என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aamir khan"

    • 16 வயதில் அவர் வழங்கிய நடிப்புப்பாக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை ஜைரா வென்றார்.
    • மத காரணங்களுக்காக நடிப்பதை விட்டுவிடுவதாக ஜைரா வாசிம் 2019 ஆம் ஆண்டு அறிவித்தார்.

    அமீர் கான் நடிப்பில் கடந்த 2016 இல் வெளியாகி உலகளவில் வரவேற்பை பெற்று வசூலை குவித்த படம் தங்கல். பஞ்சாபில் சமூக கண்ணோட்டங்களை எதிர்த்து தனது 2 மகள்களை மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கிய தந்தையின் உண்மை கதையை தழுவி இப்படம் அமைந்தது.

    இதில் அமீர் கானின் இளைய மகளாக ஜைரா வாசிம் நடித்தார். நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஜைரா வாசிம். மல்யுத்த வீராங்கனை கீதா போகத் வேடத்தில் 16 வயதில் அவர் வழங்கிய நடிப்புப்பாக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை ஜைரா வென்றார்.

    இதன் பின் 2017 ஆம் ஆண்டு வெளியான அமீர் கானின் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்திலும் ஜைரா நடித்தார்.

    மத காரணங்களுக்காக நடிப்பதை விட்டுவிடுவதாக ஜைரா வாசிம் 2019 ஆம் ஆண்டு அறிவித்தார். அதன் பிறகு, ஜைரா  தனது மத நம்பிக்கை பற்றிய செய்திகளை அடிக்கடி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.

    இந்நிலையில் தற்போது 24 வயதாகும் ஜைரா தனது நிகாஹ் (திருமணம்) பற்றிய செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் தனது மற்றும் மணமகனின் முகம் தெரியாத புகைப்படத்தை ஜைரா பகிர்ந்துகொண்டு திருமணம் நடைபெற்று முடிந்ததை அறிவித்துள்ளார். 

    • ரியாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் 3 கான்களும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
    • நாங்கள் ஒருபோதும் ஸ்டார்கள் என்று கருத்திக்கொண்டதில்லை என்று சல்மான் கான் தெரிவித்தார்.

    பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார்களான ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் ஒன்றாக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய சல்மான் கான், "எங்கள் மூவரையும் (ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர் கான்" நாங்கள் ஒருபோதும் ஸ்டார்கள் என்று கருத்திக்கொண்டதில்லை" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து பேசிய ஷாருக் கான், "அமீர்கான் மிகசிறந்த நடிகர். ஒரு கதையைச் சொல்ல அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். சல்மான் கான் அவரது இதயத்திலிருந்து மிக சுதந்திரமாக வேலையை செய்கிறார். நான் இந்த இரண்டையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    இறுதியாக பேசிய அமீர் கான், "நாங்கள் மூவரும் ஒரே படத்தில் ஒன்றாக நடிக்க தயாராக இருக்கிறோம். அதற்கேற்ற சரியான கதை அமைந்தால் நாங்கள் மூவரும் ஒரே படத்தில் நடிப்போம்" என்று தெரிவித்தார். 

    • அமீர் கான் சமீபத்தில் பாலிவுட்டில் சித்தாரே ஜமீன் பர் மற்றும் தமிழில் கூலி திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
    • ஜெஸிகா ஹைன்ஸ் ஒரு பிரிட்டிஷ் பத்திரைக்கையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

    அமீர் கான் சமீபத்தில் பாலிவுட்டில் சித்தாரே ஜமீன் பர் மற்றும் தமிழில் கூலி திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

    பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் மீது அவரது சகோதரர், நடிகர் ஃபைசல் கான் வெளியிட்ட அதிர்ச்சிகரமான தகவலால் மீண்டும் சர்ச்சை உருவாக்கியுள்ளன. இன்று மும்பையில் நடைபெற்ற புகைப்பட அறிக்கை நிகழ்ச்சியில் ஃபைசல், அமீர் மீது பலம் மிகுந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    ஃபைசல் கான் தெரிவித்ததாவது, அமீர் தனது முதல் மனைவி ரீனா தட்டாவுடன் திருமணம் செய்து, பின்னர் விவாகரத்துக்குப் பிறகு, பிரிட்டிஷ் பத்திரிகையாளரான ஜெஸிக்கா ஹைன்ஸ் உடன் உறவு கொண்டார். இந்த உறவில் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு ஒரு குழந்தை பிறந்து உள்ளதாகவும் அவர் முன்வைத்தார்.


     



    யார் இந்த ஜெஸிகா ஹைன்ஸ்?

    ஜெஸிகா ஹைன்ஸ் ஒரு பிரிட்டிஷ் பத்திரைக்கையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவருக்கும் இந்தி திரைத்துறைக்கும் நல்ல தொடர்பு இருக்கிறது. இவர் நடிகர் அமிதாப் பச்சனின் ஆவணப்படத்தில் பணியாற்ற இந்தியா வந்தார். அமீர் கான் மற்றும் ஜெஸிக்கா இருவரும் 2005 ஆம் ஆண்டு குலாம் திரைப்பட படப்பிடிப்பின் போது சந்தித்ததாக கூறப்படுகிறது.

