என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cricket"

    • அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன்.
    • எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி.

    சென்னை:

    இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மோகித் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மோகித் சர்மா, இந்திய அணிக்காக 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளையும், 8 டி20 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் 120 போட்டிகளில் விளையாடி 134 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காகவும் மோகித் சர்மா விளையாடியுள்ளார்.

    ஓய்வு குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மோகித் சர்மா,

    இன்று, நிறைந்த இதயத்துடன், அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன். அரியானாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது முதல் இந்திய ஜெர்சியை அணிந்தது மற்றும் ஐபிஎல்-ல் விளையாடியது வரை, இந்த பயணம் எனக்குக் கிடைத்த ஒரு ஆசீர்வாதம். எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. என தெரிவித்துள்ளார்.

    • டி20 உலக கோப்பையில் 20 நாடுகள் பங்கேற்கின்றன
    • இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களில் போட்டி நடைபெறுகிறது.

    10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பைக்கான போட்டி அட்டவணை மும்பையில் இன்று அறிவிக்கப்பட்டது. .

    தரவரிசை அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பில் மோதுகின்றன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 7-ந்தேதி மும்பையில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியிலும், கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18-ந்தேதி அகமதாபாத்திலும் மோதுகிறது.

    இந்நிலையில், 2026 டி20 உலக கோப்பை லீக் போட்டிகள் உட்பட மொத்தம் 7 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளன. எனினும் இந்தியா விளையாடும் போட்டி சென்னையில் கிடையாது. அதனால் தமிழக ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

    சென்னையில் நடக்கும் போட்டிகள்:

    பிப்ரவரி 8: நியூசிலாந்து VS ஆப்கானிஸ்தான்

    பிப்ரவரி 10: நியூசிலாந்து VS ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE)

    பிப்ரவரி 13: அமெரிக்கா (USA) vs நெதர்லாந்து

    பிப்ரவரி 15: அமெரிக்கா (USA) vs நமீபியா

    பிப்ரவரி 17: நியூசிலாந்து Vs கனடா

    பிப்ரவரி 19: ஆப்கானிஸ்தான் vs கனடா

    பிப்ரவரி 26: X1 vs X2 (சூப்பர் 8)

    • டி20 உலக கோப்பையில் 20 நாடுகள் பங்கேற்கின்றன
    • இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களில் போட்டி நடைபெறுகிறது.

    10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பைக்கான போட்டி அட்டவணை மும்பையில் இன்று அறிவிக்கப்பட்டது. .

    தரவரிசை அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பில் மோதுகின்றன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 7-ந்தேதி மும்பையில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியிலும், கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18-ந்தேதி அகமதாபாத்திலும் மோதுகிறது.

    இந்நிலையில், 2026 டி20 உலக கோப்பைக்கான அதிகாரபூர்வ விளம்பர தூதராக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

    • டி20 உலக கோப்பையில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
    • இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களில் போட்டி நடைபெறுகிறது.

    10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.

    இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும். அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் ஆடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    40 லீக் ஆட்டம், 'சூப்பர் 8' சுற்றில் 12 போட்டி உள்பட மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது. இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும் இலங்கையில் கொழும்பு கண்டியிலும் போட்டி நடைபெறுகிறது.

    இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பைக்கான போட்டி அட்டவணை மும்பையில் இன்று அறிவிக்கப்பட்டது. தரவரிசை அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பில் மோதுகின்றன.

    இரு அணிகளும் சமீபத்தில் ஆசிய கோப்பை போட்டியில் மோதின. துபாயில் 3 முறை மோதிய ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றது. இந்த தொடரின் போது பகல்காம் சம்பவம் எதிரொலித்தது. இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்தது. பாகிஸ்தான் மந்திரியிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்க மறுத்தது போன்றவற்றால் சர்ச்சை வெடித்தது.

    அமெரிக்காவில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையிலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்று இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 7-ந்தேதி மும்பையில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியிலும், கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18-ந்தேதி அகமதாபாத்திலும் மோதுகிறது.

    இலங்கை, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகள் மற்றொரு பிரிவிலும், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்க தேசம், நேபாளம், இத்தாலி இன்னொரு பிரிவிலும் இடம் பெறுகின்றன. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா ஆகிய அணிகள் இன்னொரு பிரிவிலும் இடம்பெறுகின்றன.

    இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றால் அகமதாபாத், சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறும். அரை இறுதிக்கு முன்னேறினால் மும்பையில் நடைபெறும். மற்றொரு அரை இறுதி கொழும்பு அல்லது கொல்கத்தாவில் நடைபெறும்.

