என் மலர்

    நீங்கள் தேடியது "Cricket"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹாரிஸ் ரவூப், நசீம்ஷா ஆகியோரின் காயம் பாகிஸ்தான் அணிக்கு ஆசிய கோப்பையில் பின்னடைவை ஏற்படுத்தியது.
    • தோல்விக்கு பிறகு அணி வீரர்கள் மத்தியில் பேசிய பாபர் ஆசம் சீனியர் வீரர்களின் ஆட்டத்திறன் குறித்து கேள்வி எழுப்பினார்.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா-தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி 8-வது முறையாக ஆசிய கோப்பை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. இலங்கை 7-வது தடவையாக சாம்பியன் பட்டம் பெறும் வேட்கையில் உள்ளது.

    பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால் வாய்ப்பை இழந்தது.

    ஹாரிஸ் ரவூப், நசீம்ஷா ஆகியோரின் காயம் பாகிஸ்தான் அணிக்கு ஆசிய கோப்பையில் பின்னடைவை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாகர் ஆசமும், வேகப்பந்து வீரர் ஷகின்ஷா அப்ரிடியும், வார்த்தைகளால் மோதிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தோல்விக்கு பிறகு அணி வீரர்கள் மத்தியில் பேசிய பாபர் ஆசம் சீனியர் வீரர்களின் ஆட்டத்திறன் குறித்து கேள்வி எழுப்பினார். சூப்பர் ஸ்டார்களாக இருப்பதை நிறுத்துங்கள். உலக கோப்பையை நீங்கள் இழந்தால் யாரும் உங்களை சூப்பர் ஸ்டாராக கருதமாட்டார்கள் என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது ஷகீன்ஷா அப்ரிடி குறுக்கிட்டு பொதுவாக பேச வேண்டாம். நன்றாக ஆடுபவர்களை விமர்சனம் செய்வது ஏன்? வீரர்களின் செயல் திறனை குறைந்தபட்சம் பாராட்ட வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த பாபர் ஆசம் யார் நன்றாக விளையாடினார்கள். யார் சரியாக ஆடவில்லை என்பது தெரியும் என்று தெரிவித்தார்.

    உலக கோப்பையில் தங்கள் செயல்திறனில் கவனம் செலுத்துமாறு வீரர்களிடம் அவர் அறிவுறுத்தினார். மேலும் தோல்விக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்புக்கு சென்ற பாபர் ஆசம் ஓட்டலுக்கு செல்லும் வழியில் யாருடனும் பேசவில்லை.

    முகமது ரிஸ்வான் உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஓட்டலுக்கு செல்வதற்கு முன்பு பாபர் ஆசமை சமாதானப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய கிரிக்கெட் அணி உள்ளூர் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமம் ஏலம் விடப்பட்டது.
    • ஐந்து ஆண்டுகளுக்கு போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை முகேஷ் அம்பானியின் நிறுவனம் கைப்பற்றியது.

    இந்திய கிரிக்கெட் அணி உள்நாட்டில் விளையாடும் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்துக்கான ஏலம் நடைபெற்று இருக்கிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் உள்ளூர் போட்டிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒளிபரப்புவதற்கான டி.வி. மற்றும் டிஜிட்டல் உரிமத்தை முகேஷ் அம்பானியின் வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

     

    அதன்படி பி.சி.சி.ஐ. சார்பில் உள்நாட்டில் நடத்தப்படும் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமைத்தை வியாகாம் 18 நிறுவனம் ரூ. 5 ஆயிரத்து 963 கோடிகளை கொடுத்து கைப்பற்றி இருக்கிறது.

    இதில் ரூ. 3 ஆயிரத்து 101 கோடி டிஜிட்டல் உரிமத்திற்கு செலுத்துகிறது. அந்த வகையில் டிஜிட்டலில் ஒரு போட்டியை ஒளிபரப்புவதற்கான தொகை ரூ. 35 கோடியே 23 லட்சம் ஆகும். டி.வி.-யில் ஒரு போட்டியை ஒளிபரப்புவதற்கான தொகை ரூ. 32 கோடியே 52 லட்சம் ஆகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி திசையன்விளை முதலாளி குளத்தில் 9 நாட்கள் நடந்தது.
    • 2-ம் பரிசு பெற்ற தஞ்சாவூர் அணிக்கு ராதாபுரம் ஒன்றிய இளைஞர் அணி ரகுமான் சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