    அப்பொழுது இவர்கள் இருவருக்கும் உறவு ஏற்பட்டு அதனால் ஜெஸிக்கா கர்ப்பமானாள், அந்த கருவை அமீர்கான் கலைக்க சொன்னதாகவும் ஆனால் ஜெஸிக்கா அதனை மறுத்து  2000 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்ததாகவும் அவருக்கு ஜான் என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதற்கு பின் 2007 ஆம் ஆண்டு ஜெஸிக்கா லண்டனை சேர்ந்த தொழிலதிபர் வில்லியமை திருமணம் செய்துக் கொண்டார்.

    சமீபத்தில் ஜானின் புகைப்படம் ஒரு புகழ் பெற்ற பத்திரைக்கையில் வந்தது, அது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தற்பொழுது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக அமீர்கான் தரப்பு மற்றும் அவரது குடும்பத்தினர் ஃபைசல் கான் கூறுவது வன்மம் நிறைந்துள்ளதாக இருக்கிறது. அதில் எதும் உண்மைதன்மை இல்லை என பதிலளித்துள்ளனர்.

    • நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
    • கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.

    படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் அமெரிக்கா மற்றும் ஓவர்சீஸ் நாடுகளில் தொடங்கி அதிரடி புக்கிங்ஸ் நடந்து வருகிறது. படத்தின் பிரீமியர் ஷோவிற்கு வட அமெரிக்கா நாட்டில் 50,000-க்கு மேற்பட்ட டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு, கேரளம் மற்றும் வட இந்தியாவில் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது. முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து ஷோக்களும் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளது. படத்தின் மீது ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் படத்தின் முன்பதிவுகளில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

    • கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி.
    • திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். இவர்களுடன் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

    படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.

    படத்தில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார்.தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்காக சொல்லப்பட்டுள்ளது.

    திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் விஷ்ணு விஷாலின் மகளுக்கு நடிகர் அமீர் கான் மிரா என்ற பெயரை வைத்தார். மேலும் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்றில் விஷ்ணு விஷால் கூறியது " ஓஹோ எந்தன் பேபி படத்தை அமீர் கான் சார் பார்த்தார். பார்த்துவிட்டு படம் முடியும் போது ஆனந்த கண்ணீர் விட்டு. இம்மாதிரியான உறவுமுறை பற்றி கூறும் திரைப்படங்கள் தற்பொழுது குறைவாகிவிட்டது . திரைப்படம் நன்றாக இருக்கிறது என பாராட்டினார்"

    • விஷ்ணு விஷால், ஜுவாலா குட்டா என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
    • இந்த தம்பதிக்கு அண்மையில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு அண்மையில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

    இந்நிலையில், விஷ்ணு விஷால் - ஜுவாலா குட்டா தம்பதியின் மகளுக்கு 'மிரா' என நடிகர் அமிர்கான் பெயர் சூட்டியுள்ளார்.

    இது தொடர்பான புகைப்படங்களை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

    • லால் சிங் சத்தா' படத்தின் தோல்விக்குப் பின் உடைந்து போய்விட்டேன்.
    • சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.

    அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.

    இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை ஆர்.எஸ் பிரசன்னா இயக்கியுள்ளார். படத்தை அமீர் கான் தயாரித்துள்ளார். இப்படத்தில் அமீர் கானுடன் ஜெனிலியாவும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.

    இந்நிலையில், சித்தாரே ஜமீன் பர் படம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டதாக அமீர் கான் தெரிவித்துள்ளார்.

    அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய அமீர் கான், "லால் சிங் சத்தா' படத்தின் தோல்விக்குப் பின் உடைந்து போய்விட்டேன். அதனால் நடிப்பிலிருந்து பிரேக் எடுத்துக்கொள்ள விரும்பினேன். இது குறித்து இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னாவிடம் தெரிவித்தேன். ஒரு நடிகராக இல்லாமல் தயாரிப்பாளராக திரைத்துறையில் தொடருங்கள் என்று அவர் என்னிடம் சொன்னார். நான் அதற்கு ஒப்புக் கொண்டேன்.

    பின்னர் ஃபர்ஹான் அக்தர் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரிடம் சித்தாரே ஜமீன் பர் படத்தில் நடிக்க பேசினோம். அவர்களுக்கு இப்படத்தின் கதை மிகவும் பிடித்திருந்தது.இந்தி மற்றும் தமிழில் இப்படத்தை எடுக்க திட்டமிட்டு, இருவரின் கால்சீட் தேதிகளை வாங்கினோம்.

