என் மலர்
நீங்கள் தேடியது "sachin"
- சிறப்பாக விளையாடிய விராட் கோலி 135 ரன்கள் விளாசி அவுட்டானார்.
- இது ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 52-வது சதமாகும்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 135 ரன்கள் விளாசி அவுட்டானார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 52-வது சதமாகும்.
இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மெத்தியூ ப்ரீட்ஸ்கி 72 ரன்னும் மார்கோ யான்சன் 70 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடி காட்டிய கார்பின் போஸ் 67 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதனால் 49.2 ஓவர்களில் தென் ஆபிரிக்க அணி 332 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார். இது சர்வதேச போட்டிகளில் அவர் பெறும் 70வது ஆட்ட நாயகன் விருதாகும்.
அதிக ஆட்டநாயகன் விருது பெற்றவர்களின் பட்டியலில் சச்சின் (76) முதலிடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 2 ஆம் இடத்தில உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இப்படம் 3 BHK வீடு வாங்க ஆசைப்படும் குடும்பம் பற்றிய கதையாகும்.
- இப்படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.
சித்தார்த் 40-வது திரைப்படமாக வெளியான 3 BHK மக்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.
இப்படம் 3 BHK வீடு வாங்க ஆசைப்படும் குடும்பம் பற்றிய கதையாகும். இப்படத்தை பார்த்து பல்வேறு பிரபலங்கள் பாராட்டினார். குறிப்பாக நடிகர் சிம்பு, இயக்குநர் ராம், ரவி மோகன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டினர்.
இந்நிலையில், 3 BHK படம் பார்த்து ரசித்ததை Reddit மூலம் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் பகிர்ந்துள்ளார்.
இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த அப்படத்தின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ், "நன்றி சச்சின் சார்... நீங்கள் தான் என் சிறுவயது ஹீரோ. இந்த வாழ்த்து, எங்க படத்துக்கு பெரிய அங்கீகாரம்!" என்று நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட் முழுமையாக மெய்சிலிர்க்க வைக்கிறது.
- டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பானது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
மும்பை:
லண்டன் ஓவல் மைதானத்தில் பரபரப்பான 5-வது டெஸ்ட்டில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிகிறது.
கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட் முழுமையாக மெய்சிலிர்க்க வைக்கிறது. தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்து உள்ளது. இந்திய அணியின் செயல்பாடுகளுக்கு 10-க்கு10 மதிப்பெண் கொடுப்பேன். இந்திய அணியின் சூப்பர்மேன்கள் கலக்கி விட்டனர். என்ன ஒரு அற்புதமான வெற்றி.
கங்குலி:-
இந்திய அணி மிகவும் அற்புதமாக செயல்பட்டு டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது. டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பானது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணிக்கும், பயிற்சியாளர்கள் குழுவுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் எந்த பகுதியில் விளையாடினாலும் சிராஜ் இந்திய அணியை அவ்வளவு எளிதாக தோற்கவிடமாட்டார். ஓவல் டெஸ்டை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டனர்.
வீராட் கோலி:-
இந்திய அணியின் சிறந்த வெற்றி. சிராஜ், பிரசித் கிருஷ்ணாவின் மன உறுதியும், தொடர் முயற்சியும் இந்த அற்புதமான வெற்றியை நமக்கு கொடுத்துள்ளது. அணிக்காக எல்லாவற்றையும் அர்ப்பணிக்கும் சிராஜுக்கு சிறப்பு பாராட்டு. அவரை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அனில் கும்ப்ளே:-
இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. என்ன ஒரு அருமையான டெஸ்ட் தொடர். அற்புதமாக ஆடிய 2 அணி வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள். முகமது சிராஜ் , பிரசித் கிருஷ்ணா அபாரமாக செயல்பட்டனர் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்.
புஜாரா:-
வரலாற்று வெற்றி. இந்திய அணியின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. சுவாரசியமாக சென்ற இந்த தொடரில் சிறப்பான முடிவு கிடைத்து உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டைப்போன்று சிறந்தது வேறு ஒன்றுமில்லை.
ஹர்பஜன் சிங்:-
முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா அபாரமாக பந்துவீசினார்கள். இந்திய அணிக்கு என்ன ஒரு சிறப்பான வெற்றி. அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
ரகானே:-
டெஸ்ட் கிரிக்கெட் இதைவிட சிறப்பானதாக இருக்க முடியாது. மிகவும் பரபரப்பான போட்டி. அழுத்தமான சூழலில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்.
- இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது.
- முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஜோஷ் டாங்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜாக் கிராலி, ஹாரி புரூக் அரை சதம் அடித்தனர்.
இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 23 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா அணி 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 53 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜெய்ஸ்வால் 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இப்போட்டியில் ஜோ ரூட் 29 ரன்கள் அடித்து அவுட்டானார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் தங்களது சொந்த மண்ணில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் சச்சினை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்திற்கு ஜோ ரூட் ( 7220 ரன்கள்) முன்னேறினார்.