    இலங்கை, பாகிஸ்தான் அணிகளின் தகுதியை பொறுத்து இடங்கள் முடிவாகும். இறுதி போட்டி அகமதாபாத்தில் நடத்தப்படுகிறது. ஒரு வேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்பில் போட்டி நடைபெறும்.

    • பாரதி கண்ணன் அண்மையில் நடிகர் கார்த்திக் குறித்து பேசிய நேர்காணல் இணையத்தில் வைரலானது.
    • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து பாரதி கண்ணன் பேசியுள்ளார்.

    திருநெல்வேலி, கண்ணாத்தா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பாரதி கண்ணன் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.

    பாரதி கண்ணன் அண்மையில் நடிகர் கார்த்திக் குறித்து பேசிய நேர்காணல் இணையத்தில் வைரலானது. அதில், கார்த்திக் போலவே அவர் மிமிக்ரி செய்தது நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்தது.

    இந்நிலையில், பாரதி கண்ணன் அண்மையில் கொடுத்த மற்றொரு நேர்காணலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து பேசியுள்ளார்.

    அந்த நேர்காணலில் பேசிய பாரதி கண்ணன், "விஜய்க்கு நல்ல பேச்சுத்திறமை உள்ளது. ஆனால் அவரிடம் உள்ள குறை என்றால்... அவரது கட்சியை கிரிக்கெட் அணியுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். அவரது அணியில் நம்பர் 1 பேட்ஸ்மேன் விஜய் தான். கேட்ச் பிடிப்பது அவர் தான். அவர் தான் கட்சியின் எல்லாமே. அவருக்கு அடுத்து அந்த கட்சியின் பேட்ஸ்மேன் என்று யாருமில்லை. எல்லாருமே நீங்க நல்ல ஆடுங்கண்ணே... நீங்க ஜெயிச்சிருவீங்க... நாங்க கூட இருக்கிறோம் என்று கூறுகிறார்கள்.

    கிரிக்கெட் அணியில் நல்ல வீரர்கள் இருக்க வேண்டும். ஆனால் அவர் அணியில் அப்படி இல்லை... அவர் மோதப்போவதோ ஆஸ்திரேலியா போன்ற அணியை... ஆனால் விஜய் அணியோ ஜிம்பாம்பே மாதிரி... அது தப்பில்ல... ஆனா அவரு வாய் துடுக்கா பேசக்கூடாது... ஆஸ்திரேலியா கேப்டன் வந்து பாரு என்னை ஒன்னும் பண்ண முடியாதுனு பேசுறாரு... இதை பாக்குற மக்கள் விஜய்க்கு இன்னும் பக்குவம் இல்லமாக ரொம்ப சவுண்டு கொடுக்குறாரோனு நினைக்கிறாங்க...

    விஜய் அணியிடம் நல்ல வீரர்கள் இல்ல... பயிற்சியாளர்கள் இல்ல... ஆனால் எதிர் அணியான ஆஸ்திரேலியா அணியிடம் பலம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். அப்போ நாம் என்ன செய்ய வேண்டும். ஐபிஎல் மாதிரி வேறு நல்ல அணியில் இருந்து ஆட்களை வாங்கி அணியை பலப்படுத்த வேண்டும். அப்போது தான் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டு சண்டை செய்யமுடியும்.

    பொதுவாக சினிமா காரர்களிடம் ஒரு பிரச்சனை உள்ளது. அவர்கள் யார் சொல்வதையும் கேட்க மாட்டார்கள்... ஆனால் களத்தை உணர்ந்து, நல்ல வீரர்களை அணியில் எடுத்தால் மோதுவதற்கு ஈசியாக இருக்கும்... அப்படி இல்லையென்றால் ஆஸ்திரேலியா ஈஸியா ஜெயிச்சிடும்... விஜயிடம் கூட்டம் இருக்கலாம்... ஆனா நல்ல வீரர்கள் இல்லை" என்று தெரிவித்தார்.

    • மகளிர் உலக கோப்பையை முதல் முறையாக இந்திய அணி கைப்பற்றியது.
    • ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

    சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் முறையாக ஒருநாள் உலக கோப்பையை கைப்பற்றி வராலாறு படைத்தது.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணிக்கு நாடு முழுவதும் பாரட்டுக்கள் குவிந்தன. இந்திய அணியில் விளையாடிய வீராங்கனைகளுக்கு அந்த அந்த மாநில அரசுகள் பரிசுத்தொகை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணியை வழிநடத்திய ஹர்மன்பிரீத் கவுர் சென்னைக்கு வருகை தந்துள்ளார். அவர் பிரபல கல்வி நிறுவனங்களின் அழைப்பை ஏற்று இன்று சென்னைக்கு வந்துள்ளார்.

