என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பங்குத் தந்தை- பெண் ஆபாச வீடியோ - சமூகவலைதளத்தில் வெளியானதால் பரபரப்பு
- பங்குத்தந்தை ஒரு பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
- தன்னை சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் மிரட்டியதாக குறிப்பிட்டு இருந்தார்.
நாகர்கோவில் :
குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பங்குத் தந்தையாக 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பணியாற்றி வருகிறார்.
இவர் சில நாட்களுக்கு முன்பு தேவாலயம் உள்ள பகுதியில் நின்ற போது, அங்கு ஓரு கார் வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது.
பின்னர் அவர் வைத்திருந்த லேப்-டாப் மற்றும் மொபைலை அந்தக் கும்பல் பறித்துச் சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த சிலர் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில் இது பற்றி புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது தாக்குதலுக்கு உள்ளான பங்குத்தந்தை ஒரு பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடி யோக்களில் பெண்ணுடன் அவர் டிக்-டாக் பாணியில் பாடல் பாடுவது, முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன.
இந்த வீடியோக்கள் வேகமாக பரவி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைப் பார்த்த பலரும் பங்குத் தந்தை மீது ஏற்கனவே பல புகார்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். தேவாலயம் வரும் பெண்களிடம் அவர் தகாத முறையில் பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.
சமூகவலைதளங்களில் வெளியான வீடியோக்கள், பங்குந்தந்தையின் லேப்டாப் மற்றும் மொபைலில் பதிவு செய்யப்பட்டவையாக இருக்கலாம் என்றும், அதனை பறித்துச் சென்றவர்கள் இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் சம்பந்த ப்பட்ட பாதிரியாரின் தந்தை சில நாட்களுக்கு முன்பு கொல்லங்கோடு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தன்னை சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் மிரட்டியதாக குறிப்பிட்டு இருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த மாணவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்