சொந்த மண்ணில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங் 7,578 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இந்தியாவில் சச்சின் 7,216 ரன்கள் அடித்துள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேற்றம்.
- சச்சின் சாதனையை முறியடிக்க இன்னும் 2542 ரன்கள்தான் தேவை.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இது அவருடைய 38ஆவது சர்வதேச டெஸ்ட் சதமாகும். இதன்மூலம் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியில் சங்கக்கரா சாதனையுடன் இணைந்துள்ளார்.
மேலும், 120 ரன்களை தொட்டபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 13379 ரன்கள் அடித்து, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன்னதாக 13378 ரன்களுடன் ரிக்கி பாண்டிங் 2ஆவது இடத்தில் இருந்தார். அவரது சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 15,921 ரன்களுடனும் முதலிடத்தில் உள்ளார். சச்சின் சாதனையை முறியடிக்க இன்னும் 2542 ரன்கள் தேவை.
இந்த நிலையில் ஜோ ரூட்டால் சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடிக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-
ஜோ ரூட்டின் வயது என்ன? 35 வயதுதான் ஆகிறது. பல வருடங்களாக அவரது ரன் குவிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) அது அதிகரித்துக் கொண்டிருந்தது. அவரால் சச்சின் அடித்த ரன்னை விரட்ட முடியுமா? பார்ப்போம். அவர் அதைச் செய்யக்கூடும்.
இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஜோ ரூட்டுக்கு தற்போது 35 வயதாகிறது. குறைந்த பட்சம் 40 வயது வரை விளையாட வாய்ப்புள்ளது. இதே ஃபார்மில் இருந்தால் 2542 ரன்கள் சாத்தியமே. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- வெற்றிக்கு மிக அருகில் வந்து விட்டோம். ஜடேஜா, பும்ரா, சிராஜ் இறுதிவரை போராடினார்கள்.
- 193 ரன்கள் என்பது பெரிய ஸ்கோர் கிடையாது. ஜடேஜா கடுமையாக போராடினார்
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.
ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி. இறுதிவரை போராடிய ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
லார்ட்ஸ் டெஸ்டில் கடைசி வரை போராடியதற்காக இந்திய அணியை சச்சின் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-
வெற்றிக்கு மிக அருகில் வந்து விட்டோம். ஜடேஜா, பும்ரா, சிராஜ் இறுதிவரை போராடினார்கள். நன்றாக முயற்சித்தார்கள். இங்கிலாந்து சிறப்பாக பந்து வீசி அழுத்தத்தை கொடுத்தது. அவர்கள் விரும்பிய முடிவை ஏற்படுத்திக் கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்தியாவின் தோல்வியால் முன்னாள் கேப்டன் கங்குலி ஏமாற்றம் அடைந்து உள்ளார். அவர் கூறும் போது, "என்ன ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி. ஆனால் இந்திய அணி வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம் அளிக் கிறது. வெல்ல வேண்டிய வாய்ப்பை தவறவிட்டு விட்டோம். 193 ரன்கள் என்பது பெரிய ஸ்கோர் கிடையாது. ஜடேஜா கடுமையாக போராடினார்" என்றார்.
- திலீப் ஜோஷி டெஸ்டில் 6 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
- இந்திய அணிக்காக 33 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.
இருதய கோளாறு காரணமாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் ஜோஷி (77) காலமானார்.
இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், 1979-83 காலத்தில் இந்திய அணிக்காக 33 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 6 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
திலீப் ஜோஷி இறப்பிற்கு சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி உள்ளிட்ட மூத்த கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
- சிதாரே ஜமீன் பர் படத்தை அமீர் கான் தயாரித்துள்ளார்.
- இப்படத்தில் அமீர் கானுடன் ஜெனிலியாவும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை ஆர்.எஸ் பிரசன்னா இயக்கியுள்ளார். படத்தை அமீர் கான் தயாரித்துள்ளார். இப்படத்தில் அமீர் கானுடன் ஜெனிலியாவும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அமீர் கானின் சித்தாரே ஜமீன் பர் படத்தை சச்சின் டெண்டுல்கர் பாராட்டி பேசி வீடியோ வெளியியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சித்தாரே ஜமீன் பர் மிகவும் நல்ல படம். இப்படம் உங்களை சிரிக்கவும் வைக்கும் அழவும் வைக்கும். விளையாட்டு நமக்கு எல்லாவற்றையும் கற்று கொடுக்கும் சக்தி கொண்டது என்று நான் எப்போதும் கூறி வருகிறேன்" என்று பேசினார்
- இந்த அதிரடி ஆட்டத்தை முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி பாராட்டினர்.
- இந்த பதிவு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த டெஸ்ட் போட்டியில், இந்தியா 359/3 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (101), ஷுப்மான் கில் (127) சதம் அடித்தனர். ரிஷப் பந்த் 65 ரன்கள் எடுத்தார்.
இந்த அதிரடி ஆட்டத்தை முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி பாராட்டினர்.
