என் மலர்
நீங்கள் தேடியது "நடிகை"
- ஆட்ட நாயகன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.
- மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அவருடன் அரிஹரா என்ற மகனை பெற்றார்.
பிரபல மலையாள நடிகை மீரா வாசுதேவன் மூன்றாவது முறையாக விவாகரத்து செய்துள்ள சம்பவம் கவனம் பெற்று வருகிறது.
மோகன்லாலின் தன்மந்த்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக மீரா உயர்ந்தார்.
தமிழில் உன்னை சரணடைந்தேன், அடங்க மறு, ஜெர்ரி, அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.
இவர் 2005இல் பிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2010 இல் அவரை விவாகரத்து செய்தார்.
தொடர்ந்து மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அவருடன் அரிஹரா என்ற மகனை பெற்றார்.
ஆனால் அந்த உறவும் நீடிக்காமல் அவரை விவாகரத்து செய்த மீரா, 2024 ஏப்ரலில் ஒளிப்பதிவாளர் விபின் புதியங்கத்தை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் மூன்றாவது கணவர் விபினையும் மீரா வாசுதேவன் விவாகரத்து செய்துள்ளார்.
"2025 ஆகஸ்ட் முதல் நான் சிங்கிளாகி விட்டேன். என் வாழ்க்கையின் அழகான மற்றும் அமைதியான கட்டத்தில் இருக்கிறேன்" என்று மீரா வாசுதேவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
- வெவ்வேறு ஐடிகளை உருவாக்கி தொடர்ந்து ஆபாசமான செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.
- ஆனால் அங்கும் அவர் அநாகரிகமாக நடந்துகொண்டார்.
கர்நாடக மாநிலம் வெங்களூருவில் வசிக்கும் 41 வயதான ரஜினி என்ற கன்னட-தெலுங்கு தொலைக்காட்சி சீரியல் நடிகை, பேஸ்புக்கில் ஒருவர் ஆபாச வீடியோக்கள் மற்றும் செய்திகளை அனுப்பி தன்னை துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட நவீன் ஆரம்பத்தில் ஒரு ஐடியிலிருந்து நடிகைக்கு நண்பர் கோரிக்கையை அனுப்பிய நிலையில் நடிகை அதை நிராகரித்தார்.
அந்த நபரை நடிகை ‛பிளாக்' செய்தாலும் வெவ்வேறு ஐடிகளை உருவாக்கி தொடர்ந்து ஆபாசமான செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.
மூன்று மாதங்களாக தொடர்ந்த துன்புறுத்தல் தாங்க முடியாமல், நடிகை நவம்பர் 1ஆம் தேதி நாகரபாவி பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சந்திப்பதாகக் கூறி அவரை வரவழைத்து நேரடியாகக் கண்டித்தார்.
ஆனால் அங்கும் அவர் அநாகரிகமாக நடந்துகொண்டதைத் தொடர்ந்து, நடிகை உடனடியாக போலீஸாரை அழைத்துள்ளார். நடிகையின் புகாரை அடுத்து போலீசார் நவீனை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
- 16 வயதில் அவர் வழங்கிய நடிப்புப்பாக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை ஜைரா வென்றார்.
- மத காரணங்களுக்காக நடிப்பதை விட்டுவிடுவதாக ஜைரா வாசிம் 2019 ஆம் ஆண்டு அறிவித்தார்.
அமீர் கான் நடிப்பில் கடந்த 2016 இல் வெளியாகி உலகளவில் வரவேற்பை பெற்று வசூலை குவித்த படம் தங்கல். பஞ்சாபில் சமூக கண்ணோட்டங்களை எதிர்த்து தனது 2 மகள்களை மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கிய தந்தையின் உண்மை கதையை தழுவி இப்படம் அமைந்தது.
இதில் அமீர் கானின் இளைய மகளாக ஜைரா வாசிம் நடித்தார். நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஜைரா வாசிம். மல்யுத்த வீராங்கனை கீதா போகத் வேடத்தில் 16 வயதில் அவர் வழங்கிய நடிப்புப்பாக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை ஜைரா வென்றார்.

இதன் பின் 2017 ஆம் ஆண்டு வெளியான அமீர் கானின் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்திலும் ஜைரா நடித்தார்.
மத காரணங்களுக்காக நடிப்பதை விட்டுவிடுவதாக ஜைரா வாசிம் 2019 ஆம் ஆண்டு அறிவித்தார். அதன் பிறகு, ஜைரா தனது மத நம்பிக்கை பற்றிய செய்திகளை அடிக்கடி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது 24 வயதாகும் ஜைரா தனது நிகாஹ் (திருமணம்) பற்றிய செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் தனது மற்றும் மணமகனின் முகம் தெரியாத புகைப்படத்தை ஜைரா பகிர்ந்துகொண்டு திருமணம் நடைபெற்று முடிந்ததை அறிவித்துள்ளார்.