    திசையன்விளை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவி லான கிரிக்கெட் போட்டி திசையன்விளை முதலாளி குளத்தில் 9 நாட்கள் நடந்தது. போட்டிகளை நகர செயலாளர் ஜான் கென்னடி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. முடிவில் முதல் பரிசு பெற்ற ஆரல்வாய்மொழி அணிக்கு மாவட்ட அவைத் தலைவர் கிரகாம்பெல் சார்பில் ரூ.1 லட்சம் மற்றும் வெற்றி கோப்பையும், 2-ம் பரிசு பெற்ற தஞ்சாவூர் அணிக்கு ராதாபுரம் ஒன்றிய இளைஞர் அணி ரகுமான் சார்பில் ரூ.50 ஆயிரமும், 3-வது பரிசு பெற்ற திசையன்விளை அணிக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுவீகர், மாவட்ட பொறியா ளர் அணி துணை அமைப்பார் அண்ரூ ஜேசன் ஆகியோர் சார்பில் ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    4-வது பரிசு பெற்ற அணிக்கு தங்கையா ஸ்வீட்ஸ் சார்பில் ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப் பட்டது. விழாவில் ராதாபு ரம் ஒன்றிய துணை அமைப் பாளர் தனபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பும்ராவுக்கும், ஹர்த்திக் பாண்ட்யாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
    • திலக் வர்மா தேர்வு பெற அதிகமான வாய்ப்பு உள்ளது.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 17-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 6 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்தப் போட்டிக்கான பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாட்டு அணிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டன.

    ஆசிய கோப்பை போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி நாளை அறிவிக்கப்படுகிறது. அஜீத் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு வீரர்களை தேர்வு செய்கிறது.

    பொதுவாக 15 வீரர்கள் தான் தேர்வு செய்யப்படுவார்கள். உலக கோப்பை போட்டிக்கான உத்தேச அணி அறிவிக்க வேண்டி இருப்பதால் அணி வீரர்களின் தேர்வு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    உலக கோப்பைக்கு முன்பு நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்த தேர்வு மிகவும் முக்கியமானது.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, தேர்வுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.தாஸ் ஆகியோர் காணொலி மூலம் தேர்வுகுழு கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    இதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் முதல் முறையாக தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கும்ப்ளே, ரவி சாஸ்திரி ஆகியோர் பயிற்சியாளராக இருந்த காலத்தில் தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

    காயத்துக்காக ஆபரேசன் செய்துகொண்ட லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறுவார்களா? என்று எதிர்பார்க்கப் படுகிறது. உடல் தகுதியை பொறுத்துதான் அவர்களது தேர்வு இருக்கும். திலக் வர்மா தேர்வு பெற அதிகமான வாய்ப்பு உள்ளது.

    துணை கேப்டன் பதவி ஜஸ்பிரீத் பும்ராவுக்கு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 11 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய வேகப் பந்து வீரரான அவர் தற்போது அயர்லாந்து 20 ஓவர் தொடரில் கேப்டனாக பணியாற்றி வருகிறார்.

    துணை கேப்டன் பதவி தொடர்பாக பும்ராவுக்கும், ஹர்த்திக் பாண்ட்யாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

    இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்கள் வருமாறு:-

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், வீராட் கோலி, லோகோஷ் ராகுல் (விக்கெட் கீப்பர்-உடல் தகுதியை பொறுத்து), ஸ்ரேயாஸ் அய்யர் (உடல் தகுதியை பொறுத்து), ஹர்த்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், இஷான் கிஷன் (2-வது விக்கெட் கீப்பர்), அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, யசுவேந்திர சாஹல் அல்லது ஆர்.அஸ்வின்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
    • இந்திய அணியில் ரிங்கு மற்றும் ப்ரஷித் கிருஷ்ணா அறிமுகமாகினர்.

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை தாங்குகிறார். ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், அவேஷ்கான் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணியில் ரிங்கு மற்றும் ப்ரஷித் கிருஷ்ணா அறிமுகமாகினர்.

    இந்நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா பவுலிங் தேர்வு செய்தார்.

    இதையடுத்து அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி வருகிற 20-ந் தேதி அறிவிக்கப்படுகிறது.
    • நாங்கள் போட்டிக்கு சிறப்பாக தயாராகுவதற்கு உதவுகிறது.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை, பாகிஸ்தானில் நடக்கிறது.

    6 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வருகிற செப்டம்பர் 2-ந் தேதி நடக்கிறது. ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி வருகிற 20-ந் தேதி அறிவிக்கப்படுகிறது.