    இப்படத்தின் கதை விவாதத்தின் போதுதான் நாம் ஏன் இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என எனக்கு தோன்றியது. அந்த அளவுக்கு இப்படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது. நான் இப்படத்தில் நடிக்க இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னா ஒப்புக் கொண்டார். பின்னர் பர்ஹான் அக்தர் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரிடமும் பேசி இதுகுறித்து மன்னிப்பு கோரினேன். அவர்களுக்கு இது முதலில் ஏமாற்றமாக இருந்தாலும் பின்னர் எனது சூழ்நிலைமையை புரிந்துக் கொண்டார்கள்" என்று அமீர் கான் தெரிவித்தார்.

    • சிதாரே ஜமீன் பர் படத்தை அமீர் கான் தயாரித்துள்ளார்.
    • இப்படத்தில் அமீர் கானுடன் ஜெனிலியாவும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை ஆர்.எஸ் பிரசன்னா இயக்கியுள்ளார். படத்தை அமீர் கான் தயாரித்துள்ளார். இப்படத்தில் அமீர் கானுடன் ஜெனிலியாவும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில், அமீர் கானின் சித்தாரே ஜமீன் பர் படத்தை சச்சின் டெண்டுல்கர் பாராட்டி பேசி வீடியோ வெளியியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், சித்தாரே ஜமீன் பர் மிகவும் நல்ல படம். இப்படம் உங்களை சிரிக்கவும் வைக்கும் அழவும் வைக்கும். விளையாட்டு நமக்கு எல்லாவற்றையும் கற்று கொடுக்கும் சக்தி கொண்டது என்று நான் எப்போதும் கூறி வருகிறேன்" என்று பேசினார்

    • நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
    • கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அமீர் கான் கூலி திரைப்படத்தில் அவருடைய கதாப்பாத்திரத்தை பற்றி கூறியுள்ளார்.

    அதில் அவர் " கூலி படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் மிகவும் சுவாரசியமானது. என்னுடைய கதாப்பாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும். ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவர்மேல் எனக்கு நிறைய மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. லோகேஷ் என்னிடம் இது ரஜினி சாருடைய திரைப்படம் என கூற, நான் கதையை கேட்காமல் அவருக்கு ஓகே சொன்னேன்.எதுவாக இருந்தாலும் நான் நடிக்கிறேன்' என கூறினேன்." என கூறியுள்ளார்.

    • நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
    • கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அமீர் கான் கூலி திரைப்படத்தில் அவருடைய கதாப்பாத்திரத்தை பற்றி கூறியுள்ளார்.

    அதில் அவர் " கூலி படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் மிகவும் சுவாரசியமானது. என்னுடைய கதாப்பாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும்" என கூறியுள்ளார்.

    திரைப்படம் கண்டிப்பாக வட இந்தியாவிலும் நல்ல வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • ஜூன் 20ம் தேதி “சீதாரே ஜமீன் பர்” வெளியீட்டிற்காக காத்திருக்கும் அமீர் கான்.
    • லோகேஷ் கனகராஜ் மற்றும் நான் ஒரு படத்தில் பணிபுரிய உள்ளோம்.

    லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இயக்குனர். கமல்ஹாசன் நடித்த "விக்ரம்", மற்றும் விஜய்யுடன் "மாஸ்டர்", "லியோ" மற்றும் கார்த்தியுடன் "கைதி" போன்ற அதிரடி மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களை எடுத்தவர்.

    இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் இணைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    வரும் ஜூன் 20ம் தேதி "சீதாரே ஜமீன் பர்" வெளியீட்டிற்காக காத்திருக்கும் அமீர் கான், செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்த தகவல் உறுதிப்படுத்தினார்.

    அப்போது அவர்,"லோகேஷ் கனகராஜ் மற்றும் நான் ஒரு படத்தில் பணிபுரிய உள்ளோம். இது ஒரு சூப்பர் ஹீரோ படம். இது ஒரு பெரிய அளவிலான அதிரடி படம். அது அடுத்த ஆண்டு, இரண்டாம் பாதியில் தொடங்கும்," என்றார்.

    2014-ம் ஆண்டு வெளியான தனது நகைச்சுவை படமான"பிகே" படத்தின் தொடர்ச்சி குறித்த செய்திகளை ஆமிர் கான் நிராகரித்தார். அதற்கு பதிலாக, இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க "பிகே" இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் மீண்டும் இணைவதாக அவர் கூறினார்.

    • அமீர் கான் தற்பொழுது சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது.

    அமீர் கான் தற்பொழுது சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை ஆர்.எஸ் பிரசன்னா இயக்கியுள்ளார். படத்தை அமீர் கான் தயாரித்துள்ளார்.

    அமீர் கானுடன் ஜெனிலியா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அமீர் கான் இந்த படத்தை எந்த ஓடிடி தளங்களிலும் விற்க மாட்டேன் என்ற முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திரைப்படம் வெளியாகி 2 மாதங்கள் கழித்து யூடியூபில் பே பெர் வியூ என்ற ஆப்ஷனில் வெளியிடப்போவதாக கூறியுள்ளார். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படி செய்தல் டிஜிடெல் விற்பனையில் இது ஒரு புது முயற்சியாக கருதப்படும்.

    ×