- தொழிலதிபரை திருமணம் செய்ததில் இருந்து காம்னா படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
- 2015 இல் சந்திரிகா என்ற படத்திற்கு பிறகு மகள்களை வளர்க்க வேண்டி அவரின் திரை வாழ்க்கை நின்றுபோனது.
சுமார் 10 வருடங்களை ரீவைட் செய்து பார்த்தால் நடிகை காம்னா ஜேத்மாலினியை தமிழ், கன்னடம், தெலுங்கில் வெளிவந்த படங்களில் காணலாம்.
குறிப்பாக ஜெயம் ரவியின் இதயத்திருடன் படத்தின் ஹீரோயினாக ஜேத்மாலினியை தமிழ் ரசிகர்கள் அடையாளம் காணக்கூடும்.
கடந்த 2014 இல் தொழிலதிபரை திருமணம் செய்ததில் இருந்து காம்னா படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
2015 இல் சந்திரிகா என்ற படத்திற்கு பிறகு மகள்களை வளர்க்க வேண்டி அவரின் திரை வாழ்க்கை நின்றுபோனது.
இந்நிலையில் 10 வருடங்கள் கழித்து 2025 இல் தெலுங்கு படம் மூலம் காம்னா மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்
தெலுங்கில் உருவாகி உள்ள "கேராம்ப்" படத்தில் காம்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற 18-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.
- முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் கோரிக்கை விடுத்திருந்தார்.
- எம்.என். ராஜம் அவர்களின் இல்லத்திற்கு முதலமைச்சர் நேரில் சென்றார்.
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜமை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்
நேரில் சந்திக்க வேண்டும் என்ற பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம்-ன் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அவரை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பான புகைப்படத்தை முதலமைச்சர் அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், "பழம்பெரும் நடிகை திருமதி எம்.என். ராஜம் அவர்கள் தனது 90-வது பிறந்தநாளையொட்டி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்றிடும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, அடையாறிலுள்ள பழம்பெரும் நடிகை திருமதி எம்.என். ராஜம் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பேசினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 14 கிலோ தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்த ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.
- ரன்யா ராவுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 3 ஆம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 14 கிலோ தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்த ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2.67 கோடி பணம் மற்றும் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், ரன்யா ராவுக்கு சொந்தமான ரூ.34 கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. தங்க கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த ஓராண்டு சிறை தண்டனை காலத்தில் ரன்யா ராவுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- பிரபல கொரியன் நடிகையாக இருந்தவர் Kang Seo Ha.
- இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
பிரபல கொரியன் நடிகையாக இருந்தவர் Kang Seo Ha. இவர் நடித்த Schoolgirl Detectives, Assembly, First Love Again,Through the Waves, The Flower in Prison, and Heart Surgeons போன்ற இணையத்தொடர்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இவர் கடந்த சில ஆண்டுகளாக வயிற்றில் புற்று நோய் பாதிkகப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு வயது 31 என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது இறுதி சடங்கு நாளை மாலை சியோல் ஊரில் நடைப்பெற இருக்கிறது. இவரது இறப்பிற்கு அவரது ரசிகர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் அவர்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
- 14 கிலோ தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்த ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.
- அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2.67 கோடி பணம் கைப்பற்றப்பட்டன.
நடிகை ரன்யா ராவ் மீதான தங்கம் கடத்தல் வழக்கு குறித்து டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்ச் 3 ஆம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 14 கிலோ தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்த ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2.67 கோடி பணம் மற்றும் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், ரன்யா ராவுக்கு சொந்தமான ரூ.34 கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. தங்க கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
- ஸ்ரீலீலா மணப்பெண் அலங்காரத்தில் இருப்பதையும், சிலர் அவரது கன்னங்களில் மஞ்சள் தடவுவதையும் காட்டுகின்றன.
- அவர் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நாயகி ஸ்ரீலீலா இளைஞர்கள் மத்தியில் தற்போதைய சென்ஷேசன். 23 வயதாகும் இவர் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். சிவகார்திகேகேயனின் பராசக்தி படம் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார். இதற்கு மத்தியில் குழந்தைகளைத் தத்தெடுத்து ஸ்ரீலீலா வளர்த்து வருகிறார்.
சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீலீலா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது பலரையும் புருவம் உயர்ந்த வைத்துள்ளது.
இந்தப் புகைப்படங்கள் ஸ்ரீலீலா மணப்பெண் அலங்காரத்தில் இருப்பதையும், சிலர் அவரது கன்னங்களில் மஞ்சள் தடவுவதையும் காட்டுகின்றன.
கூடுதலாக, "இன்று எனக்கு ஒரு பெரிய நாள். விரைவில் முழு விவரங்களையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், விரைவில் வருகிறேன்" என்று ஸ்ரீலீலா பதிவிட்டுள்ளதால் அவர் திருமணம் செய்து கொள்ள உள்ளாரா என்ற ஊகங்கள் எழுந்தன.