2002ல் ஹெடிங்லியில் இங்கிலாந்துக்கு எதிராக தாங்கள் விளையாடிய சிறப்பான ஆட்டத்தை இருவரும் எக்ஸ் சமூக வலைதளத்தில் நினைவு கூர்ந்தனர்.

சச்சின் 193 ரன்களும், கங்குலி 128 ரன்களும் எடுத்த அந்தப் போட்டியில், ராகுல் டிராவிட் 148 ரன்கள் எடுத்திருந்தார்.
கங்குலி, "இந்த முறை இந்திய அணியில் 4 சதம் அடிக்க வாய்ப்புள்ளது, பந்த் மற்றும் கருண் ஆகியோர் சிறப்பாக விளையாடலாம், 2002 இல் முதல் நாள் களம் இதை விட சுட்டறு வித்தியாசமாக இருந்தது" என்றும் கருத்து தெரிவித்தார். இந்த பதிவு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
- முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது
- இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் அடித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களும் அடித்தனர்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 5 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள்முடிவில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் பவுமா 3 ரன்களுடனும் பெடிங்ஹாம் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சச்சினின் மிக முக்கியமான சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.
ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அதிக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சினை ஸ்டீவ் ஸ்மித் முந்தியுள்ளார்.
ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் சச்சின் 6 அரைசதங்கள் நடித்துள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 7 அரைசதங்கள் அடித்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.
அதே சமயம் இப்பட்டியலில் 10 அரைசதங்களுடன் யாரும் நெருங்க முடியாத உயரத்தில் விராட் கோலி உள்ளார்.
- முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.
- இந்தியா 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், ராய்ப்பூரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தனர்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர் டுவைன் சுமித் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ஓரளவு நிலைத்து விளையாடி அரை சதம் கடந்த சிம்மன்ஸ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா சார்பில் வினய் குமார் 3 விக்கெட்டும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 50 பந்தில் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார். சச்சின் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்தியா 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆட்ட நாயகன் விருது அம்பதி ராயுடுவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் வென்ற அணிக்கும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் பரிசு தொகையை வழங்கினர்.
9 ஃபோர்கள் அடித்த விருது- அம்பதி ராயுடு - 50 ஆயிரம் ரூபாய்
அதிக சிக்ஸ் அடித்த விருது- அம்பதி ராயுடு - 50 ஆயிரம் ரூபாய்
கேம்சேஞ்சர் ஆஃப் தி மேட்ச் விருதை ஷபாஸ் நதீம் வென்றார்
சிறந்த பவுலருக்கான விருதை ஷபாஸ் நதீம் வென்றார்
ஆட்ட நாயகன் விருதை 50 பந்துகளில் 74 ரன்கள் அடித்த அம்படி ராயுடு வென்றார்.
இந்த சீசனில் அதிக ஃபோர் எடுத்த குமார் சங்கக்காரா (38 ஃபோர்ஸ்) 5 லட்சம் ரூபாய் பரிசு வென்றார்.
இந்த சீசனில் அதிக சிக்ஸ் எடுத்த ஷேன் வாட்சன் (25 சிக்ஸ்) 5 லட்சம் ரூபாய் பரிசு வென்றார்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் வெற்றி பெற்ற இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு 1 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
இரண்டாவது இடம் பிடித்த ரன்னர் அப் அணியான வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
- சச்சின், சேவாக் சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய துவக்க வீரராக யாரும் படைக்காத சாதனையை இவர் படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துவக்க வீரராக வாய்ப்பினை பெற்ற சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற 1-வது ஒருநாள் போட்டியில் அரை சதமும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் குவித்து அசத்தி இருந்தார். 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் சுப்மன் கில் விளையாடிய போது நியூசிலாந்தில் தான் அறிமுகமானார்.
அந்த வகையில் தற்போதும் நியூசிலாந்து நாட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் எதிர்கால இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரராக தனது இடத்தினை உறுதி செய்யும் வகையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
எனவே ரோகித் சர்மா மற்றும் தவானுக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரராக இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய துவக்க வீரராக யாரும் படைக்காத சாதனையை இவர் படைத்துள்ளார்.
அந்த வகையில் துவக்க வீரராக இந்திய அணிக்காக விளையாடிய முதல் 10 இன்னிங்ஸ்களில் சுப்மன் கில் 495 ரன்களை குவித்துள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் துவக்க வீரராக முதல் 10 இன்னிங்ஸ்களில் 478 ரன்களையும், ராகுல் டிராவிட் 463 ரன்களையும், ஷிகார் தவான் 432 ரன்களையும், சேவாக் 425 ரன்கள் அடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது சுப்மன் கில் 14 இன்னிங்ஸ்களில் 674 ரன்கள் குவித்து மிகச் சிறப்பான துவக்க வீரராக மாறியுள்ளார். அதோடு முதல் 14 இன்னிங்ஸ்களில் இந்திய அணிக்காக அதிக ஸ்கோர் அடித்தவர்களின் பட்டியலிலும் ஷ்ரேயாஸ் ஐயரை (634) அவர் பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