    அவருக்கு மேலதாளங்கள் முழுங்க பிரம்மாண்ட வரவேற்று வழங்கப்பட்டது. மேலும் ஜூனியர் கிரிக்கெட் வீராங்கனைகள் அவரை நடனமாடியும் வரவேற்றனர். இது தொடர்பான புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற ரோகித் உடல் எடை அதிகரித்தார்.
    • ரோகித்தின் உடல் எடை இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளது

    2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்றது. அந்த தொடருக்கு பின்பு டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றார்.

    அதன்பின்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற ரோகித் உடல் எடை அதிகரித்தார். இதனால் அவரது உடல் எடை விமர்சனத்திற்கு உள்ளது

    இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக ரோகித் சுமார் 15 கிலோ வரை எடையை குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

    இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய ரோகித் 3 போட்டிகளில் 202 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

    ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னரும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வரும் ரோகித் கூடுதலாக 5 கிலோ எடை வரை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

    அடுத்ததாக இந்தியாவில் நடைபெறவிருக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் உடன் இந்திய அணி வீரர்கள் விளையாட மறுத்தனர்.
    • ஆசிய கோப்பையில் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர்

    பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியா பாகிஸ்தான் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இதனால் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் உடன் இந்திய அணி வீரர்கள் விளையாட மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி பேசுபொருளானது.

    இதனையடுத்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி விரும்பாததால் இப்போது வரை ஆசிய கோப்பை இந்திய அணியிடம் வழங்கப்படவில்லை.

    இதனையடுத்து நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கைகுலுக்க மறுத்தனர்.

    இந்நிலையில், ஹாக்கி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஹைபை கொடுத்துக்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    மலேசியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் 21 வயதிற்குட்பட்ட சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டி 3-3 என்ற கணக்கில் டிரா ஆனது.

    • இந்த மைதானம் 90 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
    • கிரிக்கெட் மைதானத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார்.

    அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் பீகாரில் கட்டப்பட்டுள்ளது.

    ராஜ்கிரில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார்.

    இந்த மைதானம் 90 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1,121 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. புனேவிலிருந்து உயர்தர கருப்பு மண்ணைப் பயன்படுத்தி இந்த மைதானத்தின் ஆடுகளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 40,000 இருக்கைகள் உள்ளது.

    இந்த மைதான கட்டுமானத்தின் ஆரம்பச் செலவு ரூ.740 கோடியாக மதிப்பிடப்பட்டது, ஆனால் நவீன வசதிகள் மற்றும் கூடுதல் கட்டமைப்புகள் சேர்க்கப்பட்டதால் ரூ.1,121 கோடி செலவானது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
    • சூப்பர் 4 வாய்ப்பை இழந்த ஓமன் அணியுடன் வரும் 19ம் தேதி இந்தியா மோதுகிறது.

    ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட்தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று இந்திய அணி அசத்தியுள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம்- ஓமன் அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஓமன் அணி 18.4 ஓவரில் 130 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த தோல்வியின் மூலம் ஓமன் அணி தொடரில் இருந்து வெளியேறியது. இதன்மூலம், குரூப் A சுற்றில் உள்ள இந்திய அணி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

    இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று +4.793 நெட் ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சூப்பர் 4 வாய்ப்பை இழந்த ஓமன் அணியுடன் வரும் 19ம் தேதி இந்தியா மோதுகிறது.

    • டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து கோலி ஓய்வு பெற்றுவிட்டார்.
    • தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் கோலி விளையாடி வருகிறார்.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில், கோலியின் பேட்டிங்கை தாலிபன்கள் கூட ரசித்து பார்ப்பதாக ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் மற்றும் தாலிபான் இயக்கத்தின் தலைவரான அனஸ் ஹக்கானி தெரிவித்தார்.

    கோலி குறித்து பேசிய ஹக்கானி, "விராட் கோலி தனது 50 வயதாகும் வரை விளையாட வேண்டும். அவருடைய பேட்டிங்கை தாலிபான்கள் கூட ரசித்து பார்க்கின்றனர். டெஸ்டில் இருந்து சீக்கிரம் ஓய்வு பெற்றுவிட்டார்" என்று தெரிவித்தார்.

    • குவாலியர் மண்டல கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக மகாநாரியமன் இருந்தார்.
    • மிக இளைய வயதில் (29) ம.பி. கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் என்ற அவர் பெருமையை பெற்றுள்ளார்.

    மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மத்திய பாஜக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மகாநாரியமன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    குவாலியர் மண்டல கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த அவர் மிக இளைய வயதில் (29) ம.பி. கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானவர் என்ற அவர் பெருமையை பெற்றுள்ளார்.

    மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐ தலைவராக இருந்து இப்போது ஐசிசி தலைவராக உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×