இந்நிலையில் இதுகுறித்து ஸ்ரீலீலா விளக்கம் அளித்துள்ளார். தனது வீட்டில் நடந்த கொண்டாட்டத்தை பற்றி விளக்கிய அவர், "எனது பிறந்தநாளுக்கு முந்தைய கொண்டாட்டங்களை நாங்கள் வீட்டில் இப்படித்தான் கொண்டாடினோம்.
இதற்கான அனைத்து திட்டமிடலையும் என் அம்மா கவனித்துக் கொண்டார்" என்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இது அவரின் திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஸ்ரீ ரீலீலா ஜூன் 14 ஆம் தேதி தனது 24வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- குழந்தைகளைத் தத்தெடுத்து ஸ்ரீலீலா வளர்ந்து வருகிறார்.
- சிவகார்திகேகேயனின் பராசக்தி படம் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார்.
தெலுங்கு சினிமாவின் இளம் நாயகி ஸ்ரீலீலா இளைஞர்கள் மத்தியில் தற்போதைய சென்ஷேசன். 23 வயதாகும் இவர் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். சிவகார்திகேகேயனின் பராசக்தி படம் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார். இதற்கு மத்தியில் குழந்தைகளைத் தத்தெடுத்து ஸ்ரீலீலா வளர்த்து வருகிறார்.
சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீலீலா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது பலரையும் புருவம் உயர்ந்த வைத்துள்ளது.
இந்தப் புகைப்படங்கள் ஸ்ரீலீலா மணப்பெண் அலங்காரத்தில் இருப்பதையும், சிலர் அவரது கன்னங்களில் மஞ்சள் தடவுவதையும் காட்டுகின்றன.
கூடுதலாக, "இன்று எனக்கு ஒரு பெரிய நாள். விரைவில் முழு விவரங்களையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், விரைவில் வருகிறேன்" என்று ஸ்ரீலீலா பதிவிட்டுள்ளதால் அவர் திருமணம் செய்து கொள்ள உள்ளாரா என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. இது ஸ்ரீலீலா ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி உள்ளது.
- ரன்யா ராவ் ஜாமின் பெற்றபோதிலும் அவர் விடுவிக்கப்பட மாட்டார்.
- ரன்யா மீதான COFEPOSA வழக்கை எதிர்த்து அவரது தாய் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ரன்யா ராவ் மற்றும் இணைக் குற்றவாளியான தருண் கொண்டராஜுஆகியோருக்கு ரூ.2 லட்சம் பிணையுடன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து குற்றவியல் நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியுள்ளது.
விசாரணைக்குத் தவறாமல் ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது, நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது என இருவருக்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
ரன்யா ராவ் ஜாமின் பெற்றபோதிலும் அவர் விடுவிக்கப்பட மாட்டார். அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1974 (COFEPOSA) இன் கீழ் பதியப்பட்ட வழக்கால் அவர் சிறையிலேயே இருக்கும் சூழல் உருவாகி உள்ளது. ரன்யா மீதான COFEPOSA வழக்கை எதிர்த்து அவரது தாய் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வழியாக துபாயில் இருந்து 14.2 கிலோகிராம் வெளிநாட்டு தங்கத்தை கொண்டு வந்ததாக மார்ச் 3 ஆம் தேதி வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) ரன்யா ராவை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
- யாக குண்டத்தில் இருந்த தீயில் அனுமன் உருவம் தோன்றியது.
- நடிகை அவருடைய வீட்டிற்கு சஞ்சீவினி இல்லம் என பெயரிட்டுள்ளார்.
திருப்பதி:
தெலுங்கு டி.வி. நடிகை அனசுயா பரத்வாஜ். சமீபத்தில் ஒரு புதிய வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். அப்போது வீட்டில் கணபதி ஹோமம் பூஜை நடத்தினர்.
யாக குண்டத்தில் இருந்த தீயில் அனுமன் உருவம் தோன்றியது. இதனை செல்போனில் படம் பிடித்த நடிகை அந்தப் படத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில் ஜெய் ஹனுமான் என்று நினைக்காமல் நான் எதையும் செய்வதில்லை. நான் அனுமனை என் தந்தையாகக் கருதுகிறேன் என்பது என் அன்புக்குரிய அனைவருக்கும் தெரியும்.
நாம் எந்த கடவுளுக்கும் சத்தமாக ஏதாவது சொல்ல விரும்பினால் அதை ஒரு ஹோமம் மூலம் சொல்கிறோம். அனுமன்ஜி எங்கள் குடும்பப் பெயரையும், எங்கள் வீட்டையும் எங்களையும் ஆசீர்வதிக்க வந்தார்.
எல்லோரும் ஆன்மீகவாதிகள் அல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு ஏற்பட்ட உணர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது என தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகை அவருடைய வீட்டிற்கு சஞ்சீவினி இல்லம் என பெயரிட்டுள்ளார்.