    இதில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சை கண்டு எங்களுக்கு பயமில்லை என்று பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன் அப்துல்லா ஷபீக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    எங்களது பந்தவீச்சு மிகவும் நன்றாக உள்ளது. உண்மையில் உலகின் சிறந்த பந்து வீச்சாக உள்ளது. வலைப்பயிற்சியில் நாங்கள் ஷாஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவூப், நசீம் ஷா ஆகியோரை எதிர்கொள்கிறோம். அவர்கள் அளிக்கும் சவால்களை பார்த்து வருகிறோம். இது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. நாங்கள் போட் டிக்கு சிறப்பாக தயாராகுவதற்கு உதவுகிறது. பயிற்சியில் இந்த 3 பேருக்கு எதிராக நாங்கள் நன்றாக விளையாடினால் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் அதிக நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம். இந்தியா உள்பட எந்த அணி பந்துவீச்சாளர்களையும் சந்திக்க பயமில்லை என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதுகில் ஏற்பட்ட காயத்தில் ஆபரேஷன் செய்து கொண்ட பும்ரா 11 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார்.
    • நான் நிறைய பங்களிக்க வேண்டும் அல்லது எல்லாவற்றையும் மாற்றுவேன் என்று நினைக்கவில்லை.

    டப்ளின்:

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். முதுகில் ஏற்பட்ட காயத்தில் ஆபரேஷன் செய்து கொண்ட பும்ரா 11 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார்.

    இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் செயல்பாடு மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவரது பந்துவீச்சை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்நிலையில் பும்ரா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் மிகவும் கடினமாக உழைத்தேன். தற்போது உடல் அளவில் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதை எதிர்நோக்கி உள்ளேன். அதை அனுபவித்து விளையாட விரும்புகிறேன். காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சியின் போது உலக கோப்பை போட்டியை மனதில் வைத்தே தயாராகி வந்தேன். 15 ஓவர்கள் வரை கூட இப்போது பந்து வீசுகிறேன். என் மீது எதிர்பார்ப்புகள் உள்ளது.

    இதுதொடர்பாக கருத்து தெரிவிப்பவர்களை நான் மதிக்கிறேன். ஆனால் அந்த கருத்துகள் நல்லது அல்லது கெட்டது என்பதை பொருட்படுத்தமாட்டேன். யாருடைய கருத்தையும் நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

    நான் என்னை அழுத்தத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை. என்மீது தேவையற்ற எதிர்பார்ப்புகளை நான் வைப்பதில்லை. நான் நிறைய பங்களிக்க வேண்டும் அல்லது எல்லாவற்றையும் மாற்றுவேன் என்று நினைக்கவில்லை. குறைந்த எதிர்பார்ப்புகளுடன் வருகிறேன். மற்றவர்கள் எதிர் பார்க்கிறார்கள் என்றால் அது அவர்களின் பிரச்சினை, என்னுடையதல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா 11 மாதங்க ளுக்கு பிறகு சர்வதேச போட்டியில் ஆடுகிறார்
    • முழு உடல் தகுதி பெற்றதால் பும்ரா அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    டுப்ளின்:

    ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து சென்று உள்ளது.

    இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் டுப்ளின் நகரில் நாளை (வெள்ளிக் கிழமை) நடக்கிறது.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா 11 மாதங்க ளுக்கு பிறகு சர்வதேச போட்டியில் ஆடுகிறார்.

    முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு அவர் எந்தவித போட்டியிலும் விளையாடவில்லை. கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை ( 20 ஓவர்) மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளை தவறவிட்டார். காயத்துக்காக பும்ரா ஆபரேஷன் செய்து கொண்டார். இதனால் அவர் கடந்த ஐபிஎல் சீசனிலும் , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் ஆடவில்லை.

    முழு உடல் தகுதி பெற்றதால் பும்ரா அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். அயர்லாந்து தொடரில் 2-வது கட்ட இந்திய அணியே விளையாடுகிறது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட முன்னனி வீரர்கள் ஆடவில்லை.

    ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம்துபே, அவேஷ்கான், ஜிதேஷ்சர்மா, ரிங்குசிங், ஷபாஸ் அகமது உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. சமீபத் தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசிடம் 20 ஓவர் தொடரை இழந்து இருந்தது.

    இந்திய அணி அயர்லாந்தில் 3-வது முறையாக விளையாடுகிறது. 2018-ம் ஆண்டு 2 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கிலும், கடந்த ஆண்டு 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது.

    அயர்லாந்துக்கு எதிராக இதுவரை நடந்த 5 போட்டி யிலும் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது. 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இருந்தது. அயர்லாந்துக்கு எதிராக தோல்வியை சந்திக்காததால் அந்த அணியை இந்தியா நம்பிக்கையுடன் எதிர்க்கொள்ளும்.

    பால்பிரீன் தலைமையிலான அயர்லாந்து அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து முதல் முறையாக வெற்றி பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. ஜியோ சினிமா, ஸ்போர்ட்ஸ் 18 ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா:- ஜஸ்பிரீத் பும்ரா (கேப் டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஷ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்தீப்சிங், முகேஷ்குமார், அவேஷ்கான்.

