பின்னர் அவர்களை வீட்டுக்கு வரவழைத்து உள்ளார். அங்கு வருபவர்களை வீட்டு வாசலுக்கு பிகினி உடையில் கிளுகிளுப்பாக சென்று வரவேற்று உள்ளே அழைத்து சென்று விடுவாராம். ஏற்கனவே வீட்டிற்குள் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி உள்ள நிலையில் வீட்டுக்குள் வருபவர்களை நேகா பிகினி உடையில் கட்டி அணைத்ததும் அதனை சரண பிரகாஷ், அப்துல் காதர், யாஷின் ஆகிய 3 பேரும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளனர்.

    பின்னர் அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறித்துள்ளனர். இதுவரை அந்த கும்பல் 50-க்கும் மேற்பட்ட வாலிபர்களிடம் ரூ.35 லட்சத்திற்கும் மேல் பணம் பறித்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணம் கொடுக்க மறுத்தால் அந்த வீடியோவை ‘யூ-டியூப்’பில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் (வயது 53). இவர் லாஸ்பேட்டை பெத்திச்செட்டிப்பேட் புதுத்தெருவில் வசித்து வருகிறார்.

    இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களாக புதிய நம்பரில் இருந்து 'ஹலோ ஜி' என தொடர்ந்து மெசேஜ் வந்துள்ளது. கட்சி நிர்வாகிகள் யாரோ மெசேஜ் அனுப்பி இருப்பதாக கருதி இதனை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

    இந்த நிலையில் கடந்த வாரம் அவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வீடியோ கால் ஒன்று வந்தது. அதனை சாமிநாதன் எடுத்தபோது மறுமுனையில் இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடை ந்த அவர் உடனடியாக செல்போன் அழைப்பை துண்டித்தார்.

    அதையடுத்து அவரது செல்போன் எண்ணுக்கு மற்றொரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியஒரு பெண் சாமிநாதனிடம் செல்போனில் ஆபாச வீடியோவில் பதிவான காட்சி இருப்பதாக கூறி ரூ.50 ஆயிரம் பணம் கேட் டார். பணம் கொடுக்க மறுத்தால் அந்த வீடியோவை 'யூ-டியூப்'பில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் பா.ஜனதா தலைவர் சாமிநாதன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டிய மர்ம பெண்ணை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    புதுவை பா.ஜனதா தலைவரிடம் இளம் பெ ண் ஆபாச வீடியோ அனுப்பி பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், பொதுமக்கள் தங்களின் செல்போன் எண்களுக்கு, புதிய எண்களில் இருந்து வரும் வீடியோ கால்களை ஏற்க வேண்டாம். தற்போது ஆன்லைன் மோசடி கும்பல், வீடியோ கால் மூலமாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆபாச காட்சிகளை வைத்து எதிர் முனையில் இருப்பவர்கள் உரையாடுவது போல காட்சிகளை ஜோடிக்கிறார்கள். இதுபோல் யாரும் பாதிக் கப்பட்டால் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம். உடனடியாக சைபர் கிரைம் போலீஸ் எண் 1930-ல் புகார் அளியுங்கள்' எனத்தெரிவித்தனர்.

    • வாட்ஸ்அப் மூலம் சாமிநாதனுக்கு ஸ்கிரீன் ரெக்கார்டு படத்தை அனுப்பியுள்ளார்.
    • ராஜஸ்தான் வாலிபர் செல்போனில் மிரட்டல் விடுத்த நம்பரை கொண்டு விசாரித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில பா.ஜனதா தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன். இவரது வீடு, லாஸ் பேட்டை பெத்து செட்டிபேட்டை புது வீதியில் உள்ளது.

    இவரது செல்போனுக்கு வாட்ஸ்அப் மூலமாக ஒரு பெண் ஆடையின்றி ஆபாசமாக வீடியோ காலில் தோன்றியுள்ளார். இதை பார்த்து திடுக்கிட்ட சாமிநாதன், உடனடியாக அந்த வீடியோ அழைப்பை துண்டிப்பு செய்தார்.

    அதன்பிறகு, வாட்ஸ்அப் மூலம் சாமிநாதனுக்கு ஸ்கிரீன் ரெக்கார்டு படத்தை அனுப்பியுள்ளார். அது, யூ-டியூப்பில் வீடியோ உள்ளடக்கத்தை பதிவேற்று வதற்கான ஸ்கிரீன் ஷாட் படமாக இருந்தது. வாட்ஸ் அப்பில் அந்த பெண் ஆபாசமாக தோன்றிய வீடியோ அழைப்பை பதிவு செய்து அனுப்பியதுடன், மேலும் சாமிநாதன் பேசுவது போல் சித்தரித்தும் இருந்துள்ளது.

    அதன்பிறகு அவருக்கு செல்போனில் வேறொரு நம்பரில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆண் நபர், ரூ.50 ஆயிரம் பணம் தர வேண்டும். தராவிட்டால் ஆபாச வீடியோவை யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்து சாமிநாதன், புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி

    கேயன், கீர்த்தி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டிய நபர்களை தேடி வருகின்றனர்.

    ராஜஸ்தான் வாலிபர் செல்போனில் மிரட்டல் விடுத்த நம்பரை கொண்டு விசாரித்தனர். இதில் அந்த நபர், ராஜஸ்தானில் இருந்து பேசியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரின் பெயர், ஊர் விவரத்தை கண்டுபிடித்து பிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

    • இளம்பெண் வாடகை காரை முன்பதிவு செய்தார். முன்பதிவு செய்த சில நிமிடங்களிலேயே அவரது குழந்தை அழ ஆரம்பித்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 32 வயது மதிப்புள்ள ஒரு இளம்பெண் 6 வயது சிறுமி மற்றும் 9 மாத கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று தனது வீட்டிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது மகளின் பள்ளிக்கு சென்றுள்ளார்.

    அங்கு பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் அவர் தனது வீட்டிற்கு புறப்பட முயன்றார். அப்போது அந்த இளம்பெண் வாடகை காரை முன்பதிவு செய்தார். முன்பதிவு செய்த சில நிமிடங்களிலேயே அவரது குழந்தை அழ ஆரம்பித்தது. அப்போது ஒரு ஆட்டோவை அழைத்து புறப்பட தயாரானார்.

    அந்த நேரத்தில் வாடகை கார் டிரைவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு தான் 5 கிலோ மீட்டர் தூரம் காரை ஓட்டி வந்து விட்டதாகவும், விரைவில் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்துவிடுவேன் என்று கூறி உள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண் சில நிமிடங்கள் காத்திருந்தார். ஆனாலும் கார் வரவில்லை.

    இதையடுத்து அவர் தனது குழந்தைகளுடன் வாடகை ஆட்டோவில் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் வாடகை கார் டிரைவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு வந்து விட்டதாக தெரிவித்தார். ஆனால் அந்த இளம்பெண் கார் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

    முன்பதிவு செய்த காரை ரத்து செய்ததால் ஆத்திரம் அடைந்த கார் டிரைவர் அந்த இளம்பெண்ணின் வாட்ஸ் அப்பிற்கு ஆபாச போட்டோ, வீடியோக்களை அனுப்பி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    ×