    அயர்லாந்து:- ஆண்டி பால்பிரீன், ஹேரி டெக்டர், ரோஸ் ஆதிர், லார்கன் டக்கரி, மார்க் ஆதிர், கேம்பர், கேரீத் டெலினி, டாக்ரெல், பின்ஹோண்ட், ஜோஸ் லிட்டில், பென் ஒயிட், கிரேங்யங், வோயர் காம், மெக்கார்த்தி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய அணி நிர்வாகம் பல வீரர்களை வைத்து பரிசோதனை நடத்தி வருகிறது.
    • உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சீனியர் வீரர்களை நம்பிதான் இருக்கிறது.

    லாகூர்:

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு வரும் காலங்களில் சவால்கள் காத்திருக்கின்றன. ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை (50 ஓவர்) போட்டிகளில் விளையாடுகிறது.

    ஆசிய கோப்பை போட்டி வருகிற 30-ந்தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 17-ந்தேதி வரை பாகிஸ்தான், இலங்கையில் நடக்கிறது. உலக கோப்பை போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இந்நிலையில் வீராட் கோலியை கேப்டன் பதவியில் நீடிக்க அனுமதித்து இருந்தால் இந்திய அணி உலக கோப்பைக்கு 100 சதவீதம் தயாராக இருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணி நிர்வாகம் பல வீரர்களை வைத்து பரிசோதனை நடத்தி வருகிறது. புதிய வீரர்களை நிலை நிறுத்த அனுமதிக்காததால் தேர்வு முறையில் திணறி வருகிறது. அதனால் தான் சமீபத்தில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இழந்தது.

    உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சீனியர் வீரர்களை நம்பிதான் இருக்கிறது.

    கேப்டன்களின் மாற்றம் இந்திய அணிக்கு உதவவில்லை என்பது சந்தேகம் இல்லை. வீராட்கோலியை கேப்டனாக நீடிக்க அனுமதித்து இருந்தால் இந்தியா உலக கோப்பைக்கு 100 சதவீதம் தயாராக இருக்கும்.

    இவ்வாறு ரஷீத் லத்தீப் கூறியுள்ளார். அவர் 1996 மற்றும் 2003-ம் ஆண்டு உலக கோப்பைகளில் விளையாடி இருக்கிறார். உலக கோப்பை போட்டி தொடங்க இன்னும் 46 தினங்கள் உள்ள நிலையில் 4-வது வீரர் வரிசையை இந்திய அணியால் இன்னும் அடையாளம் காண இயலவில்லை.

    கடந்த 2 ஆண்டுகளில் 3 வடிவிலான போட்டிகளுக்கும் இந்திய அணி கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு ரோகித்சர்மா சர்வதேச அளவில் பெரிய வெற்றியை பெறவில்லை. இதனால் ஆசிய மற்றும் உலக கோப்பையில் அவர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சர்வதேச கிரிக்கெட்டில் இவர் 237 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
    • இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இவர் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

    பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வாஹப் ரியாஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். எனினும், உலகம் முழுக்க பிரான்சைஸ் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

    38 வயதான இடது கை பந்துவீச்சாளரான வாஹப் ரியாஸ் கடைசியாக 2020 டிசம்பர் மாதம் பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கினார். இவர் 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர்களில் விளையாடி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 27 டெஸ்ட் போட்டிகள், 91 ஒருநாள் போட்டிகள் மற்றும் 36 டி20 போட்டிகளில் சுமார் 237 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார்.

     

    2008-ம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் பாகிஸ்தான் அணியில் வாஹப் அறிமுகமானார். 2011 உலக கோப்பை தொடரின் போது இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வாஹப் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதே போன்று 2015 உலக கோப்பை தொடரின் காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.

    முன்னதாக 2019 வாக்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வாஹப், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வாஹப் அறிவித்து இருக்கிறார்.

    "சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கி விளையாடியது பெருமைக்குரிய விஷயம் ஆகும். இந்த பயணத்திற்கு முடிவு சொல்வதில் எனக்கு மகிழ்ச்சியாக உணர்கிறான். புதிய பயணத்தை துவங்கும் வகையில் பிரான்சைஸ் கிரிக்கெட்டில் விளையாட இருப்பதில் ஆவலோடு இருக்கிறேன். இதன் மூலம் தொடர்ந்து உலகளவில் சிறந்த வீரர்களுடன் விளையாடி ரசிகர்களை மகிழ்விப்பேன்," என்று வாஹப் ரியாஸ் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print